Soodikodutha Sudarkodiye
By Geetharani
()
About this ebook
Read more from Geetharani
Thanthuvitten Ennai Rating: 4 out of 5 stars4/5Yenazhuthaai Enuyire Rating: 5 out of 5 stars5/5Thoorathu Nilavu Rating: 4 out of 5 stars4/5Vaa Ini Vasanthame Rating: 5 out of 5 stars5/5Kannaadi Thirai Rating: 4 out of 5 stars4/5Nenjamellaam Neeye Rating: 0 out of 5 stars0 ratingsPoomazhai Thoovi Rating: 0 out of 5 stars0 ratingsPoo Pookkum Osai Rating: 5 out of 5 stars5/5Nilave Thaalaattu Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Thottil Rating: 0 out of 5 stars0 ratingsAnbulla Mannavane Rating: 4 out of 5 stars4/5Palinginaal Oru Maaligai Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Thedi Vaa Rating: 0 out of 5 stars0 ratingsThaalaattum Poongaattru Naanallavaa Rating: 5 out of 5 stars5/5Vasantha Kaala Thendral Rating: 5 out of 5 stars5/5Magizhampoo Rating: 0 out of 5 stars0 ratingsMaragatha Ponveenai Rating: 0 out of 5 stars0 ratingsNayana Theetchai Rating: 0 out of 5 stars0 ratingsKodimalar Rating: 5 out of 5 stars5/5Maariyathu Yeno Maragatha Pathumaiye Rating: 0 out of 5 stars0 ratingsVenkakalap Paravai Rating: 0 out of 5 stars0 ratingsAnbulla Maanvizhiye Rating: 5 out of 5 stars5/5Nesam Marakkumo Nenjam Rating: 5 out of 5 stars5/5Siragai Thedum Sittu Kuruvi Rating: 5 out of 5 stars5/5Maamiyaar Veettu Seethanam Rating: 0 out of 5 stars0 ratingsSolai Malare Rating: 0 out of 5 stars0 ratingsThanneerile Thaamaraipoo Rating: 0 out of 5 stars0 ratings
Related to Soodikodutha Sudarkodiye
Related ebooks
Siragai Thedum Sittu Kuruvi Rating: 5 out of 5 stars5/5Nenjirkoru Vanchikkodi Rating: 5 out of 5 stars5/5Un Ninaive Pothumadi Rating: 0 out of 5 stars0 ratingsPoo Pookkum Osai Rating: 5 out of 5 stars5/5Theeyai Sudum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsMannithuvidu Maayaa Rating: 5 out of 5 stars5/5Thavamindri Kidaitha Varame Rating: 0 out of 5 stars0 ratingsUnnidathil Ennai Koduthean Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Pon Nilaavey! Rating: 5 out of 5 stars5/5Perazhagithaan Nee Rating: 5 out of 5 stars5/5Mazhai Kalathil Vanthaai Rating: 5 out of 5 stars5/5Poothu Kottiya Paadhai Rating: 0 out of 5 stars0 ratingsMagarantha Malargal Rating: 5 out of 5 stars5/5Sorgathiley Idhu Mudivaanathu Rating: 5 out of 5 stars5/5Vazhkai Varame Rating: 0 out of 5 stars0 ratingsVizhiye Kadhai Ezhuthu Rating: 0 out of 5 stars0 ratingsSembavala Kodi Neeye Rating: 0 out of 5 stars0 ratingsTholaintha Devathai Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Idam Maarumaa...? Rating: 0 out of 5 stars0 ratingsNenjamellaam Neeye Rating: 0 out of 5 stars0 ratingsVanavil Oviyame! Rating: 0 out of 5 stars0 ratingsMayanginean Solla Thayanginean Rating: 4 out of 5 stars4/5Engey Enathu Kavithai? Rating: 0 out of 5 stars0 ratingsVanam Vasapadum Thooram Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Mayakkiya Mellisaiye Rating: 0 out of 5 stars0 ratingsKadambavana Kaadhal Devathai! Rating: 0 out of 5 stars0 ratingsEllaik Kodukal Rating: 5 out of 5 stars5/5Thirumagal Thedi Vanthal Rating: 0 out of 5 stars0 ratingsNee Sooriyan, Naan Thamarai Rating: 5 out of 5 stars5/5Unakkenna Venum Sollu! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Soodikodutha Sudarkodiye
0 ratings0 reviews
Book preview
Soodikodutha Sudarkodiye - Geetharani
12
1
"ஒற்றை மலரினைக் கற்றைக் குழலினில்
ஓவியமாக வைத்தாய் - உன்
நெற்றிப் பரப்பின் ஒளியிடையே –
நெளிந்துலவும் குழலானதே மனம்!
பற்றற்ற துறவியாய்ப் பார்வையைச்
சுற்றிலும் சுழலவிட்டாய் - அடி
தொலைந்து போனதே... எந்தன்
இதயம்?!"
"மன்மத ராசா... மன்மத ராசா... கன்னி மனசைக் கிள்ளாதே... கண்ணுல... லேசா... கண்ணுல லேசா..."
சி.டி. பிளேயரின் இன்னிசை அந்தக் கூடத்தையே நிறைத்திருந்தது. பவித்ரா பாட்டின் அதிரடி மெட்டுக்கு ஏற்ப கையைக் காலை யசைத்தவாறு தன்னை மறந்த ஒரு குறுஞ்சிரிப்பு இதழ்க்கடையில் மிளிர ஒய்யாரப் பார்வை அலைகள் கண்களைக் கிளர்ச்சியூட்ட ஒரு ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தாள்.
ஏய்... பவித்ரா... வீடா... இது என்னன்னு நினைச்சுட்டே தெரு வாசல் தாண்டிக் கேட்கிறது சத்தம். கர்மம்... கர்மம்... பாட்டும், கூத்தும்...
அவளது அறைக்குள் நுழைந்த கமலி முதல் வேலையாக சி.டி. பிளேயரைச் சட்டென்று நிறுத்த, இசைக்குள் அமிழ்ந்த நிலையில் தன்னை மறந்து லயித்திருந்த பவித்ராவிற்கு இசை காணாது போன மாயம் எதிரே அக்காவின் வடிவெடுத்து நின்றிருக்க, கோபம் புசுபுசுவென்று மூக்கின் மேல் நின்றது.
அ... க்கா... டோண்ட் இண்டர்ஃபியர் இன் மை மேட்டர். உனக்குப் பிடிக்கலைன்னா காதைப் பொத்திக்கோ. அநியாயமா என் லவ்லி மூடை ஸ்பாயில் பண்ணிட்டியே... ச்சே... இசைன்னா வீசை என்ன விலைன்னு கேட்கற ஜடத்துக்கு இதெல்லாம் எங்கே தெரியப் போறது...
சொன்னவாறே பவித்ரா வேகமாய்ச் சென்று டேபிளின் மீதிருந்த சி.டி. பிளேயரை முன்னிலும் அதிகமான ஸ்தாயியில் ஒலிக்க வைத்து, அக்காவை மேலும் ஆத்திரப் பட வைத்து, அவளின் சிவந்த முகம் மேலும் ‘கண கண’ வென்று கோபத்தில் சிவந்து போக, சின்னச் சிரிப்பை உதிர்த்தவாறே இடையினை இசைக்கேற்ப வெட்டி... வெட்டி ஆடினாள்.
‘மன்மத... ரா... சா... மன்மத ரா... சா...’
கெட்டு ஒழி சனியனே... பொண்ணா லட்சணமா இருக்கத் தெரியாமல் கண்ட கண்ட கண்றாவிக் கூத்துக்கெல்லாம் கால நேரத்தை வேஸ்ட் பண்ணி... என் உயிரையும் எடுக்கறே... இரு... இரு...
என்றவள் விடு விடு என்று சென்று பவித்ராவின் பிராஜெக்ட் ஒர்க் நோட், வைவா வோஸ் தியரி நோட்ஸ் மொத்தத்தையும் தூக்கிப் ‘பொ... த்...’தென்று தரையில் விட்டெறிந்தாள்.
யூ... யூ... என்னோட பிராஜெக்ட் ஒர்க் நோட்ஸை எல்லாம் தரையிலே விட்டெறியறே...
சி.டி. பிளேயரை ஆஃப் செய்துவிட்டு ஆத்திரத்துடன் அக்காவின் முன் வந்து நின்றாள் பவித்ரா. ஆத்திரத்தில் பற்கள் நறநறத்தன.
ம்... நல்லா முப்பத்திரண்டு பல்லும் கொட்டறாப்பல ஆத்திரப்படு! அப்பத்தான் ரசனைன்னா என்னன்னு தெரியும். நோட்ஸ் எல்லாம் தரையிலே விட்டெறிஞ்ச சப்தம் கூட ‘ஒரு இன்னிசை கீதம்’ மாதிரி எடுத்துக்க வேண்டியதுதானே... அதுக்கும் சேர்ந்து நல்லா ஆடு... ரியலிஸ்டிக்கா இருக்கும்...
கமலி, பவித்ராவை நன்கு சூடேற்றினாள்.
ஹை... யோ... அம்மா... இந்தக் கமலிக் குரங்கை வந்து பாரேன்...
இயலாமையில் கிரீச்சென்று ஒலித்தது பவித்ராவின் குரல்.
மேலே மாடியறையில் இருந்த பிரகதாம்பாள் என்னவோ ஏதோ என்று படிகளை நாலாய், எட்டாய்க் கடந்து வேக வேகமாய்ப் பவித்ராவின் அறைக்குள் வந்து நிற்க, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிற்று, ஓரளவு பூசினாற் போன்றிருந்த சரீரம் - வயோதிகம் ஆன காரணத்தினால். மற்றப்படி, பிரகதாம்பாளும் இதோ... சண்டைக் கோழிகளாய்க் கடித்துக் கொண்டிருக்கும் கமலிக்கும், பவித்ராவுக்கும் மூத்தவள் போல்தான் தோற்றமளித்தாள் - இந்த நாற்பத்தேழு வயதிலும்.
நெகு நெகுவென்ற கோதுமை நிறம் சிறுவாணித் தண்ணீரின் மேன்மையில் மேலும் ஒரு விதத் தகதகப்பைத் தாங்கி, லேசாய் மஞ்சள் பூச்சு இழையோடும் முகமும், நேர் வகிடெடுத்துச் சீவின பின்னலும், நெற்றி வகிட்டில் துலங்கும் மங்களகரமான சுமங்கலி என அறிவிக்கும் குங்குமமும் எப்பொழுதும் மடிப்புக் கலையாத நீட்டான உடுப்பும் பிரகதாம்பாளை ஒரு கல்லூரிப் பேராசிரியரின் மிடுக்கில் திகழச் செய்தது என்றால் அது மிகையில்லை. கோபப்பட்டால் தண்டு மாரியம்மன் தோற்றுப்போவாள். அத்தனை கர்ண கடூரமாகி விடும் பிரகதாம்பாளின் முகம். ஆனால்... அத்தனை சீக்கிரத்தில் கோபமே வராது.
அடடா... உங்க ரெண்டு பேரோடயும் தினம் இதே அக்கப்போராப் போச்சி. பொம்பளைப் புள்ளைங்களா லட்சணமா இருக்கவே தெரியாதா...? ஏய்... கமலி! அந்த தொட்டாசிணுங்கியைப் பத்தித்தான் உனக்குத் தெரியும் இல்லே... அப்புறமும் அவ கூட ஏன் வம்புக்குப் போவே... நிம்மதியா கொஞ்ச நேரம் ரூம்ல ‘மெடிட்டேஷன்’ பண்ண விடறீங்களா ச்சே... எப்பப் பாரு சந்தைக் கடை மாதிரி கூச்சலும், கத்தலும். அதான் ஆளாளுக்கு ஒவ்வொரு ரூம்னு விஸ்தாரமா இஷ்டப்படி மகள்கள் இருக்கட்டும்னு கட்டிப் போட்டு வெச்சிருக்காரே... ரூம்ல தனித்தனியா இருக்க வேண்டியதுதானே! எதுக்குப் பவி... இப்போ சண்டை வந்தது...?
பாரும்மா... நான் டாடி லாஸ்ட் டைம் கல்கத்தா ட்ரிப் போயிட்டு வாங்கிட்டு வந்து எனக்கு பிரசண்ட் பண்ணின சி.டி. பிளேயரைப் போட்டுட்டு ஆடிட்டு இருந்தா... ஒரு சின்ன எக்ஸ்க்யூஸ் கூட கேட்காமல் என் ரூம்ல எண்ட்டராயி, மூடை ஸ்பாயில் பண்ணதுமில்லாமல் என்னோட பிராஜக்ட் வொர்க் நோட்ஸை எல்லாம் தூக்கி விட்டெறியறா... இசைன்னா இந்த மூஞ்சிக்கு என்னன்னு தெரியுமான்னு கேளுங்க...!
எட்டாங்கிளாஸ் சிறுமி ஹெட்மிஸ்ட்ரஸைப் பார்த்ததுமே ஒரு மாதிரி மூக்கால் அழுது குற்றப் பத்திரிகை வாசிக்குமே, அது போலிருந்தது பவித்ராவின் குரலும், சாடலும். கமலிக்குச் சிரிப்பு வந்தது. புறங்கையால் வாயைப் பொத்திக் கொண்டாள்.
செய்யறதையும் செஞ்சிட்டு சிரிக்கறதைப் பாரேன்... இரு... இரு... உன்னோட ட்ராயிங் சார்ட்ஸ் எல்லாம் என்ன பண்றேன்னு பாரு...
அடிக்குரலில் கறுவினாள் பவித்ரா.
ம்ஹ்... தலையெழுத்துடா சாமி! நீயெல்லாம் ஒரு என்ஜினீயரிங் ஸ்டூடண்ட். நச்... நச்சுன்னு நாலாங்கிளாஸ் குழந்தைப் பிள்ளைங்க மாதிரி நச்சரிப்பு. உங்கப்பா வரட்டும். முதல் வேலையா உன்னை ஹாஸ்டலுக்கு பேக் அப் பண்ணச் சொல்றேன்...
பிரகதாம்பாள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நந்தகோபாலின் கார் வாயிலில் வந்து நின்றது. அவர் வந்து விட்டதற்குரிய அறிவிப்பொலியாய் காரின் ஹாரன் விடாது ஒலித்துக் கொண்டிருந்தது.
ச்சே... இந்த வாட்ச்மேன் பொன்னுரங்கம் எங்கே போனாப்ல...
தனக்குத் தானே பேசினவாறே பிரகதாம்பாள் தானே வலியச் சென்று முன் கேட்டைத் திறந்து விட, கார் போர்டிகோவில் வந்து நின்றது.
என்ன பிரகதா... நீ வந்து கேட் திறக்கறே... வாட்ச்மேன் எங்கே போயிட்டான்... ம்...
நந்தகோபால் சூட்கேஸ் சகிதமாக வெளியே இறங்கினார்.
பேசிக் கொண்டிருக்கையிலேயே –
வாட்ச்மேன் விழுந்து வராத குறையாக மூச்சிரைக்க வெற்றிலைக் குதப்பலிலும், ஊடே அடிக்கடி திணிக்கும் புகையிலையின் சாரத்திலும் காவேறிப்போன பற்கள் தெரிய ஒருவிதப் புன்னகை சிந்தி, சின்னத் தலை சொறிதலுடன் வந்து நின்றான்.
ஐ... யா... இப்பத்தானுங்க... முனையிலெ இருக்கற டீக்கடைக்குப் போனனுங்க... தலைவலின்னு உடம்பு கொஞ்சம் கிறக்க... மா இருந்துச்சுங்க...
ம்... சரி... சரி... போய் கேட்டைச் சாத்திட்டு வேலையைப் பாருங்க...
என்றவர், மனைவியின் கையில் சூட்கேஸைக் கொடுத்துவிட்டு முன் நடந்தார்.
பிரகதாம்பாளின் பார்வை காருக்குள் ஊடுருவிற்று. இன்னும் ஏதேனும் அதில் கிடக்கிறதா என்று பார்வை தேடிற்று. பின் சீட்டில் குண்டு மல்லிகைப் பூ ஒன்று மலர்ந்து சிரிக்க, பார்வை சட்டென்று காரின் முன்புறம் வைத்திருக்கும் வெங்கடாஜலபதி பத்மாவதித் தாயாரின் திருவுருவப் படத்தின் மீது பதிந்தது. வழக்கமாகக் சூட்டப்படும் முல்லை, மல்லிகைப் பூப் பந்துச்சரம் லேசாய் வாடி நின்றாலும், அந்த மாலை