Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Karaiyai Thedum Odangal
Karaiyai Thedum Odangal
Karaiyai Thedum Odangal
Ebook143 pages52 minutes

Karaiyai Thedum Odangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாரதி, குணா, வெங்கி மூவரும் முற்போக்கு சிந்தனை உடைய பிரம்மச்சாரி இளைஞர்கள். தங்களுடைய முற்போக்கு சிந்தனையை வெளிப்படுத்தும் விதமாய், புரட்சித் திருமணம் செய்ய எண்ணுகின்றனர். ஒருவன் ஊனமுற்ற பெண்ணுக்கு வாழ்வு கொடுக்கிறான். ஒருவன் விதவையைத் திருமணம் செய்கிறான். அவர்களிருவரையும் மிஞ்சும் விதத்தில் ஒரு வேசியைத் திருமணம் செய்யும் எண்ணத்தில் “அந்த” மாதிரி இடத்திற்குச் செல்கிறான். அங்கே ஒரு அமிர்தா என்னும் அபலையைச் சந்தித்துப் பேசி அவளையே திருமணமும் செய்து கொள்கிறான் பாரதி.
அவளுடன் வீட்டிற்குள் நுழைந்தவன் பலமான எதிர்ப்பைச் சந்திக்கிறான். அவர்களிருவரும் வீட்டின் பின்புறம் உள்ள, தட்டு முட்டுச் சாமான்கள் போட்டு வைக்கப்படும், அறையில் தங்குகின்றனர். தொடர்ந்து பாரதியின் குடும்பத்தார் பின்னிய சதி வலையில் சிக்கிய அமிர்தாவை, பாரதியே வீட்டை விட்டுத் துரத்துகிறான்.
உண்மை சில காலங்களுக்குப் பிறகு வெளி வர, தன் தவறை உணர்ந்த பாரதி அமிர்தாவைத் தேடி ஓடுகிறான்.
அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்தனரா?...நாவலைப் படியுங்கள்.
Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580130004992
Karaiyai Thedum Odangal

Read more from Mukil Dinakaran

Related to Karaiyai Thedum Odangal

Related ebooks

Reviews for Karaiyai Thedum Odangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Karaiyai Thedum Odangal - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    கரையைத் தேடும் ஓடங்கள்

    Karaiyai Thedum Odangal

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    "கத்தாழக் கண்ணாலே சுத்தாதே நீ என்ன... இல்லாத இடுப்பால இழுக்காதே நீ என்ன...?"

    கீழ்த்தளத்திலிருந்த டீக்கடை டேப் ரிகார்டர் வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் பாடிக் கொண்டிருந்தது.

    தெருவில், கிளி ஜோஸியம்..கிளி ஜோஸியம் என்று கூவிக் கொண்டே சென்றான் வறுமையில் வாடிப் போன கிளி ஜோஸியக்காரன். பாவம், அவன் கிளி அவனுக்கு ஒரு நல்ல சீட்டை எடுத்துத் தரவில்லை போலிருக்கு.

    மொட்டை மாடியில் பிளாஸ்டிக் சேர்களில் அமர்ந்தபடி புகை பிடித்துக் கொண்டிருந்த அந்த மூவர் மத்தியிலும் செம அமைதி.

    மேலே வெகு உயரத்தில் ஒரு ஜெட் விமானம் சென்று கொண்டிருக்க, அதன் ட்ரும்ம்ம்ம்ம் சத்தம் மட்டும் லேசாய்க் கேட்டது.

    பக்கத்து வீட்டு மொட்டை மாடிக்கு படிக்க வேண்டி வந்த ஒரு ப்ளஸ்டூ இவர்களின் இறுக்கத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு முணுமுணுத்தபடியே கீழே இறங்கிச் சென்றது.

    யாரோ வீட்டில் நான்-வெஜ் சமைக்கப்படும் தகவலை வாசனைத் தூதுவன் ஊர் முழுக்க அறிவித்துக் கொண்டிருந்தான்.

    ஏண்டா... ஆளாளுக்கு இப்படி அமைதியாவே உட்கார்ந்திட்டிருந்தா எப்படிடா?... ஏதாவது ஐடியா சொல்லுங்கடா!... அங்கிருந்த அமைதி கருங்கல்லை தன் வார்த்தைச் சம்மட்டியால் உடைத்தான் பாரதி. மகாகவி பாரதியார் மீதும்... அவரது கவிதைகள் மீதும் தீராக் காதல் கொண்ட அவனது தந்தையின் காதல் வெளிப்பாடுதான் அவனுக்கு பாரதி என்ற பெயர் வந்ததற்கான காரணம்.

    என்னடா சொல்லச் சொல்றே? வெடுக்கென்று கேட்டான் குணா. அந்த மூவரிலேயே சற்று ஒல்லியாக இருக்கும் இளைஞன். மாதத்திற்கு ஒரு முறை துவைக்கப்படும் ஜீன்ஸும், காலர் இல்லாத டீ-ஷர்ட்டும் தான் அவனது நிரந்தர உடை.

    டேய் குணா... கிட்டத்தட்ட ஒரு வருஷமாச்சு... நாம சபதம் போட்டு...! நம்ம சபதப்படி இதோ இந்த வெங்கி மட்டும்தான் வாக்குக் குடுத்தபடி ஒரு ஊனமான பொண்ணைக் கல்யாணம் பண்ணி வாழ்வு குடுத்திருக்கான்!.. அடுத்தபடியா நீ அவனையும் மிஞ்சும் விதத்துல... அடுத்த வாரம் ஒரு விதவையைக் கல்யாணம் பண்ணிக்கப் போறே!... ஆக.. நான் ஒருத்தன் மட்டும்தான் சபதத்தை நிறைவேற்றாம சுத்திக்கிட்டிருக்கேன்!

    சரிடா பாரதி... இதுல ஆவேசப்படறதுக்கு என்ன இருக்கு இப்ப?... பொறுமையா செய்யி!... டேக் யுவர் ஓன் டைம்! என்றான் வெங்கி.

    யோசித்துப் பார்த்தான் பாரதி. ஒரு வருடத்திற்கு முன்னால், இதே மொட்டை மாடியில் அவர்களுக்குள் நடந்த அந்த உரையாடல் அவன் காதுகளில் எதிரொலித்தது.

    த பாருங்கடா!... நம்ம திருமணம் மத்தவங்க திருமணம் மாதிரி சாதாரணமா... சம்பிரதாயமா இருக்கக் கூடாது... .வித்தியாசமா... ஏதோவொரு விதத்துல தியாகமா... ஒரு புரட்சியா... ஒரு புண்ணிய காரியமா இருக்கணும்டா!... நாலைய வ்ரலாறு நம்மைப் பாராட்டிப் பேசணும்!... நம்மால் இந்த சமூகத்துல மாற்றங்கள் வரணும்! என்றான் பாரதி. அந்தப் பெயர் வைக்கப்பட்டதாலோ என்னவோ அவனுக்குள் எப்போதும் ஒரு புரட்சி சிந்தனை வலம் வந்து கொண்டேயிருக்கும்.

    கரெக்ட்டுடா... நானும் அதைத்தான் நெனச்சேன்.. நம்ம செய்யற இந்தப் புரட்சி இளைய சமுதாயத்தினருக்கு ஒரு வழிகாட்டுதலா இருக்கணும்... நம்மைப் பார்த்து பல இளைஞர்கள் சமுதாயத்துல மாற்றங்களை ஏற்படுத்தற விதமான செயல்கள்ல ஈடுபடணும்!... அதனால இப்பவே முடிவெடுப்போம்டா!..எப்படியும் இன்னும் ஒரு வருஷத்துல நம்ம எல்லோருக்கும் கல்யாணம் ஆயிடும்... இப்பவே சபதமெடுத்தால் தான் அதைச் செயல் படுத்த முடியும்! என்றான் குணா.

    டேய்... எனக்கும் அந்த மாதிரி உணர்வு உண்டு... நானும் சம்மதிக்கறேன்! நிதானமாய் முன் வந்தான் வெங்கி என்கிற வெங்கட்ராமன்.

    அப்போது நிதானமாய் ஒப்புதல் அளித்த வெங்கிதான் உடனடியாகச் செயல் பட ஆரம்பித்தான். தனக்காகப் பெண் பார்த்துக் கொண்டிருந்த பெற்றோரிடம் தன் கொள்கையைச் சொல்லி ஊனமான பெண்ணை எனக்குப் பாருங்க என்று ஒற்றைக் காலில் நின்று, அதற்கான எதிர்ப்புக்களை எளிதாய்க் கடந்து, கடைசியில் விபத்தில் ஒரு கையை இழந்த ஒரு ஏழைப் பெண்ணைத் திருமணம் செய்து தன் வெற்றியை நிரூபித்தான்.

    அந்த திருமணத்திற்கு அவனை வாழ்த்த வந்திருந்த அந்த முக்கிய அரசியல் தலைவர், அவனை ஒரு உதாரண புருஷன் என்று சொல்லி விட்டுச் சென்றதை அவன் பல நாள் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தான்.

    குணாவும் படாதபாடு பட்டு, தன் வீட்டுப் பெரியவர்களைச் சம்மதிக்க வைத்து ஒரு விதவைப் பெண்ணை அடுத்த வாரம் திருமணம் செய்து கொள்ள நிச்சயம் செய்து விட்டான். அவன் தன் மகளைத் திருமணம் செய்து கொள்வான், என்று அதுநாள் வரையில் காத்திருந்து, ஏமாந்து போன அவனுடைய அக்கா, உறவை முறித்து கொண்டு போனது வேறொரு கதை.

    பாரதிக்கு, எங்கே தான் தோற்றுப் போய் விடுவோமோ? என்கிற பயம் வந்து விட்டது. ச்சே!... இந்தப் பேச்சை ஆரம்பித்ததே நான்தான்... ஆனா இப்ப நான்தான் பின் தங்கியிருக்கேன்!... விடக்கூடாது!... இவனுக ரெண்டு பேரும் ஒருத்தனுக்கொருத்தன் சளைத்தவனுகல்ல என்கிற மாதிரி ஆளுக்கொரு புரட்சிய செஞ்சிட்டானுக!.. நான் இதைவிட பெரிசா செய்யணும்!... அப்பத்தான் பாரதிங்கற என் பேருக்கு ஒரு மதிப்பு!... ம்.ம்.ம். என்ன செய்யலாம்?... என்ன செய்யலாம்?

    மண்டைக்குள் பரபரவென்று எண்ண ஓட்டங்கள். தோல்வியா?... எனக்கா?... ம்ஹூம்!... கூடாது!.

    அவனது டென்ஷனைப் பார்த்த குணா, டேய் பாரதி!... ஏண்டா அனாவசியமா டென்ஷனாகுறே?... நீயும் என்னை மாதிரி மணமகள் தேவை ன்னு விளம்பரம் குடு, கூடவே விதவைகள் மட்டும் விண்ணப்பிக்கவும் ன்னு போட்டுடு!... வர்றதுல ஒண்ணை செலக்ட் பண்ணிடு!

    ப்ச் என்றான் பாரதி.

    அப்ப ஒண்ணு செய்யி... நான் குடுத்திருந்த விளம்பரத்தைப் பார்த்து கிட்டத்தட்ட நாப்பது பேருக்கும் மேல அப்ளை பண்ணினாங்க!... அதுகளையே தர்றேன்... அதுல ஏதாவது ஒண்ணு தேறுமான்னு பாரு! குணா மீண்டும் சொல்ல,

    டேய்... சும்மாயிருடா!... நான் உங்க ரெண்டு பேரையும் தூக்கிச் சாப்பிடற அளவுக்கு புரட்சிகரமா ஏதாவது செய்யலாம்னு யோசிச்சிட்டிருக்கேன்

    அப்படின்னா... ஒண்ணு பண்ணு... பேசாம ஒரு பொணத்தைக் கல்யாணம் பண்ணிக்க... ரொம்பவே புரட்சிகரமா இருக்கும்!..எல்லாப் பேப்பரிலேயும் போடுவாங்க!... எல்லா டி.வி.லேயும் காட்டுவாங்க! சொல்லி விட்டு வாய் விட்டுச் சிரித்தான் குணா. தான் சாதித்து விட்டோம் என்கிற மமதை.

    கரெக்ட்டுடா... நீ சொல்றதுதான் கரெக்ட்! என்றான் பாரதி.

    எது?... பொணத்தைக் கட்டிக்கறதா?

    ஆமாம்! என்றான் பாரதி ஆணித்தரமாய்.

    கலவரமானான் குணா. டேய்... என்னடா உளர்றே?... நான் ஏதோ காமெடிக்குச் சொன்னேன்... நீ அதையே சீரியஸா எடுத்துக்கிட்டியா?

    2

    "உளறலைடா... உண்மையைத்தான் சொல்றேன்!.. நான் பொணத்தைதான் கட்டிக்கப் போறேன்!...

    Enjoying the preview?
    Page 1 of 1