Neelanira Kanavugal
By GA Prabha
()
About this ebook
Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.
Read more from Ga Prabha
Manasukkul Pozhiyum Mazhai Rating: 4 out of 5 stars4/5En Idhayam Enbathu Neeyaga Rating: 0 out of 5 stars0 ratingsUravai Naadum Paravai Rating: 0 out of 5 stars0 ratingsAasai Veedu Rating: 5 out of 5 stars5/5Kandan Pugazh Padum Kandar Alangaram Rating: 0 out of 5 stars0 ratingsManathin Arathanai Rating: 5 out of 5 stars5/5Maya Poigai Rating: 0 out of 5 stars0 ratingsEn Vaanathu Vennilavu Rating: 5 out of 5 stars5/5Sol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratings
Related to Neelanira Kanavugal
Related ebooks
Vennilavu Deepangal Rating: 0 out of 5 stars0 ratingsVenpura Nesam Rating: 0 out of 5 stars0 ratingsSoorya Dharisanam Rating: 0 out of 5 stars0 ratingsPoo Magal Vaasam Rating: 0 out of 5 stars0 ratingsMullodu Oru Roja Rating: 0 out of 5 stars0 ratingsKaatril Kalanthavale...! Rating: 0 out of 5 stars0 ratingsUn Kaiyil Ennai Koduthean Rating: 4 out of 5 stars4/5Kaadhal Vaibogame Rating: 2 out of 5 stars2/5Paravasam Rating: 0 out of 5 stars0 ratingsPavala Malli Rating: 0 out of 5 stars0 ratingsUyiril Kalantha Uravugul Rating: 0 out of 5 stars0 ratingsAndhi Nerathu Udhayam Rating: 0 out of 5 stars0 ratingsVaigairai Deepangal Rating: 5 out of 5 stars5/5Nilavodu Vaa Thendraley Rating: 0 out of 5 stars0 ratingsMaya Poigai Rating: 0 out of 5 stars0 ratingsMinnal Devathaigal Rating: 0 out of 5 stars0 ratingsNishabdha Sangeetham Rating: 5 out of 5 stars5/5Kankal Solkindra Kavithai Rating: 5 out of 5 stars5/5Aazhkadal Nesam Rating: 5 out of 5 stars5/5Imayaga Naan Iruppean Rating: 0 out of 5 stars0 ratingsNeela Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsArunaa Nandhiniyin Short Stories Rating: 0 out of 5 stars0 ratingsKrishna Gaanam Rating: 0 out of 5 stars0 ratingsVaanavil Kanavugal Rating: 5 out of 5 stars5/5Ennuyiril Kalandhaai Rating: 5 out of 5 stars5/5Nenjam Irandin Sangamam Rating: 5 out of 5 stars5/5Maavilai Thoranam Rating: 0 out of 5 stars0 ratingsManathin Arathanai Rating: 5 out of 5 stars5/5Aayiram Malaril Oru Malar Neeye Rating: 0 out of 5 stars0 ratingsKaana Vendum Seekiram...! Rating: 5 out of 5 stars5/5
Reviews for Neelanira Kanavugal
0 ratings0 reviews
Book preview
Neelanira Kanavugal - GA Prabha
http://www.pustaka.co.in
நீலநிறக் கனவுகள்
Neela Nira Kanavugal
Author:
ஜி.ஏ.பிரபா
G.A.Prabha
For more books
http://www.pustaka.co.in/home/author/ga-prabha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
1
என் வாசல் திறந்திருக்கிறது.
ஒரு விடியலின் ஒளியாய் -
நீ உள்ளே நுழைவதற்கு
காற்றில் நறுமணம் கலந்திருந்தது.
இரவு பெய்த மழையில் நனைந்த பூமியின் மண் வாசனையோடு, உதிர்ந்து கிடந்து பூக்களின் மணமும் கலந்து சுவாசத்திற்கு ஒரு புத்துணர்ச்சி தந்தது.
இரவு முழுவதும் மழை ஒரு இளம்பெண்ணின் குதூகலத்துடன் பெய்து கொண்டிருந்தது. அடித்துப் பெய்யாமல், சொட்டு சொட்டாய் தூறாமல், நிதானமாய், ஆனால் ஒரு துள்ளலுடன் பொழிந்தது.
அதிகாலையில் சூரிய ஒளி முழுவதும் ஊடுருவும் முன், மழையில் நனைந்த ரோட்டில், இருபுறமும் அடர்ந்த மரங்களின் ஊடே நடப்பது சுகமான அனுபவம். உயர்ந்த வாதநாராயணா, பாரி ஜாத பவளமல்லிப் பூக்கள், சிவப்பும், பச்சைநிற காம்புமாய் சிதறிக் கிடந்தது. நாராயணன் டாக்டர் வீட்டின் முன் பன்னீர் பூக்கள்.
அஞ்சரைக்கே விழிப்பு வந்து விடும். எழுந்து முகம் கழுவி, தலைகோதி, சூடாய் வெந்நீர் குடித்து வெளியில் வரும்போது மணி மிகச் சரியாக ஆறாகி இருக்கும்.
துல்லியம், அதன் பேர் லலிதா
என்பார் பக்கத்து வீட்டு சிவமுருகன். சின்னதாய் ஒரு புன்னகையே பதிலாக வரும் லலிதாவிடமிருந்து. யாரிடமும் அதிகநேரம் நின்று வாயாடாமல் இருப்பதே வீண் வதந்திகள் பரவாமல் இருப்பதைத் தடுக்கும்.
மேட்டுப் பாளையம் ரோட்டில் நீள நடந்து, மேம்பாலம் ஏறி இறங்கி, அங்குள்ள சக்தி விநாயகரை தரிசித்து, மீண்டும் திரும்பி, வழியில் மார்க்கெட்டில் பச்சையாய் கீரை, தளதளவென்று புதிய காய்கறிகள் வாங்கி, ரங்காச்சாரி கடந்து, சபர்பன் ஸ்கூல் வந்தால், எதிர்த்த காம்பவுண்டில் ஏழு வீடுகளுக்கு மத்தியில் ஒரு வீடு.
மிகச் சரியாக ஏழாகி விடும். அதன்பின் நாளின் பரபரப்பு கூடிவிடும்.
அட்டவணை போட்டபடி பிசகாத வாழ்வு. லட்சியம் ஒன்றே சிந்தையில். அம்புகளை விட்டெறிந்து வாழப் பழகியதில் மௌனமே. அமைதியே பல சமயங்களில் மொழியாகி, நிதானம், அன்பு, பொறுமை, முடிந்த உதவிகளை பிறருக்கு செய்வதே, லலிதாவின் ஆடை, ஆபரணங்கள்.
அதனால் தான் இருபது வயதுப் புதுமையான மகள் ஹேமாவுடன், இதுவரை எந்த கெட்டப் பெயரும் இல்லாமல், அயோக்கிய புருஷனை உதறி விட்டு தனித்து வாழ முடிகிறது.
லலிதா நிதானமாக நடந்தாள். காற்றில் கலந்த ஈர மணத்தை சுவாசித்தபடி, மெல்ல விடியும் பொழுதை ரசித்தபடி நடந்தாள். அருகில் ஹேமா, லலிதாவின் அண்ணன் பையன் சேகர்.இருவரும் சளசளவென்று பேசியபடி நடந்தார்கள்.
பேச்சு, பேச்சு. இளைஞர்கள் மத்தியில் சொற்கள் அளவில்லாமல் கொட்டிக் கிடக்கிறது. எந்நேரமும், எந்த இடத்திலும், எதிலும் பேச்சே பிரதானமாய்.
வாக்கிங் போறப்போ இப்படியா பேசறது?
ஏம்மா! நாம வாக்கிங்கா போறோம்?
பின்னே!
ஊர்ந்துகிட்டு இருக்கோம்
– ஹேமா. வாக்கிங் மடமடன்னு நடக்கணும். இப்படியா இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்கன்னு
எப்படியோ, நடந்தா நல்லது
அதைவிட ஓடறது நல்லது
– சேகர்
ஆமா. நாய் துரத்தறப்போ
– ஹேமா.
பேசாம வா ஹேமா
– லலிதாவுக்கு சிரிப்பு வந்தது. எப்பவும் ஏதாவது ‘கட்’ கொடுத்த ஹேமா பேசுவது ‘சட்’டென்று சூழ்நிலையை ரசனையாக்கி விடும்.
துறுதுறுவென்று பட்டாசாய் வெடிக்கும் வண்ணத்துப் பூச்சி. சில உயர்ந்த கொள்கைகளைக் கொண்டு நடப்பவள். ஹேமா லலிதாவின் விசிட்டிங் கார்டு. அவளின் அத்தனை கம்பீரம், மதிப்பு, கௌரவத்தின் அடையாளம் ஹேமா.
ஹேமாவோட அம்மாவா நீங்க?
– கேட்பவர் கண்களில் ஒரு மரியாதை, அன்பு. இனிமையுடன் ‘சட்’டென்று லலிதாவுடன் நெருங்கி விடுவார்கள்.
வாய் மட்டும் கொஞ்சம் ஓவர் ஹேமா
– லலிதா அவ்வப்போது மிரட்டுவாள்.
ஏம்மா! அதுதான் என் செக்யூரிடி கார்டு
நடக்கும்போதே ஒரு துள்ளல், சின்ன நடனம். வயசு.
மனதில் சிரித்தபடி நடந்தாள்.
ஹலோ… குட்மார்னிங்
– சி.ஐ.டி. புரொபசர். தினசரி வாக்கிங்கில் எதிர்ப்பட்ட நட்பு.
குட்மார்னிங் சார்.
என்ன ஹேமா ஃபைனல் இயர் முடிஞ்சுதா?
முடிஞ்சுது சார்
நெக்ஸ்ட்
அவர் கேட்டார். பி.ஜி. பண்ணப் போறியா?
ஐடியா இல்லை. வேலைக்குப் போகலாம்னு. இதுக்கே அம்மா ரொம்ப சிரமப் பட்டுட்டாங்க. வேலைக்குப் போய்கிட்டே வேணா கரஸ்ல படிக்கலாம்னு இருக்கேன்.
ஆ! தட்ஸ் குட். பெண் குழந்தைகள் யதார்த்தம் புரிஞ்சு நடக்கிறது சந்தோஷமா இருக்கு. நீ என்ன படிச்சே!
பி.எஸ்சி.மேத்ஸ்
கம்ப்யூட்டர்… எக்ஸ்ட்ரா?
சி.எஸ்.ல எல்லா கோர்ஸ_ம் முடிச்சிருக்கேன்.
குட். எனக்கு தெரிஞ்ச ஒரு விளம்பரக் கம்பெனில ஆள் தேவைன்னாங்க. இன்ஷியல் ஃபைவ் கிடைக்கும். புத்திசாலித்தனம் இருந்தால் எங்கேயும் முன்னேறிடலாமே!
ஷ்யூர் சார்
போன் நம்பர் தந்தார். என் பேர் சொல்லு
என்று விடைபெற்றார்.
நல்ல மனுஷன். காலைல நல்ல சேதி
– லலிதா பரவசமானாள். வேலை கிடைச்சிட்டா கொஞ்சம் மூச்சு விட்டுக்கலாம். நீயும் காலை ஊனிப்பே
நல்லதே நடக்கும்மா. டோண்ட் வொர்ரி
என்ன லலிதா, சௌக்கியமா. எம்மா ஹேமா, அம்மா கூட வாக்கிங் கிளம்பிட்டியா!
- லலிதாவின் தூரத்து உறவினர் மார்க்கெட்டில் குசலம் விசாரித்தார்.
இல்லை அங்கிள். அம்பிகாவுல சினிமா பாக்கலாம்னு வந்தோம்
– ஹேமா.
வாயாடி
– கன்னத்தில் தட்டினார். கல்யாணத்துக்கு பாக்கறியா?
இல்லை. அண்ணா பையனே பெரியவன் இருக்கானே
குட்… குட்… நல்ல மழை ராத்திரி. சேறா இருக்கு.
பாத்து நடங்க
இன்னைக்கு இடியுடன் கூடிய மழை வருமாம்.
ஏன் அங்கிள்! ஊருக்குப் போன உங்க வொய்ஃப் வராங்களா?
- ஹேமா முகத்தில் சாந்தம் வழிந்தது.
ஹா… ஹா… வாயாடி, வாயாடி
– அவர் நகர்ந்தார்.
வாயை அடக்கு ஹேமா
– லலிதா மிரட்டினாள்.
அடக்கு, அடக்கு என்கிறது நாக்கு. முடியவில்லையே!
யார்கிட்டேயானும் நாலு அடி வாங்கினா அடங்கிடும்.
லலிதா காய்கறிகளை பொறுக்கினாள். ஹேமாவுக்கு கடைசி வருடப் பரீட்சைகள் முடிந்து வீட்டில் இருப்பதால் நல்ல சமையலாக செய்து போடலாம் என்று நினைத்தாள் லலிதா.
எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு திரும்பியபோது சேகரைக் காணவில்லை.
எங்கடி இவன்?
இதோ வந்துட்டேன் அத்தை
– சந்துக்குள்ளிருந்து சேகர் ஓடி வந்தான்.
எங்கடா போனே!
யூரின் பாஸ் பண்ணப் போனேன் அத்தை
அதையானும் ஒழுங்கா பாஸ் செஞ்சியாடா?
ஹேமா.
ஹேமா
–வெடித்துக் கிளப்பிய சிரிப்பை அடக்கி கோபப்பட்டாள் லலிதா.
என்னைக்கு நீ அடங்கப் போறியோ தெரியலை.
பாலு அண்ணா தாலி கட்டினா அடங்கிடும்
– சேகர்.
வாடா என் செல்லக் கொழுந்தா. பிளஸ் டூல ரெண்டு சப்ஜெக்ட்ல ஃபெயில். நீ பேசறியா?
– அவன் கழுத்தைப் பிடித்து உந்தியபடி நடந்தாள் ஹேமா.
நான் ஃபெயில் ஆகலை.
பின்ன?
ஃபெயில் பண்ணிட்டாங்க
ஆஹா… நல்லாயிருக்கே இந்த ரீஸன். ஏன் கண்ணு?
அம்மை போட்ருச்சு.
அப்படியா! தங்கம். போயிருந்தா மட்டும் ஸ்டேட் ஃபர்ஸ் வந்திருப்பீங்களோ!
நிறைய டவுட் ஹேமாக்கா
என் செல்லம். உன் டவுட்டை கேக்கத்தானே நான் இருக்கேன். கேளு
படிக்கறப்போ லவ் பண்ணலாமா?
ஹேமா நின்றாள்.
"இல்லை,