Puratchi Siruvan Manickam
()
About this ebook
Related to Puratchi Siruvan Manickam
Related ebooks
Payirai Meyum Veligal Rating: 5 out of 5 stars5/5Vidiyalai Nokki... Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Penthaan Rating: 5 out of 5 stars5/5Chinna Chinna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAndha Naalum Vandhitatho? Rating: 5 out of 5 stars5/5Mathana Moga Rooba Sundara!! Rating: 0 out of 5 stars0 ratingsSuriyagrahanam Rating: 5 out of 5 stars5/5Indrum Theriyavillai Natchathirangal! Rating: 0 out of 5 stars0 ratingsPagal Nera Nila Rating: 0 out of 5 stars0 ratingsAnthikaala Mogam Rating: 0 out of 5 stars0 ratingsPoi Vaa Snegithi Rating: 0 out of 5 stars0 ratingsபோய் வா சினேகிதி..! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal 24x7 Rating: 4 out of 5 stars4/5Anbai Thedi Vaa! Rating: 2 out of 5 stars2/5Anuradha Ramananin Sirukathaigal Collection - 4 Rating: 3 out of 5 stars3/5Bindi Sabji Rating: 0 out of 5 stars0 ratingsVandhal, Sendral, Vendral... Rating: 0 out of 5 stars0 ratingsAnbaana Anuvirkku Rating: 0 out of 5 stars0 ratingsInaiyumo Iruthayam? Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal 24x7 Rating: 0 out of 5 stars0 ratingsNandha Rating: 0 out of 5 stars0 ratingsNila Sirikkirathu! Rating: 0 out of 5 stars0 ratingsMythili Rating: 0 out of 5 stars0 ratingsநிழல் தேடும் மரங்கள்... Rating: 0 out of 5 stars0 ratingsVaigarai Vidiyal Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Or Alai Rating: 0 out of 5 stars0 ratingsஇது ஆரம்பம்தான்! Rating: 0 out of 5 stars0 ratingsNinaivugalum Ennangalum Rating: 0 out of 5 stars0 ratingsOru Tharkolai Nadakka Pogirathu Rating: 5 out of 5 stars5/5Kalyaana Varam Rating: 5 out of 5 stars5/5
Reviews for Puratchi Siruvan Manickam
0 ratings0 reviews
Book preview
Puratchi Siruvan Manickam - Jyothirllata Girija
http://www.pustaka.co.in
புரட்சிச் சிறுவன் மாணிக்கம்
Puratchi Siruvan Manickam
Author:
ஜோதிர்லதா கிரிஜா
Jyothirllata Girija
For other books
http://www.pustaka.co.in/home/author/jyothirllata-girija
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
1
மாணிக்கத்தின் இடுப்பிலிருந்து, அவன் அணிந்து கொண்டிருந்த அரைக்கால் சராய் நழுவி விழுந்து விடும்போல் இருந்தது. யாரிடமிருந்தோ அவன் அம்மா கேட்டு வாங்கி வந்திருந்த உடை அது. குண்டான பையன் ஒருவனுடையதாக இருக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. வயிறு முட்டச் சாப்பிட்ட பிறகும்கூட இடுப்பில் நிற்காது நழுவக்கூடிய அளவுக்குப் பெரியது. இப்போது மாணிக்கம் முந்திய இரவிலும், இன்று காலையிலும் கூட எதுவும் சாப்பிடாததால், அவனது வயிறு முதுகோடு ஒட்டிவிடும்போல் தட்டையாக இருந்தது. எனவே அந்த தொளதொளத்த கால்சட்டை, ‘இதோ விழுந்துவிடுவேன், இதோ விழுந்துவிடுவேன்’ என்று அவனைப் பயமுறுத்திக்கொண்டிருந்தது.
அந்தக் கால்சட்டையை இடக்கையால் பிடித்துக் கொண்டு வலக்கையில் தன் வேலைக்கான கருவிகளுடன் மாணிக்கம் நடந்து கொண்டிருந்தான். அவன் அப்பா இன்று அவனுடன் வரவில்லை. அவருக்கு மேலுக்குச் சுகமில்லை. இரவெல்லாம் வாந்தியெடுத்துக் கொண்டு புரண்டு கொண்டிருந்தார். எனவேதான், அவன்மட்டும் வேலைக்கு வர வேண்டியதாயிற்று.
மாணிக்கத்துக்கு இப்போது பதினொரு வயது. அவன் ஒன்பது வயதிலேயே வேலை செய்யத் தொடங்கி விட்டான். பள்ளியில் நான்காம் வகுப்பில் இருந்த போது அவன் அப்பா அவனைப் படித்தது போது மென்று கூறித் தம்மோடு வேலைக்கு இழுத்துக் கொண்டு விட்டார். அதில் மாணிக்கத்துக்கு ரொம்பவே மனக்குறை. அவரிடம் சொல்லிக்கூடப் பார்த்தான். கெஞ்சிப் பார்த்தான். அழுது பார்த்தான். ஆனால் அவன் அப்பா கதிர்வேலு எதற்கும் மசியவில்லை.
சரிதானடா! நீயெல்லாம் படித்துவிட்டு என்ன கிழிக்கப் போகிறாய்? ஒரு மண்ணும் சாதிக்க முடியாது. என் அப்பாகடத்தான், படி படி என்று என்னைத் தொந்தரவு செய்து படிக்க வைத்துக் கொண்டிருந்தார். கடைசியில் என்ன ஆயிற்று? எனக்கு பத்து வயது ஆனபோது மண்டையைப் போட்டார். எங்கள் அம்மாவையும் தம்பியையும் காப்பாற்றுவதற்காக நான் வேலைக்கு வரும்படி ஆயிற்று. நாமெல்லாருமே சின்ன வயதிலிருந்தே உழைக்கப் பிறந்தவர்கள்
என்று கூறி அவன் வாயை அடைத்துவிட்டார். எனவே அவனும் வேறு வழியில்லாமல் அப்பாவுடன் பையைத் துரக்கிக் கொண்டு புறப்பட்டுவிட்டான்.
என்ன மாணிக்கம்? இன்றைக்கு உன் அப்பா வரவில்லையா?
என்ற குரல் கேட்டு மாணிக்கம் தலை உயர்த்தினான். அவனுடைய நண்பன் முருகன் பெரிய சாக்குடன் எதிரே நின்றுகொண்டிருந்தான்.
இல்லை! அவருக்கு மேலுக்குச் சுகமில்லை, முருகா. நேற்று இரவெல்லாம் அடிக்கடி வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். தாமும் உறங்கவில்லை, எங்களையும் உறங்க விடவில்லை. அதனால் சோர்வாகப் படுத்துக் கொண்டிருந்தார். என் அம்மாதான், ‘நீ மட்டும் போய் வா’ என்றார்கள். அதுதான் தனியாகக் கிளம்பிவிட்டேன்
என்று மாணிக்கம் பதில் சொன்னான்.
வழக்கமாக வருகிற வாந்திதானே?
என்று கேட்டுவிட்டு முருகன் சிரித்தான்.
மாணிக்கம் பதில் சொல்லவில்லை. சிரித்தபடி நின்றுகொண்டிருந்தான். ஆனால் முகத்தில் ஓர் அவமான உணர்ச்சி தெரிந்தது.
நண்பன் பதில் சொல்லாமல் இருந்ததைப் பொருட்படுத்தாமல், முருகன் தொடர்ந்தான்:
எங்கள் வீட்டிலும் அதே கதைதான், மாணிக்கம்! எங்கள் அப்பா மட்டும் என்ன வாழ்ந்தார்? தினமும் குடித்துவிட்டுத்தான் வருவார். ராத்திரி பதினொன்று, பன்னிரண்டு - ஏன்? சில நாள்களில் நள்ளிரவு தாண்டிய பிறகும் - ஒரு மணி, இரண்டு மணி என்றெல்லாம் வந்து படுத்து அதற்கு அப்பாலும் ரகளை செய் வார். அம்மா கேட்டால் அவர்களுக்கு அடி விழும்!
நம் எல்லார் வீடுகளிலும் இதே கதைதான் என்று நினைக்கிறேன்
என்ற மாணிக்கம் வாய்விட்டுச் சிரித்தான்.
என்னடா சிரிக்கிறாய்? சிரிக்கிற விஷயமா?
என்றான் முருகன்.
சிரிக்காமல் பின் என்ன செய்வதாம்? அழவா சொல்லுகிறாய்? அழுவதற்குச் சிரிப்பது பரவாயில்லைதானே? தவிர, அழுது புலம்புவதால் ஆகப் போவதுதான் என்ன? சொல்லு, முருகா!
என்றான் மாணிக்கம் புன்சிரிப்புடன்.
நீ சொல்லுவது ஒரு விதத்தில் சரிதான், மாணிக்கம். அழுவதாலோ புலம்புவதாலோ எந்தப் பயனும் விளையப் போவதில்லை. நம்மைப் போன்ற கையாலாகாதவர்கள் சிரித்துத்தான் எல்லாத் துன்பத்தையும் ஆற்றிக்கொள்ள வேண்டும்!
என்றான் முருகன்.
என்னடா, பெரிய மனிதப் பேச்செல்லாம் பேசுகிறாய்?
நான் ஒன்றும் புதிதாய் எதுவும் சொல்லவில்லை. எங்கள் அம்மா அடிக்கடி புலம்புவதை இப்போது உன்னிடம் அவிழ்த்துவிட்டேன், அவ்வளவுதான்!
என்று சிரித்தான் முருகன்.
அது சரி, இப்போதுதான் கிளம்பினாயா?
என்று கேட்ட மாணிக்கத்திடம், இல்லையடா! நான் கிளம்பி ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஆலையில் சங்கு பிடிக்கும் போதே கிளம்பி விட்டேன்..
என்று முருகன் பதில் சொன்னான்.
காலிச் சாக்கு மாதிரி தெரிகிறதே? அதனால் தான் கேட்டேன்.
காலிச் சாக்குதான். இன்னும் குப்பை எதுவும் அவ்வளவாய்க் கிடைக்கவில்லை. இப்போதெல்லாம் நிறைய பேர் வீட்டுக் காம்பவுண்டுக்குள்ளேயே வைத்துக் குப்பையைக் கொளுத்திவிடுகிறார்கள் என்று தோன்றுகிறது..
இருக்கும், இருக்கும்.
சரி, வா. போய்க்கொண்டே பேசலாம்… சாக்கு நிறையக் குப்பை கொண்டு வராவிட்டால், என் அப்பா என்னைத் திட்டுவார். ஏன்? சில சமயம் அடிக்கவும் செய்வார். தெருவோரத்தில் படுத்துத் துரங்கிவிட்டு நான் காலிச் சாக்குடன் வருவதாகக் குற்றம் சாட்டி மிதிப்பார்!
இருவரும் பேசிக்கொண்டே நடந்தார்கள். நடந்துகொண்டிருந்தாலும் முருகனின் பார்வை தெருவோரங்களில் ஏதேனும் குப்பை கூளங்கள் கிடக்கின்றனவா என்று பார்த்தபடி சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது. நடைபாதையில்தான் இருவரும் நடந்துகொண்டிருந்தார்கள். அவ்வப்போது முருகன் குனிந்து காகிதம், பிளாஸ்டிக் போன்றவற்றை எடுத்துத் தன் சாக்குப் பைக்குள் போட்டுக் கொண்டிருந்தான். நண்பனுக்கு உதவும் வகையில் மாணிக்கமும் குனிந்து, குனிந்து அவ்வப்போது குப்பைகளைப் பொறுக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
ஆமாம் நீ கிளம்பி ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது என்றாயே, இன்னும் இந்தப் பக்கத்துத் தெருக்களிலேயேவா சுற்றிக் கொண்டிருக்கிறாய்?
ஆமாம், மாணிக்கம். சில வீடுகளில் குப்பைகளை அதிகாலையில் கொட்டமாட்டார்கள். அதனால் ஒன்பது மணி வரையில் இந்தப் பக்கங்களில் சுற்றிவிட்டு, அதற்கு அப்பால் வேறு பகுதிகளுக்குப் போவேன். அது சரி, இதோ, உன் அப்பாவும் நீயும் உட்கார்ந்து வேலை செய்யும் மரத்தடி வந்துவிட்டது. நீ போய் குந்திக்கொள். நான் போய் வருகிறேன், என்ன?
என்ற முருகன் மாணிக்கத்திடம் தலை யசைத்து விடை பெற்றுக்கொண்டு தன் வழியில் புறப்பட்டுப் போனான்.
நண்பன் நடந்து சென்றதைப் பார்த்தபடியே மாணிக்கம் தங்கள் வழக்கமான மரத்தடியில் உட்கார்ந்துகொண்டான். கைப்பையைத் திறந்து ‘தொழிற்கருவி’களையெல்லாம் எடுத்துத் தனக்கு முன்னால் பரப்பி வைத்துக்கொண்டான்.
‘டேலேய்’ தெருவில் நடந்து போகிறவர்களின் கால் செருப்புகள், மற்ற காலணிகள் இவற்றை யெல்லாம் கவனித்துப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். கொஞ்சம் நைந்துபோனது மாதிரியான தோல் வாருடன் யாராவது நடந்து போனால், ‘அய்யா! நான் தைத்துக் கொடுக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் அறுந்து போய்விடும்போல் இருக்கிறதே உங்கள் செருப்பு? என்று பணிவாய்க் கேட்க வேண்டும். மாலையில் வீடு திரும்பும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கக்கூடிய சிலர், ‘இந்த ஆள் சொல்வதும் சரிதானே? மாலையில் வீடு திரும்பும் போது மாட்டிக்கொண்டு நடக்கவே முடியாத அளவுக்கு இந்தச் செருப்பு வார் அறுந்து போய் விட்டால் என்ன செய்வது?’ என்கிற ஞானோதயம் வந்து, உடனே உன்னெதிரே வந்து நின்று செருப்பைக் கொடுப்பார்கள் என்று அவன் அப்பா கதிர்வேலு அவனுக்குச் சொல்லி வைத்திருந்தார்.
அந்த யோசனையின்படி, மாணிக்கம் தெருவில் நடந்துகொண்டிருந்தவர்களின் கால்களே கண்ணாக உட்கார்ந்து கொண்டிருக்கத் தொடங்கினான். எல்லாரும் அவன் பக்கமே திரும்பாமல் பாதையே கதி என்று பார்த்தபடி நடந்தார்கள். மேலும், யாருடைய செருப்பு வாரும் நைந்திருக்கவில்லை. எல்லாரும் பளபளவென்று மெருகு போட்ட காலணிகளுடன் நடந்துகொண்டிருந்தது அவனுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
தனியாக இன்று வேலைக்கு வருவது இது முதல் தடவை இல்லைதான். இருந்தாலும், வழக்கமான வரும்படியுடன் வீட்டுக்குப் போகாவிட்டால் அப்பாவிடம் அடி விழுமோ என்று அவனுக்குக் கவலையாக இருந்தது.