Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thirumagal Thedi Vanthal
Thirumagal Thedi Vanthal
Thirumagal Thedi Vanthal
Ebook48 pages25 minutes

Thirumagal Thedi Vanthal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தனக்கு நடக்கவிருந்த திருமண„ விபத்திலிருந்து…! தப்பிக்க நடுநிசியில் வெளியேறுகிறாள் கதையின் நாயகி ரோகிணி... இலக்கிலில்லாத ஒரு பறவையாய் பயணிக்கும் போது எதிர்பாராமல் பல உயிர்களைக் காப்பாற்ற நேர்கிறது... மீண்டும் அவள் பயணம் தொடர மேகம் விலகியதா? வாருங்கள் அவளோடு பயணிப்போம் நாமும்...

Languageதமிழ்
Release dateJan 8, 2021
ISBN6580151407924
Thirumagal Thedi Vanthal

Read more from Kavitha Eswaran

Related to Thirumagal Thedi Vanthal

Related ebooks

Reviews for Thirumagal Thedi Vanthal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thirumagal Thedi Vanthal - Kavitha Eswaran

    https://www.pustaka.co.in

    திருமகள் தேடி வந்தாள்

    Thirumagal Thedi Vanthal

    Author:

    கவிதா ஈஸ்வரன்

    Kavitha Eswaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavitha-eswaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    1

    ஓட்டமும் நடையுமாய், திரும்பித் திரும்பி பார்த்தபடி இருட்டில் நடந்து கொண்டு இருந்தது அந்தப் பெண் உருவம்...

    எப்படியோ ஒரு வழியாய் அந்தப் பேருந்தைப் பிடித்து விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவளுள் வியாபித்து நின்றதால், கிட்டத்தட்ட ஓடிக் கொண்டிருந்தாள்.

    யார் கண்ணிலாவது பட்டுவிட்டால்...? வேறு வினையே வேண்டாம்... மனம் பதைபதைத்தது... மணி கிட்டத்தட்ட இரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது.

    பாவம்...! விடிந்ததும் அக்காவும், அம்மாவும் தன்னைக் காணாமல் தவித்து விடுவார்கள் என்று நினைத்தபோது கண்களில் கண்ணீர் திரண்டது.

    வேறு வழி எனக்குத் தெரியலம்மா... என்னை மன்னித்து விடுங்கள்... என்று மானசீகமாய் மன்னிப்பு கோரிக் கொண்டாள். படபடத்த மனதுடன் வந்து நின்ற பேருந்தில் ஏறியமர்ந்தாள்.

    ஆனாலும் மனதின் படபடப்பு அடங்கியபாடில்லை. அயர்ச்சியாய் பேருந்தின் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள். பேருந்து ஈரோட்டில் இருந்து சென்னை செல்லும் பேருந்து... கால் போன இசையில் வந்த அவளுக்கு எந்தப் பேருந்து என்று பார்க்கக் கூட அவகாசம் இல்லை.

    பேருந்தின் முன்பக்கம் அமர்ந்திருந்ததால் ஓட்டுனர் நிறுத்தம் வந்தால், தன் ஒரு காலால் ரேக்கை மிதிப்பதும் மீண்டும் வேகம் எடுத்தால், அந்தக் காலை எடுப்பதுமாய் இருந்தது வேடிக்கையாய்த் தோன்றவே, அதையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள் ரோகிணி... ஓரிரு நிமிடம்தான்... மீண்டும் தன் பயணம் பற்றிய கவலை வந்து ஒட்டிக்கொண்டது.

    உடனடியாய் இந்த ஈரோட்டைவிட்டு போய்! விட வேண்டும்... இப்போதைக்கு தேவை அதுதான்... ஆனால் அதற்குப்பிறகு...?! நினைத்தாலே எதிர்காலம் பூதாகரமாய் அவளை பயமுறுத்தியது... எங்கே

    Enjoying the preview?
    Page 1 of 1