Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Irul Kolaigal
Irul Kolaigal
Irul Kolaigal
Ebook86 pages34 minutes

Irul Kolaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நான் எழுந்திருக்க முயன்ற அதேகணம், "அம்மாஆஆ ..." என்றொரு கூக்குரலுடன் ஓர் உருவம் என் மீது சாய்ந்தது.

தாங்கிப் பிடித்தேன். கையில் பிசுபிசுவென்று ஏதோ ஒட்டியது. ரத்தமா? அந்த உருவத்தை மெல்ல படுக்க வைத்தேன். மெல்லக் கையை கீழே இறக்கிக் கொண்டுவர, கை எதிலோ இடித்தது. பிடித்து இழுத்தேன்.

அது ஒரு கத்தி என்பதை உடனே உணர முடிந்தது. கீழே போட்டுவிட்டு உடல் நடுங்க எழுந்து நின்றேன்.

பக்கத்து அறையில் அவள், இங்கே இவன்... நள்ளிரவில் இரண்டு படுகொலைகள்... இதற்கு ஐவிட்னஸ் 'ஐ'யே இல்லாத நான். கடவுளே... இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? சில செகண்டுகள் யோசித்தேன். "முட்டாள்... உடனே... உடனே இந்த இடத்தை விட்டு விலகு ஓடு..." என்றது மூளை.

Languageதமிழ்
Release dateAug 27, 2022
ISBN6580117408995
Irul Kolaigal

Read more from Balaganesh

Related authors

Related to Irul Kolaigal

Related ebooks

Related categories

Reviews for Irul Kolaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Irul Kolaigal - Balaganesh

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இருள் கொலைகள்

    Irul Kolaigal

    Author:

    பாலகணேஷ்

    Balaganesh

    For more books

    https://www.pustaka.co.in/home/author/balaganesh

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    (1)

    எல்லாம் ஒரு அக்டோபர் மாதத்தின் மழை நாளில் ஆரம்பித்தது. ஏதாவது விளையாட்டில் எதிர்பாராத நபர் ஜெயித்து விட்டாலோ, இல்லை, திடீரென யாரேனும் பெரும் பணக்காரனாகி விட்டாலோ, ‘அவனுக்கு குருட்டு அதிர்ஷ்டம். அதான்...’ என்று சொல்வார்கள். அதுபோல எனக்கு வந்தவைகளைக் ‘குருட்டு ஆபத்துகள்’ என்று தயங்காமல் சொல்லலாம். ஏனெனில் என் விழிகளுக்குத்தான் பார்க்கும் சக்தி இல்லையே...

    வெயிட், வெயிட்... நீங்கள் நினைப்பது தவறு. நான் பிறவியில் பார்வையற்றவனாகப் பிறக்கவில்லை. வெல், அந்த அக்டோபர் மாத மழைநாள் நிகழ்விலிருந்து துவங்குவதற்கு முன் என்னைப் பற்றிச் சற்றே விரிவாகச் சொல்லிவிடுகிறேன். அப்போதுதான் நடந்தவைகளின் முழு வீரியத்தை நீங்கள் உணர வசதியாக இருக்கும்.

    என் பெயர் விக்னேஷ். பிறந்த ஊர் திருவாரூர். நான் பிறந்தபோதே என் அம்மா கண்ணை மூடி விட்டதால் அப்பாவின் அரவணைப்பில்தான் வளர்ந்தேன். அப்பா அந்த ஊரில் சொந்தமாக க்ளினிக் வைத்திருந்தார். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற கொள்கையுடன் குறைந்தபட்ச பீஸ் வாங்கி மருத்துவம் செய்ததாலும், ‘கைராசி டாக்டர்’ என்று பெயர் பெற்றிருந்ததாலும் வறுமையுமற்ற, செழுமையுமற்ற ஒரு வாழ்க்கை வாய்த்திருந்தது.

    சிறுவயதிலேயே கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்தவன் நான். எந்த ஒரு விஷயத்தையும் ஐயந்திரிபறக் கற்காமல் அடுத்ததைப் படிக்கக் கூடாது என்பதே அந்தக் கொள்கை. அதன் பயனாக ஒவ்வொரு வகுப்பிலும் ஓராண்டு அதிகமாகவே தங்கி பாடங்கள் மனதில் பதிந்ததும்தான் அடுத்த வகுப்புக்குச் செல்வேன். அப்பாவுக்கு ஏனோ என் கொள்கையில் உடன்பாடில்லாமல் ‘ஒழுங்காப் படிடா’ என்று திட்டிக் கொண்டே இருந்தார். ஒருமுறை பள்ளிக்கே வந்து வகுப்பாசிரியரிடம் என்னைப் பற்றிப் புகார் படித்தார்.

    பாருங்க டாக்டர் நாகராஜன், சில பசங்க படிப்புல ஆவரேஜா இருந்தாலும் எதாவது எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்விடீஸ் அவங்கட்ட இருக்கும். இயற்கை நியதி அப்டி. அதைக் கண்டுபிடிச்சு என்கரேஜ் பண்ணா மேல வந்துடுவாங்க. உங்க பையன் எதுல ஷைன் பண்றான்னு கவனிக்கறேன் நான். கவலைப்படாதீங்க. என்றார் சுந்தரம் சார்.

    ஒருசமயம் மாந்தோப்பில் நான் மாங்காய் திருடித் தின்பதை வாட்ச்மேன் பார்த்துத் துரத்த, ஒலிம்பிக் வேகத்தில் நான் ஓடியதைப் பார்த்த சுந்தரம் சார் என் எக்ஸ்ட்ரா கரிகுலர் திறமை என்னவென்பதைக் கணித்து விட்டார். அந்த ஆண்டு பள்ளிகளுக்கிடையேயான ஓட்டப் பந்தயத்தில் என் பேரைச் சேர்த்து பயிற்சி தந்தார். அந்தப் போட்டியில் நான் முதல் பரிசு வாங்கினேன். சாருக்கும் அப்பாவுக்கும் பரம சந்தோஷம்.

    ஆனாலும் பாருங்கள்... என் மற்றொரு எ.க.ஆ.வை அவர்கள் பாராட்டவில்லை. எந்த ஒரு கையெழுத்தைப் பார்த்தாலும் அச்சு அசலாகப் பிரதியெடுக்கும் அபாரத் திறன் இயற்கையிலேயே எனக்கு இருந்தது. விளைவாக, அப்பாவின் கையெழுத்தை ப்ராக்ரஸ் கார்டில் பிரதியெடுத்து பள்ளியில் தந்து வந்தேன். மற்றுமொரு மோசமான தினம் அப்பா பள்ளிக்கு வந்து, ப்ராக்ரஸ் கார்டே தர்றதில்லையா இப்பல்லாம்..? என்று விசாரிக்க, சுந்தரம் சார் என் கார்டை எடுத்துக் காட்ட, அப்பா என் திறமையைக் கண்டு அதிர்ந்து போய் வாத்தியாரிடம் சொல்ல, வாத்தியாரின் பிரம்பானது என்னுடலுடன் கூட்டுறவு வைத்ததில் என்னுடலின் உறுதியைப் பொறுக்காமல் பிரம்பு அன்று தற்கொலை செய்து கொண்டது. ஹும்... கூடுதல் திறமையை மதிக்காமல் என்ன உலகம் சார் இது..?

    இப்படி என்னுடன் போராடியதிலேயே களைப்பாகிவிட்ட என் அப்பா, நான் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் சமயம் தன்னால் காப்பாற்ற முடியாமல் மேலோகம் போன பேஷண்டுகளுக்கு வைத்தியம் செய்ய அவர்களைத் தேடி அவரும் சென்று விட்டார். தனிமரமாக நின்றேன். அப்பா சேர்த்து வைத்த பணம் கைக்கு வந்ததில் சமாளிக்க முடிந்தது. சிக்கனம் என்றால் என்னவென்று நான் அறிந்திராததால் சீக்கிரமே அந்தப் பணமும் கரையும் நிலை ஏற்பட்டது. அப்பாவின் பாலிசியைச் சற்றே மாற்றிக் கொண்டு, ‘என் பணி கடன் செய்து கிடப்பதே’ என்று வாழத் தொடங்கினேன்.

    அந்த ஆண்டின் பொதுத் தேர்வில் நான் தேறவில்லை. படிப்பென்பது எனக்கு இனி ஒத்துவராது என்று ஏறக்கட்ட முடிவெடுத்தேன்.

    எதிலும் இன்று ஒரு பேச்சு, நாளை ஒரு பேச்சு என்பது இல்லாதவன் நான்.

    Enjoying the preview?
    Page 1 of 1