Kannaalane
By R.Sumathi
5/5
()
About this ebook
Read more from R.Sumathi
Maaya Thottrangal Rating: 0 out of 5 stars0 ratingsUravillai Pirivillai Rating: 0 out of 5 stars0 ratingsKadhal Kalamadi Kanne Rating: 5 out of 5 stars5/5Sinnakkili Rating: 4 out of 5 stars4/5Eppadi Solvenadi Rating: 4 out of 5 stars4/5Kaanalai Thedum Kaveri Rating: 0 out of 5 stars0 ratingsTheeyai Sudum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsKathal Suvadukal Rating: 0 out of 5 stars0 ratingsKannoram Minsaaram Rating: 0 out of 5 stars0 ratingsPuthiraaga Oru Poo Rating: 5 out of 5 stars5/5Ketkkum Varam Kidaikkum Varai Rating: 0 out of 5 stars0 ratingsPaarvaikal Puthithaa Rating: 0 out of 5 stars0 ratingsMalare Mayangaathe Rating: 0 out of 5 stars0 ratingsInimai Ninaiuvgal Thodarattume Rating: 4 out of 5 stars4/5Mayakkathirkuriya Manthirame Rating: 5 out of 5 stars5/5Paasa Malargal Rating: 0 out of 5 stars0 ratingsPovomaa Ponnulagam Rating: 5 out of 5 stars5/5Thendrale Ennai Thodu Rating: 5 out of 5 stars5/5Kunguma Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsEn Malar Madiyile Rating: 4 out of 5 stars4/5En Iniya Ilamaane Rating: 0 out of 5 stars0 ratingsYenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsKadhal Sirakukal Rating: 0 out of 5 stars0 ratingsManoratham Rating: 4 out of 5 stars4/5Thavaminri Kidaitha Varame Rating: 5 out of 5 stars5/5Niram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsSinegithane Rating: 5 out of 5 stars5/5Oreedam Nee Tharuvaai Rating: 4 out of 5 stars4/5Vizhiyele Malarnthathu Rating: 5 out of 5 stars5/5Mullaippoo Pallakku Rating: 4 out of 5 stars4/5
Related to Kannaalane
Related ebooks
Inaiyaana Ilamaane Rating: 4 out of 5 stars4/5Nilavoliyil Pattaam Poochigal Rating: 5 out of 5 stars5/5Poo Viluntha Saththam Rating: 4 out of 5 stars4/5Netru Nila Indru Nee Rating: 5 out of 5 stars5/5Veppamarathu Pookkal Rating: 5 out of 5 stars5/5Sol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsOru Vidhaiyin kathai! Rating: 0 out of 5 stars0 ratingsMaavilai Thoranam Rating: 0 out of 5 stars0 ratingsItharkuthane Kathiirunthom Rating: 5 out of 5 stars5/5Ezhiloviyam Rating: 0 out of 5 stars0 ratingsEnnam Pola Kannan Vanthaan Rating: 0 out of 5 stars0 ratingsKavithai Arangerum Neram Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Konda Nenjam Rating: 5 out of 5 stars5/5Enkengum Un Vannam Rating: 0 out of 5 stars0 ratingsGnabagam Poo Mazhai Thoovum Rating: 0 out of 5 stars0 ratingsThedi Vantha Nila...! Rating: 0 out of 5 stars0 ratingsNenjirkoru Vanchikkodi Rating: 5 out of 5 stars5/5Malare Vaa Manathai Thaa Rating: 0 out of 5 stars0 ratingsOru Roja Oru Idhayam Rating: 5 out of 5 stars5/5Koodu Marantha Kuyilkal Rating: 5 out of 5 stars5/5Kannalaney Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Nindrai Kaaviyamai! Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Aasaigal Rating: 5 out of 5 stars5/5Ennai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsNenjamellam Neeye Rating: 5 out of 5 stars5/5Panankaattu Annachi Rating: 0 out of 5 stars0 ratingsKannil Theriyum Vannapparavai Rating: 0 out of 5 stars0 ratingsUravu Pookkal Rating: 5 out of 5 stars5/5Nenjukkul Poo Malarum Rating: 5 out of 5 stars5/5Pathu Maatha Bandham Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kannaalane
1 rating0 reviews
Book preview
Kannaalane - R.Sumathi
22
1
குளிரூட்டப்பட்ட அந்த அறையில் உயர்ரக இருக்கையில் உட்கார்ந்து அலுவலகக் கோப்புகளை கவனித்து கொண்டிருந்தான், பூபாளன்.
அந்த அறைக்கு தனி அழகும் கம்பீரமும் அவன் அந்த இருக்கையில் அமர்ந்திருப்பதால் உண்டாயின. இளம் பெண்ணின் கன்னத்தைப் போன்ற வழவழப்பா மேசை. அடிக்கடி அவனை சிணுங்க அழைக்கும் பல வண்ண தொலைபேசிகள் பூனைக்குட்டிகளைப் போல் மேசையில் படுத்திருந்தன. அவன் கைப்படக் காத்திருக்கும் அடுக்காக வைக்கப்பட்ட கோப்புகள். காற்றுக் காதலனுடன் ஓடிப்போக விடாமல் அவற்றை அடக்கி வைத்திருக்கும் கண்ணாடிக் குண்டுகள்.
பூபாளன்!
சராசரிக்கும் மேல் சற்று உயரமான தோற்றம். கம்பீரம் தரும் கருப்புநிறம். அறிவுத் திறமையைக் காட்டும் கூர்மையான விழிகள். புன்னகை படர்ந்த உதட்டுக்கு மேல் ஆண்மையின் கவர்ச்சியை அதிகப்படுத்தும் "மீசை. அடங்காத... ஆனால் அழகான முடி அடிக்கடி விழும் முன்நெற்றி. அவன் மனதின் நிறத்தை மற்றவர் அறிய சொல்லும் வெள்ளைச் சட்டை. பெயருக்கேற்றாற் போல முகத்தில் எப்பொழுதும் இருக்கும் புத்துணர்ச்சி.
மணி ஒன்றாகிவிட்டதென ஒலி மூலம் உணர்த்தியது எதிரேயிருந்த கடிகாரம்.
நிறுவனத்தின் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் கடிகார ஒலியில் கவனம் சிதறினான். பேனாவை மூடி அதனிடத்தில் சொருகிவிட்டு நிமிர்ந்தவனின் பார்வை எதிரே சுவரில் மாட்டியிருந்த அந்த பெரிய புகைப்படத்தில் நின்றது.
ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருத்தி, மாலை சுமந்து ஊதுபத்தி புகை சூழ சிரித்தாள். அந்த முகத்தைக் கண்டதும் பூபாளன் அனிச்சையாய் எழுந்தான். சற்றுமுன் வயிற்றில் ஆட்சி செய்த பசி ஒரு கணம் நின்றது. எழுந்து, அந்தப் புகைப்படத்தின் எதிரே வந்து நின்றான். அவன் நெஞ்சம் பாசத்தால் விம்மியது.
அம்மா...
கண்களில் கண்ணீர் திரண்டது:
‘கட்டிய கணவனும் மகனும் இருந்த போதும் யாருமற்ற அனாதையாய் வாழ்ந்த என் தெய்வமே. இன்று உன் மகன் சகல வசதிகளையும் சம்பாதித்து வைத்திருக்கும் போது என்னுடன் வாழ உனக்குக் கொடுத்து வைக்கவில்லையே. அன்பையும் பாசத்தையும் எள்ளளவும் வாழ்க்கையில் அனுபவிக்காத என் உயிரே.. நெஞ்சு நிறையப் பாசத்தைத் தேக்கி வைத்து அழும் உன் மகனின் நிலையை அறிவாயா.’
இதயம் குலுங்கியது. புகைப்படத்தில் இருப்பவள் பூபாளனின் தாய். அவரை தினமும் வணங்கித் தொழுகிறான் அவன். அவள் நினைவுகளில் பொதிந்து கிடந்த கடந்த காலம் மிகவும் வேதனையானது.
இளம் வயதிலேயே பூபாளனின் தாய் இறந்து விட்டார் என்றும், தான் மறுமணம் புரிந்து கொண்டதாகவும் சொல்லி அவனை அவன்தந்தை வளர்த்தார். தந்தையின் இரண்டாம் மனைவியிடம் இன்னல்கள் பட்டுத்தான் பூபாளன் வளர்ந்தான். படித்தான், படித்து முடித்து பெரியவன் ஆனதும் தான் தன் வாழ்வில் மறைக்கப்பட்ட ஒரு உண்மையை அவன் கண்டுபிடித்தான். அவனுடைய தாய் விபத்து ஒன்றில் கண்பார்வையை இழந்து விட்டதால், அவளை விலக்கி வைத்துவிட்டு அப்பா இரண்டாம் திருமணம் செய்து கொண்டு சுகவாழ்க்கை வாழ்கிறார் என்ற உண்மை அவனை எட்டியபோது, அவன் துடித்துப் போனான். தாய் இறந்து விட்டதாகப் பொய் கூறி வளர்த்த அப்பாவிடம் சண்டை போட்டான். ‘இனியும் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று வீட்டை விட்டு வெளியேறினான். தன் தாயை எப்படியும் கண்டு பிடித்து விடுவதெனத் தேடினான். அவன் தேடல் தொடர்கதையாகியது.
இதன் இடையே தனது படிப்பையும் திறமையை வைத்து நண்பன் திலீப்பின் உதவியுடன் சொந்தமாக வியாபாரம் தொடங்கினான். அதிர்ஷ்ட நங்கை அவனை காதலிக்க, சரசரவென உயர்ந்தான். செல்வத்தில் உயர்ந்து, கொண்டே, சென்ற அந்த நேரத்தில் தான் எதிர்பாரா விதமாகத் தாயை சந்தித்தான். தீபாவளி நேரத்தில் அனாதை விடுதிகளுக்குள் தன் செலவில் இனிப்பு வழங்கிய போது ஒரு அனாதை விடுதியில் பார்வை இழந்த தாயை உயிருடன் கண்டான். துடித்துப் போய் விட்டான். வாழ்க்கையில் வெகுநாளாய்த் தேடியது கையில் கிடைத்த மகிழ்ச்சி அவனுக்கு. தாய்க்கும் அதே நிலை. தன் இருப்பிடத்திற்கு அழைத்து வந்தான். பாசம் பொங்க வைத்திருந்தான். எல்லாம் ஒரு மாதம் தான். அவன் வாழ்க்கையில் அவன் மகிழ்ச்சியாய் இருந்தது அந்த ஒரு மாதம் தான். நெஞ்சுவலியால் படுத்தப் படுக்கையாகி ஒருநாள் இறந்தாள், அவன் தாய்.
கதவு திறக்கும் ஓசை கேட்கப் பழைய நினைவுகளிலிருந்து விடுபட்டான், பூபாளன்.
கையில் பெரிய சாப்பாட்டு அடுக்குடன் உள்ளே வந்தான் திலீப். பள்ளியில் தொடங்கி கல்லூரியில் இன்று வரை தோள் கொடுக்கும் ஆருயிர் நண்பன்.
சட்டென தன் வேதனைகளை மறைத்துக் கொண்டு உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டான், பூபாளன்.
டாண்ணு மணி ஒண்ணு ஆனதும் சாப்பிட வந்துட்டியே. - பள்ளிக்கூடத்துல எப்படி இருந்தியோ அப்படியே இன்னும் இருக்கே,
என்று சிரித்தான்.
மேசை மீது சாப்பாட்டு அடுக்கை வைத்து விட்டு அவனைப் பார்த்து சிரித்தான், திலீப்.
ஆமா... அறுசுவை உணவு, பாரு. அப்படியே ஆசையா சாப்பிட வர்றேன். என்னமோ தலையெழுத்து... இந்த சமையல்காரி கையால சாப்பிட வேண்டியிருக்கு. நாக்கு செத்துப் போயிட்டது.
திலீப் பூபாளனின் வீட்டிலேயே நிரந்தரமாக இருக்கிறான். இருவருக்கும் அன்றிலிருந்து இன்றுவரை சமைத்துப் போடுபவள், ஒரு கிழவி.
கை கழுவிவிட்டு வந்த பூபாளன், விரல்களிலிருந்த தண்ணீரை – நண்பனின் முகத்தில் உதறினான், விளையாட்டாய்.
டேய்.. சாப்பாட்டு ராமா, பேசாம நீ பானுவை கல்யாணம் பண்ணிக்கிட்டின்னா, நம்ம ரெண்டு பேருக்குமே நல்ல சாப்பாடு கிடைக்கும்
என்றவாறு அவன் எதிரே அமர்ந்தான்.
திலீப் சாப்பாட்டு அடுக்கை திறந்தவாறே சொன்னான்.
நானா வேண்டாங்கறேன். பானுவிற்கு படிப்பு முடியணும்கிறார், மாமா. ஏன், நான் திருமணம் செய்து கொண்டால்தான் சாப்பாடு கிடைக்குமா? நீ செய்து கொண்டால் கிடைக்காதா?
பூபாளன் சிரித்தான். கத்தரிக்காய் பொரியலை எடுத்து சுவைத்தவாறே பேசினான்.
கிடைக்காது. பழையபடி சமையல்காரி சாப்பாடுதான் கிடைக்கும்.
ஏன்... சமையல் தெரியாத பொண்ணாய் பார்த்து திருமணம் பண்ணிக்கப் போறியா?
இல்ல. கண்ணு தெரியாத பொண்ணை திருமணம் செய்துக்கப் போறேன்.
தேள் கொட்டியதைப் போல் துடித்தான், திலீப்.
பூபாளன், என்ன உளர்றே?
அப்பளத்தை எடுத்து