Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Perithinum Perithu Kel
Perithinum Perithu Kel
Perithinum Perithu Kel
Ebook213 pages1 hour

Perithinum Perithu Kel

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

GA Prabha is a prolific writer of Tamil, and has written about 100 novels, 120+ short stories, 5 novelettes covering in family and romance category. Her works are published in various magazines. She has also won many prizes conducted by various magazines like Kalki and Anandha Vikatan.


Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580101003880
Perithinum Perithu Kel

Read more from Ga Prabha

Related to Perithinum Perithu Kel

Related ebooks

Reviews for Perithinum Perithu Kel

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Perithinum Perithu Kel - GA Prabha

    http://www.pustaka.co.in

    பெரிதினும் பெரிது கேள்

    Perithinum Perithu Kel

    Author:

    ஜீ.ஏ.பிரபா.

    GA Prabha

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ga-prabha-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    நாம் ஸ்வாமியின் சொத்து

    அவர் இஷ்டப்படி நம்மை நடத்தட்டும் என்று

    விட்டு விட்டால் நமக்கு எந்தக் குறையும் வராது

    என்றும் ஆனந்தம்தான்.

    காஞ்சி மகான்.

    நான் இருக்கேன்

    காதருகில் ஒலித்த குரலில் சட்டென்று விழிப்பு வந்தது.

    மென்மையும், கனிவுமான குரல்.

    தாய்மையும், இதமும் நிரம்பிய குரல் மனதின் அடி ஆழம் வரை சென்று தங்கியது.கண் மூடி அந்த இதத்தை ரசித்தபடி படுத்திருந்தாள் புஷ்பா.

    மகா பெரியவாளின் குரல் அவளுக்குள் இறங்கி, ஒரு சுகமான, இதமான மன நிலையை உருவாக்கியது. எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம், எது வந்தாலும் பெரியவா இருக்கா என்ற நம்பிக்கை.

    கனிவும் மனிதாபிமானமும் நிரம்பிய குருவின் பாதத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டால் போதும் எத்தகைய இடையூறுகளையும் தாண்டி விடலாம்.மனதுக்கு நெருக்கமான குருவின் நாமம் சகல கவலைகளையும் போக்க வல்லது. நான்கு வயதிலிருந்து சொல்லும் நாமம். உயிருக்குள் ஊடுருவி, அணுக்களில் கலந்து, அவளை வழி நடத்தும் மகாப் பெரியவா நாமம்.

    ஜெய, ஜெய சங்கர, ஹரஹர சங்கர

    ஹரஹர சங்கர, ஜெய ஜெய சங்கர........இடை விடாமல் ஜெபிக்க ஆரம்பித்தது மனம்.

    அப்படியே கிடந்தாள். கண்மூடி. எழுந்து எதுவும் செய்ய வேண்டிய அவசரமில்லை. இன்று ஞாயிறு என்பதால் எல்லோருக்கும் லீவுதான். தனக்கு மட்டும்தான் எந்த நாளும் விடுமுறை இல்லை. மனதில் பாசமும், பிரியமும் உள்ள வரை எந்தப் பெண்களுக்கும் ஓய்வு என்பதோ விடுமுறையோ கிடையாது.

    புஷ்பா அன்பானவள். குடும்பத்தின் மீது வெறித்தனமான பாசம் கொண்டவள். கணவன், இரண்டு பெண்களைத் தவிர வேறு எந்தச் சிந்தனையும் கிடையாது அவளுக்கு. அமைதியான, அன்பான, மன நிறைவான வாழ்க்கை அவளுடையது. கணவன் பாஸ்கர் வங்கியில் சீனியர் மேனேஜர். மூத்த பெண் சவிதா பி.காம் இரண்டாம் வருடம். இரண்டாவது பெண் திவ்யா பிளஸ்டூ. அம்மாவிடம் உயிரான குழந்தைகள், மனைவியை நேசிக்கும் கணவன் என்று ஆனந்தமாகச் செல்கிறது அவளின் வாழ்க்கை.

    பாஸ்கர் ஒரே பையன். மாமனார் இறந்து மாமியார் மட்டும். அவரும் அருகில் ஒரு தனி வீட்டில் இருக்கிறார். தங்களுடன் வரச் சொல்லி புஷ்பா வற்புறுத்தினாலும் மறுத்து விட்டார்.

    விலகி இருக்கறதுதான் அனைவருக்கும் நல்லது புஷ்பா. அம்மாங்கறது வேற. மாமியார்கறது வேறு. சின்ன வார்த்தைகள் கூட மிகப் பெரிய வலியை உண்டாக்கி விடும். நீ நல்லா இருக்கியா? நான் நல்லா இருக்கேன் அப்படின்னு தாமரை இலைத் தண்ணீர் மாதிரி இருக்கறதுதான் நல்லது. எப்போன்னாலும் உனக்கு நான் ஓடி வருவேன் என்றிருக்கிறார்.

    அனுஷம் மாமி என்று இந்தப் பகுதியில் ரொம்ப பிரசித்தம்.வீடு முழுதும் காஞ்சி மகானின் உருவப் படம் வைத்து மாதா, மாதம் அனுஷம் நட்சத்திரத்து அன்று பூஜை, அன்னதானம் நடைபெறும். பிறர் வேதனைகளைத் தீர்க்கச் சொல்லி பெரியவாளிடம் பிரார்த்தனை செய்வார்.

    புஷ்பாவுக்கு மாமியார் தெய்வம். எது என்றாலும் அவரிடம் ஓடி விடுவாள். ஆறுதல் சொல்வார்.தீர்வுகள் தருவார். எல்லாம் சரியாகி விடும். வேலைகளை முடித்து எல்லோரையும் அனுப்பி விட்டு தனக்கும் மாமியாருக்கும் டிபன் எடுத்துக் கொண்டு அங்கு போய் விடுவாள். மாலை நான்கு மணிப்போல்தான் திரும்புவாள்.

    இன்று அங்கு அனுஷம் பூஜை. குழந்தைகள், கணவர் எல்லோரையும் அங்கு வரச் சொல்லி இருக்கிறார். பாஸ்கர் வருவானா என்று தெரியவில்லை. அவன் இன்னும் பிளே பாய்.பெரிய பெண்கள் இருந்தாலும் புஷ்பாவைச் சீண்டுவான். கொஞ்சுவான். சில்மிஷம் செய்வான். குழந்தைகள் முன் கூச்சமாக இருந்தாலும், புஷ்பாவுக்கு கணவன் தன் மேல் இத்தனை பிரியமாக இருப்பது குறித்து சிறிது கர்வம் உண்டு.

    கோவையில் வடவெள்ளியில் சொந்த வீடு. அவளின் அப்பா, அம்மா எல்லாம் அருகில் கிராமம்.விவசாயம்.அண்ணாவும் பாஸ்கரும் ஒன்றாக வங்கிப் பணி. அதில்தான் பாஸ்கருக்கு புஷ்பாவை கட்டி வைத்தார்கள். பாஸ்கருக்கு கூடப் பிறந்த அக்கா மட்டும்தான். ராம் நகரில் இருக்கிறாள். அவள் பையன் டாக்டருக்கு முடித்து விட்டு மேலே படிக்கிறான். அவனுக்குத்தான் சவிதாவைக் கல்யாணம் செய்யலாம் என்று மாமியாரின் ஆசை. இந்த விஷ்யம் புஷ்பா, அனுஷம் மாமி தவிர வேறு யாருக்கும் தெரியாது.

    கிரி எம்.டி முடிக்கட்டும். நான் பேசிப் பாக்கறேன் லலிதாகிட்ட என்று மாமியார் கூறி இருக்கிறாள்.

    கற்பனை சிறகடித்துப் பறக்க அப்படியே எழுந்திருக்கப் பிடிக்காமல் படுத்திருந்தாள் புஷ்பா.

    ஹை. என் அழகுப் பொண்டாட்டு பாஸ்கர் குளித்து விட்டு வந்திருந்தான். தலையைச் சிலுப்ப, முடிகளில் இருந்த தண்ணீர் முகத்தில் தெளித்தது.

    சீச்சி, புஷ்பா சிலிர்த்து எழுந்தாள். என்னப்பா இது

    தண்ணீர், சிறுவாணித் தண்ணீர்.

    அய்யே, இது என்ன இந்த நேரத்துக்கு குளியல்.?

    வங்கிப் பணி, வா, வா என்று அழைக்கிறது கண்ணே

    இன்னைக்கும் வேலையா ஸண்டே லீவ் இல்லையா?" ஏக்கத்துடன் கேட்டாள்.

    உங்க தாத்தாவா பேங்க் நடத்தறார்? இன்னைக்கு ஆடிட் கண்ணு பாஸ்கர் சட்டை மாற்றி டிரஸ் செய்து புறப்பட்டான்."

    காஃபி, டிபன்- புஷ்பா அவசரமாக எழுந்தாள்.

    நோ, எல்லாமே சீனியருடன். பணம் கேட்டியே. டேபிள் மேல வச்சிருக்கேன். குழந்தைகளை கூட்டிட்டு சினிமாவுக்கு போய்ட்டு வா. அனுஷம் பூஜைக்கு அம்மாவுக்கு பணம் தந்துடு. மதியம், இரவுச் சாப்பாடு எல்லாமே சீனியர் கூடத்தான். அவசர, , அவசரமாகப் புறப்பட்டான். கார் வேண்டாம் என்று பைக் எடுத்தான். மின்னலாக கிளம்பி விட்டான்.

    என்னவோ ஒரு சங்கடம் அவள் வ்யிற்றுக்குள். பல கற்பனைகள் மனதில் இருந்தது. பாஸ்கருக்கு பிடித்த வெஜிடபிள் புலவ், ரைத்தா, சவிதாவுக்கு பேபி கார்ன், மஞ்சூரியன்.திவ்யாவுக்கு ஆனியன் சப்பாத்தி, பனீர் குருமா என்று மெனு மனதிற்குள் ஓடியது. சரி பாஸ்கர் இல்லைன்னா என்ன. குழந்தைகளுக்கு செய்து தரலாம் என்று எழுந்தாள்.

    சுற்றுப்புறம் உயிர் பெற ஆரம்பித்து விட்டது.வடவெள்ளியில் இந்தப் பகுதி பரபரப்பாக இருக்கும்.இரவு முழுதும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.காலையில் அது இன்னும் அதிகமாகி விடும்.சின்ன அபார்ட்மெண்ட் அது.

    மொத்தமாக பத்து வீடுகள் மட்டும். கீழே கார் பார்கிங் ஏரியா. முதல் தளத்தில் ஐந்து வீடுகள். இரண்டாவது தளத்தில் ஐந்து வீடுகள். சகல வசதிகளும் உள்ளுக்குள்ளேயே இருந்தது. பக்கத்தில் நடந்து போகும் தூரத்தில் கடைகள் எல்லாமே கிடைத்தது.

    தெருக் கோடியில் அனுஷம் மாமி வீடு. அவர் வீடு தாண்டினால் மெயின் ரோடு.பேருந்து நிறுத்தம். சவிதாவின் கல்லூரிப் பேருந்து வரும். திவ்யா சைக்கிளில் போய் விடுவாள். அந்த சுற்றுப் புறம் தாண்டி எதற்கும் வெளியில் போக வேண்டிய அவசியமில்லை.அபார்ட்மெண்ட் முழுதும் ஒரு குடும்பம் போல் வாழ்வதால் வாழ்க்கை இனிமையாக இருந்தது.

    புஷ்பா தனக்கு ஐஸ் காஃபி கலந்து கொண்டாள். முதல் நாள் இரவே கலந்து ஃபிரீசரில் வைத்து விடுவாள். காலையில் அது கெட்டியாக இருக்கும். எடுத்து ஸ்பூனில் எடுத்துச் சாப்பிடுவாள்.அதிகாலையில் வாசலில் உள்ள சின்னத் திண்ணையில் அமர்ந்து தெருவை வேடிக்கை பார்த்தபடி ஐஸ் காஃபி சாப்பிடுவது சுகம்.

    அபார்ட்மெண்டில் வீடு வாங்கும் போது எந்த வசதியும் இல்லாமல்தான் இருந்தது. வீடு வாங்கிய பிறகு அனுஷம் மாமியின் அறிவுறையில் வாசலில் திண்ணை. கம்பி கேட். உள்ளே, மற்றொரு பாத்ரூம், ஷெல்ஃப், துணி தோய்க்கும் கல் என்று கட்டினார்கள்.

    தெருவை ஒட்டியபடி வீடு. அந்த கைப்பிடிச் சுவர் அருகே திண்ணை, புஷ்பாவுக்கு ரொம்பவும் பிடித்த இடம் அது.எந்த சஞ்சலம் என்றாலும் ஒரு ஐஸ் காஃபியுடன் அங்கு வந்து அமர்ந்து விடுவாள். எல்லம் சரியாகும்.

    பக்கத்து தெரிவில் மாரியம்மன் கோவில் திருவிழா.மாரியம்மா, எங்கள் மாரியம்மா என்று உரத்த குரலில் எல்.ஆர்.ஈஸ்வரி பாட ஆரம்பித்து விட்டார்.நாளை கம்பம் பிடுங்கி, மஞ்சத் தண்ணீர், மறுபூஜை என்று களை கட்டி விடும். புஷ்பா கம்பம் நட்ட நாட்களில் தினசரி போய் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி மஞ்சள், கும்குமம் வைத்து விட்டு வருவாள்.

    இந்தப் பக்கமெல்லாம் மாரியம்மன் கோவில் பண்டிகைதான் விசேஷம். புதுத் துணி எடுப்பார்கள். உறவுகள் கூடும்.

    புஷ்பாவும் புதுத் துணி எடுத்திருக்கிறாள். அவளே தைத்து விடுவாள். வித விதமாக டிசைன், டிசைனாக தைப்பதால் அவளுக்கு வாடிக்கையாளர்களும் அதிகம். நாந்தான் சம்பாதிக்கறேன்ல.உனக்கு எதுக்கு இந்த வேலை என்று பாஸ்கர் கண்டிப்பான்.தனக்குத் தெரிந்த ஒரு கலையை வேஸ்ட் செய்யாத திருப்தி, தானும் சுயதொழில் செய்து சம்பாதிகிறோம் என்ற மன நிறைவு.

    தன் தையல் தொழில் மூலம் இத்தனை வருஷத்தில் இருபது பவுன் நகை, ரெண்டு லட்சம் பணம் சேர்த்து அனுஷம் மாமியிடம் கொடுத்திருக்கிறாள். சவிதா திருமணத்தின் போது இன்ப அதிர்ச்சியாக பாஸ்கரிடம் தர வேண்டும் என்று ஆசை. அந்த நிமிஷம் அவன் முகத்தில் தெரியும் பூரிப்பும், அதன் பின் அவன் தன்னீடம் நன்றி தெரிவிக்கும் முறையையும் கற்பனை செய்து பார்த்து, பார்த்து பூரித்துப் போவாள்.

    பாஸ்கர் குழந்தைகளுக்குத் தெரிந்து அவன் சம்பளத்தில் இருந்து சவிதா திருமணத்திற்கு இருபது பவுன், திவயாவுக்கு இரண்டு பவுன் சேர்த்து வைத்திருக்கிறாள்.குழந்தைகள் பெயரில் சேமிப்பு இருக்கிறது.

    லலிதாவின் பையன் கிரி படிப்பு முடிந்து வந்ததும் அம்பது பவுன் போட்டு சவிதா திருமணம் நடத்த வேண்டும் என்பது அவளின் ஆசை. எல்லா ஆசைகளையும் அவள் நம்பும் காஞ்சி மகானின் காலடியில்தான் போட்டிருக்கிறாள்.

    எந்த ஒரு ஆசையையும், அவள் அனுஷம் மாமி வீட்டில் ஒரு ஆளுயர காஞ்சி மகான் படத்தின் முன் போட்டு விடுவாள்.னேருக்கு நேராக நின்று முகத்தில் ஒரு புன்னகையுடன், நெஞ்சில் கை வைத்து நான் இருக்கேன் என்று சொல்லும் அந்தப் படத்தை புஷ்பா உயிரோட்டமாக நினைத்தாள்.

    எதோ ஒன்றை விடாப் பிடியாக பிடித்துக் கொள்ள வேண்டும். அதன் மேலேயே நம்பிக்கையுடன் மனம் ஒன்றி தியானிக்க வேண்டும். பெரியவா, சாய்ராம் ராகவேந்திரர் என்று எல்லாமே எல்லையற்ற பரம்பொருளின் பல்வேறு வடிவங்கள்தான்.அவரவர்க்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பொறுத்து அந்தந்த மகான்களை பிடித்துக் கொள்ள வேண்டும்.

    புஷ்பாவின் தோழி அடுத்த தளத்தில் இருக்கிறாள். அவள் வீட்டில் எந்த தெய்வப் படங்களும் இல்லை. கேரள ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி அதன் முன் அமர்ந்து லலிதா சொல்லுவாள். இறைவன் இந்த வடிவம்னு யார் சொன்னா உனக்கு. மனதை ஒருமுகப் படுத்த தெய்வ வடிவங்கள். அது ஒவ்வொன்றும் நம்ம உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது.

    பற்றில்லாமல் இருந்தா ஆனந்தம். அதுக்கு மகாவிஷ்ணு.சும்மா இரு. எதைப் பற்றியும் கவலைப் படாம இருந்தா எல்லாமே கடந்து போகும்.அதுக்கு சிவன். உனக்குள் எல்லையற்ற சக்தி இருக்கு அதுதான் அம்பாள். எல்லா தெய்வ வடிவங்களும் நமக்குள் இருக்கும் ஒளியை பிரகாசிக்க வைக்கிறது. அதுதான் தீபத்தின் சுடரைப் பார்த்தபடி தியானம் செய்யறேன்" என்பாள்.

    ஆனால் புஷ்பா காஞ்சி மகான் உருவம், திருச்செந்தூர் முருகன். காமாட்சி என்று வகைக்கு ஒரு தெய்வத்தை பிடித்திருப்பாள்.எல்லாமே மனதைப் பொறுத்த விஷயம் என்று சொல்வார் அனுஷம் மாமி.

    எல்லாவற்றையும் அசை போட்டபடி ஐஸ் காஃபியைக் குடித்து முடித்தாள் புஷ்பா.

    ஹி மாம், குட்மார்னிங்க் சவிதா வந்து கழுத்தை கட்டிக் கொண்டாள்.மூத்த பெண்ணின் அணைப்பு உள்ளே சந்தோஷத்தை தந்தது.

    என்றாலும் கோபத்துடன் விரட்டினாள்.

    ஏய் சீச்சி பல் தேய்க்காம இது என்னடி அசிங்கம்.

    "என் அம்மாவுக்கு முத்தம் கொடுக்க எதுக்கு பல் தேய்க்கணும்?’

    போடி புஷ்பா சிரித்தாள். எல்லாத்துக்கும் பதில் எழுந்தாள்.

    பல் தேய்சுட்டு வா. காஃபி தரேன்

    இரும்மா சின்னதும் எழுந்து வந்து விட்டாள். "இடுப்பைக் கட்டிக் கொண்டது.

    இன்னைக்கு சண்டே. கொஞ்ச நாழி என்னைக் கொஞ்சேன்.

    நீ என்ன குழந்தையா?

    உனக்கு குழந்தைதானே திவ்யா அப்படியே அவள் மடியில் படுத்துக் கொண்டாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1