Bangaru Kutty!
()
About this ebook
போன இடத்தில் அவர்கள் இருவரும் இறந்து போன செய்தி கேட்டு அதிர்ச்சியடைகிறார். சாவு குறித்து ஆழ்ந்து விசாரித்ததில், அந்த ஊர் சின்னப்பண்ணை புத்தி சுவாதீனமில்லாத அந்தச் சிறுமியைக் கெடுத்து அவள் வயிற்றில் ஒரு குழந்தையைக் கொடுத்து விட்டதையும், அந்தக் குழந்தையைப் பெற்றெடுக்க முடியாமல் அந்தச் சிறுமி இறந்து விட்டதையும் அறிந்து குமுறுகிறார்.
அவர் அங்கு வாழ்ந்த காலத்தில் யாராவது அந்த பங்காருக்குட்டியை சீண்டினால் நந்தகோபாலிடம்தான் வருவாள். தன்னை அடித்தவர்களைக் கொன்று விடுமாறு சொல்லுவாள்.
அந்தக் காட்சிகள் நந்தகோபாலின் மனதினுள் ஓட, பங்காருக்குட்டியின் ஆசைப்படி, சின்னப்பண்ணையைக் கொல்லத் திட்டமிடுகிறார்.
மீதியை வாசித்து ரசியுங்கள்.
Read more from Mukil Dinakaran
Uyirulla Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Varam! Rating: 0 out of 5 stars0 ratingsVinnai Thodalam Unthan Siragu Rating: 0 out of 5 stars0 ratingsThanga Thamarai Malare! Rating: 5 out of 5 stars5/5Siragai Viri!!... Sigaram Thodu!! Rating: 0 out of 5 stars0 ratingsEndha Moongil Pullankuzhal? Rating: 0 out of 5 stars0 ratingsAttaikathi Rajakkal Rating: 0 out of 5 stars0 ratingsEn Vazhvile Deepam Yetru...! Rating: 0 out of 5 stars0 ratingsManasu Valikkuthu Mathumitha! Rating: 0 out of 5 stars0 ratingsEnnil Neeyadi!... Unnil Naanadi! Rating: 0 out of 5 stars0 ratingsOru Kathavum... Innoru Kathavum! Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Vanthal! Rating: 5 out of 5 stars5/5Therodi Ointha Theru Rating: 0 out of 5 stars0 ratingsMalarum Sudugindrathu Rating: 0 out of 5 stars0 ratingsMalaiyum Avaney!... Mazhaiyum Avaney! Rating: 0 out of 5 stars0 ratings"Rendum Rendum Moonu" Rating: 0 out of 5 stars0 ratingsMedhuvaga Sellum Ambulancegal Rating: 0 out of 5 stars0 ratingsAnbenum Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsMannithu Vidu... Magane...! Rating: 0 out of 5 stars0 ratingsIni Ellam Sugame! Rating: 3 out of 5 stars3/5Mullum Naane...! Malar Naane! Rating: 0 out of 5 stars0 ratingsSugamana Kaathirupu! Rating: 0 out of 5 stars0 ratingsThee Kozhunthil Pani Thuliyai..!!! Rating: 0 out of 5 stars0 ratingsPoochuduthe En Vaalibam! Rating: 0 out of 5 stars0 ratingsJeevan Oyum Munney! Rating: 0 out of 5 stars0 ratingsAatuvithal Yaaroruvar? Rating: 0 out of 5 stars0 ratingsKaanal Sorgam Rating: 0 out of 5 stars0 ratingsMulloduthan Muthangala? Rating: 0 out of 5 stars0 ratingsIppadikku... Un Uyir! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Bangaru Kutty!
Related ebooks
Uyirin Uyire Rating: 5 out of 5 stars5/5Punnagai Sei Thozhi Rating: 5 out of 5 stars5/5விவேக் vs விவேக் Rating: 0 out of 5 stars0 ratingsVivek VS Vivek Rating: 5 out of 5 stars5/5Ennai Kaapatrungal! Rating: 0 out of 5 stars0 ratingsNagaratha Nizhal Ondru! Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nee….Aathma! Rating: 5 out of 5 stars5/5Paattu Kalantidave Rating: 0 out of 5 stars0 ratingsNagaratha Nizhal Ondru! Rating: 0 out of 5 stars0 ratingsIndha Mannil Anandham Rating: 0 out of 5 stars0 ratingsOruvan Manathu Onbathada! Rating: 0 out of 5 stars0 ratingsMalaiyum Avaney!... Mazhaiyum Avaney! Rating: 0 out of 5 stars0 ratingsThottathellam Pon Rating: 5 out of 5 stars5/5Cylinder Niraya Anbu Rating: 0 out of 5 stars0 ratingsMayakkam Enna... Undhan Mounam Enna... Rating: 0 out of 5 stars0 ratingsIrulai Virattu Rating: 0 out of 5 stars0 ratingsCocktail Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsKaathirukka Neramillai Rating: 5 out of 5 stars5/5Saathan Sollai Thattu Rating: 0 out of 5 stars0 ratingsRaavana Raajyam Rating: 0 out of 5 stars0 ratingsMaranam Unnai Mannikkattum Rating: 5 out of 5 stars5/5Irandil Ondru Rating: 0 out of 5 stars0 ratingsPerum Mazhai Naatkal Rating: 2 out of 5 stars2/5Kolai, Innoru Kolai! Rating: 0 out of 5 stars0 ratingsThanithiru Vizhithiru Rating: 0 out of 5 stars0 ratingsKanal Vizhi Rating: 5 out of 5 stars5/5Kanavu Sumanthu Pogirean Rating: 0 out of 5 stars0 ratingsIthu Pol Mazhaikkaalam Rating: 5 out of 5 stars5/5Imaikatha Iravu Rating: 5 out of 5 stars5/5Puthi Munai Kutram Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Bangaru Kutty!
0 ratings0 reviews
Book preview
Bangaru Kutty! - Mukil Dinakaran
http://www.pustaka.co.in
பங்காருக் குட்டி!
Bangaru Kutty!
Author:
முகில் தினகரன்
Mukil Dinakaran
For more books
http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
1
இந்த ஆண்டிற்கான தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த மாதம் இருபத்தி ஆறாம் தேதி துவங்கியது. கூட்டத் தொடரின் முதல் நாளன்று கவர்னர் உரை நிகழ்த்தினார்
எல்லையில் ஊடுருவித் தாக்குதல் நிகழ்த்திய பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்ததில் மூன்று தீவிரவாதிகள் உயிரிழந்தனர்
தொலைக்காட்சி முன் அமர்ந்து செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தார் நந்தகோபால்.
பக்கத்து டீப்பாயில் அவர் கொறிப்பதற்காக வறுத்த வேர்க்கடலை வைக்கப்பட்டிருந்தது.
யானை வரும் பின்னே... மணியோசை வரும் முன்னே
என்பது போல் அவர் மனைவி உமா அங்கு வருவதற்கு முன் காஃபி வாசனை வந்தது.
ஏங்க... திருச்சி போறதா சொல்லிட்டிருந்தீங்களே... டிக்கெட் ரிசர்வ் பண்ணிட்டீங்களா?
அவர் அருகில் வந்து நின்று காபி டம்ளரை ஆற்றியபடியே கேட்டாள் உமா.
ம்ம்... முதல்ல ரயில்ல போகலாம்!னுதான் முடிவு பண்ணியிருந்தேன்! கடைசில பஸ்ஸிலேயே போய்க்கலாம்!னு முடிவு பண்ணிட்டேன்... அதான் டிரெயின் டிக்கெட் ரிசர்வ் பண்ணலை!
சொல்லியவாறே மனைவி நீட்டிய காபி டம்ளரை வாங்கினார்.
எப்பக் கிளம்பறீங்க? இன்னிக்கு நைட்டா?
அவர் அருகில் அமர்ந்தவாறே கேட்டாள்.
நிதானமாக ஒரு முறை உறிஞ்சி விட்டு, ம்... இன்னிக்குத்தான்! நைட் பத்து மணிக்கு பஸ்! திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட் போய் ஏறணும்
என்றார் நந்தகோபால்.
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தொடர்ந்து உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்றது. இறுதியில் உறுப்பினர்களின் விவாதத்திற்கு முதலமைச்சர் பதிலளித்தார்!
செய்தி வாசிப்பாளர் தன் பணியை சிறப்பாய்ச் செய்து கொண்டிருந்தார். ஆனால், மின்சார இலாகாவிற்கு அவர் மீது என்ன கோபமோ தெரியவில்லை படக்
கென்று மின்சாரத்தைப் பிடுங்கிக் கொண்டது.
ச்சை! எப்பப் போகும்... எப்ப வரும்னே... புரிய மாட்டேங்குது!
குடித்து முடித்த டம்ளரை மனைவியிடம் கொடுத்து விட்டு, நாற்காலியின் பின்புறம் வரை நன்றாகச் சாய்ந்து அமர்ந்து கொண்டு, மேலே சுழற்சியை இழந்து நின்றிருந்த மின்விசிறியை ஏக்கமாய்ப் பார்த்தார்.
கழுத்துப் பகுதியில் வியர்வைக் கச... கச
ப்பு ஆரம்பமானதும், எழுந்து போர்ட்டிகோவில் வந்து நின்றார்.
அவரது நினைவு அடுக்குகளின் அடிப்பகுதியிலிருந்த ஊஞ்சப்பாளையம் கிராமம் சடாரென்று நிமிர்ந்து மேல் பகுதிக்கு வந்தது.
ஊஞ்சப்பாளையம்
அவரது வாய் அந்தப் பெயரை உச்சரித்த போது பச்சைப் பசேல் வயல்... தென்னந்தோப்பு... மலைக் கோவில் கோபுரம்... லட்சுமியம்மாள்... பங்காருக்குட்டி... சங்கிலி... முதலியார்... சின்னப் பண்ணை... எல்லோர் முகங்களும் கண்களுக்குள் ஒரு முறை வந்து போக,
திருச்சியிலிருந்து முக்கால் மணி நேரப் பயணம்தான்...! திருச்சி வேலை முடிந்ததும்
டக்குன்னு பஸ் ஏறி ஊஞ்சப்பளையம் போயிட்டு வரணும்! எத்தனை வருஷங்கள் ஆச்சு அந்தக் கிராமத்தை விட்டு வந்து...
நெடு நாளைய ஏக்கம் அவர் முகத்தில் ஒரு சுய பச்சாதாபத்தைக் கொண்டு வந்தது.
ஸ்ஸ்ஸ்... அப்பப்பா... உள்ளார வேக்காடு தாங்க முடியலை!
சொல்லிக் கொண்டே, சேலை முந்தானையால் முகத்து வியர்வையைத் துடைத்தபடி வந்தாள் உமா.
வந்தவள் சீரியஸான யோசனையில் இருக்கும் கணவனை வினோதமாய்ப் பார்த்து, தலைவர் எதையோ ரொம்ப சீரியஸா யோசிச்சுக் கிட்டிருக்கற மாதிரித் தெரியுது! செங்கோட்டையைப் பிடிக்கலாமா? இல்லை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைப் பிடிக்கலாமா?ன்னு யோசிக்கறீங்களோ?
அது சரி... ஆபீஸ் கோட்டையிலிருக்கற பிரச்சனைகளைப் பார்க்கவே தலை சுத்துது... இதுல அந்தக் கோட்டையையும் பிடிச்சுட்டா... அவ்வளவுதான்... தலை சுத்தாது... வெடிச்சுச் செதறிடும்
சிரித்தவாறே சொன்னார்.
தலையை வேகமாய் ஆட்டி அதை ஆமோதித்த உமா, அப்புறமென்ன ஆழ்ந்த யோசனை?
கழுத்தைச் சாய்த்துக் கொண்டு கேட்டாள்.
வேறொண்ணுமில்லை உமா... நான் திருச்சி போயிட்டு... அங்க வேலை முடிஞ்சதும் அப்படியே ஊஞ்சப்பாளையம் கிராமம் வரைக்கும் போயிட்டு வரலாம்னு யோசனை பண்ணிட்டிருக்கறேன்!
சொல்லும் போது சாதாரணமாய்ச் சொன்னலும், எங்கே அவ்ள் மறுப்புச் சொல்லி விடுவாளோ? என்கிற அச்சம் உள்ளே இருக்கத்தான் செய்தது.
ஊஞ்சப்பாளையமா? அது எங்க இருக்கு? அங்க யாரு இருக்காங்க?
அவள் முகத்தில் கேள்விக்குறியுடன் நோக்க,
ம்... திருச்சில இருந்து ஒரு அரைமணி நேரப் பயணம்... அந்த ஊர் பேங்க்ல நான் அஞ்சு வருஷம் சர்வீஸ் பண்ணியிருக்கேன்!
ஓ... அப்படியா? எப்ப கல்யாணத்துக்கு முன்னாடியா?
ஆமாம்! நான் பேச்சிலராய் இருந்த காலத்துல!
அது சரி... கிட்டத்தட்ட பத்து வருஷத்துக்கு முன்னாடின்னு சொல்லுங்க!
வாசலில் காய்கறிக்காரி கூவிக் கொண்டு செல்ல, எட்டிப் பார்த்தபடியே சொன்னாள் உமா.
ம்... இருக்கும்... இருக்கும்!
அவரது பதிலை காதில் கூட வாங்கிக் கொள்ளாமல், காய்கறிக்காரியை நிறுத்தும் நோக்கத்தில் தெருவுக்கு ஓடினாள். இந்தாம்மா... காய்கறி... நில்லும்மா
மெலிதாய்ப் புன்னகைத்துக் கொண்ட நந்தகோபால், நாடகப் பாங்காய் சிரித்து... நடிப்பாய்ப் பேசி... போலியாய்ப் பழகும் நகர மக்கள் மத்தியிலேயே வாழ்ந்து பழக்கப்பட்டவளான இவளுக்கு மெய்யன்பை மேன்மையுடன் காட்டி... யதார்த்தத்தையும்... இயல்பையும்... அன்றாட வாழ்வின் அர்த்த நெறிகளாக்கிக் கொண்டு வாழும் அந்தக் கிராமத்து வெள்ளந்தி மனிதர்களைப் பற்றி எங்கே தெரியப் போகின்றது?
நீண்ட பெருமூச்சு அவரையுமறியாமல் வெளிப்பட்டது.
பங்காருக்குட்டி
வாய் விட்டு ஒரு முறை சொல்லிப் பார்த்தார்.
மன வளர்ச்சி குன்றிய அந்தப் பதிமூன்று வயதுச் சிறுமியின் கள்ளங்கபடமறியாத பேச்சும்... சிரிப்பும்... பல நேரங்களில் அவருக்கு சிரிப்பை வரவழைத்திருந்தாலும், சில நேரங்களில் ஒருவித பரிதாப உணர்ச்சியை ஏற்படுத்தி விடுவதுதான் உண்மை. அவ்வப்போது, இன்னதென்று புரியாமலேயே அந்த பங்காருக்குட்டி அவரிடம் காதலைப் பற்றிப் பேசுவதும், கேட்பதும் அவருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினாலும், அதை அவ்வளவு சீரியஸாக அவர் எடுத்துக் கொண்டதில்லை. சார்... நாம ரெண்டு பேரும் லவ் பண்ணலாமா சார்?
இப்ப அந்த பங்காருக்குட்டி எப்படியிருப்பா? ம்.ம்.ம்.கிட்டத்தட்ட இருபத்தி மூணு... இருபத்தி நாலு வயசிருக்கும் இப்ப அவளுக்கு! கல்யாணம் கில்யாணம் பண்ணி வெச்சிருப்பாளா அவ அம்மா லட்சுமி?
பங்காருக்குட்டியை ஒரு பெரிய பெண்ணாக... அதுவும் இடுப்பில் ஒரு குழந்தையை இடுக்கிக் கொண்டு நிற்கும் தாயாக நினைத்துப் பார்க்கும் போதே இதழோரம் ஒரு குறுஞ்சிரிப்பு இழையோடியது நந்தகோபாலுக்கு.
என்னங்க... நீங்களே தனியா சிரிச்சுக்கிட்டிருக்கீங்க? ம்ஹூம்... என்னமோ ஆயிடுச்சு உங்களுக்கு!
கையில் காய்கறிகளைப் பிடித்துக் கொண்டு, உள்ளே வந்த உமா இவரைப் பார்த்துச் சொல்லிக் கொண்டே சமையலறைக்குள் போனாள்.
ஆமாம்... எனக்கு என்னமோ ஆயிடுச்சு!
உள்ளுக்குள் சொல்லி மகிழ்ந்தார் நந்தகோபால்.
சமையலறையிலிருந்து வெளிப்பட்ட உமா, "சரி...