Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pudhiya Vergal
Pudhiya Vergal
Pudhiya Vergal
Ebook76 pages26 minutes

Pudhiya Vergal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

என் பெயர் ஞா.கலையரசி. சொந்த ஊர் காரைக்கால். புதுச்சேரியில் கணவருடன் வசிக்கிறேன். குழந்தைகள் இருவருக்கும், திருமணமாகி விட்டது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியொன்றில், சீனியர் கிளார்க்காக பணிபுரிகிறேன்.

வாசிப்பும், எழுத்தும் மிகவும் பிடித்தமானவை; இரண்டுக்கும் ஆசான் என் தந்தையே.

உள்ளத்தனையது உயர்வு என்பது என் அசைக்க முடியா நம்பிக்கை. இயற்கையில் மிகுந்த ஈடுபாடு உண்டு.

என் சிறுகதைகள் சில, தினமணிக்கதிர், குங்குமம் ஆகிய வார இதழ்களிலும், தமிழ்மன்றம், நிலாச்சாரல், வல்லமை, உயிரோசை ஆகிய மின்னிதழ்களிலும் வெளியாகியிருக்கின்றன.

தமிழ்மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு வல்லமை மின்னிதழ் நடத்திய கட்டுரைப் போட்டிகளில், இருமுறை முதற்பரிசுகள், அதே இதழில், புத்தக மதிப்புரை போட்டியில் மூன்றாம் சிறப்புப் பரிசு, மூன்றாம் கோணம் மின்னிதழ் நடத்திய பயணக்கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு ஆகியவை நான் பெற்ற பரிசுகள்.

என் எழுத்தை வாசிக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் பின்னூட்டமே, மேலும் எழுத என்னை ஊக்குவிக்கும். எனவே வாசித்து முடித்தவுடன், ஓரிரு வரிகளிலாவது, நிறைகுறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.

நன்றி, வணக்கம்.

Languageதமிழ்
Release dateMar 8, 2017
ISBN6580115601920
Pudhiya Vergal

Read more from G. Kalayarassy

Related to Pudhiya Vergal

Related ebooks

Reviews for Pudhiya Vergal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pudhiya Vergal - G. Kalayarassy

    http://www.pustaka.co.in

    புதிய வேர்கள்

    Pudhiya Vergal

    Author:

    ஞா. கலையரசி

    G. Kalayarassy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/g-kalayarassy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அம்மாவின் ஆசை

    உண்மை சுடும்

    ஒரு பல்லின் கதை

    திருப்புமுனை

    கொலுசு

    சாதுரியம்

    நாய்க்கடி

    புதிய வேர்கள்

    பெண் பார்க்கும் படலம்

    மூன்று விரல்

    அம்மாவின் ஆசை

    எவ்வளவோ மருத்துவம் பார்த்தும் பலனின்றி, அம்மாவின் உடல்நிலை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டே வந்தது. நான் கார் வாங்க வேண்டும் என்பது அம்மாவின் ஆசை. அம்மாவின் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றி விட்டேன், இந்த ஒன்றைத் தவிர.

    கார் வாங்கினால், யானையைக் கட்டித் தீனி போடுகிற மாதிரி என்று கார் வாங்கிய நண்பன் ஒருவன் சொன்னதிலிருந்து, கார் வாங்கப் பயம். மேலும் என்னொரு சம்பளத்தில், பையன்களைப் படிக்க வைக்க வேண்டும். நாளுக்குநாள் ராக்கெட் வேகத்தில், எகிறிப் பாயும் விலைவாசியில் குடும்பச் செலவுகளைக் கவனிக்க வேண்டும். அம்மாவின் மருத்துவச்செலவு, வீட்டுக்கடனுக்கு வங்கிக்குச் செலுத்த வேண்டிய தவணைத் தொகை எனச் செலவுப் பட்டியல் நீண்டு கொண்டே செல்ல, என்னால் கார் வாங்குவதைப்பற்றிக் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை.

    ஒரு வழியாகப் பையன்கள் இருவரும், கல்லூரிப் படிப்பை முடித்து வேலைக்குச் சேரும் தருவாயில் தான், அம்மாவின் இந்த ஆசையைப் பற்றி யோசிக்கத் துவங்கினேன். எல்லோரும் சேர்ந்து வெளியில் சென்றுவரக் கார் இருந்தால்தான் நல்லது எனக் குடும்பத்தினர் அனைவரும் நச்சரிக்கத் துவங்க, சரியென்று தலையாட்டி வைத்தேன்.

    மேலும் என் கம்பெனியிலும், பெட்ரோல் செலவுக்கு மாதாமாதம் தனியே 'அலவன்ஸ்' தருவதாகச் சொல்லவே, மகிழ்ச்சியாகச் சம்மதம் தெரிவித்தேன். அடுத்து என்ன கார் வாங்குவது என ஒரு பட்டிமன்றமே நடந்தது. வீட்டில். ஆளாளுக்கு ஒரு காரைச் சிபாரிசு செய்தனர்.

    அம்பாசிடர் கார்தான் தேவலை; அப்போ தான் நாமெல்லாரும் தாராளமா உட்கார்ந்து போக முடியும், என்ற மனைவியின் யோசனை சரியென்றே பட்டது எனக்கு. ஆனால் சின்னவன் ஒத்துக் கொள்ளவில்லை.

    அந்தக் காரை வாங்குவதாயிருந்தால் நீங்க காரே வாங்கவேணாம், என்றான் கோபத்துடன்.போர்டு கார் சூப்பராயிருக்கும். எல்லாமே ஆட்டோமாடிக். அதைத் தான் வாங்கணும், என்றான் அவன்.

    வெளிநாட்டுக் கார் வேணாம்பா. நம்ம நாட்டுக் கம்பெனி கார் மாடல்களாப் பார்த்து, அதுல ஒன்னு வாங்கலாம்பா, என்ற பெரியவனின் யோசனை ஏற்கப்பட்டு, அதன்படியே ஒரு காரும் வாங்கியாகிவிட்டது.

    அம்மாவைக் காரில் அழைத்துக் கொண்டு, பக்கத்தில் எங்காவது சென்று வர வேண்டும்; சொந்தக்காரில் பயணம் செய்யும்போது அம்மாவுக்கு ஏற்படும் மகிழ்ச்சியைக் கண்டு, ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவரிடம் கேட்டேன்:-

    அம்மா! முதன் முதலா இன்னிக்குச் சாயந்திரம், நம்மூர் பிள்ளையார் கோவிலுக்குப் போயிட்டு, அப்படியே திருநள்ளாறு கோவிலுக்குக் காரில போய்ட்டு வரலாம். வரீங்களாம்மா?

    வேணாம்பா. நான் வரலை. நீங்கள்லாம் போய்ட்டு வாங்க. அடுத்த வாரம் உங்க அத்தையோட பேத்தி கல்யாணம், திருச்சியில நடக்குதில்லே. அதுக்கு நாமெல்லாரும் சேர்ந்து, காரில போய்ட்டு வருவோம்.

    எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. காரையிலிருந்து திருச்சிக்குக் குறைந்தது, நான்கு மணி நேரப்பயணம். மேலும் தற்சமயம் புதிதாகச் சாலை போடும் பணிவேறு நடைபெற்று வருவதால், தஞ்சையிலிருந்து திருச்சி வரை தூக்கித் தூக்கிப் போட்டுப் பயணம்

    Enjoying the preview?
    Page 1 of 1