Nila Sirikkirathu!
()
About this ebook
மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..
மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.
நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Read more from Hamsa Dhanagopal
Deva Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsIngu Pengal Virpanaikku Alla! Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Naan Ennodu Nee Rating: 4 out of 5 stars4/5Thisai Maariya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsSorna Rating: 0 out of 5 stars0 ratingsIraval Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsMona Paravai Rating: 0 out of 5 stars0 ratingsIraval Pondatti Rating: 0 out of 5 stars0 ratingsKaadhali, Meendum Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsKanal Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsAnumathi Illamal Thodathey! Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Archana Rating: 0 out of 5 stars0 ratingsTheeratha Vilayattu Pillai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Theevinile… Rating: 5 out of 5 stars5/5Ne En Uyirthean Rating: 0 out of 5 stars0 ratingsThendralin Suvadu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Silai Rating: 0 out of 5 stars0 ratingsIppadikku Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsThirumana Malargal Rating: 0 out of 5 stars0 ratingsThisai Thedum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Mullai Rating: 0 out of 5 stars0 ratingsAndru Oru Naal... Rating: 0 out of 5 stars0 ratingsEnna Theril Aval Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum...Naanum Neeyum... Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Yaarendru Enni... Rating: 0 out of 5 stars0 ratingsOru Roja Iru Raja Rating: 0 out of 5 stars0 ratingsPani Puyal Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Enna Vilai? Rating: 0 out of 5 stars0 ratingsOliyin Nizhalil... Rating: 0 out of 5 stars0 ratings
Related to Nila Sirikkirathu!
Related ebooks
Naga Keeralgal Rating: 0 out of 5 stars0 ratingsNeeyindri Naanillai Rating: 5 out of 5 stars5/5Anuradha Ramananin Sirukathaigal Collection - 4 Rating: 3 out of 5 stars3/5Iniya Unarvey Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Or Alai Rating: 0 out of 5 stars0 ratingsதென்றலாக நீ வருவாயா Rating: 0 out of 5 stars0 ratingsThenralaga Nee Varuvaayaa Rating: 5 out of 5 stars5/5Oru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Silai Rating: 0 out of 5 stars0 ratingsAnbulla Appa Rating: 0 out of 5 stars0 ratingsEnna Solla Pogiraai Rating: 1 out of 5 stars1/5Thendralaga Nee Varuvaya Rating: 0 out of 5 stars0 ratingsThen Malli Poove... Rating: 2 out of 5 stars2/5Nilavum Penthaan Rating: 5 out of 5 stars5/5Marakka Mattean Malini Rating: 0 out of 5 stars0 ratingsSollamaley... Sangeetha Rating: 0 out of 5 stars0 ratingsEzhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Manam Virumbuthe Unnaiye! Rating: 4 out of 5 stars4/5Marupadiyum Malavika!! Rating: 5 out of 5 stars5/5Kanavu Kaadhalan Rating: 0 out of 5 stars0 ratingsBramma Mudichu Rating: 0 out of 5 stars0 ratingsPasapinaippugal! Rating: 0 out of 5 stars0 ratingsTamilnadu Express Rating: 0 out of 5 stars0 ratingsAnge Sendru Anbai Sollu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalagi Rating: 0 out of 5 stars0 ratingsPalaivanathil Oru Roja Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Vasantham Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Punnagaikkiral Rating: 5 out of 5 stars5/5Vidiyalai Nokki... Rating: 0 out of 5 stars0 ratingsKaathil Sollu Kaadhale Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Nila Sirikkirathu!
0 ratings0 reviews
Book preview
Nila Sirikkirathu! - Hamsa Dhanagopal
http://www.pustaka.co.in
நிலா சிரிக்கிறது!
Nila Sirikkirathu!
Author:
ஹம்சா தனகோபால்
Hamsa Dhanagopal
For more books
http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
1
மேகலா தன் இரு சக்கர வாகனம் நிறுத்தப்பட்ட இடம் நோக்கி விரைகிறாள். அப்போது அவள் கால்களுக்குக் கடிவாளம் இட்டது போல அந்தக் குரல் எழுகிறது.
மேகலா... ஒரு நிமிஷம் நில்லுங்க.
வண்டியைத் தள்ளியபடி பார்க்கிறாள். அவளுடன் வேலை பார்க்கும் கார்த்திக் வேக நடையில் வந்துகொண்டிருக்கிறான். கிராப் கலைந்து நெற்றில் மறைக்க கருப்புக் கண்ணாடி அணிந்து, பார்க்க திரைப்படக் கதாநாயகன் போல தெரிகிறான். இவள் சிரிப்புடன் வண்டியை நிறுத்தி, ஹலோ கார்த்திக் என்ன அது. ஏழு மணி நேரம் ஆபிஸ்ல உங்களோடு வேலை பார்க்கிறேன். இப்ப வீட்டுக்குப் புறப்படுகிறப்ப எதுக்கு அழைக்கறீங்க. அப்படி என்ன அவசரம். நாளைக்குப் பார்த்துக்கலாம் இல்லியா
என்கிறாள்.
அதில்லை மேகலா வந்து...
கார்த்திக் மெலிதாய் மூச்சு வாங்குகிறான். அவன் பரந்த மார்பு மேலும் கீழுமாய் தாலாட்டுகிறது.
ஆபிஸர் என்னை வரச்சொன்னாரா. இல்லை ஏதேனும் அவசர கோப்பைப் பார்க்கணுமா.
அப்படி இருந்தா நீங்க போகிறதைப் பார்த்துட்டு பேசாம இருந்திருப்பேனே. அதைவிட இது முக்கியம். பல நாளாய் உங்கக்கிட்ட சொல்லணும்னு தயங்கிட்டே வரேன்.
ஒண்ணு சொல்லுங்க. இல்லைச் சொல்லாம விடுங்க. ரெண்டுக்கும் நடுவிலே நின்னா இப்படித்தான் நான் போகாம நிற்க வேண்டிவரும்.
அவள் சிரிக்கிறாள்.
அவன் கறுப்பு கண்ணாடியைக் கழற்றி அதன் பிடியைப் பிடித்து சுற்றியபடி அதைச் சொல்கிறான். மெலிதாய் அவன் குரல் ஒலிக்கிறது. மேகலா, நான் உங்க பெற்றோரை பார்க்கணுமே.
எங்க வீடு சாலிகிராமத்திலே இருக்கு. அவங்களை எதுக்கு நீங்க பார்க்கணும்?
இல்லை மேகலா. உங்க பெற்றோருக்கு நான் நன்றி சொல்லணும். அதான்...
எதுக்கு... நீங்க நன்றி சொல்லணும். அவங்க என்ன செய்தாங்க நீங்க நன்றி சொல்ல...
மேகலா. தப்பா நினைக்க கூடாது. உங்களைப் பார்க்கிறப்பவே ஒரு பரவசம் ஏற்படுது. இத்தனை பேரழகான பெண்ணைப் பெத்ததுக்காக உங்க பெற்றோருக்கு என் நன்றியினைச் சொல்ல...
அவன் முடிக்கும் முன் மேகலாவின் குரல் எழுகிறது.
நானும் உங்க பெற்றோரைப் பார்த்து பேசவிரும்புகிறேன்.
பார்த்தீங்களா... உங்களுக்கும் அதே எண்ணம்.
ஸாரி... இந்த மாதிரி ஒரு அதிகப்பிரசங்கியைப் பெத்ததுக்காக வருத்தப்படும்படி சொல்லத்தான் அவங்களைச் சந்திக்க நினைச்சேன். இனிமே இது மாதிரி பேசறதை நான் விரும்பமாட்டேன்.
துப்பாக்கியிலிருந்து விடுபட்ட குண்டாய் அவள் இருச்சக்கர வாகனம் சாலை நோக்கி விரைகிறது. அவள் முதுகுப் பக்கம் முடிச்சிட்ட சூரிதாரின் சல்வார் காற்றில் பறந்து அவனைக் கேலி செய்கிறது. நீண்ட பெருமூச்சுடன் 'நான் என்ன உன்னைக் காதலிக்கிறேன்னா சொன்னேன். உன் அழகைப் பாராட்டினேன். அதுவும் உன்னதமான முறையிலே அதுக்குப்போய்...'
கறுவிக்கொண்டே அவன் திரும்ப, அலுவலகத்தில் வேலை பார்க்கும் தாமு வருகிறான். என்ன அவக்கிட்ட ஐ லவ் யூ சொல்லி சிக்கிட்டியா. அது ரேசு குதிரைப்பா. எதுக்கும் அடங்காது. நான் சொல்லி மூக்கறுப்பட்டேன். நம்ம ஆபிஸ்ல பலபேர் அதுகிட்ட வசமா சிக்கியிருக்காங்க.
தாமு சிரிப்புடன் சொல்ல ஸாரி தாமு நான் அப்படியெல்லாம் உளறலை. எனக்கு ஒரு கோப்பிலே சந்தேகம் நாளைக்குச் சொல்லித் தரீங்களான்னு கேட்டேன். நாளைக்குப் பார்க்கலாம்னு போறாங்க மேகலா:
பார்த்தியா... பார்த்தியா... கார்த்திக் என்கிட்டயே காது குத்தறே. நாப்பது வயசுக்குக் கல்யாணம் ஆகாம தனிக்கட்டையா நிக்கறேனே நான். இது மாதிரி எத்தனை பார்த்திருப்பேன்.
'இருடி உன்னை பேசிக்கறேன்' மனதில் கறுவியபடி தாமுவுடன் சேர்ந்து காபி குடிக்க கேன்டீன் போகிறான் கார்த்திக்.
மேகலா. அம்மா சொன்ன பட்டியல் படி எல்லாம் வாங்கிக் கொள்கிறாள். காபிபொடி, பீன்ஸ், அவரை வெங்காயம், பச்சை மிளகாய்... இவள்தான் அலுவலகம் விட்டதும் எப்போதும் வாங்கிப் போகிறாள்.
அவர்கள் வீட்டிற்கு அடுத்த தெருவில் ஒரு காய்கறி கடை இருக்கிறது. அது ஒரு மினி கோயம்பேடாகவே காட்சி அளிக்கும். அதில் எல்லாம் வாங்கிக்கொள்ளலாம். இவள் கூட பலமுறை 'ஏம்மா நீ அந்தக் கடையிலே வாங்கிக்கயேன். நான் ஆபிஸ் விட்டு போக்குவரத்திலே சிக்கி வண்டி ஓட்டி வரதே கஷ்டம் அதுலே இதையெல்லாம் நான் வாங்கி வரணுமா. எனக்கும் டையர்டா இருக்கும் இல்ல' என்பாள். அம்மா பதில் சொல்வதற்கு முன்பாய் இவள் தந்தை பேசிவிடுவார்.
'எங்கே மேகலா உங்கம்மாக்கு பொழுது இருக்கு. வேலைக்காரி இல்லை. எல்லா வேலையும் உங்க அம்மாத்தானே செய்தாகணும். அப்படியும் நேரம் கிடைக்கறப்ப தோட்டம் பெருக்கப் போயிடறா. நானும் சொன்னா கேட்கலை. வர வழிதானே... நீ வாங்கி வரது உனக்குச் சுலபம். அதுவும் உனக்கும் ஒரு பயிற்சி இருக்கும். நாளைக்குப் புருசன் வீட்டுக்குப் போனாலும் உனக்கு இதெல்லாம் தெரியும் இல்லியா.'
இப்படி அப்பா சொல்லியே ஆண்டுகள் ஒன்றன்பின் ஒன்றாய் துரத்திக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. ஆயிற்று. முப்பத்திரெண்டு வயது முடிந்துவிட்டது. கூந்தலில் ஒரு நரையில்லை. பாதியாய் வெட்டிவிடப்பட்ட கூந்தலும் அழகு நிலையங்களின் கைங்கர்யத்தில் அவள் யவ்வனம் சற்றும் குறையவில்லை.
இருபத்தைந்து வயதிற்கு மேலாய் யாராலும் மதிப்பிட முடியாது. அவள் முகத்தில் நாட்களின் கரைசலில் அழகு கூடிக்கொண்டே போகிறது.
பாவம் அம்மா. அப்பா சொல்வதும் சரிதான். துணிகள் துவைத்து அலசிப் பிழிந்து மொட்டை மாடியில் உலர்த்துவது, மடிப்பது, இவள் துணிகளுக்கு பெட்டி போடுவது... பத்து பாத்திரங்கள் தேய்ப்பது... சமையல் செய்வது. என்னதான் மிக்ஸியும் கிரைண்டரும் இருந்தாலும் அம்மாவின் வேலைகள் நீண்டு கொண்டேதான் இருக்கும்.
பிற்பகலில் சிறிது நேரம் தூங்கவோ அன்றி ஊஞ்சலில் படுத்துக்கொண்டு சஞ்சிகைகள் படித்துக்கொண்டே அப்படியே தொலைக்காட்சியும் பார்ப்பாள்.
எப்போதும் போல் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் வாகன நெரிசல். மூச்சுத்திணறல். வரவர வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.
ஏதேதோ எண்ணங்களில் ஸ்கூட்டி ஓட்டிக்கொண்டிருந்தவள் சரியாக ஆட்டோ பழுது பார்க்கும் கடையருகே வண்டி நின்றதில் சலித்துக் கொள்கிறாள். இவள் சங்கடப்படுவதைக் கண்டு முதலாளியே ஓடிவந்து இவன் வண்டியைப் பிடித்துக் கொள்கிறார்.
நீங்க காலையிலே வாங்கம்மா. நான் சரியாய் பார்த்து வைக்கிறேன்.
தேங்க் யூ ஸார்.
அவர்கள் தெருவிலே இருக்கும் கடை அது. அவர் தெரிந்தவர் தான். அவள் வண்டியின் நிரந்தர டாக்டர்.
வீட்டின் இரும்பு சின்ன கேட் திறந்திருக்க இவள் சுமைகளுடன் மெலிதாய் அதை மூடிவிட்டு உள்ளே போகிறாள்.
கதவு திறந்திருக்க குழல் விளக்கொளி வெளியே விழுந்திருக்கிறது. உள்ளே சத்தமாய் ஓடும் தொலைக்காட்சி. இவள் செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே நுழைகையில் அது கண்ணில் படுகிறது.
தாயும் தந்தையும் ஊஞ்சலில் உட்கார்ந்திருக்கிறார்கள். அது மெலிதாய் அசைகிறது. இவள் தந்தை தாயின் கூந்தலில் மல்லிகைச் சரம் சூடிக் கொண்டிருக்கிறார். இவளைப் பார்த்ததும் தேள் கொட்டியவர்களாய் இருவரும் விலகி சகஜமாகிறார்கள்.
வாம்மா மேகலா, எங்கே வண்டி சத்தத்தையே காணோம்.
நீ வரலியே இன்னும்னு இப்பதான் பேசிட்டிருந்தோம்.
உம்... எல்லாம் வாங்கி வர லேட்டாச்சு. வண்டி ரிப்பேர். கடையிலே விட்டு நடந்து வரேன். அம்மா காபி குடு. லேசா தலையை வலிக்குது.
"போய்