Ennamo Edho
4/5
()
About this ebook
Read more from P. Muthulakshmi
Uthattil Kasiyum Sivappu Rating: 4 out of 5 stars4/5Ottran Rating: 5 out of 5 stars5/5
Related to Ennamo Edho
Related ebooks
Anbin Vaasaliley... Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Tharumo En Megam? Rating: 0 out of 5 stars0 ratingsNijamai Sila Nimidangal! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vaithu Kaathirunthean! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalagi Kasindhu Kanneer Malgi Rating: 5 out of 5 stars5/5Inba Naalum Indru Thaane! Rating: 0 out of 5 stars0 ratingsNiram Maarum Nilavey Rating: 4 out of 5 stars4/5Antha Vanam Enthan Vasam Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Thedum Ennuiyre...! Rating: 4 out of 5 stars4/5Anbil Thilaitha Uravu… Rating: 4 out of 5 stars4/5Unakkenna Venum Sollu! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkaakavaa Naan Rating: 5 out of 5 stars5/5Thirumagal Thedi Vanthal Rating: 0 out of 5 stars0 ratingsNee En Sanrothayam Rating: 0 out of 5 stars0 ratingsKetkkum Varam Kidaikkum Varai Rating: 0 out of 5 stars0 ratingsNilavai Thedum Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsManamagale Marumagale Vaaa Rating: 0 out of 5 stars0 ratingsMarakkumo Kaadhal Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Vellai Kaadhalan Rating: 0 out of 5 stars0 ratingsMalare Mayangaathe Rating: 0 out of 5 stars0 ratingsEnathu Kavithai Neethan... Rating: 0 out of 5 stars0 ratingsAmuthai Pozhiyum Nilavey! Rating: 0 out of 5 stars0 ratingsSiragai Thedum Sittu Kuruvi Rating: 5 out of 5 stars5/5Tholai Thoorathu Pasam Rating: 0 out of 5 stars0 ratingsEnnil Neeyadi!... Unnil Naanadi! Rating: 0 out of 5 stars0 ratingsEzhiloviyam Rating: 0 out of 5 stars0 ratingsNandhanin Anuragam..! Rating: 4 out of 5 stars4/5Sollamale Naan Ketkirean Rating: 5 out of 5 stars5/5Nenjodu Than Poo Poothathu Rating: 0 out of 5 stars0 ratingsKallil Vaditha Kavithai Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Ennamo Edho
8 ratings0 reviews
Book preview
Ennamo Edho - P. Muthulakshmi
http://www.pustaka.co.in
என்னமோ ஏதோ
Ennamo Edho
Author:
பி. முத்துலட்சுமி
P. Muthulakshmi
For more books
http://www.pustaka.co.in/home/author/p-muthulakshmi-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
என்னமோ ஏதோ
1
'மீட்டர் எவ்ளோ ஆச்சுய்யா?’
’நூத்தி எம்பது ரூபாய் சார்’ என்றார் ஓட்டுநர்.எர்நூறு ரூபாயாக் கொடுங்க சார்!’
இதுவே ஜாஸ்தி’ என்றபடி சரியாகச் சில்லறையை எண்ணிக் கொடுத்தான் அர்விந்த்.மீட்டருக்கு மேல கேட்கற கெட்ட பழக்கம் ஆட்டோ டிரைவர்ங்ககிட்டேயிருந்து இப்ப உங்களையும் தொத்திக்கிச்சா? கம்ப்யூட்டர் பில்லெல்லாம் வெச்சு என்ன புண்ணியம்? மனுஷன் புத்தி இப்படி இருக்கு!’
அண்ணா, டாக்ஸி ட்ரைவரோடயும் சண்டையா?’ என்று சலித்துக்கொண்டாள் மித்ரா,சீக்கிரமா பணத்தைக் கொடுத்துட்டு வா!’
‘ஆச்சும்மா’ என்று பர்ஸைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான் அர்விந்த். பெட்டியை எடுத்துக்கொண்டு,எந்த ஃப்ளோர்?’ என்றான்.
‘முதல்ல ரெஜிஸ்டர் பண்ணனும், பணம் கட்டணும்!’ என்றபடி இன்னொரு பையை எடுத்துக்கொண்டாள் மித்ரா. இருவரும் உள்ளே நடந்தார்கள்.
அலுவலக அறையில் நடுத்தர வயதுப் பெண் ஒருவர்மட்டும் அமர்ந்திருந்தார். செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்தர் இவர்களைப் பார்த்ததும் தலை நிமிர்ந்து,யெஸ்?’ என்றார்.
‘மேடம், என் பேர் மித்ரா!’
சட்டென்று அவர் முகம் மலர்ந்தது.அடடே, வாம்மா’ என்று எழுந்துகொண்டார்.பையை, பெட்டியை ஓரமா வெச்சுடு’ என்றவர் அர்விந்தைப் பார்த்து,உங்க ப்ரதரா?’ என்றார்.
‘ஆமா மேடம்!’
‘உட்காருங்க சார்! நீயும் உக்காரும்மா!’
இருவரும் நாற்காலிகளில் அமர்ந்தார்கள். மேஜைமேலிருந்த நோட்டுப் புத்தகத்தைப் பிரித்து,உன்னோட ரூம் நம்பர் 203’ என்றார் அவர்.
தேங்க்ஸ் மேடம், சாவி?’
அதெல்லாம் அவசியமில்லை, எல்லா ரூமும் எப்பவும் திறந்துதான் இருக்கும்.’
அர்விந்த் திகைப்புடன்,என்னங்க இப்படிச் சொல்றீங்க?’ என்றான்.பூட்டு, சாவி எதுவும் கிடையாதா?’
’அதெல்லாம் உண்டு. அவசியப்படாதுன்னு சொல்லவந்தேன்’ என்று சிரித்தார் அவர்.இங்கே செக்யூரிட்டி ரொம்ப ஸ்ட்ராங். கேர்ள்ஸ்ல்லாம் ஆஃபீஸ் போகும்போது ரூமைப் பூட்டவேண்டிய தேவையே இருக்காது!’
அக்கம்பக்கத்துல எல்லாம் நல்ல ஏரியாதானே மேடம்?’
நீங்களே ஒரு ரவுண்ட் பார்த்துட்டு வாங்க, எல்லாம் டீசன்ட் ஃபேமிலீஸ் இருக்கற ஏரியாதான். அதனாலதான் இங்கே பார்த்து ஹாஸ்டல் ஆரம்பிச்சிருக்கோம். இத்தனை வருஷத்துல ஒரு பிரச்னை வந்ததில்லை!’ என்றபடி பில் புத்தகம் ஒன்றை அவரிடம் நீட்டினார்.அமவுன்ட் எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கோங்க!’ என்றவர் மித்ராவிடம்,நீ எங்கே வேலை பார்க்கறேன்னு சொன்னே?’
’டிசிஎஸ்!’
’உங்க கம்பெனிக்காரங்க இங்கே ஏகப்பட்ட பேர் இருக்காங்க, கம்பெனி பஸ்தானே?’
ஆமா மேடம்!’
தினமும் அவங்களோடயே நீ கிளம்பிப் போகலாம்’ என்றபடி அர்விந்த் நீட்டிய பணத்தைப் பெற்றுக்கொண்டார்.காலையில ஆறரை மணியிலேர்ந்து ப்ரேக்ஃபாஸ்ட் கிடைக்கும். காஃபி சாப்டுட்டு, டிஃபன் சாப்பிட்டுட்டு பஸ்ஸைப் பிடிக்கறதுக்கு உனக்கு சரியா இருக்கும்’ என்றார் மித்ராவிடம்.
தேங்க்ஸ் மேடம்’ என்றபடி பையை எடுத்துக்கொண்டாள்,என்னோட ரூம் மேட் யாருன்னு...’
சுகுணான்னு பேரு, அவளும் உன்னைமாதிரிதான், ஏதோ ஒரு சாஃப்ட்வேர் கம்பெனில வேலை பார்க்கறா. ரொம்ப நல்ல பொண்ணு! யு வில் லைக் ஹெர்!’
அர்விந்த் எழுந்து நின்று,ஜாக்கிரதையாப் பார்த்துக்கோங்க மேடம்’ என்றான் சம்பிரதாயமாக.
உங்க சிஸ்டர்பத்தி உங்களுக்கு எந்தக் கவலையும் வேணாம் சார், நாங்க கவனமாப் பார்த்துக்குவோம்!’ என்றார் அவர்.நீங்க எந்த ஊர்?’
பக்கத்துலதான்’ என்றான் அர்விந்த்.அப்போ, நான் இதை ரூம்ல வெச்சுட்டுப் புறப்படறேன்!’
சாரி சார், எக்காரணத்துக்காகவும் ஜென்ட்ஸ் ரூம்ல அலவ் பண்ணமாட்டோம்’ என்று சிரித்தார் அவர்.நான் பெட்டிகளை மேலே அனுப்பறேன், நீங்க உங்க தங்கச்சிகிட்ட சொல்லிட்டுக் கிளம்பலாம்!’
நன்றி மேடம்’ என்ற அர்விந்த் மித்ராவைப் பார்த்தான்,எதாவது வேணுமா மித்ரா?’
இல்லைண்ணா, நீ கிளம்பு, இப்போ புறப்பட்டாதான் நேரத்துக்கு வீட்டுக்குப் போகமுடியும்’ என்றாள் மித்ரா.அப்பா, அம்மாகிட்ட நான் ஜாக்கிரதையா இருக்கேன்னு சொல்லு, கவலைப்படவேணாம்ன்னு சொல்லு!’
இப்பதான் முதல்வாட்டி ஹாஸ்டல்ல தங்கறீங்களா?’
இல்லை மேடம், ஆனாலும் இதெல்லாம் சொன்னாதான் அவங்களுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்!’
ஐ நோ’ என்று சிரித்தார் அவர்.நீ உன் ரூம்க்குப் போய்ப் பாரு, இதெல்லாம் அப்புறமா அனுப்பிவைக்கறேன்.’
அர்விந்த் மீண்டும் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினான்.பழைய ஹாஸ்டலைவிட இது கொஞ்சம்