Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sudum Nilavu
Sudum Nilavu
Sudum Nilavu
Ebook89 pages33 minutes

Sudum Nilavu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114203183
Sudum Nilavu

Read more from Hamsa Dhanagopal

Related to Sudum Nilavu

Related ebooks

Reviews for Sudum Nilavu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sudum Nilavu - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    சுடும் நிலவு

    Sudum Nilavu

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    ஷாலினி தோட்டத்தில் சைக்கிள் விட்டுக் கொண்டிருந்தாள். மாலை நேர வனதேவதையின் வனப்பு மேனியில். சாயம் பூசப்படாமலே கன்னங்கள் சிவந்து, இதழ்கள் சிவந்திருந்தன. ஒருமுறைக்கு நான்கைந்து முறை பார்க்கத் தூண்டும் அழகுப் பெட்டகம்.

    மாலை வெயிலில் சைக்கிளிங் செய்ததால் முகத்தாமரையில் பனித்துளிகளாய் வியர்வை. அடிக்கடி யாராவது அழைக்கிறார்களா என உள்ளே போயிற்று அவள் பார்வை. வெளியே தோட்டக்காரன் நிலத்தைக் கொத்தி ரோஜா பதியன்கள் நட்டுக் கொண்டிருந்தான். உள்ளே எந்த அரவமும் கேட்கவில்லை.

    அவள் தாயும், தந்தையும் உள்ளே இவள் எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அது இவளுக்குத் தெரியும். என்னச் சொல்லப் போகிறார்கள் என்கிற எதிர் பார்ப்பு. வயது இருபத்திரண்டு ஆகிக் கொண்டிருந்தது. அவர்கள் இனத்தில் ஆண் பிள்ளைகளுக்குக் கூட இந்த வயதில் திருமணம் நடந்துவிட்டிருக்கும். ஆனால் இவள்தான் அதைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வருகிறாள். இனியும் முடியாது. தந்தை அடிக்கடி நோய் என்று படுக்கிறார். தாயால் எதுவும் முடியவில்லை. வியாபாரம் பார்ப்பாளா? கணவனைப் பார்ப்பாளா? இல்லை மகளைத்தான் பார்ப்பாளா? வயோதிகம் அவர்களை விரட்டிக் கொண்டிருந்தது.

    அவள் தந்தை லால்சந்த் அப்படியொன்றும் பணக்காரர் இல்லை. வெறும் கோடிகளில் புரள்பவர்தான். அவர் தந்தை வைத்துப் போன 3 லட்சங்களை வெறும் கோடிகளாக மட்டுமே அவரால் விருத்தி செய்ய முடிந்தது. அவர்களின் ஒரே குறையாய் இருந்தது, மழலைக் குரல் தங்கள் இல்லத்தில் ஒலிக்காததுதான். போகாத கோயிலும் பார்க்காத மருத்துவரும் கிடையாது என்கிற நிலை.

    யாரோ சொன்னார்கள் என்று சிம்லாவில் போய் மூன்று மாதம் தங்கியிருந்தார்கள். அப்போது லால்சந்திற்கு வயது நாற்பதைத் தொட்டுக் கொண்டிருந்தது. தனது முப்பத்தெட்டாவது வயதில் சோனாபாய் தாய்மைப் பேற்றைக் கண்டாள்.

    ஷாலினி காலில் புல் இடித்தால்கூட பதறிப் போனார்கள் பெற்றோர். அவள் சொற்கள்தான் அந்த வீட்டின் கட்டளைகள். அதை எதிர்ப்பவர்களோ, மாற்றுபவர்களோ யாரும் கிடையாது. ஷாலினிக்குப் பிறகு ஒரு ஆண் மகவு பிறந்து, பிறந்த வேகத்தில் போய்ச் சேர்ந்து விட்டது. அதனாலேயே இவள் மீது உயிரையே வருஷித்தார்கள். தங்கள் பெண் போகும் இடத்தில் கண்ணைக் கசக்கிடுவாளோ என்கிற பயத்திலேயே திருமணத்தைகூட தள்ளிப் போட்டு உற்றார், உறவினர்களிடம் அதிருப்தி கண்டார்கள்.

    இந்த நிலையில் மிகப்பெரிய பணக்காரர்களான வியாஸ் குடும்ப சம்பந்தம் வந்து சேர்ந்தது. இரண்டு பையன்கள். முதல் பையனுக்குத் திருமணமாகி விட்டது. இளைய மகனுக்கு ஷாலினியைக் கேட்டிருந்தார்கள்.

    பல வைபவங்களில் சுரேந்திரனை அவள் பார்த்திருக்கிறாள். மீசை மழிக்கப்பட்ட பால் பவுடர் டப்பா குழந்தை போல... இவளுக்கு விருப்பமோ வெறுப்போ எதுவும் கிடையாது. தந்தை என்ன சொல்கிறாரோ அப்படி நடக்க வேண்டியதுதான்.

    சின்னம்மா, ரொம்ப களைச்சிட்டீங்க. சைக்கிள் விட்டது போதாதுங்களா.

    தோட்டக்கார கிழவன் மிக பவ்யமாய் கேட்டான். ஷாலினி சிரித்தாள். அவள் சிரிப்பிற்கு விலையாய் வானத்தையே விலை பேசிவிடலாம் போல இருந்தது.

    நேரம் இன்னும் ஏழுகூட ஆகலையே சின்னய்யா.

    அப்பாரு நாலைஞ்சு தபா சன்னல் வழியா என்னைப் பார்த்துட்டாரு சின்னம்மா... போதும் வீட்டுக்குள்ளே போங்க.

    ஷாலினி குதித்தபடி சைக்கிளிலிருந்து இறங்கிக்கொள்ள சின்னய்யா சைக்கிளைப் பக்குவமாய் விழாமல் பிடித்துக் கொண்டான். அவள் குதித்தபடி உள்ளே ஓடினாள். சத்தமில்லாமல் தேக்குக் கதவு அவளை உள்வாங்கிக் கொண்டது.

    சின்னய்யா சிரிப்புடன் சைக்கிளைத் தள்ளிப் போய் கார் ஷெட்டில் நிறுத்தினான்.

    சோபாவில் அமர்ந்து டீபாயின் மீது ஊன்றி பார்த்துக் கொண்டிருந்த லால்சந்த் சத்தத்தில் நிமிர்ந்தார். கண்ணாடியைச் சரிப்படுத்திக் கொண்டார். வெள்ளைச் சுரிதாரில் மகள் ஷாலினி. அவர்கள் குடும்ப ஒரே வாரிசு.

    சோனா பாயைப் பார்த்தார். அவள் முக்காட்டை இழுத்துவிட்டுக் கொண்டாள். நீங்களே சொல்லுங்கள் என்பது போல கண்களாலேயே ஜாடை செய்தாள். அவரோ நீயே சொல்லேன் என்பது போல பார்த்தார்.

    அப்போது வேலைக்காரப் பெண் வந்து ஆப்பிள் ஜூஸ்

    Enjoying the preview?
    Page 1 of 1