Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaaladiyil Oor Ulagam
Kaaladiyil Oor Ulagam
Kaaladiyil Oor Ulagam
Ebook115 pages19 minutes

Kaaladiyil Oor Ulagam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கவிதைகளும் எழுதியதுண்டு;
மிகவும் அரிதாகத்தான்!

என்னுடைய முதல் ஜனனம்
ஒரு கவிஞனாகத்தான். மற்ற
வடிவங்கள் பின்னால் கிடைத்த
பெருமிதங்கள்!

கொத்துக் கொத்தாய்க் கிடந்த
காகித மலர்களிலிருந்து,
சரமாய்த் தொடுக்க முடிந்தவை
இத்தொகுப்பில்! இன்னும் கூடத்
தேடினால் கிடைக்கலாம்;
இப்போதைக்குப் போதும்!

கவிஞன் என்ற பெருமிதத்தோடு
நான் உயர்ந்து நின்றது
ஹிந்திக் கவிஞர் மஹாதேவி வர்மாவின்
சந்நிதியில்தான்!

அந்தப் பிரயாகை (அலகாபாத்)
அனுபவங்கள் தனிக் கொத்தாய்...!

- சுப்ர.பாலன்

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580127904632
Kaaladiyil Oor Ulagam

Read more from Subra Balan

Related to Kaaladiyil Oor Ulagam

Related ebooks

Reviews for Kaaladiyil Oor Ulagam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaaladiyil Oor Ulagam - Subra Balan

    http://www.pustaka.co.in

    காலடியில் ஓர் உலகம்

    Kaaladiyil Oor Ulagam

    Author:

    சுப்ர. பாலன்

    Subra Balan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/subra-balan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    எம். கே. புரி

    பதினேழு ஆண்டுகளுக்கு முன்னால் அலஹாபாத்-ப்ரயாகை முகாமில் கூடிமகிழ்ந்த பன்மொழிக் கலைஞர்களிடையே, மலர்ந்து மணம் பரப்பும் நம்முடைய நட்பின் பெருமிதங்களுக்கு இந்தக் கவிமலர்த் தொகுப்பு!

    சுப்ர. பாலன்

    *****

    என்னுரை

    கவிதைகளும் எழுதியதுண்டு;

    மிகவும் அரிதாகத்தான்!

    என்னுடைய முதல் ஜனனம்

    ஒரு கவிஞனாகத்தான். மற்ற

    வடிவங்கள் பின்னால் கிடைத்த

    பெருமிதங்கள்!

    கொத்துக் கொத்தாய்க் கிடந்த

    காகித மலர்களிலிருந்து,

    சரமாய்த் தொடுக்க முடிந்தவை

    இத்தொகுப்பில்! இன்னும் கூடத்

    தேடினால் கிடைக்கலாம்;

    இப்போதைக்குப் போதும்!

    கவிஞன் என்ற பெருமிதத்தோடு

    நான் உயர்ந்து நின்றது

    ஹிந்திக் கவிஞர் மஹாதேவி வர்மாவின்

    சந்நிதியில்தான்!

    அந்தப் பிரயாகை (அலகாபாத்)

    அனுபவங்கள் தனிக் கொத்தாய்...!

    சுப்ர.பாலன்

    *****

    நெருக்கம்

    பேசும் மொழியில் எத்தனை வடிவம்!

    பழகும் நிலையில் எத்தனை விதங்கள்!

    ஆசைக் கடலில் எத்தனை மனங்கள்!

    அறிவின் நெருப்பில் எத்தனை சுடர்கள்!

    தேசப் படத்தின் வரிகளை விடவும்

    தெய்வப் பணியில் எத்தனை உருவம்!

    நேசப் பிணைப்பில் நெருங்கும் பொழுதில்

    நெகிழும் மனமும் உரிமையில் திளைக்கும்

    -சுப்ர.பாலன்

    *****

    சில கவிதைகளை

    'யெஸ்பால்,' 'கலசைக் கிழார்,'

    'பால. சித்தார்த்தன்' என்று

    வேறு பெயர்களிலும்

    வெளியிட்டேன். அவையும்

    இத்தொகுப்பில்...

    - சுப்ர. பாலன்

    *****

    மனமே நீயோர் வழிகாட்டு

    நினைவுத் தரையின் சிறுகீறல்

    நிஜமா கத்தான் விரிகிறது!

    கனவுப் போதின் கல்லறையில்

    கற்பனைப் பூவும் மலர்கிறது!

    இனிமைச் சேற்றுப் புதைமணலில்

    எத்தனை குவளை பூக்கிறது?

    மனமே நீயோர் தனியுலகம்

    மரணம் அறியாப் பொன்னுலகம்!

    நினைவுச் சுடரின் சிறுதெறிப்பில்

    நிழலும் கொஞ்சம் மிரள்கிறது!

    கனவுக் கடலின் கரைவிளிம்பில்

    கற்பனை படகாய் அலைகிறது!

    இனிமைக் கூட்டின் தேனடையில்

    எத்தனை நினைவுச் சிறகடிப்பு?

    மனமே நீயோர் போரிமயம்;

    மரணம் உணராப் பெருநிதியம்!

    நினைவுப் பூவின் சிறுதுகளாய்

    நிதமும் சிதறும் மகரந்தம்!

    கனவுக் காற்றின் மெல்லதிர்வில்

    கற்பனை சுகிக்கும் பெருமிதங்கள்!

    இனிமைச் சாற்றுப் பாற்கடலுள்

    எப்படி மூழ்கித் திளைப்பதென

    மனமே நீயோர் வழிகாட்டு!

    மனிதன் எனநீ

    Enjoying the preview?
    Page 1 of 1