Thirumbi Vaa Thendrale
By R.Sumathi
()
About this ebook
Read more from R.Sumathi
Maaya Thottrangal Rating: 0 out of 5 stars0 ratingsKathal Suvadukal Rating: 0 out of 5 stars0 ratingsEppadi Solvenadi Rating: 4 out of 5 stars4/5Kadhal Kalamadi Kanne Rating: 5 out of 5 stars5/5Uravillai Pirivillai Rating: 0 out of 5 stars0 ratingsMalare Mayangaathe Rating: 0 out of 5 stars0 ratingsSinnakkili Rating: 4 out of 5 stars4/5Theeyai Sudum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsKunguma Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsPuthiraaga Oru Poo Rating: 5 out of 5 stars5/5Inimai Ninaiuvgal Thodarattume Rating: 4 out of 5 stars4/5Kannoram Minsaaram Rating: 0 out of 5 stars0 ratingsYenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsOreedam Nee Tharuvaai Rating: 4 out of 5 stars4/5Paasa Malargal Rating: 0 out of 5 stars0 ratingsPovomaa Ponnulagam Rating: 5 out of 5 stars5/5Thendrale Ennai Thodu Rating: 5 out of 5 stars5/5Manoratham Rating: 4 out of 5 stars4/5Mayakkathirkuriya Manthirame Rating: 5 out of 5 stars5/5Paarvaikal Puthithaa Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Ilamaane Rating: 0 out of 5 stars0 ratingsNiram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsKaanalai Thedum Kaveri Rating: 0 out of 5 stars0 ratingsKetkkum Varam Kidaikkum Varai Rating: 0 out of 5 stars0 ratingsUruguthe Manam Rating: 0 out of 5 stars0 ratingsEn Malar Madiyile Rating: 4 out of 5 stars4/5Unakke Uyiraanen Rating: 0 out of 5 stars0 ratingsKarpoora Jothi Rating: 0 out of 5 stars0 ratingsUn Arugil Un Nizhalil Rating: 4 out of 5 stars4/5Naan Pesa Ninaippathellaam Rating: 5 out of 5 stars5/5
Related to Thirumbi Vaa Thendrale
Related ebooks
Tamilnadu Express Rating: 0 out of 5 stars0 ratingsVaa Ini Vasanthame Rating: 5 out of 5 stars5/5Inaiyumo Iruthayam? Rating: 0 out of 5 stars0 ratingsMalare Ennai Nerunkaathe Rating: 4 out of 5 stars4/5Nallathor Veenai Seithe...! - Part 1 Rating: 5 out of 5 stars5/5Ketkkum Varam Kidaikkum Varai Rating: 0 out of 5 stars0 ratingsSamsaarap Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsIththanai Naalai Engirunthaai Rating: 4 out of 5 stars4/5Unakkenna Venum Sollu! Rating: 0 out of 5 stars0 ratingsAval Varuvaalaa Rating: 5 out of 5 stars5/5Ellaik Kodukal Rating: 5 out of 5 stars5/5Anbil Vantha Kaaviyam Rating: 5 out of 5 stars5/5Magarantha Malargal Rating: 5 out of 5 stars5/5Vilagatha Nilai Vendum... Rating: 0 out of 5 stars0 ratingsVasantha Kaala Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsVanavil Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsNesam Niram Maarumo Rating: 0 out of 5 stars0 ratingsNandhanin Anuragam..! Rating: 4 out of 5 stars4/5Malai Soodiya Velai... Rating: 3 out of 5 stars3/5Uyir Urugum Osai Rating: 0 out of 5 stars0 ratingsRaadhaiyai..., Kothaiyai... Seethayai... Rating: 0 out of 5 stars0 ratingsNilavil Mugam Kaattu Rating: 5 out of 5 stars5/5Vaanathaipola Kaadhal! Rating: 0 out of 5 stars0 ratingsMaavilai Thorangal Rating: 5 out of 5 stars5/5Naan Ezhuthanaal... Nee Vaarthaiyaavai... Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum Veralla...! Rating: 4 out of 5 stars4/5Thirumagal Thedi Vanthal Rating: 0 out of 5 stars0 ratingsAntha Vanam Enthan Vasam Rating: 0 out of 5 stars0 ratingsThenaruvi Nathiyagi! Rating: 0 out of 5 stars0 ratingsVeppamarathu Pookkal Rating: 5 out of 5 stars5/5
Reviews for Thirumbi Vaa Thendrale
0 ratings0 reviews
Book preview
Thirumbi Vaa Thendrale - R.Sumathi
18
1
கணவனிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வரும் பெண், அந்த கணமே அவனுடைய அன்பை உணர்ந்து மீண்டும் திரும்பி ஓடுவதைப் போலவே அலைகள் கரையைத் தொட்டுப் பார்த்த படி கடலுக்கே சென்றன.
அலைகளைப் பார்க்கும்பொழுது தனக்குள் தோன்றும் கற்பனையை நினைத்துச் சிரித்தான், வசந்த்.
மோகனாவிடம் இந்த உவமையைக் கூறினால், "அடடா நீங்க மட்டும் கவிதை எழுதத் தொடங்கினா பெரிய ஆளா வரலாம்!’ எனக் கிண்டல் செய்திருப்பாள். சிரித்திருப்பாள்
அவள் வந்ததும் மறக்காமல் சொல்ல வேண்டும்! ‘சீக்கிரம் வந்துவிடு.. வந்துவிடு!’ என என்னிடம் சொல்லிவிட்டு இன்னும் வரவில்லை. நான் எப்போதாவது தாமதமா வந்தால் எப்படித் திட்டுகிறாள்... வரட்டும்!
வசந்த்!
முப்பதைத் தொடும் வயது. வசீகரத் தோற்றம். ஆண்மைக்கே உரிய கம்பீர அழகு. சொந்தமாக வியாபாரம்.
நெருங்கிய நண்பனொருவனின் தங்கையின் சிநேகியாக அறிமுகமாகி, அதுவே நட்பாக வளர்ந்து காதலில் முடிந்து விட்டது.
இப்போதெல்லாம் ஒரு நாள் பார்க்கா விட்டாலும் கண்களில் ஏக்கமும், மனதில் தவிப்பும் தகிக்கச் செய்கின்றன.
அதோ... அந்த அலைகளைப் போலவே சிரிப்பு பொங்கும் முகம், அவளுக்கு. அதே துள்ளல். அதே உற்சாகம். அதே அழகு. தனியே பிரிந்த அலை ஒன்று தாவி வருவதைப் போல் எதிரே வந்து கொண்டிருந்தாள், மோகனா.
பறக்கும் கூந்தலை வாரி முன் பக்கம் போட்டவாறே, துப்பட்டாவை நெஞ்சுவரை இழுத்துவிட்டுக் கொண்டு வரும் அவளைப் பார்த்ததுமே வசந்தின் முகம் மலர்ந்தது.
‘‘ரொம்ப நேரமா காத்திருக்கிங்களா, வசந்த்?’’ என அருகே வந்தாள், மோகனா.
"ஆமா! நான் தாமதமாக வந்தா மட்டும் அப்படியே கோபம் பொத்துக்கிட்டு வரும், உனக்கு! ஆனா.. நீ மட்டும் வேணுமின்னே என்னைக் காக்க வைப்பே...’’ லேசாகக் கோபப்பட்டான்.
‘‘சாரிடா கண்ணா! இந்தக் கோபம் எதுக்குன்னு எனக்குத் தெரியும்!’’ என்று அவனுடைய வலக்கையைப் பற்றிச் சட்டென்று தன் உதட்டில் வைத்து ‘ப்ப்’ என முத்தமிட்டாள்.
அவளுடைய கையை எடுத்துத் தன் நெஞ்சில் வைத்துக் கொண்ட வசந்த், அழகிய மையிட்ட காந்த விழிகளைத் தன் பார்வையில் ஊடுருவியவாறே, "நீ இப்படி வந்ததும் வராததுமா முத்தம் தர்றதா இருந்தா நான் விடியற்காலையிலயே வந்து உனக்காகக் கடற்கரையில் உட்கார்ந்திருக்கத் தயாரா இருக்கேன்!’’ என்றான்.
மோகனா தனக்கே உரிய மோகனப் புன்னகையில் அவனை இன்னும் ஈர்த்தாள்.
"விடியற் காலையிலேயே வந்து உட்கார்ந்திருந்தா நாம கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு இதே கடற்கரையில் பிச்சைதான் எடுக்கணும். உங்க தொழில் படுத்துடும்.’’
‘‘தொழில் படுத்தா என்ன? அதான் அதிருஷ்ட லெட்சுமியே என் மடியில் வலியவந்து விழுந்துவிட்டாளே - என்றவன், "பொன்மகள் வந்தாள்... பொருள் கோடி தந்தாள்னு பாட்டுப் பாடிக்கிட்டு, பணக்கார மாமனார் வீட்டுக்கு குடியேறிவிடுவேன்!’’ என்றான்.
"ஆகா... ஆசை ஆசை! பத்துக் காசுகூடக் கொண்டு வர மாட்டேன்!’’ செல்லமாக அவனது மூக்கைத் திருகினாள்.
இருவரும் ஆனந்தமாகக் கைகளைப் பற்றிக் கொண்டு கரையோர அலைகளில் நடந்தனர். காற்றில் பறந்து, முகத்தில் படர்ந்து மணம் பரப்பிய அவளது கூந்தலை ரசித்து விலக்கி வசந்த், அவளை இடையில் கைகொடுத்துத் தன்னுடன் இழுத்து கொண்டான்.
ஆசையுடன் அவன் தோளில் சாய்ந்து கொண்டபடியே நடந்த மோகனா, ‘வசந்த்! இந்த அலைகளைப் பாருங்களேன்... மனசுல நாம சோம்பேறித்தனமோ தளர்ச்சியோ அடைய கூடாதுன்னு உணர்த்துறதுக்காக இயற்கையா பார்த்து படைத்த அற்புதம் மாதிரி இல்லே?
என்றாள்.
அவள் அலைகளைப் பற்றிப் பேசியதும் அவளுக்காகக் காத்திருந்த போது தோன்றிய கற்பனை அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தது.
மோகனா! இந்த அலைகளைப் பார்க்கும்போது எனக்கு எப்படித் தோணுது தெரியுமா?
"ம்... சொல்லுங்க...’’
புருஷன்கிட்ட கோபிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்கும் போற பெண் உடனே கோபம் தணிந்து மறுபடி புருஷன் வீட்டுக்கே ஓடி வர்ற மாதிரி இருக்கு.
இதைக் கேட்ட மோகனா, கலகலவெனச் சிரித்தாள்.
‘‘எந்தக் காலத்துல இருக்கீங்க, வசந்த்? இப்பவெல்லாம் பொண்ணுங்க கோபிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்குப் போறதில்லை. நேரா கோர்ட்டுக்குப் போயிடுறாங்க.’’
"நீ சொல்றது சரிதான். இப்பவெல்லாம் சின்னச் சின்ன விசயத்துக்கெல்லாம் புருஷன் பொண்டாட்டி சண்டை போட்டுக்கிட்டுப் பிரிஞ்சிடுறாங்க. மோகனா...’’
‘‘ம்...’’
கல்யாணத்துக்குப் பிறகு நீயும் என்கிட்டே சண்டை போட்டுக்கிட்டு அம்மா வீட்டுக்குப் போவியா?
எப்படி அம்மா வீட்டுக்குப் போக முடியும்? நீங்கதான் வீட்டோட மாப்பிள்ளையாகப் போறீங்களே. அப்புறம் எப்படி நான் அம்மா வீட்டுக்குப் போறது? வேணும்னா மாமியார் வீட்டுக்குத்தான் போகணும்.
ஏய்... சும்மா நான் ஒரு விளையாட்டுக்குச் சொன்னா, உண்மையிலேயே மாமனார் வீட்டோட மாப்பிள்ளை ஆகிடுவேன்னு நினைக்கிறியா?
‘‘சொன்னாலும் சொல்லாட்டாலும் நீங்க வீட்டோட மாப்பிள்ளையாகத்தான் இருந்தாகணும். நான் எங்க அப்பா - அம்மாவுக்கு ஒரே பெண். அவங்களைக் கடைசி காலம் வரை கவனிக்க வேண்டியது என் பொறுப்புதானே!’’
‘‘கல்யாணமாகி உன் வீட்டோடு நான் தங்குறதெல்லாம் இருக்கட்டும். முதல்ல உங்க அப்பா நம்ம காதலை ஏத்துப்பாரான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு. நீ என்னடான்னா வீட்டோட மாப்பிள்ளை அது இதுன்னுகிட்டு...’’
அதைக் கேட்டதும் குனிந்து அலைநீரைக் கைகளில் அள்ளி அவன் மீது கொட்டிச் சிரித்தாள், மோகனா.
எங்க அப்பாவுக்கு நான் செல்லப் பெண். என்னோட ஆசைக்குக் கண்டிப்பா குறுக்கே நிற்க மாட்டார். எனக்கு உங்க அம்மா, அப்பாவை நினைச்சுதான் ரொம்ப கவலையா இருக்கு. கிராமத்து மனுசங்க. நம்ம காதலை ஏத்துப்பாங்களோ என்னவோ? ஆமா... இப்படியே தினம் தினம் சந்திப்பதும் பேசுவதும், பிரிவதுமா இருந்தா எப்படி? நீங்க உங்க அம்மா - அப்பாகிட்டே எப்போ நம்ம காதலைப்பத்தி பேசப் போறீங்க?
அவள் இந்தக் கேள்வியைக் கேட்டதும் சட்டென்று அப்படியே நின்று விட்டான், வசந்த்.
ஏதோ யோசனை வசப்பட்டவனாக அவன் முகம் மாறியது.
"என்ன... நின்னுட்டிங்க?’’
"ஒண்ணுமில்லை...’’ என நடந்தான்.
‘‘இல்லை... எப்ப இந்தக் கேள்வியைக் கேட்டாலும் உடனே முகம் மாறிடுறீங்க? பதிலே பேச மாட்டேங்கிறீங்க! ஏன்?"
"ஒண்ணுமில்லை...’’ என்ற போது அவனுடைய குரலும் மாறியதைப் போலிருந்தது.
‘‘ஒண்ணுமில்லையா? இல்லை, இருக்கு. ஏதோ இருக்கு."
"என்ன இருக்கு?’’
"பயம் இருக்கு! உங்க மனசுல பயம் இருக்கு. அம்மா அப்பாவை நினைச்சுப் பயம் இருக்கு. நான் நினைக்கிறேன் உங்க அப்பா இந்த சினிமாவிலெல்லாம் வர்ற மாதிரி, கிராமமே கையெடுத்துக் கும்பிடுற மாதிரி எட்டுப் பட்டிக்கும் நாட்டாண்மையா இருப்பாரோ! அதான்... பயப்படுறீங்களோ...?’’
மோகனாவின் குறும்புப் பேச்சு அவனுடைய முகத்தில் சிரிப்பை வரவழைக்கவில்லை.
"உங்களுக்குப்