Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Viraivil Vibareetham
Viraivil Vibareetham
Viraivil Vibareetham
Ebook98 pages36 minutes

Viraivil Vibareetham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வேலையில்லாமல் தத்தாரியாக திரிந்துக் கொண்டிருந்த சுனிலை வீட்டில் அவர் அப்பா மதிக்கவில்லை. அவர் பெருமைப்படும்படி நடக்க சுனில் என்ன செய்தான்? பணக்காரியான சாருலதாவால் விரைவில் ஏற்படும் விபரீதம் என்ன? எனக் காண்போம்...

Languageதமிழ்
Release dateJan 14, 2023
ISBN6580100608151
Viraivil Vibareetham

Read more from Devibala

Related to Viraivil Vibareetham

Related ebooks

Reviews for Viraivil Vibareetham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Viraivil Vibareetham - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    விரைவில் விபரீதம்

    Viraivil Vibareetham

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    சுனில் உள்ளே நுழைந்தபோது மணி பத்தரை. எல்லா விளக்குகளும் அணைந்திருக்கும் என்று நினைத்து உள்ளே காலை வைத்த சுனில், ஷாக் வாங்கினான். கூடத்துச்சாண்டரியர்கள் கொட்டக் கொட்ட முழித்திருக்க, நட்ட நடு சோபாவில் அப்பா.

    சற்று தள்ளி அம்மா...

    தன் வாயில் விஸ்கி நாற்றம் வருவதை சற்றே அதிர்ச்சியுடன் உணர்ந்த சுனில், அவர்களை கண்டும் காணாத தினுசில் மாடியை நோக்கி நடந்தாள்...

    சுனில் நில்லு! அம்மாவின் குரல்.

    நின்றான்.

    மணி இப்ப என்ன?

    தெரியலை. நான் ரிஸ்ட் வாட்ச் கட்டலை!

    வெளில சூரியன்கூட அஸ்தமிக்கலையோ இன்னும்?

    அப்பாவின் சொற்கள் கேலியைப் பூசிக்கொண்டு உதிர்ந்தன.

    மணி பத்தரை சுனில், தினமும் இது மாதிரி செய்யறது சரியில்லை!

    இல்லைம்மா! ஃபிரண்ட்ஸ் எல்லாம்...

    விஸ்கி அடிச்சிட்டுப் போகலாம்னு சொன்னாங்க. நீயும் தட்ட முடியாம, இப்ப தள்ளாடிட்டு வந்து நிக்கறே!

    அம்மா!

    இடியட்… அப்படிக் கூப்பிட உனக்கு தகுதி இருக்காடா?

    சுனில் தலைகுனிந்து நின்றான்.

    நீ டிகிரி முடிக்க வருஷம் நாலு முடிஞ்சாச்சு. 24 வயசு இளைஞன். தானே உழைச்சு, தன் கால்ல நிக்காம, அப்பா தர்ற பாக்கெட் பணத்துல தோழர்கள்கூட தண்ணியடிச்சுட்டு நடுராத்திரில வீட்டுக்கு வர்றே, வெக்கமில்லை உனக்கு?

    அப்பா…!

    நான் லட்சக்கணக்கா, சம்பாதிச்சது நிஜம்தாண்டா. அத்தனையும் வியர்வை சிந்தி சம்பாதிச்ச பணம். கள்ள நோட்டு அடிக்கலை. கறுப்புப் பணமும் எங்கிட்ட இல்லை. நீ சாராயத்துல நீச்சலடிக்க என் பணம் பயன்பட வேண்டாம்.

    ….

    நீ, மான ரோஷம் உள்ளவனா இருந்தா, சரியான ஆம்பிள்ளயா இருந்தா, என்கிட்ட செலவுக்கு இனி பணம் கேக்கக்கூடாது. உன்னை இந்த வீட்டைவிட்டு நான் போகச் சொல்லலை. ஆனா உன் செலவுக்கு நீ சம்பாதிக்கணும். நீ சாப்பிடற ஒரு கவளம் சோறுகூட உன் உழைப்புல வந்ததா இருக்கணும், இது. இந்த நிமிடத்துலேருந்து அமுலுக்கு வருது.

    அப்பா...

    திரும்பினார்.

    பெரியவன் நிர்மல் இறங்கி வந்தான்.

    என்னப்பா?

    தம்பியை இந்த வாட்டி மன்னிச்சிடுங்க. இனிமே அவன் நல்ல பிள்ளையா நடந்துப்பான். சொல்லேண்டா தம்பி...

    சுனில் பேசவில்லை எதுவும்.

    நீ அவனுக்கு வக்காலத்தா? நான் சொன்னா, சொன்னதுதான். உங்கண்ணனைப் பாருடா. உன்னைவிட ரெண்டே வயசு மூத்தவன். அஞ்சாயிரம் ரூபா சம்பாதிக்கிறான் மாசம். அனாவசியச் செலவு பண்றதில்லை. ஊர் சுத்தறதில்லை. எந்த நேரமும் படிக்கிறான். முன்னேறத் துடிக்கிறான்.

    சுனில் முகத்தை நொடித்துக்கொண்டே உள்ளே போய் விட்டான்.

    நிர்மலும் நகர,

    நிர்மல்…

    என்னப்பா?

    எனக்குத் தெரியாம அவனுக்கு நீ பணமோ, வேற உதவிகளோ தந்தா, அப்புறம் நடக்கிறதே வேற. அவனுக்கு பொறுப்புகள் வரணும். நான் கடுமையா நடந்துக்கலைனா, அவன் திருந்த மாட்டான்.

    நிர்மல் பதில் பேசாமல் போய் விட்டான்.

    நீ என்னடீ நிக்கற?

    சுனில் ராத்திரி சாப்பிட…

    நோ... இந்த வீட்ல அவனுக்கு இனி சோறு கிடையாது.

    அம்மா லேசான வேதனையுடன் தன் அறைக்குள் நுழைந்துவிட்டாள்.

    நிர்மலும் படுத்துவிட்டான்.

    சுனில் மட்டும் பால்கனியில் நின்றான். மெல்லிய குளிர் காற்று கொஞ்சமாக இருந்த போதையைக் கொண்டு போனது.

    நல்ல பசி இருந்தது. வயிறு தாள வாத்தியக் கச்சேரி நடத்திக்கொண்டிருந்தது.

    ‘நீ சாப்பிடற ஒரு கவளம் சோறுகூட உன் உழைப்புல வந்ததா இருக்கணும்.’

    ‘வேண்டாம். அம்மாவிடம் கேட்கக்கூடாது. இந்த வீட்டில் இனி சாப்பிடக்கூடாது.’

    ‘நாளை விடிந்தால் என்ன செய்வாய் சுனில்.’

    ‘உன்னால ஒரு பைசாகூட சம்பாதிக்க முடியுமா? யார் உனக்கு வேலை தருவார்கள்? என்ன வேலை தெரியும் உனக்கு?’

    ‘அப்பா இத்தனை பேசிய பிறகு வீட்டைவிட்டுப் போய் விடலாமா?’

    ‘கூடாது. அது கோழைத்தனம்.’

    ‘இங்கு இருந்தே இவர்கள் சோற்றை எதிர்பாராமல் நான் சம்பாதிக்க வேண்டும்.’

    ‘முடியுமா? எப்படி?’

    கேள்விகள் பெரிய பாறாங்கல்லாக வந்து அவனை அழுத்த, திணறிப் போனான்.

    ‘நாளை முதல் நண்பர்கள் மத்தியில்

    Enjoying the preview?
    Page 1 of 1