Ini Ellam Sugame!
3/5
()
About this ebook
அந்த அவமானத்தை தாங்க முடியாத ஜெய்ஸ்ரீ அவனைப் பழி வாங்கத் துடிக்கிறாள். அவனது அபிமான கிரிக்கெட் பிளேயர் கிருஷ்ண குமார் என்பதைத் தெரிந்து கொண்டு, சென்னைக்கு அந்த பிளேயர் வீட்டிற்குச் சென்று, அவரது பெற்றோர்களிடம் பழகி நல்ல பெயர் வாங்குகிறாள். நியூஸிலாந்து டூர் முடிந்து திரும்பிய கிருஷ்ண குமாருடன் பழகுகிறாள். ஒரு கட்டத்தில் அவனைத் தன் காதல் வலையில் விழச் செய்கிறாள்.
பின்னர், ஊர் திரும்பி, மாணவர்களைத் தூண்டி விட்டு, அவர்களை கல்லூரி மாணவர் தலைவனான முகேஷிடம் கிரிக்கெட் பிளேயர் கிருஷ்ணகுமாரை ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்து வரச் சொல்லி வாதம் செய்ய வைக்கிறாள். ஆண்டு விழாவிற்கு வந்த கிருஷ்ணகுமார் தன்னுடன் ஜெய்ஸ்ரீயை நெருக்கமாய் வைத்துக் கொள்ள அதிர்கிறான் முகேஷ்.
தன் பழியைத் தீர்த்த பின் கிருஷ்ணகுமாருடனான காதலை முறித்துக் கொள்கிறாள் ஜெய்ஸ்ரீ. அதன் விளைவாய் கிருஷ்ணகுமார் விளையாட்டுத் திறமையை இழக்கிறான்.
மீதி நாவல் புத்தகத்தில்...
Read more from Mukil Dinakaran
Ennil Neeyadi!... Unnil Naanadi! Rating: 0 out of 5 stars0 ratingsVinnai Thodalam Unthan Siragu Rating: 0 out of 5 stars0 ratingsSiragai Viri!!... Sigaram Thodu!! Rating: 0 out of 5 stars0 ratingsSaathan Sollai Thattu Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Porkaalam Rating: 0 out of 5 stars0 ratingsThanga Thamarai Malare! Rating: 5 out of 5 stars5/5Athu Oru Varam! Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Vanthal! Rating: 5 out of 5 stars5/5Uyirulla Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Sumanthu Pogirean Rating: 0 out of 5 stars0 ratingsOru Kathavum... Innoru Kathavum! Rating: 0 out of 5 stars0 ratingsMalarum Sudugindrathu Rating: 0 out of 5 stars0 ratingsKanavaana Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsAnbai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsAasaiye Alai Polea...! Rating: 0 out of 5 stars0 ratingsIppadikku... Un Uyir! Rating: 0 out of 5 stars0 ratingsUrangum Neruppu Rating: 0 out of 5 stars0 ratingsPoochuduthe En Vaalibam! Rating: 0 out of 5 stars0 ratingsSaami Potta Mudichu! Rating: 0 out of 5 stars0 ratingsUyirgalidathu Anbu Vendum! Rating: 0 out of 5 stars0 ratingsEzhu Janmam Vendinean Rating: 0 out of 5 stars0 ratingsNetru Vaarai Nee Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsUyiril Pooparikkum Devathaiyum Neethan Rating: 0 out of 5 stars0 ratingsIrandaam Manaiviyagiya Naan... Rating: 0 out of 5 stars0 ratingsPoovizhi Vaasalile! Rating: 0 out of 5 stars0 ratingsVarum Kaalam… Vasantha Kaalam! Rating: 0 out of 5 stars0 ratingsAnbil Ullathu Vazhkai Rating: 0 out of 5 stars0 ratingsUn Nizhalum Naanthane? Rating: 0 out of 5 stars0 ratingsSuzhal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ini Ellam Sugame!
Related ebooks
Moongil Pookkal Rating: 1 out of 5 stars1/5Vishwa Thulasi! Rating: 0 out of 5 stars0 ratingsThenaruvi Nathiyagi! Rating: 0 out of 5 stars0 ratingsArputha Aani Muthey! Rating: 0 out of 5 stars0 ratingsAmma, Please, Enakkaga... Rating: 2 out of 5 stars2/5Ezhu Maathangal Ezhu Naadugal Rating: 0 out of 5 stars0 ratingsNinaivellam Kokila Rating: 0 out of 5 stars0 ratingsMel Nokki Paayum Aruvi Rating: 0 out of 5 stars0 ratingsSugamana Kaathirupu! Rating: 0 out of 5 stars0 ratingsMaayam Seithayo Mayava Rating: 0 out of 5 stars0 ratingsUsha Subramanian Kadhaigal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsMounamenum Siraiyil...! Rating: 0 out of 5 stars0 ratingsPoove Pen Poove Rating: 0 out of 5 stars0 ratingsTheeyiniley Valar Jyothiye Rating: 5 out of 5 stars5/5Nenjil Unthan Ninaive Rating: 1 out of 5 stars1/5Malargal Pesuma? Rating: 2 out of 5 stars2/5Uyirukku Appaal Rating: 0 out of 5 stars0 ratingsOru Murai Sollividu Rating: 5 out of 5 stars5/5Enthanuyir Kaadhalaney! Rating: 5 out of 5 stars5/5Kuyilosai Kettayo! Rating: 0 out of 5 stars0 ratingsIdhaya Karuvaraiyil Rating: 4 out of 5 stars4/5Oru Thalai Kadhal Rating: 0 out of 5 stars0 ratingsKonji Pesa Koodatha? Rating: 0 out of 5 stars0 ratingsNizhal Yutham Rating: 0 out of 5 stars0 ratingsKaathalaai Vanthu Pogiraai Rating: 5 out of 5 stars5/5காதலாய் வந்து போகிறாய் Rating: 0 out of 5 stars0 ratingsIththanai Naalai Engirunthaai Rating: 4 out of 5 stars4/5Kaathal vaasanai Rating: 4 out of 5 stars4/5Ithuvum Tajmahal Than Rating: 0 out of 5 stars0 ratingsOdum Mehangal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Ini Ellam Sugame!
1 rating0 reviews
Book preview
Ini Ellam Sugame! - Mukil Dinakaran
http://www.pustaka.co.in
இனி எல்லாம் சுகமே!
Ini Ellam Sugame!
Author:
முகில் தினகரன்
Mukil Dinakaran
For more books
http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
1
என்.எஸ்.பி.கல்லூரி
யின் லேடீஸ் ஹாஸ்டல்.
அறை எண்:56-ல் அழுது கொண்டிருந்தாள் ஜெய்ஸ்ரீ. மூன்றாமாண்டு மாணவியான அவள் சொந்த ஊர் சென்னை, கல்லூரிப் படிப்பிற்காக கோவை வந்து ஹாஸ்டலில் தங்கியிருக்கிறாள். அளவான உயரமும், அழகான தேகமும் இருந்த போதிலும், தோலின் நிறம் சற்றுக் கறுப்பானதால் அவளைப் பேரழகி
என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. சரி... அழகி
என்றாவது சொல்லலாம் என்றால், அதுவும் கூட அவளுக்குக் கொஞ்சம் அதிகம்தான். வேண்டுமென்றால் சராசரி
அது கூட இல்லை... சராசரிக்கும் கீழ்
என்று வேண்டுமானால் சொல்லலாம். அது அவளுக்கே தெரியும். சில நேரங்களில் கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தைப் பார்த்து அவளே சொல்லிக் கொள்வாள். போடி... போடி... உன் வாழ்க்கையில் காதல் என்ற வார்த்தைக்கே இடமில்லை! குருடன் கூட உன்னைக் காதலிக்க மாட்டான்!
அப்போது கதவு தட்டப்படும் ஓசை கேட்க, அவசரமாய்க் கண்களைத் துடைத்துக் கொண்டு, நிதானமாய் எழுந்து போய் கதவைத் திறந்தாள்.
வெளியே நின்று கொண்டிருந்த அறைத் தோழி உஷா, என்னடி கிளாஸுக்கு வராம இங்க வந்து உட்கார்ந்திட்டிருக்கே? என்னாச்சு? ஏன் முகமெல்லாம் வீங்கியிருக்கு... அழுதியா?
கேட்டபடியே உள்ளே வந்தாள்.
இல்லை
என்னும் விதமாய் ஜெய்ஸ்ரீயின் தலை இட, வலமாய் ஆடினாலும், அவள் முகம் சற்றும் மாறாமல் அழுது வடிந்து கொண்டே இருந்தது.
அவளுக்கு நேர் எதிரில் வந்து நின்று அவள் தாடையைத் தொட்டுத் தூக்கிய உஷா, த பாரு ஜெய்ஸ்ரீ... எல்லா விஷயமும் நானும் கேள்விப்பட்டேன்... அந்த முகேஷ் உன்னைக் கேவலமாய்த் திட்டிட்டான்... அதனால் நீ மூட் அவுட்டாகி வகுப்புக்குக் கூடப் போகாமல் அறைக்கு வந்திட்டே! என்ன நான் சொல்றது சரிதானே?
கேடாள்.
அவளது கேள்விக்கு பதிலேதும் கூறாமல் ஜெய்ஸ்ரீ அமைதியாகவே இருக்க, ஏய்... அவனெல்லாம் ஒரு ஆளா? அவன் பேச்சுக்கு எதுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறே?
போடா பொறம் போக்குன்னு சொல்லிட்டுப் போயிட்டே இருப்பியா... அதை விட்டுட்டு... மூஞ்சியத் தொங்கப் போட்டுட்டுத் திரியறா!
தோழியை சமாதானப்படுத்த எதையெதையோ சொன்னாள் உஷா.
இல்ல உஷா... அந்த முகேஷ்... வேணுமின்னே திட்டம் போட்டு என்னை அவமானப் படுத்தணும்னே பண்ணியிருக்கான்!
... அழுகையினூடே சொன்னாள் ஜெய்ஸ்ரீ.
ஏன்? எதுக்கு? அவனுக்கென்ன உன் மேல் அத்தனை கோபம்?
காலேஜ் எலக்ஷன்ல எல்லாப் பொண்ணுகளும் அவனுக்கு ஆதரவா ஓட்டுக் கேட்டப்ப... அவன் என்னையும் பிரச்சாரத்துக்குக் கூப்பிட்டான்! நான் மறுத்திட்டேன்! அந்தக் கடுப்பை மனசுல வெச்சுக்கிட்டு இன்னிக்கு என்னை கேவலப்படுத்திட்டான்
அப்படி என்ன பண்ணிட்டான்... நீ இந்த அளவுக்கு மனசு நொந்து போற மாதிரி?
உஷா கேட்க,
கடந்த ரெண்டு மாசமாகவே அவன் என் கூட வலிய வந்து வந்து பேசினான்! நானும்... சரி கூடப் படிக்கற ஸ்டூடண்ட்தானே?ன்னு கேஷுவலா பழக ஆரம்பிச்சேன்!
யூ மீன் லவ்?
உஷா தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்டாள்.
ம்ஹூம்... நான் அப்படியெல்லாம் சிந்திக்கவேயில்லை! ஏன்னா எனக்குத் தெரியும் என்னோட தோற்றத்தைப் பற்றி! .ஆனா அவன் சிந்திச்சிருக்கான்! உள்ளுக்குள்ளார என்னைக் காதலிச்சிருக்கான்!
அது எப்படி உனக்குத் தெரியும்?
ரெண்டு மூணு கேர்ள்ஸ் வந்து என் கிட்ட சொன்னாங்க!
ஏய் நீ ரொம்ப லக்கிடி... இந்தக் காலேஜ்ல அப்சரஸ் மாதிரி பல பெண்கள் இருந்தும் அந்த முகேஷ் உன் மேல் லவ்வாயிருக்கான்னா... நீ லக்கிதானே?ன்னு!
சோகமாய்ச் சொன்னாள் ஜெய்ஸ்ரீ.
ஓ... இப்படியொண்ணு நடந்திருக்கா? எனக்குத் தெரியவே இல்லையே?
நான் ஒரு லூசு! அதை உண்மைன்னு நம்பி அவன் கூட இன்னும் கொஞ்சம் டீப்பா பழக ஆரம்பிச்சேன்! என்னிக்காச்சும் ஒரு நாள் அவன் நேரடியா தன்னோட லவ்வைச் சொல்லுவான்!னு காத்திட்டிருந்தேன்! ஆனா அவன் சொல்லவேயில்லை!
உடனே நீயே கேட்டுட்டே? அப்படித்தானே?
ஆமாம்!...
என்ற ஜெய்ஸ்ரீ, ஏன் கேட்டேன்னா...
அவ கிட்ட நேரடியா சொல்லத் தயக்கமாயிருக்குன்னு அவன் மத்த கேர்ள்ஸ் கிட்ட சொல்லியிருக்கான்! அதனால் சரி நாமே சப்ஜெக்டை ஓப்பன் பண்ணுவோம்!ன்னு ஓப்பன் பண்ணினேன்! அவன் அதுக்காகவே காத்திருந்தவன் போல் தன் சுயரூபத்தைக் காட்டிட்டான்! எவ்வளவு கேவலமா என்னைப் பேச முடியுமோ... அவ்வளவு கேவலமாய்ப் பேசித் தள்ளிட்டான்
என்றாள் கண் கலங்கி.
ஏன்? என்ன சொன்னான்?
கோபமாய்க் கேட்டாள் உஷா.
***
கல்லூரி கேண்டீன்.
தன் வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவியருடன் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தாள் ஜெய்ஸ்ரீ.
அவள் மேஜைக்கு அடுத்த மேஜையில் அமர்ந்து அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி அமர்ந்திருந்தான் முகேஷ்.
ராஸ்கல்... உள்ளுக்குள்ளார காதலி வெச்சுக்கிட்டு... அதை நேர்ல சொல்ல தைரியமில்லாம பார்க்கிறதைப் பாரு...
என்று நினைத்துக் கொண்ட ஜெய்ஸ்ரீ, அவனைப் பார்த்து அழகாய்ப் புன்னகைத்தாள்.
அந்தப் புன்னகை, என் மனசு உன்னோட காதலை ஏற்றுக் கொண்டு விட்டது என் ராஜகுமாரா!
என்கிற தகவலைக் கொண்டு போய் அவனிடம் சேர்க்க,
அதைப் புரிந்து கொண்ட முகேஷ், கண்களால் கேட்டான். ஏன் நீ முதலில் சொல்ல மாட்டாயா?
டேய் நீதாண்டா ஆண் மகன்! நீதாண்டா முதலில் சொல்லணும்
ஜெய்ஸ்ரீயும் பார்வையால் பதில் சொன்னாள்.
ம்ஹும்... நீதான் முதல்ல சொல்லணும்!
அடம் பிடித்தான் விழிகளால்.
ஓ.கே.டா...
என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டு எழுந்து போய் அந்த முகேஷுக்கு எதிரே அமர்ந்தாள்.
முகேஷ்... இப்ப உன் மனசுல என்ன நினைப்பு ஓடுது!ன்னு சொல்லட்டா?
வசீகரமாய்ப் பார்த்தவாறே கேட்டாள்.
ம்... சொல்லு பார்க்கலாம்!
என்றான் அவன்.
இந்த ஜெய்ஸ்ரீ கிட்ட எப்படிடா என்னோட காதலைச் சொல்றது?
ன்னு யோசிச்சிட்டிருக்கே!" என்றாள் அவள் இரண்டு கண்களையும் வேகமாய் மூடித் திறந்து.
அவன் பதிலேதும் பேசாமல் அவள் முகத்தையே வியப்பாய்ப் பார்க்க,
மேலும் தைரியமாகிப் போன ஜெய்ஸ்ரீ, "என் கிட்ட என்னடா பயம்! ஓப்பனா சொல்ல வேண்டியதுதானே? நான் என்ன