Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nayana Theetchai
Nayana Theetchai
Nayana Theetchai
Ebook73 pages52 minutes

Nayana Theetchai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

R.Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateJul 1, 2018
ISBN9781043466220
Nayana Theetchai

Read more from Geetharani

Related to Nayana Theetchai

Related ebooks

Reviews for Nayana Theetchai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nayana Theetchai - Geetharani

    8

    1

    அதிகாலை.

    ஆனந்தம் ஆரம்பமாகும் நேரம்.

    பெரும்பாலோர் இரவையும் உறவையுமே இன்பமென்று எண்ணியிருக்கின்றனர்.. அதனால் அவர்களுக்கு அதிகாலையின் அர்த்தம் புரியவில்லை. ஆனால் அதை அகமது அறிந்திருந்தான். எழுந்தான். கடனைக் கொடுக்காவிட்டால் அது தொல்லை கொடுத்துக் கொண்டேயிருக்கும். அது காலைக்கடன் என்றாலும் சரியே. முடித்தான். குளித்தான். தொழுதான். ஓதினான். சிறிது நேரம் தியானித்தான். விடிந்து விட்டது.

    சாவியை எடுத்துக் கொண்டு நடந்தான்.

    நிறைந்த மனதில் ஒரு ஞாபகம் மின்னியது.

    இரவு நடந்த சம்பவம் அவன் மனத்திரையில் தெரிந்தது. அவனுடைய மாமா மகள் நிஷா.

    அவன் எழுதிக் கொண்டிருந்த போது அவன் முன் வந்து நின்றாள்.

    அந்த அழகு தேவதை செவ்வாய் திறந்து சிரித்தது.

    அவ்வளவுதான் நடந்தது. யோசித்துப் பார்த்தான். உண்மை புரிந்தது. சம்பவம் நடந்தது கனவில் என்பது புரிந்தது. இந்தக் கனவு மட்டுமே ஆயிரம் தடவைக்கு மேல் வந்து விட்டது. கனவு இன்னும் நனவாகவில்லை. அதற்காகத்தான் அங்கு அவன் காத்திருந்தான்.

    கடை வந்து விட்டது.

    அது அவன் மாமாவின் மளிகைக் கடை.

    அகமதுதான் கடையைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். சற்றேறக் குறைய அந்தக் கடையில் அவன்தான் தொழிலாளியும் முதலாளியும்.

    தொழிலாளி என்றால் அதில் ஒரு சுயமரியாதை இருக்கிறது. முதலாளி என்றால் அதில் ஒரு தலைக்கனம் இருக்கிறது. வணிகமயமாகி விட்ட இந்த உலகத்தில் இவன் தொழிலாளியாகவும் இல்லாமல் முதலாளியாகவும் இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் வேலை பார்ப்பதில் நிறையத் தர்மசங்கடங்கள் உண்டு.

    அத்தனையையும் ஏற்றான் அவன். அவளுக்காக –

    அகமது வீட்டில் வறுமைதான் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதை விரட்டுவதற்காகத்தான் அவன் படிப்பைப் பாதியிலேயே விட்டு விட்டான். படிக்க வைக்க உதவாத அவன் மாமா வேலை கொடுத்து உதவினார். உடனுக்குடன் பணம் பார்க்கலாமே.

    அகமது –

    நம்பிக்கைக்குரியவன்; நாணயமானவன்; திறமைசாலி. பிரதிபலன் பாராமல் உழைப்பவன். உண்மை பேசுபவன். அதனால்தான் அவன் மாமா அவனைக் கடை நிர்வாகத்தைக் கவனிக்க வைத்தார்.

    கிட்டத்தட்ட அகமது நான்கு வருடமாய் அங்கு இருக்கிறான். விடுமுறை கிடையாது. எப்போதாவது வெள்ளிக் கிழமையில் அரை நாள் கடை அடைக்கப்படும். கடைக்கு அருகிலேயே ஒரு அறை உண்டு. அதில்தான் அகமது தங்கிக் கொள்வான். மூன்று வேளையும் உணவு கடைக்கே வந்துவிடும். சில நேரம் வீட்டிற்கே சென்று சாப்பிட வேண்டி வரும்.

    அந்த நிமிடங்களில்தான் அவன் மனம் நிம்மதியான நிம்மதியைப் பெறும்.

    அந்த நிமிடங்களுக்குத்தான் அவன் நன்றி செலுத்துவான்.

    அந்த நிமிடங்களுக்காகத்தான் அவன் அங்கேயே இருக்கிறான்.

    அந்த வீட்டில்தான் அவனுடைய காதல் தேவதை இருக்கிறாள்.

    அவள்தான் அவனுக்கு உணவு வைப்பாள். அது கூழ் என்றாலும் அமுதமாய்ப் பருகுவான்.

    ஏனெனில் பரிமாறுவது அவனுடைய மணிமேகலையாயிற்றே!

    இன்னொன்று –

    அவன் கருத்துப்படி அமுதம் என்பதே கூழ்தான்.

    அவன் ஒரு இயற்கை விரும்பி.

    செயற்கைக்கும் அவனுக்கும் சினேகிதமில்லை.

    அவன் நிஷாவைப் பல வருடங்களாக நேசித்துக் கொண்டிருக்கிறான்.

    அது அவளுக்குத் தெரியாது.

    ஏனென்றால், அவன் தன் காதலைத் தெரிவிக்கவில்லை. எப்படித் தெரிவிப்பதெனத் தெரியவில்லை. அவள் - அவனைக் காதலிக்கிறாளா இல்லையா என்பதும் அவனுக்குத் தெரியாது.

    எனினும் எப்படியும் எப்போதாவது காதலிப்பாள் என்றே நம்பிக்கை கொண்டிருந்தான். வேறு என்னதான் செய்வது? நம்புவதைத் தவிர - அன்பும் நம்பிக்கையும்தானே காதலின் முதலும் - முடிவும்.

    நிஷா -

    இப்போது பன்னிரண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கிறாள்.

    பார்த்தால் பார்ப்பவரின் கண்களைப் பறித்துவிடும் பேரழகு. படபடப் பேச்சு.

    இவளுக்கு எப்போதும் முன் புத்தி. அவ்வளவு அறிவு. படிப்பில், படு சுட்டி. விளையாட்டு, நடனம், கலைகளிலும் தேர்ச்சி. மென்மையான மனம். சிறு விஷயத்திற்கும் கண் கலங்கி விடுவாள். அதைப் பார்க்கும் போது

    Enjoying the preview?
    Page 1 of 1