Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanavu Kaadhalan
Kanavu Kaadhalan
Kanavu Kaadhalan
Ebook86 pages32 minutes

Kanavu Kaadhalan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கனவுக் காதலன் கதையில் வரும் நந்து, எந்த வேலையும் நிரந்தரமாக்கி கொள்ளத் தெரியாதவன். அவன் முன்னுக்கு வரும்வரையாவது தான் உயிரோடு இருக்க வேண்டும் என்று போராடும் தாயார். கேன்சர் பேஷண்ட் என்று தெரிந்தும் லலைனாவுடன் சேர்ந்து வாழ ஆசைப்படும் நாயகன்.

ஒரு பக்கம் கண்டிப்பு, மறுபக்கம் கருணை... எப்படி லலைனாவினால் இப்படி இருக்க முடிகிறது என்கிற வியப்பு... கனவுக் காதலன் கண்டிப்பாய் நம் மனதிலும் சப்பணமிட்டு அமருவான் என்பது நிச்சயம்.

Languageதமிழ்
Release dateDec 27, 2022
ISBN6580110009126
Kanavu Kaadhalan

Read more from Anuradha Ramanan

Related to Kanavu Kaadhalan

Related ebooks

Reviews for Kanavu Kaadhalan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanavu Kaadhalan - Anuradha Ramanan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கனவுக் காதலன்

    Kanavu Kaadhalan

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    முன்னுரை

    அனும்மாவும் நானும் இந்தக் கதைகளும்...

    அனுராதா ரமணனின் கதைகளை, அவருடைய முத்துமுத்தான கையெழுத்தில், அச்சில் ஏறுவதற்கு முன் சுடச்சுட படித்து அனுபவித்த பாக்கியசாலி நான்...

    முன்னுரை எழுதுவதற்காக, மீண்டும் படிக்க சந்தர்ப்பம் கிடைத்ததில் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி.

    கனவுக் காதலன்:

    கனவுக்காதலன் கதையில் வரும் நந்து, எந்த வேலையையும் நிரந்தரமாக்கிக் கொள்ளத் தெரியாதவன். அவன் முன்னுக்கு வரும்வரையாவது தான் உயிரோடு இருக்கவேண்டும் என்று போராடும் தாயார். கேன்சர் பேஷன்ட் என்று தெரிந்தும் லலைனாவுடன் சேர்ந்து வாழ ஆசைப்படும் நாயகன்.

    ஒரு பக்கம் கண்டிப்பு, மறுபக்கம் கருணை... எப்படி லலைனாவினால் இப்படி இருக்க முடிகிறது என்கிற வியப்பு...

    கனவுக் காதலன் கண்டிப்பாய் நம் மனதிலும் சப்பணமிட்டு அமருவான் என்பது நிச்சயம்.

    அன்புடன்,

    ஜெயந்தி சுரேஷ்.

    1

    இந்தத் தேங்காயைச் சிதறுகாய் போட்டுடேன் தம்பீ...

    நந்தகுமார் திரும்பிப் பார்க்கிறான்.

    யாரோ ஒரு மூதாட்டி சிதறுகாய் போட உடம்பில் வலு இல்லாதவள் வாட்ட சாட்டமான இவன் உதவியை நாடுகிறாள்.

    கை நீட்டி, தேங்காயை வாங்கியவன், ஒரு முறை பிள்ளையார் பக்கம் பார்வையைச் செலுத்த அவரோ வழக்கமான தனது அமர்த்தல் சிரிப்புடன் கம்பீரமாய் வீற்றிருந்தார்.

    உள்ளுக்குள் சாம்பிராணிப் புகையாய் ஆத்திரம் கமறுகிறது நந்துவுக்கு. இவனும் தன்னால் முடிந்த போதெல்லாம் எத்தனை தோப்புக் கரணம் போட்டு, வலம் வந்திருக்கிறான்.

    கொஞ்சமாவது நன்றி வேண்டாம்? பெரிசாய் கூரையைப் பிய்த்துக் கொண்டு தராவிட்டாலும் ஒழிகிறது. இப்படி பஸ்ஸுக்கு சில்லரையைத் துடைத்துக் கொடுக்கும்படியாகவா வைக்கிறது...

    என்னப்பா சிதறுகாய் போட்டுப் பழக்கமில்லையா? இந்த காலத்துக் குழந்தைகளுக்கு இருபது வயசுக்குள்ளேயே நடுக்கம் வந்துடறது. போன வருஷம் வரைக்கும் நானே என் கையாலே எத்தனை காய் உடைச்சிருக்கேன்.

    வயசானாலும் கிழவிக்கு வாய் ஓயவில்லை. ஏற்கனவே பிள்ளையார் மீது கடுப்பாயிருந்த நந்தகுமார், கிழவியின் பேச்சினால் இன்னும் சூடாகி, கையிலிருந்த காயை, பலம் கொண்ட மட்டும் தரையில் ஓங்கி அடிக்கிறான்.

    படார்!!!

    சில்லுகளைப் பொறுக்க எங்கிருந்தோ காக்கா கூட்டம் போலச் சிறுவர்கள் பாய்ந்து வர.

    இந்த வேலை கிடைக்கலையின்னா உன்னைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டேன்... ஆமா...

    நந்து, மானசீகமாய் பிள்ளையாரிடமும் முறைத்துவிட்டுக் கிளம்புகிறான்.

    வயசு இருபத்தியாறு ஆகிறது.

    படிப்பு என்னவோ எம்.ஏ. தவிர கம்யூட்டர், டைப் ரைட்டிங், அக்கவுண்ட்டன்சி என்று விதத்துக்கு ஒரு சான்றிதழ், கலர் கலராய் தோளில் தொங்கும் பையில் இருக்கிறது.

    முந்தா நாள் கூட அவனது அக்கா குமுதா ஆஸ்பத்திரியில் மூச்சுக்கு இழுத்துக் கொண்டு கிடக்கும் அம்மாவைப் பார்க்க வந்துவிட்டு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலச் சொன்னாள்.

    இந்தாம்மா, உன் பிள்ளை படிச்சிருக்கான் தான். சொந்த அக்கா புருஷன் கிட்டேயே பொய் சொல்ற அளவுக்கு சாமர்த்தியம் இருக்கு. இல்லேயின்னு சொல்லலே. ஆனா, எங்கே கொண்டு போய் வேலையில் சேர்த்தாலும் தான் தான் பெரிய மேதாவிங்கற நினைப்பில எதிர்த்துப் பேசிட்டு வந்திடறான் பாரு... அந்த கர்வம் இருக்கிற வரைக்கும். அவன் உருப்படவே மாட்டான். இதை நான் சொல்லலலே... உன் மாப்பிள்ளைதான் சொன்னார்... சொல்லிட்டேன். இனிமே, என்னை இவனுக்காக உன் மாப்பிள்ளைகிட்டே சிபாரிசுக்குப் போகச் சொல்லாதே.

    அம்மா... ஏற்கனவே சுருங்கி, இடுங்கிப் போனக் கண்களில், கண்ணீரோடு, அளப்பரிய வேதனையையும் தேக்கி வைத்துக்கொண்டு அவனைப் பார்த்தாள்.

    வாய் திறந்து கேட்காவிட்டாலும், நந்துவுக்கு அந்தப் பார்வையில் தெறித்த கேள்வி புரிந்துதான் இருந்தது.

    ஏண்டா இப்படி போற இடத்துல எல்லாம் தகராறு பண்ணிட்டு வந்து நிக்கிறே.

    ‘தகராறு நான் செய்யவில்லை' என்று அவளிடம் சொன்னால் புரியாது.

    அவனுக்கென்ன வேலையில்லாமல் வீட்டோடு உட்கார்ந்திருக்க வேண்டுமென்கிற ஆசையா.

    கந்தன் கருணை சினிமாவில் கே.பி. சுந்தராம்பாள், ‘கொடியது கேட்கின்...’ ‘கொடிது கொடிது வறுமை

    Enjoying the preview?
    Page 1 of 1