Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ithu Pol Mazhaikkaalam
Ithu Pol Mazhaikkaalam
Ithu Pol Mazhaikkaalam
Ebook102 pages1 hour

Ithu Pol Mazhaikkaalam

By Usha

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJul 1, 2018
ISBN9781043466190
Ithu Pol Mazhaikkaalam

Read more from Usha

Related to Ithu Pol Mazhaikkaalam

Related ebooks

Reviews for Ithu Pol Mazhaikkaalam

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ithu Pol Mazhaikkaalam - Usha

    24

    1

    விரைவுப் பேருந்து பெயருக்கேற்றபடி விரைந்து கொண்டுதான் இருந்தது.

    வலது பக்கத்து ஜன்னல் வழியாக மிக மெல்லிய சாம்பல் பூத்த வானம் தெரிந்தது.

    சேதுபதி அதையே உற்றுப் பார்த்தான்.

    விடியலுக்கான கட்டியம் சொல்ல வந்துவிட்ட முதல் கதிர், அந்த நாளில் என்னென்ன நிகழ்வுகளை எதிர்பார்த்து பூமியைத் தொட்டிருக்கும் என்று நினைத்தான்.

    சிரிப்புதான் வந்தது. ஏன் சிரிப்பு வந்தது என்று நினைத்தபோது திகைப்புதான் ஏற்பட்டது. திருவள்ளுவர் மிகப்பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டான். இடுக்கண் வரும்போது சிரி என்று அவர்தானே சொன்னார்? சைக்காலஜிஸ்ட்தான் அவர். துயரமலைகளின் உச்சியில் இருக்கும் அவன் ஏன் சிரித்தான், அதுவும் புதிய நாளின் புதிய கிரணத்தைப் பார்த்தபோது?

    அப்பா... என்று முனகல் கேட்டது.

    மகளின் மெல்லிய குரல் கேட்டதும் அவன் முகம் தானாக இடப்பக்கம் திரும்பியது. இருக்கையில் ஒரு பக்கமாக சரிந்து, இரு கால்களையும் மடக்கி வைத்து அதில் தலையைப் பதித்து, இன்னும் தூக்கத்தின் பிடியிலிருந்து விலகாமலே இருந்த மதுவந்தியை அவன் மென்மையாக அணைத்துக் கொண்டான்.

    தூங்கும்மா... தூங்குடா கண்ணு... என்று அவள் முதுகில் தட்டிக் கொடுத்தான்.

    அப்பா...

    என்னம்மா?

    ஊர் வரலியாப்பா?

    இல்லடா...

    எப்ப வரும்?

    இன்னும் விடியலேடா... விடிஞ்சு வெளிச்சம் வரும்போது ஊரும் வந்திடும். இப்ப நீ தூங்கு... என்று கனம் குறைவாக இருந்த சால்வையை சரியாக இழுத்து விட்டான்.

    ம் என்று முனகிக் கொண்டு மதுவந்தி தூக்கத்திற்குப் போனாள்.

    மறுபடி அவன் வானத்தைப் பார்த்தான்.

    இப்போது கீழ்வானம் நல்ல பொன்னிறத்திற்கு வந்திருந்தது. அவனுக்கு கன்யாகுமரிக் கடல் நினைவுக்கு வந்தது. முக்கடல் சங்கமம். கடலின் சூரிய உதயம், நடுவில் நின்று பார்த்தால் இடப்பக்கம் கிழக்கு, வலப்பக்கம் மேற்கு, அதே இடத்தில் காலையும் மாலையும் நின்று பார்த்தால் போதும். உதயத்தையும் அஸ்த மனத்தையும் ஒரே இடத்திலிருந்து தரிசிக்க முடியும். அங்குதான் மாமாவும் மாமியும் அவனைத் தேடி வந்தார்கள். ஹைஸ்கூல்வரை அவனைப் படிக்க வைத்த மாமா. தன் சொற்ப கணக்கு வாத்தியார் சம்பளத்தில், அவனுக்காக ஒரு சிறு பகுதியைச் செலவழிக்க மிகப் பெரிய மனம் படைத்த மாமா. அப்போது அவன், நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியின் கன்யாகுமரிக் கிளையில் இருந்தான். வேலையில் சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகியிருந்தன. தனியாக சின்னஞ்சிறு அறை எடுத்து தங்கியிருந்தான். ஞாயிற்றுக்கிழமை கடலில் குளிக்க வந்த இடத்திற்கே அவர்கள் தேடிக் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்காததில் திகைத்துப் போனான்.

    நல்லா இருக்கியாப்பா சேது? என்று கேட்டு விட்டு மாமா பெயருக்குப் புன்னகைத்தார். நாலு நாள் தாடியும் பலகீனமான முகமும் அவருக்கு உடல்நலம் சீராக இல்லை என்று அறிவித்தன.

    இருக்கேன் மாமா... படிச்சது மாத்ஸ். பாக்கறது காமர்ஸ் வேலை... கஷ்டமாத்தான் மாமா இருக்கு... லெட்ஜர், கேஷ் புக், டெபிட் ட்ரான்ஸ்பர், கிளியரிங்னு ஒரே குழப்பம்... மாமி, சவுக்கியமா நீங்க? பானு, அகல்யா, சாரு எல்லாரும் எப்படி இருக்காங்க? என்றான் வேகமாக.

    அதுகளுக்கென்னப்பா? வடிச்சுக் கொட்டினா வயிறு முழுக்க தின்னுப்புட்டு ஆடுபுலி ஆட்டமும் ஏழாங்கல்லுமா வீடு பூரா குதிக்குதுக... மாமி அலுத்துக் கொண்டாள்.

    ரூமுக்குப் போகலாம் மாமா... குளிக்கலாம்னு வந்தேன். உங்களுக்கு டிபன், காபி வாங்கிக் கொடுத்து விட்டு வரேன். வாங்க மாமா. என்று அவன் வேட்டியை எடுத்தான்.

    பரவாயில்லப்பா... இங்கேயே பேசலாம்... ஒரு பத்து நிமிஷம்... மூணையும் தனியா விட்டுட்டு வந்திருக்கோம் நாகர்கோவில்ல... சீக்கிரமா கிளம்பினா நல்லா இருக்கும்... மாமாவின் குரலில் இருந்த ஏதோ ஒரு மெல்லிய உணர்வு அவனை நிமிர்ந்து பார்க்க வைத்தது.

    காபியாவது வாங்கிக் கொடுக்கிறேனே மொதல்ல. என்றான், வரப்போகிற ஏதோ ஒன்றை தடுத்து நிறுத்த நினைக்கிற வேகத்துடன்.

    இல்லப்பா சேது. என்றாள் மாமி. இப்போது கிட்டத்தட்ட கட்டளையிடுவதைப் போலிருந்தது.

    சரி... உங்க இஷ்டம்...

    அலைகள் மிக அடங்கி அடித்துக் கொண்டிருந்தன. நிறைய மனிதத் தலைகள் தென்பட்டன. முக்கடல் சங்கமத்தில் எதைத் தேடி இங்கே வந்தார்கள். எதை முழுக நினைத்து இப்படி தலை குளிக்கிறார்கள் என்று என்னென்னவோ தோன்றின.

    உனக்கு எதையும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லேப்பா சேது... என்ற பீடிகையுடன் மாமா ஆரம்பித்தார்.

    பானுவைப் பத்தி புதுசா எதுவும் சொல்றதுக்கில்லே... சினிமா சினிமான்னு பைத்தியம் பிடிச்சு அலையறா... நாள் பூரா சினிமா பாட்டுதான் சினிமா புத்தகம்தான்... நேரத்திற்கு ஒரு மணி நேரம் மழைல நனைஞ்சு ஒய்யாரமா வரா... கேட்டா, ‘புன்னகை மன்னன்ல ரேவதி வருவாளே மழைல பாடிக்கிட்டே வான் மேகம் பூப்பூவாய் தூறும்னு, அது மாதிரி வந்தேன்’னு சிரிக்கிறா... என்று மாமா சொல்வதற்குள் மாமி இடைமறித்தாள்.

    இதெல்லாம்கூட பரவாயில்லப்பா... புதுசா இப்பல்லாம் என்ன பண்ணுறா தெரியுமா? சொல்லாம கொள்ளாம சினிமாவுக்குப் போயிடறா... அதுவும் முந்தாநாள் நைட்ஷோ போயிட்டா! வீட்டுல அன்னிக்கு பதினெட்டு ரூபாதான் இருந்தது. அதுல எட்டு ரூபாய் எடுத்துக்கிட்டுப் போயிருக்காப்பா சேது! விளக்குமாத்தால சாத்து சாத்துன்னு சாத்தினேன்...

    என்ன என்பது போல அவன் திடுக்கிட்டான். பானுவின் சினிமா ஆர்வம் அவன் அறிந்ததுதான். அவள் வயதொத்த இளம்பெண்களுக்கு சினிமா, இசை, மழை என்று ஆசை வருவதை ஒரு இயல்பாகத்தான் பார்த்தான். தவிர, சினிமாப் பாடல்களால் தான்

    Enjoying the preview?
    Page 1 of 1