Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Uthikkum Neram
Kaadhal Uthikkum Neram
Kaadhal Uthikkum Neram
Ebook136 pages56 minutes

Kaadhal Uthikkum Neram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இளம்பெண் பவித்ரா அத்தைப்பையன் ரகுவை காதலிக்கிறாள். பவித்ராவின் காதலை தர்மா எதிர்க்கிறார். தர்மாவின் தங்கை கல்யாணி பலவருடங்களுக்கு முன், வேறு மதத்தை சார்ந்த துரைபாண்டியனை காதலித்து திருமணம்செய்து கொண்டதால், இரு குடும்பமும் பேசிக்கொள்வதில்லை. பவித்ரா ராகுவை திருமணம் செய்ய சம்மதிக்கிறாரா ? இல்லையா? என்பதை நாவலை படித்து தெரிந்துக் கொள்வோம்.

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580135506270
Kaadhal Uthikkum Neram

Read more from Anitha Kumar

Related to Kaadhal Uthikkum Neram

Related ebooks

Reviews for Kaadhal Uthikkum Neram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Uthikkum Neram - Anitha Kumar

    http://www.pustaka.co.in

    காதல் உதிக்கும் நேரம்

    Kaadhal Uthikkum Neram

    Author:

    அனிதா குமார்

    Anitha Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author//anitha-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 1

    அந்த உயர்ந்த பங்களா முழுக்க முழுக்க தர்மலிங்கத்தின் உழைப்பால் கட்டப்பட்டது. தர்மலிங்கம் அந்த ஊரின் பெரிய மனிதர். ஆள் பார்க்க வாட்ட சாட்டமாக உயரமாக நரைத்த தலை முறுக்கிய மீசையுடன் சற்று திமிராக இருப்பார். காலை டிபனை சாப்பிட்டு விட்டு ஹாலில் பெரிய சோபாவில் உட்கார்ந்து டி.வி.யில் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்தார்.

    சமையல் அறையில் இருந்து ஏலக்காய் போட்ட டீயை எடுத்துக்கொண்டு வந்தாள் பரமு.

    நீலகண்டனும் அவன் அம்மாவும் வந்திருக்காங்க! 

    ம்...வரச்சொல்லு!

    நீலகண்டனும் வயதான கமலாவும் உள்ளே வந்தார்கள்.

    என்ன நீலகண்டன் காலையிலேயே

    எனக் கேட்டார் தர்மலிங்கம்.

    நீலகண்டன் வந்த விஷயத்தை விளக்கினார்.

    அய்யா, என் அண்ணன் மணிகண்டனோட பொஞ்சாதி வேணி என் அண்ணன் இறந்து மூணு வருஷத்துக்கு பிறகு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிச்சு. அவங்க மொத குழந்தை மலர், வேணிகிட்டதான் இருக்கு. எங்கம்மா மலரை கூட்டிட்டு வர அங்க போனா வேணி குழந்தையை தரமாட்டேங்குது! 

    சரி இப்ப என்ன பண்ணணும், 

    எப்போதுக்கும் நீதி சொல்லுறவங்க நீங்க! நாளைக்கு பஞ்சாயத்துல என் அண்ணன் பொண்ணு மலர் எங்கம்மா கூடதான் இருக்கணும்னு தீர்ப்பு சொல்லணும்ங்கய்யா! 

    தர்மலிங்கம் சில நொடிகள் யோசித்தார்.

    உன் அண்ணன் பொண்ணு உன் அம்மா கூட இருக்கிறதுதான் சரி! நாளைக்கு நான் பஞ்சாயத்துல சொல்றேன் நீங்க ரெண்டு பேரும் கவலைப்படாம போங்க! 

    சரிங்கய்யா!  இரண்டு பேரும் தர்மலிங்கத்தை பார்த்து கும்பிட்டுவிட்டு கிளம்பினார்கள். அவர்கள் சென்றபிறகு பரமு கேட்டாள்.

    இது நியாயமா? 

    என்ன? 

    குழந்தை அம்மா கூட தானே இருக்கணும். பாட்டிகிட்ட போய் குழந்தையை விடுவாங்களா? 

    வேணிதான் இரண்டாம் கல்யாணம் பண்ணிகிட்டாளே. மணிகண்டனோட குழந்தை மலர் கமலா பாட்டிகிட்டதான் இருக்கணும், 

    புருஷன் இறந்த பிறகு வேணி இரண்டாம் கல்யாணம் பண்ணிகிட்டா அதுல என்ன தப்பு. இல்லாதவனை நினைச்சு வாழ்நாள் பூரா அழுதுகிட்டு இருக்க முடியுமா? அவளையும் அவ குழந்தையையும் நல்லா பார்த்துக்க ஒருத்தன் வந்திருக்கான். நல்ல விஷயம் தானே அதுக்காக குழந்தையை தாய்கிட்ட இருந்து பிரிக்கணுமா? 

    மலர் மணிகண்டனோட குழந்தை!

    நீங்க என்ன சொன்னாலும் சரி குழந்தை தாய்கிட்ட தான் இருக்கணும். தாய்கிட்ட இருந்து குழந்தையை பிரிக்கிறது தப்பு! 

    கமலா பாட்டிக்கும் பேத்திகிட்ட உரிமை இருக்கு! 

    அதுக்காக அம்மா இருக்கும் போது பாட்டிகிட்ட வளரவிடுவாங்களா? தப்பு தப்பா தீர்ப்பு சொல்லாதீங்க! 

    என் தீர்ப்பு என்னிக்கும் நியாயமாதான் இருக்கும்! 

    நீங்கதான் உங்க தீர்ப்ப மெச்சிக்கணும்!

    மனைவி சொன்னது தர்மலிங்கத்துக்கு சற்று எரிச்சலாக இருந்தது.

    அந்நேரம் வெளியே சாண்டரோகார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. மெரூன் கலர் காரை பார்த்ததுமே வந்திருப்பது கணேஷன் குடும்பம் என்பதை தெரிந்துகொண்டார் தர்மலிங்கம்.

    யாருங்க? எனக் கேட்டாள் பரமு.

    என் அண்ணன் பையன் கணேஷ் குடும்பத்தோட வந்திருக்கான், 

    இப்ப என்ன திடீர்னு வந்திருக்காங்க? 

    அவன் பையனுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்காம் அன்னிக்கே போனில் சொன்னான். பத்திரிக்கை வைக்க வந்திருப்பான்.! 

    அவர்களை வரவேற்க தர்மலிங்கமும் மனைவியும் வெளியே சென்றார்கள்.

    கணேஷ் தன் மனைவி மற்றும் இரண்டாவது பையனுடன் வந்திருந்தார்.

    வாப்பா வா வா...வாம்மா வா, என்று தர்மலிங்கம் வரவேற்றார்.

    சித்தப்பா சித்தி எப்படி இருக்கீங்க? 

    எல்லாரும் உள்ளே சோபாவில் உட்கார்ந்திருந்தார்கள். பரமு அனைவருக்கும் ஸ்வீட், காரம் எடுத்து வைத்தாள். காபி போட்டுக் கொடுத்தாள்.

    சித்தப்பா பெரிய பையனுக்கு பொண்ணு பார்த்தாச்சு வர்றதையில் கல்யாணம்! 

    பேஷ்! பொண்ணு என்னப்பா பண்றா! 

    கம்ப்யூட்டர் படிச்சிருக்கு! 

    வேலைக்கு போகுதா? 

    டி.சி.எஸ்.ஸில் வேலை பார்க்குது சித்தப்பா! 

    யம்மாரரரர..,

    தர்மலிங்கத்துக்கும், பரமுவிற்கும் கல்யாண பத்திரிக்கை வைத்து விட்டு கிளம்பினான்.

    *****

    அத்தியாயம் 2

    தர்மலிங்கத்தை அனைவரும் ‘தர்மா’ என்றுதான் கூப்பிடுவார்கள். தர்மாவும் பரமுவும் கணேஷ் வீட்டு கல்யாணத்துக்கு சென்றனர். கல்யாண மண்டப விழாவில் தர்மாவின் ப்ளூ கலர் ஜா-20 காரை கண்டதும் சொந்தக்காரர்கள் அனைவரும் ஓடி வந்து வரவேற்றார்கள்.

    வாங்க தாத்தா, வாங்க பாட்டி...! கணேஷின் இரண்டாவது மகன் முகிலன் வரவேற்றான். சொந்தங்கள் சிரித்த முகத்துடன் சந்தோஷமாக வரவேற்றார்கள்.

    அண்ணாச்சி அண்ணி கையை பிடிச்சு கூட்டிட்டு வாங்க, ஒரு சொந்தக்கார பெண் சொல்ல அனைவரும் சப்தமாக சிரித்தார்கள். பரமு சிவப்பு நிற பட்டு புடவை சரசரக்க புன்னகையோடு தர்மலிங்கத்தின் பின் சென்றாள்.

    எல்லா சொந்தக்கார பெண்களும் பரமுவை சூழ்ந்துகொண்டு அவளுடன் சிரித்து பேசியபடி மண்டபத்திற்குள் அழைத்துச் சென்றனர்.

    பவித்ரா வரலையா அண்ணி? 

    அவளுக்கு லீவு கிடைக்கலைம்மா...அதான் வரமுடியலை! 

    இப்ப என்ன பண்றா! 

    பி.இ. பைனல் இயர் பண்றா. கேம்பஸ் இன்டர்வியூவில் டி.சி.எஸ்.சில் செலக்ட் ஆயிட்டா...இன்னும் ஆறு மாசத்துல வேலைக்கு போக ஆரம்பிச்சிருவா.., 

    ரொம்ப சந்தோஷம் அண்ணி! 

    சிரிப்பும் அரட்டையும் ஆனந்தமுமாக கணேஷ் வீட்டின் கல்யாணம் கோலாகலமாக நடந்தது. மதிய சாப்பாட்டிற்கு பிறகு மாலை நெருங்கும்போது அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.

    நேரம் போனதே தெரியலை! என்றாள் பரமு.

    மூணாவது நாள் கறிச்சாப்பாட்டுக்கு கண்டிப்பா வந்திரணும் சித்தப்பாகணேஷ் வாசல் வரை வந்து வழியனுப்பினான்.

    பவித்ரா வந்தால் அவளையும் கூட்டிட்டு வாங்க சித்தி! 

    சரிப்பா!

    அனைவருக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1