Nallathambi
()
About this ebook
Related to Nallathambi
Related ebooks
Parappatharkku Mun Konjam Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Oru Vasantham Rating: 0 out of 5 stars0 ratingsAzhagin Muzhumathi Neeye...! - Part - 2 Rating: 5 out of 5 stars5/5Vithaiyin Pirathipalan Rating: 0 out of 5 stars0 ratingsPaattu Kalanthidavey Part 2 Rating: 5 out of 5 stars5/5Nilavey Vaa... Nillathey Vaa... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Puyal Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Kaadhal Kathai Rating: 0 out of 5 stars0 ratingsIndru Muthal Aanantham... Rating: 0 out of 5 stars0 ratingsதவமின்றி கிடைத்த வரமே! Rating: 0 out of 5 stars0 ratingsThavaminri Kidaitha Varame Rating: 5 out of 5 stars5/5Idhu Kaadhalendral Rating: 4 out of 5 stars4/5Anbirku Thalaivanangu Rating: 0 out of 5 stars0 ratingsஅன்பிற்கு தலைவணங்கு! Rating: 0 out of 5 stars0 ratingsஅழகே வா... அருகே வா... Rating: 0 out of 5 stars0 ratingsஉன்னை நானறிவேன்… Rating: 0 out of 5 stars0 ratingsMounamey Kaadhalaai..! Rating: 0 out of 5 stars0 ratingsVazhvu Thodangum Idam Nee Thane! Rating: 0 out of 5 stars0 ratingsUdhaya Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsEnthiran Manthiran Thanthiran Rating: 5 out of 5 stars5/5Mannil Theriyumo Vaanam? Rating: 0 out of 5 stars0 ratingsSorgathin Nizhal Rating: 3 out of 5 stars3/5Nila Nesam Rating: 5 out of 5 stars5/5Kathir Kathai Kadhambam Rating: 0 out of 5 stars0 ratingsCauvery Karaiyil Oru Kaadhal Kathai Rating: 0 out of 5 stars0 ratingsKaanal Neer Rating: 0 out of 5 stars0 ratingsUllean Amma Rating: 0 out of 5 stars0 ratingsMaalaiyaagatha Pookkal Rating: 4 out of 5 stars4/5Odum Mehangal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Nallathambi
0 ratings0 reviews
Book preview
Nallathambi - Jyothirllata Girija
http://www.pustaka.co.in
நல்லதம்பி
Nallathambi
Author :
ஜோதிர்லதா கிரிஜா
Jyothirllata Girija
For other books
http://www.pustaka.co.in/home/author/jyothirllata-girija
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
நல்லதம்பி
1
நல்லதம்பியால் நம்பவே முடியவில்லை. கணக்குப் பாடத்தில் எப்போதும் முதலாவதாக வரும் அவன் இந்தத் தடவை நான்காவதாகத்தான் வந்திருந்தான். இதை அவனால் துளியும் நம்ப முடியவில்லை. ஆனால் அது ஏன் இந்தத் தடவை இந்த மாதிரி ஆயிற்று என்பது மட்டும் அவனுக்குப் புரிந்தது.
தன்னிடம் தனிப்பட்ட படிப்புச் சொல்லிக் கொள்ளும் மாணவர்களுக்கு மதிப்பெண்களை வகுப்பு வாத்தியார் அள்ளிப் போட்டு விட்டார் என்று அவன் ஊகித்தான்.
அதனால்தான் எப்போதும் கடைசியாக இருக்கும் சிலரில் இடம் பெறும் மணி, அமுதன், காந்தன், வேலன் ஆகியோர் முந்தி விட்டார்கள் என்று அவனுக்குத் தோன்றியது.
எப்போதுமே முதல் மாணவனாக இருக்க வேண்டும் என்றால் தன்னிடம் தனிப்பட்ட படிப்பை அவன் படித்தல் நல்லது என்று அவன் வகுப்பு வாத்தியார் வைரநாதன் நல்லதம்பியிடமே சொன்னார்தான். ஆனால் அவனால் அது முடியவில்லை.
அவனைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பு வதற்கே மூக்கால் அழுது கொண்டிருந்த அவனுடைய சிற்றப்பா தனிப்பட்ட படிப்புக்காக வேறு பணம் செலவழிக்க முன் வருவாரா என்ன? அதனால் வாத்தியார் வைரநாதனின் யோசனையை அவனால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை.
தவிர, வாத்தியாரிடம் வேறு தனியாகப் படிக்காமலேயே தன்னால் எப்போதும் முதல் மாணவனாகத் திகழ முடியும் என்று அவன் உறுதியாக நம்பவும் செய்தான். இன்னும் சொல்லப் போனால் ஆசிரியர் அப்படிச் சொன்னதற்குப் பிறகு அவன் முன்னைக் காட்டிலும் மிகுதியான அக்கறையுடன் எல்லாப் பாடங்களையும் படித்தான்.
இந்தத் தடவை தன்னை முந்திவிட்ட மணி, அமுதன், காந்தன், வேலன் ஆகியோர் படிப்பில் - முக்கியமாக கணக்கில் - எந்த அளவுக்குக் கெட்டிக்காரர்கள் என்பது நல்லதம்பிக்கு நன்றாய்த் தெரியும். சுமாராகப் படிக்கிற அவர்கள் தன் அளவுக்கு உயர மாட்டார்கள் என்ற சின்ன எண்ணம் அவனுக்கு இல்லைதான். ஆனாலும், அவரிடம் படிக்கப் போய் இரண்டே மாதங்களில் தன்னை முந்திக்கொண்டு போகிற அளவுக்கு அவர்கள் மேதைகளாக ஆகியிருப்பார்கள் என்பதை அவன் மனம் நம்ப மறுத்தது. இதில் ஏதோ திரிசமன் வேலை இருக்க வேண்டும் என்று அவன் விடாப்பிடியாக நம்பினான்.
எப்போதும் தேர்வுக்கான விடைத்தாள்களைத் திருத்தி அந்தந்த மாணவனிடம் கொடுக்கும் வைரநாதன் இந்தத் தடவை ஏனோ அவற்றைக் கொடுக்கவில்லை. நல்லதம்பி அதைப் பற்றிக் கேட்டபோது முதல் நாள் அவற்றைக் கொண்டு வருவதற்கு மறந்து விட்டதாகச் சொன்னார். இரண்டாம் நாளும் அதே பதிலைச் சொன்னார். அதற்குப் பிறகு அவன் கேட்ட போதெல்லாம் இதையேதான் சொன்னார்.
நல்லதம்பிக்கு ஏற்கெனவே ஏற்பட்டிருந்த ஐயம் இதனால் இன்னும் உறுதிப்பட்டது. ஏதோ கோல்மால்
செய்துதான் வாத்தியார் அந்த நான்குபேரும் தன்னை மிஞ்சும்படி செய்து விட்டார் என்று முடிவு கட்டிய நல்லதம்பிக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது.
அந்தக் காலத்தில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தனிப்பட்ட படிப்புச் சொல்லிக் கொடுத்துப் பணம் சம்பாதிக்கக் கூடாது என்ற சட்டம் இருந்தது. இருந்தாலும் சில ஆசிரியர்கள் அந்தச் சட்டத்தை மீறி நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் வைரநாதனும் ஒருவர்.
பள்ளி ஆசிரியர்களுக்குச் சம்பளம் போதவில்லை என்பது நல்லதம்பிக்குத் தெரியும். அதனால் அவர்கள் தனிப்பட்ட படிப்புச் சொல்லிக் கொடுத்து மேற்கொண்டு பணம் சம்பாதிப்பதில் தப்பு இல்லை என்று அவன் எண்ணினான். ஆனால் அதற்காகத் தன்னிடம் படிக்காத மாணவர்களுக்கு மதிப்பெண்களைக் குறைத்துப் போடுவதும், தம்மிடம் பணம் கொடுத்துப் படிக்கிறவர்களுக்கு அநியாயமாக அதிக மதிப் பெண்கள் போட்டு அவர்களைக் கெட்டிக்காரர்களாக ஆக்குவதும் என்ன நியாயம் என்று அவன் குமுறினான்.
என்னடா, நல்லதம்பி, இந்தத் தடவை பின்னுக்குப் போய் விட்டாயே?
என்று அவனுடைய நண்பர்களில் சிலர் கிண்டலாக அவனிடம் கேட்ட போது அவனுக்கு ரோசமாக இருந்தது.
தேர்வு முடிவு தெரிந்ததற்குப் பிறகு ஒரு வாரம் வரை விடைத்தாள்களுக்காக அவன் பொறுமையாகக் காத்திருந்தான். நாள்தோறும் ஆசிரியருக்கு நினைவு படுத்தியும் அவர் அவற்றைக் கொண்டு வரவில்லை. எனவே அவன் ஒரு நாள் வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது, துடுக்குத் தனமாக இப்படிப் பேசிவிட்டான்.
சார்! நான் எத்தனையோ தடவைகள் ஞாபகப் படுத்தியும் நீங்கள் கணக்கு விடைத்தாள்களைக் கொண்டு வரவே இல்லை. மறதியால்தான் நீங்கள் அவற்றைக் கொண்டுவரவில்லை என்பதை நான் நம்ப மாட்டேன். வேண்டுமென்றே எனக்கு நீங்கள் குறைந்த மதிப்பெண்கள் கொடுத்திருக்கிறீர்கள். அதனால்தான் விடைத்தாள்களைக் கொண்டு வராமல் நாளைக் கடத்திக் கொண்டிருக்கிறீர்கள்...
வாத்தியார் வைரநாதன் பேயறைந்தவர் மாதிரிச் சில வினாடிகள் வரை பதிலே சொல்லாமல் அசந்து போய் நின்று விட்டார். நல்லதம்பியின் பேச்சைக் கேட்டு அவர் திகைத்துப் போனார். ஒரு மாணவன் அவ்வளவு அப்பட்டமாகவும் அதிகப் பிரசங்கித் தனமாகவும் பேசி அவர் வாழ்நாளில் கேட்டதே இல்லை.
என்னடா என்னவோ பெரிய புரட்சிக்காரன் மாதிரிப் பேசுகிறாய்? தலைமை ஆசிரியரிடம் சொல்லி உன்னைப் பள்ளிக்கூடத்திலிருந்து விலக்கி வைக்கிறேனா இல்லையா, பார். உன் மனசில் என்னவென்று எண்ணிக் கொண்டிருக்கிறாய்?
என்று அவர் தம் கண்களை உருட்டி விழித்துக் கொண்டே அவனை நோக்கிக் கேட்டார்.
ஆனாலும் அவர் குரல் எதனாலோ தடுமாறியது. அதில் உண்மை தொனிக்கவில்லை என்று நல்லதம்பிக்கு உறுதியாய்த் தெரிந்தது. அதனால் அவன் வைரநாதனின் மிரட்டலைக் கண்டு கொஞ்சமும் அஞ்சவில்லை. துளியும் அசைந்து கொடுக்காமல் அவன் துணிச்சலாகத் திரும்பவும் கேட்டான்.
"விலக்கி வைத்தால் வையுங்களேன், சார். உங்கள் கையில் அதிகாரம் இருக்கிறது.