Anbirkkup Panjamillai
By R.Sumathi
4.5/5
()
About this ebook
Read more from R.Sumathi
Eppadi Solvenadi Rating: 4 out of 5 stars4/5Sinnakkili Rating: 4 out of 5 stars4/5Kannoram Minsaaram Rating: 0 out of 5 stars0 ratingsInimai Ninaiuvgal Thodarattume Rating: 4 out of 5 stars4/5Kadhal Kalamadi Kanne Rating: 5 out of 5 stars5/5Maaya Thottrangal Rating: 0 out of 5 stars0 ratingsTheeyai Sudum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsPuthiraaga Oru Poo Rating: 5 out of 5 stars5/5Kathal Suvadukal Rating: 0 out of 5 stars0 ratingsOreedam Nee Tharuvaai Rating: 4 out of 5 stars4/5Uravillai Pirivillai Rating: 0 out of 5 stars0 ratingsYenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsMalare Mayangaathe Rating: 0 out of 5 stars0 ratingsNiram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Ennai Thodu Rating: 5 out of 5 stars5/5Paarvaikal Puthithaa Rating: 0 out of 5 stars0 ratingsKetkkum Varam Kidaikkum Varai Rating: 0 out of 5 stars0 ratingsPovomaa Ponnulagam Rating: 5 out of 5 stars5/5Kunguma Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsKaanalai Thedum Kaveri Rating: 0 out of 5 stars0 ratingsPaasa Malargal Rating: 0 out of 5 stars0 ratingsEn Malar Madiyile Rating: 4 out of 5 stars4/5En Iniya Ilamaane Rating: 0 out of 5 stars0 ratingsMayakkathirkuriya Manthirame Rating: 5 out of 5 stars5/5Anbil Vantha Kaaviyam Rating: 5 out of 5 stars5/5Naan Pesa Ninaippathellaam Rating: 5 out of 5 stars5/5Karpoora Jothi Rating: 0 out of 5 stars0 ratingsManoratham Rating: 4 out of 5 stars4/5Kanavile Vanthu Nilladi Rating: 5 out of 5 stars5/5
Related to Anbirkkup Panjamillai
Related ebooks
Vanakkathirkuriya Kaathaliye Rating: 0 out of 5 stars0 ratingsThen Sinthum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsKan Varaintha Oviyame Rating: 0 out of 5 stars0 ratingsNenjukkul Poo Malarum Rating: 5 out of 5 stars5/5Poojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Engiruntho Aasaigal Rating: 5 out of 5 stars5/5Aagaya gangai Rating: 5 out of 5 stars5/5Nyabagangal Thee Mootum Rating: 0 out of 5 stars0 ratingsVendum Unthan Uravu Rating: 0 out of 5 stars0 ratingsEn Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsVandhuvidu Vasavi.. Rating: 0 out of 5 stars0 ratingsThoorathu Nilavu Rating: 4 out of 5 stars4/5Pogumidam Vegu Thooramillai Rating: 5 out of 5 stars5/5Poi Vaa Nathiyalaiye Rating: 0 out of 5 stars0 ratingsKaiyarukil Poomaalai Rating: 4 out of 5 stars4/5Kanavukale Vazhividungal Rating: 0 out of 5 stars0 ratingsKannukkoru Vannakkili Rating: 5 out of 5 stars5/5Vellai Niraththil Oru Vannaththupoochi Rating: 4 out of 5 stars4/5Antha Nenjam Ennidam Rating: 0 out of 5 stars0 ratingsKadhal Sirakukal Rating: 0 out of 5 stars0 ratingsNesam Niram Maarumo Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyire Rating: 4 out of 5 stars4/5Vannathupoochikku Vazhi Vidu Rating: 4 out of 5 stars4/5Anbirku Thalaivanangu Rating: 0 out of 5 stars0 ratingsMarupadi Yen Vanthaai Rating: 0 out of 5 stars0 ratingsEngey Aval En Devathai Rating: 0 out of 5 stars0 ratingsMazhaithuli Mattum Unakku Rating: 5 out of 5 stars5/5Poo Pookkum Osai Rating: 5 out of 5 stars5/5Vennilaa Neraththile Rating: 0 out of 5 stars0 ratingsMangai Enthan Nenjukkul! Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Anbirkkup Panjamillai
2 ratings0 reviews
Book preview
Anbirkkup Panjamillai - R.Sumathi
20
1
"ஏய்... ஆதிரை, கொஞ்சம் இங்கே வாயேன்" என்ற குரலுக்கு சமையலறை வாசலில் முகம் நீட்டி,
இருண்ணா, குழம்பை தாளிச்சு கொட்டிட்டு வர்றேன்
என்ற ஆதிரைக்கு வயது இருபத்தி ஒன்றோ இரண்டோ இருக்கலாம். அழகான பானுப்ரியா கண்களை அப்படியே கண்களில் காப்பியடித்திருந்தாள். தற்சமயம் அந்த பெரிய விழிகள் புகையால் ஓரம் சிவந்திருந்தன.
சில நிமிடங்களை குழம்பு தாளிப்பிற்கு செலவழித்து விட்டு அடுப்பை நிதானமாக எரியவிட்டு வெளியில் வந்தவள் முந்தானையால் காற்றை வரவழைத்தபடி அண்ணன் அருகில் வந்தாள்.
அண்ணன் குகன் காலைத் தூக்கி எதிரே இருந்த பலகை மேல் போட்டபடி நாற்காலியில் சாய்ந்து கொண்டு சலவை குறையாத புது பணக்கற்றையை எண்ணிக் கொண்டிருந்தான்.
அண்ணா... மெதுவா எண்ணு... நோட்டு கிழிஞ்சுட போவுது
என்றவாறே அவன் கால் நீட்டியிருந்த பலகையில் அமர்ந்தாள்.
நிமிர்ந்து ஆதிரையைப் பார்த்தவன் மீண்டும் எண்ணுவதில் குறியாய் இருந்தபடியே, ஆதிரை, உன் சம்பளக் கவரை கொண்டா
என்றான்.
ஆதிரை எழுந்து போய் சுவரில் ஆணியில் அனாதையாய் தொங்கிய தோள்பையை எடுத்து அதன் ஜிப்பை எதிர்ப்புறம் செலுத்தி கவரை கொண்டுவந்து கொடுத்தாள்.
அதை வாங்கி பணத்தை வெளியே எடுத்து எண்ணத் தொடங்கிய அண்ணனை பார்த்தாள்.
நானே பத்து தடவை எண்ணித்தான் வாங்கி வந்தேன். சரியா அறுநூறு ரூபாய்க்கு பத்து காசு அதிகமில்லை. நீ வேற இதில் என்ன எண்ணுறே?
என்ற தங்கையை ஏறிட்டுப் பார்க்காமல் எண்ணி ஒரே உறையில் போட்டு அவளுடைய பையிலேயே வைத்து நிமிர்ந்தான்.
அவன் முகத்தில் மகிழ்ச்சி பரவியது.
நாளைக்கு, தீபாவளிக்கு துணி எடுக்கப் போறோம்
என்றான்.
அய்...
ஆதிரை துள்ளினாள் சிறு குழந்தையாய்.
குகனும் அவளின் குதூகலத்தில் கலந்து கொண்டான்.
உனக்கு என்ன கலர்ல சேலை வேணும்?
அண்ணா, என்கிட்ட மஞ்சள் கலர்லதான் சேலையே இல்லை. அதனால இந்த வருஷ தீபாவளிக்கு மஞ்சள் கலர்தான்.
டேய்... மஞ்சள் கலர்ல பட்டுச்சேலை அவ்வளவு எடுப்பா இருக்குமா? வேற கலர் பார்ப்போம். அரக்கு கலர் பார்டர் போட்ட சந்தனக் கலர் புடவை. இல்லாட்டி மயில் கழுத்து கலர்... இல்லாட்டி...
அவனுடைய இழுப்புக்கு இடைவெட்டினாள் ஆதிரை.
பட்டுச்சேலைன்னா என்ன சும்மாவா? அதுக்கெல்லாம் துட்டு இருக்கா?
என்று விரலை சுண்டினாள்.
ஏன் இல்லை? இப்ப மொத்தமா ஐயாயிரம் இருக்கு. அதில் அப்படியே நிறைய சரிகைப் போட்ட மயில் கழுத்துக் கலர் சேலை எடுத்து தன் தங்கச்சிக்கு கட்டுனா... அடா... அடா...
அவன் கண்களை மூடி கண்ணுக்குள் பட்டுச்சேலையில் தங்கையைப் பார்த்தான்.
அவன் முகத்துக்கு நேரே கையை தட்டி அவனை கண்திறக்க வைத்தாள் ஆதிரை.
ஐயாயிரத்துக்கும் அப்படியே எனக்கு சேலை எடுத்திட்டா உனக்கு டிரஸ் எந்தக் கடையில் திருடறது?
எந்தக் கடைக்குப் போறோமோ அந்தக் கடையிலேயே திருடுறது. டேய்... ஆதிரை எனக்கென்னடா? தீபாவளி அன்னிக்கு நீ தேவதை மாதிரி இருக்கணும்!
அண்ணா
ஒருகணம் பாசம் பொங்க உருகினாள் ஆதிரை, பின் -
இதோப் பாரு எனக்கு பட்டுச்சேலை வேணாம். வேற நல்ல சேலையா பார்த்து எடுத்துக்கிட்டு வருவோம்.
என்னை விடுறா, எனக்கென்ன? கிடக்குற சட்டைப் பேண்ட்டை இன்னும் ஏழு குகன் வந்தா கூட போட்டுக்கலாம்.
ஆமா, அதான் பார்க்கிறேனே, கிழிஞ்ச சட்டையை நீ திருட்டுத்தனமா தைக்கிறதை. எனக்குத் தெரியக்கூடாதுன்னு நீ தைச்சாலும் துவைக்கிறப்ப உலகமே தெரியிற பனியனை பார்க்காமலா இருக்கேன்.
அது கிடக்கட்டும் ஆதிரை. உனக்கு அவசியம் பட்டுச்சேலை வேணும். ஏன்னா திடீர்ன்னு யாராவது உன்னைப் பெண் பார்க்க வந்தா நீ எதைக் கட்டிக்கிட்டு நிற்பே. அதனால உனக்கு தீபாவளிக்கு பட்டுதான்.
குகன் தீர்மானமாக சொல்ல கோபத்துடன் எழுந்தாள் ஆதிரை.
உனக்கு டிரஸ் தைக்காமல் எனக்கு எதுவும் தேவை இல்லை. எடுத்தா ரெண்டு பேருக்கும் எடு. இல்லாட்டி விடு. தீபாவளியே வேண்டாம்.
சரி. முதல்ல உனக்கு பட்டுச்சேலை எடுப்போம். அப்புறம் பணம் வந்தா எனக்கு எடுத்துக்கலாம்.
பணம் எங்க குதிருக்குள்ளிருந்தா அப்புறம் வரும்? உனக்கு குடும்ப நிலவரமே புரியமாட்டேங்குது. என்னை அம்பாளாட்டம் அலங்கரிச்சுப் பார்த்துட்டா எல்லாம் சரியாயிடுமா? அரிசியில்லை. பருப்பு இல்லை. எண்ணெய் இல்லை. ஒரு எழவும் இல்லை வீட்ல. ஐயாயிரத்துக்கு பட்டுச்சேலை எடுத்து ஒரு நாள் கட்டி அழகுப் பார்த்துவிட்டு தூக்கி பீரோவில் போட்டுட்டு துண்டை நனைச்சு வயித்துல வைச்சுக்கிட்டு கிட
என்று வெடுக்கென சொல்லிவிட்டு சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.
சாம்பாரை இறக்கி வைத்துவிட்டு நிமிர்ந்தபோது அவளின் நெஞ்சம் பாசத்தால் விம்மியது.
தனக்கு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் தங்கைக்கு பட்டு எடுக்க நினைக்கும் அந்த அண்ணனின் உள்ளத்தை எண்ணிய போது இதயம் உருகியது.
கண்ணில் துளிர்த்த நீரை முந்தானையால் துடைத்தபடி வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றினாள்.
அவளுக்கும் ஆசைதான் பட்டுச்சேலை கட்டிக்கொள்ள. ஆனால் அவனுக்கு எடுக்காமல் தான் மட்டும் பட்டு கட்டுவது மகிழ்ச்சியைத் தருமா? அவளும் அவன் மேல் உயிரினும் மேலான பாசத்தையல்லவா வைத்திருக்கிறாள்?
இரவு அண்ணனுக்கு பரிமாறும்போது அவள் மென்மையாகப் பேசத் தொடங்கினாள்.
அண்ணா...
சொல்லு...
தீபாவளிக்கு வெறும் துணி மட்டும் எடுத்துட்டா சரியா போச்சா? பலகாரம் பண்ணணும்.
பலகாரம் நீ பண்ணப் போறியா?
பின்னே, நான் பண்ணாமல் வேற யார் பண்ணுவா?
நீ ஒண்ணும் அதெல்லாம் பண்ண வேண்டாம். எண்ணெய் மேல தெறிச்சா என்ன ஆகறது? அதெல்லாம் கடையில் வாங்கிக்கலாம்.
சரி, அதுக்கு பணம் வேணும். உனக்கும் எனக்கும் துணி எடுக்க பட்டாசு வாங்க.
இதுக்கெல்லாம் என்ன இலட்ச ரூபாயா ஆகிடும்.
அண்ணா, இதோ பார். சிம்பிளா ரெண்டு பேரும் டிரஸ் எடுத்துக்கிட்டு மீதப் பணத்தை உபயோகமா செலவு பண்ணுவோம். நீ பாவம். இராத்திரியெல்லாம் வியர்வையில் என்ன கஷ்டப்படறே? அதனால ஒரு பேன் வாங்கிடுவோம்.
இதைக் கேட்டு அவன் சிரித்தான்.
கிடப்பதெல்லாம் கிடக்கட்டும். கிழவனை தூக்கி மனையில் வைங்கிறமாதிரி இருக்கு உன் பேச்சு. பைத்தியம். என்ன செய்யணுமின்னு எனக்குத் தெரியும்.
ஆதிரைக்கு சுருக்கென வந்தது.
நீ எதுவேணா பண்ணு. ஆனா ரெண்டு பேருக்கும் துணி எடுத்தாத்தான் தீபாவளி. தெரிஞ்சுக்க
என்று வெடுக்கென கூறிவிட்டு சாம்பாரை எடுத்து சுடச்சுட வேண்டுமென்றே அவன் கையில் ஊற்றினாள்.
ஆ...
என அலறினான் குகன்.
2
அந்த பெரிய துணிக்கடை எதிரில் நின்றுகொண்டு ஆதிரையும், குகனும் வாய்ச்சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். சாலையின் இருபுறமும் மக்கள் கூட்டம் புற்றீசலாய் பறந்து கொண்டிருந்தது. அதை மீறி ஆதிரை பேசினாள்.
"இதோப் பாருண்ணே அடம்பிடிக்காமல் உனக்கும் ஒரு பேண்ட் சட்டை வாங்கிக்க. எனக்கு பட்டுச்சேலை வேண்டாம். நீ துணி எடுத்துக்காட்டி நான் அப்படியே திரும்பி