Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மனசுக்குள் வரலாமா?
மனசுக்குள் வரலாமா?
மனசுக்குள் வரலாமா?
Ebook108 pages40 minutes

மனசுக்குள் வரலாமா?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கமலா வீட்டிற்கு வந்தபோது மணி ஏழரை. தன்னுடைய ஸ்கூட்டரை வீட்டின் முன்னே, தோட்டத்துப் பக்கம் வாகனங்கள் நிறுத்துவதற்காக கட்டப்பட்டிருந்த இடத்தில் நிறுத்தி விட்டு உள்ளே வந்தாள். அலங்காரமான அழகான வீடு. பணக்காரத் திமிரில் தலைநிமிர்ந்து நின்றது. அவளுடைய கன்னத்தைப் போல் பளபளக்கும் தரை.
கமலா மாடிக்கு வந்தாள். தன்னுடைய அறைக்குள் வந்து மெத்தையில் விழுந்தாள். கண்களை மூடிக் கொண்டாள். அவளுடைய மனம் குதூகலித்தது. முரளி தந்த முத்தமும் மோகப் பேச்சும் அவளைக் கணிசமானதொரு களிப்பில் ஆழ்த்தியிருந்தது.
குளியலறைக்குள் நுழைந்து குளித்தாள். புத்துணர்வுடன் வெளியே வந்தாள். இரவு உடையில் தன்னை நுழைத்துக் கொண்டாள். மெல்லிய ஒப்பனை செய்தாள். படிக்க வேண்டிய புத்தகங்களை எடுத்துக் கொண்டு இருக்கைக்கு வந்தாள். புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டினாள்.
காதலில் விழுந்த கண்களின் எதிரே இருப்பதெல்லாம் காதலனின் முகத்தை தவிர வேறில்லை. அச்சில் இருக்கும் எழுத்தெல்லாம் அவனாகவே இருந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. படிப்பதற்கு சிரமப்பட்டாள் கமலா.
கமலாவின் தந்தை பிரபல சோப்பு நிறுவனம் ஒன்றின் சொந்தக்காரர். மார்க்கெட்டில் அவருடைய நிறுவனப் பொருட்களுக்கே முதலிடம். ‘மணிவண்ணன்’ அவருடைய திருநாமம். அவரைத் தெரியாதவர்களே சுற்று வட்டாரத்தில் இல்லை. அவருடைய ஒரே மகள் கமலா. அவருடைய சொத்துக்களின் ஒரே வாரிசு. மூன்று வருடங்களுக்கு முன்புதான் மணிவண்ணனின் மனைவி, கமலாவின் தாய் இறந்து போனாள் மூளையில் கட்டி வந்து ஆபரேஷன் செய்தும் பலன் இல்லாமல் போய் சேர்ந்தாள். மணிவண்ணன் பணத்தைவிடப் பாசத்தை பெரிதாக நினைப்பவர். மனைவியின் இழப்பு, அவரை மிகவும் பாதித்தது. ஆனால், மகளின் முகத்திற்காகசிரித்தார். மிகவும் கண்டிப்பானவர், ஒரே மகள் என்பதற்காக அவர் அவளை செல்லம் கொடுத்தெல்லாம் வளர்க்கவில்லை. அதே சமயம் சிலரைப் போல் ஒரேயடியாக கண்டிப்பை செலுத்துபவரும் இல்லை.
மனைவியை இழந்ததிலிருந்து அவர் நிறைய மாறியிருந்தார் முன்பெல்லாம் வியாபாரம், வியாபாரம் என இருப்பார். அவர் எந்த நேரத்திற்கு வீட்டிற்கு வருவார், எந்த நேரத்தில் சாப்பிடுகிறார் என்பதெல்லாம் அவளுக்கே தெரியாமல் இருந்தது. பெரும்பாலும் அம்மாவிடமே அதிக ஒட்டுதல் அவளுக்கு அம்மா எல்லாவற்றையும் நிர்வகித்துக் கொள்வாள். மகளை கவனிக்க மனைவி இருக்கிறாள் என அலட்சியமாக இருந்த மணிவண்ணன் அவள் இறந்ததும் திணறிப் போனார். மகளுக்காக அதன் பிறகு இரவு சீக்கிரமே வந்து விடுவார். எந்த வேலை எப்படியிருந்தாலும் இரவு சாப்பாடு மகளுடன்தான்.
அம்மாவின் அரவணைப்பை இழந்த கமலாவிற்கு அப்பாவின் ஒட்டுதல் ஆறுதல் தந்தது. பணத்தைவிட அப்பா பாசத்திற்கு முக்கியத்துவம் தந்தது அவளுக்குத் தாயின் இழப்பை மறக்க வைத்தது.
எப்படியோ முரளியைக் கொஞ்ச நேரம் ஒதுக்கி வைத்துவிட்டு படிப்பில் கவனத்தை செலுத்தினாள் கமலா. அவள் எம்.காம். கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள்.
சரியாய் ஒன்பது மணிக்கு அப்பா வந்து விட்டார். அடுத்த சில நிமிடங்களில் புத்தகத்தை மூடிவிட்டு இறங்கி கீழே வந்தாள்.. பசி வயிற்றைக் கிள்ளியது. அப்பா மாற்றுடைக்கு மாறி அறையை விட்டு வந்தார்.
“கமலா... சாப்பிடலாமா? பயங்கர பசி” என்றார்.
“எனக்கும்தாம்பா...” என்றாள்.
அப்பாவும் பெண்ணும் சாப்பாட்டு மேஜையருகே வந்து அமர்ந்தனர். இருவரும் பொதுவான விஷயங்களைப் பேசியபடியே சாப்பிட்டனர்.
“கமலா...” உருளைக் கிழங்கை ருசித்தபடியே மணிவண்ணன் மகளைப் பார்த்தார்.
“என்னப்பா...?” திடுக்கிட்டவளைப் போல் கேட்டாள். அவளுடைய மனம் ஒருபுறம் முரளியுடன் உலாவிக் கொண்டிருந்ததே காரணம்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 14, 2024
மனசுக்குள் வரலாமா?

Read more from ஆர்.சுமதி

Related to மனசுக்குள் வரலாமா?

Related ebooks

Reviews for மனசுக்குள் வரலாமா?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மனசுக்குள் வரலாமா? - ஆர்.சுமதி

    1

    தந்தை அடித்த குழந்தையை ஓடிவந்து அரவணைக்கும் தாயைப் போல் சூரியன் தன் வெப்பக் கதிர்களால் அடித்துப் போட்டுவிட்டுப் போன பூமியை - மாலையில் நிலவு ஓடி வந்து அணைத்துக் கொண்டு ஆறுதல் படுத்தும் நேரம்.

    ஆறு மணியிலிருந்து கடற்கரையில் அமர்ந்திருந்தனர் முரளியும், கமலாவும். உப்புக் காற்றின் உரசல் உள்ளத்திற்கு ஒரு புத்துணர்வை உண்டாக்கியது; உடலையும் மனதையும் லேசாக்கியது. கமலாவிற்கு அது ஒரு கற்பனையை உண்டு பண்ணியது. அவளுடைய நீலவிழிகள் நிலைத்திருந்தன. நீலக் கடலில் கடல்நீரின் அழகைக் கண்டு அவளுடைய கயல்விழிகள் துடிப்பதைப் பார்க்கின்ற போது அவளுடைய விழிமீன்களும் ஓடிச்சென்று அந்த நீரில் விழுந்து அங்குள்ள மீன்களுடன் விளையாடத் துடிப்பதைப் போலிருந்தது. துடிக்கும் இமைகள் செயலிழந்த சில கணங்கள் அப்படியே உற்றுப் பார்ப்பதைப் பார்க்கின்ற போது ‘கடல் மீன்களுடன் காதல் புரிய முடியாமல் நான் இவளுடைய முகத்தில் சிறைவைக்கப்பட்டு விட்டேனே’

    என அவளுடைய கண்மீன்கள் ஏங்குவதைப் போலிருந்தது. அவளுடைய கற்பனை இதுதான்.

    இதோ இந்த முரளியுடன் கைகோர்த்துக் கொண்டு அந்த கடலின் நீர் பரப்பின் மீது நடக்க வேண்டும். பாம்புப் படுக்கையில் பள்ளிக் கொண்டிருக்கும் திருமாலைப் போல் மலர் படுக்கையில் இவன் மார்பில் சாய்ந்து துயில வேண்டும்.

    கற்பனை நெஞ்சில் உதிக்க அவளுடைய இதழ்களில் புன்னகை ஓடியது. மஞ்சளும் இருளும் கலந்த நிலையில் அவளுடைய சிரிப்பு இழையோடும் முகத்தைப் பார்த்த முரளியின் மனதில் மோகம் இழையோடியது. அவளை இழுத்து தன் மடியில் போட்டுக் கொண்டான். படகு அவர்களை மறைத்தது. படகு மறைவிற்கு அந்த பக்கம் கடலலைகளை தோழர்களாக்கி விளையாடும் சத்தம். கடலலையில் இரைச்சல், காதைப் பிளக்கும் மனிதர்களின் சத்தத்தையும் மீறி காதலனின் மௌன மொழியில் மயங்கிக் கிடந்தாள். கமலா மேலே நிலவு வான்கதவை திறந்து கொண்டு தலை நீட்டிப் பார்ப்பதைப் போல் எட்டிப் பார்த்தது.

    முரளி...

    என்ன கமலா...?

    எனக்கு ஒரு கற்பனை

    சொல்லேன்.

    கடல் மேல நடக்கணும்

    அப்புறம்...?

    கடல் மேல மலர்படுக்கை போட்டு இதே மாதிரி படுத்துக்கணும்.

    இதெல்லாம் நடக்குற காரியமா? காதல் வந்துட்டாலே கற்பனை இப்படித்தான் வரும். கடல்ல நடக்குறமாதிரி, ஆகாயத்துல பறக்குற மாதிரி.

    இது ஏன் முடியாத காரியம்னு நினைக்கிறீங்க? உடம்பையும் மனசையும் லேசாக்கி தண்ணி மேலேயே நடக்குற மிதக்குற யோகிகளைப் பற்றி நான் படிச்சிருக்கேன்.

    பேசாம நீ ஒரு யோகியை காதலிச்சிருக்கலாம். இப்படி கடல்ல மிதக்குற நடக்குற ஆசையையெல்லாம் நிறைவேத்துவாரு.

    ச்சை... உனக்கு விவஸ்தையே கிடையாது. அவனை ஒருமையில் திட்டினாள்.

    பின்ன... என்ன? கட்டிளங்காளை ஒருத்தன் மடியில படுத்துக்கிட்டு வேறமாதிரியான ஆசைகளை சொன்னா நிறைவேத்தி வைப்பேன். கடல்ல மிதக்குற ஆசையைப் பத்தி சொன்னா நான் என்ன செய்வேன்? அவளுடைய கூந்தலை வருடினான்.

    அவனுடைய விரல்களைப் பற்றி தன் விரல்களால் சுரண்டியவாறே கேட்டாள்:

    வேற மாதிரியான ஆசைன்னா...? என்றாள்.

    வேற மாதிரியான ஆசைன்னா, அந்த மாதிரியான ஆசை... என்றான்.

    ச்சீ... நீங்க ரொம்ப மோசம்.

    என்ன மோசம்?

    கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி அலையாதீங்க.

    ஆம்பளைங்க கல்யாணத்துக்கு முன்னாடி அலைவாங்க. பொம்பளைங்க, கல்யாணத்துக்குப் பின்னாடி அலைவாங்க.

    ஆமா, இவர்தான் பார்த்தாரு. ஆளைப்பாரு. முரளி...

    என்ன... உடனே அந்த ஆசையை நிறைவேத்த சொல்றியா? எனக்கொன்னும் ஆட்சேபணை இல்லை. நான் ரெடி. ஆனா, நீ பெரிய பணக்காரி. உன்னோட முதலிரவு வெல்வெட் மெத்தையில் அலங்காரமான அறையில் நடக்க வேண்டியது. இங்க வெட்ட வெளியில் வெண் மணற்பரப்புல நடக்கணுமான்னுதான் கவலையா இருக்கு.

    முரளி மூடு வாயை. பேச்சைப் பாரு. அசிங்கமா பேசிக்கிட்டு...

    அசிங்கமா இது? பாவி... மனித வர்க்கத்தின் மகத்தான சந்தோஷமே இதுதான். நீதான் இதைக் கேவலப்படுத்தறே. உன்னை இதுக்குன்னே பழிவாங்கலை... என் பேரு முரளி இல்லை.

    பழிவாங்கப் போறியா? எப்படிடா என் செல்லக் கண்ணா? கொஞ்சினாள்.

    ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கு தூக்க மாத்திரையைப் போட்டுக்கிட்டு நீ பால் செம்போட வர்றதுக்கு முன்னயே நீட்டி படுத்து தூங்கிடுவேன். நீ ஏமாந்து போவே...

    ஓகோ? அப்ப நானே... அவள் சொல்லி முடிப்பதற்குள் அவளுடைய வாயைப் பொத்தினான்.

    வெட்கம் கெட்டவளே. நீ தமிழ்ப் பொண்ணே இல்லை என அவளுடைய இடுப்பில் அழுத்தமாய் கிள்ளினான்.

    ஆ... கத்தினாள் கமலா.

    இருவரும் பின் சேர்ந்து சிரித்தனர்.

    அவனுடைய மடியிலிருந்து சட்டென எழுந்தாள். அவனுடைய தோளில் கைபோட்டு அவன் முகத்தை தன் பக்கம் இழுத்தவள் கேட்டாள்:

    முரளி... நாம எவ்வளவு நாளைக்குத்தான் இப்படியே காதலிச்சுக்கிட்டு இருக்கறது...?

    சாகறவரைக்கும்.

    கல்யாணம்?

    கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் காதல் தொடராதா? நீ கேட்குற கேள்வியைப் பார்த்தா, காதலை ஏதோ ஒரு கட்டத்துல நிறுத்தணுமின்னு சொல்றமாதிரி இருக்கு.

    நான் அப்படி சொல்லலையே...

    பின்னே... எவ்வளவு நாள் காதலிச்சுக்கிட்டே இருக்கறதுன்னு கேட்டே? இவ்வளவு நாள்தான் காதலிக்கணுமின்னு ஏதாவது கணக்கு இருக்கா?

    நான் கல்யாணத்தைப் பத்தி பேச வந்தேன்.

    அதுக்கு எப்ப கல்யாணம்ன்னு கேட்டிருக்கணும். கல்யாணம்கறது சமுதாயத்துல நமக்கு ஒரு அங்கீகாரம். அவ்வளவுதான். ஆனா... இந்த காதல் இருக்கே, நம்ம மனசுக்குள்ள நமக்கு நாமே ஏற்படுத்திக்கிட்ட அங்கீகாரம். கல்யாணம் ஆனாலும் சரி, ஆகாட்டாலும் சரி. காதல் நம்மக்கிட்டயிருந்து போயிடாது. அது தொடரும். நீ கிழவியாகற போது கூட இந்தப் பாசத்தோட என்னால இருக்க முடியும். இருக்கணும். அதுதான் காதல் கமலா.

    அவனுடைய வார்த்தைகள் அவளுக்குள் ஒரு போதையை உண்டாக்குவதைப் போலிருந்தது. கண்களை சுகமாக மூடிக் கொண்டாள். மூடிய அந்த விழிகளில் முத்தமிட்டான் முரளி. அந்த நிமிடம் அவளுக்கு சற்றுமுன் கடல்மீது நடக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றியதைப் போல் இருந்தது. அவனுடைய மீசையின் ரோமங்கள் மூடிய இமையின் மீது மென்மையாய்க் குத்தின. அவளுடைய தேகத்தையே சிலிர்க்க

    Enjoying the preview?
    Page 1 of 1