Endrum Unnai Piriya Mattean!
By Anitha Kumar
()
About this ebook
அக்ஷதாவால் சரணை மறக்க முடியவில்லை.
ரகுராம் தன் பையன் சரண் அக்ஷதாவை மறக்க முடியாமல் தவிப்பதைப் பார்க்கிறார்.
சீதாராமனிடம் சரணின் மனநிலையை விளக்குகிறார்.. சீதாராமன் புரிந்துக்கொண்டு தன் மகள் மதுவிடம் சரணை அக்ஷதாவிற்கு விட்டு கொடுத்துடலாம் என்கிறார். அதற்கு மது சம்மதிக்கிறாளா இல்லையா என்பதை நாவலைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
Read more from Anitha Kumar
Nenjamellam Neeyadi Penney! Rating: 0 out of 5 stars0 ratingsAnamika Rating: 0 out of 5 stars0 ratingsVaanathaipola Kaadhal! Rating: 0 out of 5 stars0 ratingsInithu Inithu Kaadhal Inithu! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Uthikkum Neram Rating: 0 out of 5 stars0 ratingsHer Smile Rating: 0 out of 5 stars0 ratingsMullil Roja... Rating: 5 out of 5 stars5/5Shruthi - Kurunovelgal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Endrum Unnai Piriya Mattean!
Related ebooks
Kappal Paravai Rating: 0 out of 5 stars0 ratingsKankalukku Sonthamillai Rating: 5 out of 5 stars5/5Devathai Vanthu Vittal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalaagi Kasindhurugi Rating: 0 out of 5 stars0 ratingsSollil Varuvathu Paathi! Rating: 0 out of 5 stars0 ratingsPala Naal Kanave! Rating: 0 out of 5 stars0 ratingsUn Madiyil Kaithanean! Rating: 0 out of 5 stars0 ratingsNesam Niram Maarumo Rating: 0 out of 5 stars0 ratingsNenjukkul Poo Malarum Rating: 5 out of 5 stars5/5Vannathu Poochiyai... Rating: 0 out of 5 stars0 ratingsMalai Soodiya Velai... Rating: 3 out of 5 stars3/5Muthal Vasantham! Rating: 0 out of 5 stars0 ratingsAmma, Please, Enakkaga... Rating: 2 out of 5 stars2/5Kaadhal Meipada Vendum! Rating: 4 out of 5 stars4/5Soorasamharam Rating: 0 out of 5 stars0 ratingsThenaruvi Nathiyagi! Rating: 0 out of 5 stars0 ratingsEnnodu Kalanthuvidu! Rating: 0 out of 5 stars0 ratingsPogumidam Vegu Thooramillai Rating: 5 out of 5 stars5/5En Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsSri Ranga Sirippoli... Rating: 0 out of 5 stars0 ratingsOdum Megangale Rating: 5 out of 5 stars5/5Iththanai Naalai Engirunthaai Rating: 4 out of 5 stars4/5Nenjirkoru Vanchikkodi Rating: 5 out of 5 stars5/5Poojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Mayangukiraal Oru Maathu Rating: 5 out of 5 stars5/5Inikkum Inba Irave Nee Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsKundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsOonjaladum Ullangal Rating: 0 out of 5 stars0 ratingsSamsaarap Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsGnabagam Poo Mazhai Thoovum Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Endrum Unnai Piriya Mattean!
0 ratings0 reviews
Book preview
Endrum Unnai Piriya Mattean! - Anitha Kumar
http://www.pustaka.co.in
என்றும் உன்னை பிரியமாட்டேன்!
Endrum Unnai Piriya Mattean!
Author:
அனிதா குமார்
Anitha Kumar
For more books
http://www.pustaka.co.in/home/author/anitha-kumar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
1
கலைந்து போயிருந்த படுக்கை தேவிகாவின் கண்களை ரொம்ப நேரமாகவே உறுத்திக் கொண்டிருந்தது. அவள் பலமுறை திரும்பத்திரும்ப சொல்லியும் அதனை சரி செய்யாமல் டி.வி. பார்த்துக்கொண்டிருந்த அக்ஷதாவின் மீது எரிச்சலாய் வந்தது. அக்ஷதா
என்றாள் அடித்தொண்டையிலிருந்து.
வர்றேம்மா
என்றாள் அவள் வள்ளென்று.
சொல்லி எவ்வளவு நேரமாகுது அசையாம இன்னும் அப்படியே உட்கார்ந்துக்கிட்டு இருக்கே
பண்றேம்மா... இருங்கம்மா!
எப்போது? எப்போ பண்ணுவே?
இதோ இப்ப பண்ணிடறேன்
வர்றேன்ம்மா
எழுந்திருன்னு சொல்றேன்ல
அந்நேரம் பக்கத்து வீட்டு மாமி வீட்டிற்கு வந்தாள். கோவிலில் இருந்து வத்திருப்பார் போலும் அவள் கையில் விபூதி குங்குமம் இருந்தது.
இந்தாடி பிரசாதம்! எடுத்துக்கோ!
என்று அக்ஷதாவிடம் நீட்டினார். தேவிகா அக்ஷதாவை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள். அவள் முறைப்பது தெரிந்து அக்ஷதா எழுந்தாள். பின் மாமி கொடுத்த விபூதி குங்குமத்தை எடுத்துக் கெண்டாள்.
தன் வயதுக்கு மரியாதை தருவதற்காக அவள் எழுந்து நின்று பிரசாதம் வாங்கிக் கொண்டாள் என்று மாமி நினைத்துக் கொண்டாள்.
தேவிகா உன் மகளை நீ நன்னா வளர்த்து இருக்கே... என்ன ஒரு மரியாதை... என்ன ஒரு பக்தி... அவஷேமமா இருப்பா!
என்றாள் மாமி.
தேவிகா தன் தலையில் மெல்ல அடித்துக் கொண்டாள். மாமி சென்ற பிறகு அக்ஷதா சொன்னாள்.
பாருங்கம்மா பக்கத்துவீட்டு மாமி என்னைப் பற்றி நல்லா புரிஞ்சு வெச்சிருக்காங்க நீங்க என்னிக்குதான் என்னை பற்றி புரிஞ்சுக்க போறீங்களோ
போடீ!
அக்ஷதா வேலைக்கு கிளம்பிய போது அம்மா ‘போயிட்டு வர்றேம்மா' என்று அவளைப் பார்த்து புன்னகையுடன் சொல்லிவிட்டு கிளம்பினாள். தன்னிடம் ஆசையாக சொல்லிவிட்டு கிளம்பும் மகளை பார்த்து கையசைத்தாள் தேவிகா. அவள் சென்ற பிறகு படுக்கையில் நுழைந்த போதுதான் தெரிந்தது. காலையில் எழுந்த போது எப்படி கலைந்து போய் கசாமுசா வென்று கிடந்ததோ அப்படியே துளியும் மாறாமல் கிடந்தது. அவள் சந்தோஷம் கோபமாக மாறியது. தன் பேச்சை கேட்காமல் தன்னை ஏமாற்றிவிட்டு சென்றவளை திட்டிக்கொண்டே தேவிகா படுக்கை விரிப்புகளை மடித்து சரி செய்தாள்.
அக்ஷதா ஸ்கூட்டியை மெதுவாக ஓட்டி சென்றாள், அவள் எதிரே வெள்ளை நிற கார் ஒன்று வந்தது. அதற்கு வழிவிடுவதற்காக சாலை ஓரமாக வண்டியை ஒதுக்கி ஓட்டினாள். அந்த வெள்ளை நிற கார் அவளை கடந்து சென்ற பிறகு ரோட்டின் மைய பகுதியில் போகலாம் என நினைத்தாள். ரோடு மேடும் பள்ளமுமாக இருந்ததால் பேலன்ஸ் பண்ண முடியாமல் ஸ்கூட்டியுடன் ரோட்டில் விழுந்தாள் அஷதா. பின் அவள் மெல்ல எழுந்து நின்று முழங்காலில், கையில் ஒட்டியிருந்த மண்ணை தட்டி விட்டாள். ஸ்கூட்டி ரோட்டில் சாய்ந்து விழுந்து இன்னும் என்ஜின் ஓடிக்கொண்டிருந்தது.
அக்ஷதா படபடப்புடன் குனிந்து ஸ்கூட்டியை தூக்க முயன்றாள். அந்நேரம் ஒரு இளைஞன் அவளை நோக்கி ஓடி வந்தான். அவன் சுலபமாக ஸ்கூட்டியை தூக்கி நிறுத்தி அவளிடம் கொடுத்தான்.
பார்த்து போங்க மேடம்!
என்றான்.
தேங்க்ஸ்
என்றாள் அக்ஷதா.
தேங்க்ஸ் எல்லாம் எனக்கு வேண்டாம் என்கூட வந்து ஒரு கப் காபி சாப்பிடணும்!
என்றான் அவன். அக்ஷதா அவனை திரும்பி முறைத்துப் பார்த்தாள்.
ஹலோ மேடம் இதுக்கு பேரு தொல்லையா இது நான் உங்களுக்கு பண்ணின உதவி!
பெரிய புடலங்காய் உதவி... போடா... ஏன் நீ இல்லாட்டி என்னால இந்த ஸ்கூட்டியை தூக்க முடியாதா?
அப்படியா?
அவன் மீண்டும் ஸ்கூட்டியை ரோட்டில் சாய்க்க முயன்றான்.
ஏய் சரண்! ப்ளீஸ்! ரோட்டில் வெச்சு என் மானத்தை வாங்காதே!
அது!
சரண் அவள் ஸ்கூட்டியை தள்ளி கொண்டு வந்தான்.
ஸ்கூட்டியை குடுடா நான் கிளம்பணும்!
மாட்டேன்! எனக்கு உன்கூட நடந்து கொண்டே பேசிகிட்டு வரணும். ஸ்டேஷன் வரைக்கும் என்கூட நடந்து வா!
மாட்டேன்!
அப்போ நான் உன் ஸ்கூட்டியை தர மாட்டேன்!
உதை வாங்குவே!
உதைச்சுக்கோ ஸ்டேஷன் வந்தபிறகு தான் உன் ஸ்கூட்டி உன் கையில் கிடைக்கும்!
அக்ஷதா வேறு வழியில்லாமல் அவனுடன் சேர்ந்து நடந்தாள். அவன் அவள் ஸ்கூட்டியை தள்ளிக் கொண்டு வந்தான்.
என்ன சாப்பிட்டே அக்ஷதா?
இட்லி!
நீ இட்லி சாப்பிட்டதால் நானும் இட்லி தான் சாபிட்டேன்!
என்னால் 'கடி' தாங்கமுடியலைடா... வண்டியை என்கிட்ட குடுடா
உங்கம்மாகிட்ட திட்டு வாங்கினியா அக்ஷதா?
அது எப்படி உனக்கு தெரியும்?
உன்னைப்பற்றி எனக்கு எல்லாம் தெரியும் ஏன்னா நீ என் இதயத்துக்குள் இருக்கே!
சரண் இப்போ என் வண்டியை தரப்போறீயா இல்லையா?
இதோ கொஞ்ச தூரம் அவ்வளவு தான் கொஞ்சம் சிரிச்சுகிட்டு வாயேன் அக்ஷதா இவ்வளவு அழகான முகம் சிடுசிடுன்னு பார்க்க நல்லா இல்லை. உனக்கு ஒண்ணு தெரியுமா?
என்ன?
நீ உங்கம்மாகிட்ட திட்டு வாங்கினதால நானும் எங்கம்மாகிட்ட திட்டு வாங்கிக்கிட்டேன் எங்கம்மா ஒரு வேலையை செய்ய சொன்னாங்க உன்னை மாதிரி நானும் செய்யவே மாட்டேன்னு சொல்லிட்டேன்... எனக்கு நல்ல டோஸ் விழுந்துச்சு... ரொம்ப சந்தோஷமா இருந்தது... இந்நேரத்துக்கு நீயும் உங்கம்மாகிட்ட திட்டு வாங்கிட்டு இருப்பேன்னு நல்லா தெரியும்!
லூசு லூசு!
எங்கம்மா அப்பாகிட்ட உன்னை மாட்டிவிடறேன் பாரு!
ஆன்டியும் அங்கிளும் நம்பவே மாட்டாங்க நம்ம ஏரியா பூராவும் அய்யாவுக்கு எப்பவும் நல்ல பேருதான்!
எனக்கு நீ என்னென்னல்லாம் தொல்லை குடுக்கறேன்னு சொல்றேன் பாரு!
நான் உனக்கு பண்றது உதவியும் அக்கறையும் கொஞ்சங் கொஞ்சமா அதை புரிஞ்சுப்பே!
ஸ்டேஷன் அருகே வந்ததும் அவன் அவளிடம் ஸ்கூட்டியை கொடுத்தான்.
பார்த்துப்போ அக்ஷதா ஏதாவதுன்னா எனக்கு உடனே போன் பண்ணு!
போடா லூசு!
அவள் வேலை பார்க்கும் ஆஷா ஹாஸ்பிட்டலுக்கு ஸ்கூட்டியில் சென்றாள் அக்ஷதா. ஸ்கூட்டியில் இருந்து விழுந்ததால் சற்று பயந்து போயிருந்தாள் அக்ஷதா. மறுநாள் அவள் அலுவலகத்துக்கு மின்சார ரெயிலில் சென்றாள்.
2
சரண் இருபத்தி எட்டு வயது விஷமம் நிரம்பிய சாதுப் பையன். நல்லவன். அவன் ரத்தம் முழுவதும் அக்ஷதா பற்றிய நினைவுகள் தான் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். அவன் மனம் முழுவதும் அக்ஷதாவின் அழகான முகம் பதிந்து போய் இருந்தது. அவன் இதயம் எப்போதும் அவளுடன் பேசிக் கொண்டிருக்கதுடித்துக் கொண்டிருந்தது. கிண்டி ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் அக்ஷதாவிற்காக காத்துக் கொண்டிருந்தான் சரண். இரவு மணி பத்தாகி இருந்தது. சரணின் செல்போன் கிணுகிணுத்தது. அவன் அம்மா பேசினாள்.
மணி என்னடா ஆகுது இன்னுமா ஆபீஸ் முடியலை?
ஆபீஸ் எப்பவோ முடிஞ்சிடுச்சும்மா முக்கியமான ஒருத்தருக்காக ஸ்டேஷனில் காத்துகிட்டிருக்கேன் அவரை பார்த்ததும் உடனே வந்துடறேன்!