Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Torture King 12th Manimaran
Torture King 12th Manimaran
Torture King 12th Manimaran
Ebook68 pages23 minutes

Torture King 12th Manimaran

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"மன்னா... இதென்ன விபரீத யோசனை? அரசாங்கம் சாராயக் கடைகள் நடத்துவதா? சரித்திரத்தில் இதுவரை கண்டிராத யோசனையாகவும் அல்லவா இருக்கிறது? படு கேவலமான யோசனையாகவும் இருக்கிறதே...! நீருக்குப் பதில் சாராயம் குடித்தால் மக்கள் கதி என்னாவது?"

"இங்கேதான் நீர் எமது ராஜதந்திரத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். ஒரே திட்டத்தில் பல கனிகளைக் கொய்பவன் இந்த மணிமாறன். மக்கள் சாராயத்தை நிறையக் குடிக்கட்டும். விளைவாக குறைவாகச் சாப்பிடுவார்கள். உணவுப் பஞ்சம் தீரும். இது ஒரு கனி."

"அடடே..."

"சாராய விற்பனையை அரசே நடத்துவதால் நமக்கும் கஜானா நிறையும். இது இரண்டாவது கனி."

"ஆஹா... பிரமாதம் அரசே..."

"குடிசாராயம் சாப்பிடும் மக்கள் சீக்கிரத்தில் உயிரை விடுவதால் நாட்டில் ஜனத்தொகையும் குறையும். இது மூன்றாவது கனி." பெருமையாகப் பார்க்கிறான் மணி. "எப்படியுள்ளது சாத்தனாரே எமது முக்கனித் திட்டம்?"

"ஆஹா... அபாரம் அரசே. தங்களைப் போல மதி நிறைந்த மன்னரைச் சரித்திரம் கண்டதில்லை!"

Languageதமிழ்
Release dateAug 27, 2022
ISBN6580117408998
Torture King 12th Manimaran

Read more from Balaganesh

Related authors

Related to Torture King 12th Manimaran

Related ebooks

Related categories

Reviews for Torture King 12th Manimaran

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Torture King 12th Manimaran - Balaganesh

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    டார்ச்சர் கிங் 12ம் மணிமாறன்

    Torture King 12th Manimaran

    Author:

    பாலகணேஷ்

    Balaganesh

    For more books

    https://www.pustaka.co.in/home/author/balaganesh

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    ஆதியும் அந்தமுமில்லாத காலவிண்வெளியில் கற்பனை ராக்கெட்டில் என் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பறந்து செல்லலாம், வாருங்கள். இதோ, நம் ராக்கெட் காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்து நம்மை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கொண்டு சேர்க்கிறது. நம் பார்வையில் செழிப்பான தமிழகம் தெரிகிறது இப்போது.

    இங்கே  பாண்டியனும், சோழனும், சேரனும், பல்லவனும், வல்லவனும், நல்லவனும், கெட்டவனும், இன்ன பிறனும் ஆண்ட அந்தச் சரித்திரகாலத்தில் நமக்குத் தேவையான, செஞ்சிக் கோட்டைக்கு அருகிலுள்ள இடுப்பொடியூர் சமஸ்தானத்தில் சென்று சொய்யென்று குத்தி நிற்கிறது நம் ராக்கெட். இறங்குவோம் ராக்கெட்டை விட்டு.

    என் யானை திருஷ்டி... இல்லையில்லை, ஞான திருஷ்டி கொண்டு பார்த்ததில் இந்த நாடானது தற்சமயம் கடும் பஞ்சத்தில் வாடிக் கொண்டிருக்கிறது. உணவுப் பஞ்சமும், அதன் விளைவாக கஜானாவில் பணப் பஞ்சமும், அந்தப்புரத்திற்கு அழகிகள் பஞ்சமும், மன்னனிடம் வீரத்திற்குப் பஞ்சமும் இன்ன பிற பஞ்சங்களுமாகச் சேர்ந்து நாடுமுழுவதும் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கின்றன.

    நாம் முதலில் அரண்மனைப் பக்கம் போகலாம், வாருங்கள். என் கை பற்றிக் கொண்டிருப்பதால் நீங்கள் யார் கண்ணுக்கும் தெரியப் போவதில்லை. அங்கு நடப்பவற்றைச் சத்தமின்றி கவனிக்கலாம்.

    2

    மன்னன் மணி தன் அரண்மனை தர்பார் மண்டபத்தின் வாசலுக்கு வந்து சேர்கிறான். மணி என்றொரு மன்னனுக்குப் பெயர் இருக்க முடியுமா என்றுதானே யோசிக்கிறீர்கள்? சற்றுப் பொறுங்கள், மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்கிறேன் - அவனது முழுப்பெயரைச் சொல்ல! மதயானை கொன்ற சேனாடு சேந்தமங்கலத்துச் செருகளம் வென்ற* மறத்தமிழ் வாணன் செந்தமிழழகு செம்பொட்டழகன் ஜடாவர்ம மணிமாற பாண்டியன்!

    (* இதுபற்றிய குறிப்பு சோமசேகர பரதேசியார் எழுதிய ‘முட்டி தேய்ந்த முன்னாள் மன்னர்கள்’ நூலின் பு4850ம் பக்கத்தில் இருக்கிறது.)

    ஒவ்வொரு முறையும் இந்தப் பெயரை மூச்சைப் பிடித்துச் சொல்ல என்னாலாகாது மக்களே... ஆகவே நான் ‘மணி’என்று குறிப்பிட்டால் இந்தப் பெயரை ஒரு முறை நீங்களே படித்துக் கொள்ளவும்.

    மன்னர் வருகையை அறிவிக்க ஒல்லியாக, ஊதினால் உயிர் போய் விடுகிறவன் போல உடல் படைத்த கட்டியக்காரன் மெல்லியதாகக் குரல் எழுப்புகிறான். ‘‘ரா.ரா., ரா.மா., ரா.க.,

    Enjoying the preview?
    Page 1 of 1