Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maamara Kaattru
Maamara Kaattru
Maamara Kaattru
Ebook63 pages22 minutes

Maamara Kaattru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காதல் என்றாலே பிடிக்காத பாலா தன் மகளின் காதலுக்குத் தடை போட அதனால் ஆத்திரமடையும் அவளின் காதலன் பாலாவைக் கொல்ல முயல்கிறான். பாலா மனமாற்றம் அடைந்திருந்ததை அறியாது கத்தியால் குத்தியும் விட அடுத்து என்ன?

மாமரக்காற்று வீசும்.

Languageதமிழ்
Release dateJul 17, 2021
ISBN6580145507205
Maamara Kaattru

Read more from Gavudham Karunanidhi

Related to Maamara Kaattru

Related ebooks

Reviews for Maamara Kaattru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maamara Kaattru - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    மாமரக்காற்று

    Maamara Kaattru

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    http://www.pustaka.co.in/home/author//gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    முத்து

    மாமரங்கள் எல்லாம் காய்த்திருந்ததைப் பார்த்த என் மனம் மகிழ்ந்தது. காற்று குளிராய் மாமர வாசனையை நாசிக்குக் கடத்த கண்கள் மூடி அந்த சுகந்தமான காற்றை சுவாசித்தேன்.

    பசிக்கிறது என்பதை வயிறு நினைவூட்ட மணி பார்த்தேன். மணி ஒன்று ஆகிவிட்டதா? சரியான நேரத்திற்கு சாப்பிடப் போகவில்லையென்றால் அம்மா கோவித்துக் கொள்வார்.

    முனியா அழைத்தேன். எங்கள் தோப்பில் வேலை செய்பவர்.

    சொல்லுங்கய்யா

    சாப்பிட்டியா?

    இன்னும் இல்லங்கய்யா

    சரி சாப்பிடு. நான் வீட்டுக்குப் போயிட்டு சாப்பிட்டு வந்துடறேன்.

    சரிங்கய்யா

    நான் என் புல்லட்டில் ஏறி அமர்ந்தேன். ஸ்டார்ட் செய்தேன்.

    என் பெயர் முத்து. எங்கள் ஊர் முஷ்ட கிணத்துப்பட்டி. யாராவது எங்கள் ஊர் என்னவென்று கேட்டால் எம்.எஸ்.கே.பட்டி என்று சொல்லிக் கொள்வோம்.

    முஷ்டகிணத்துப்பட்டி எங்கிருக்கிறது என்று தெரியாதவர்கள் கரூர் பேருந்து நிலையத்தில் 14ஆம் நம்பர் பஸ்ஸில் ஏறினால் அது கடைசியாக எங்கே நிற்கிறதோ அது தான் முஷ்ட கிணத்துப்பட்டி.

    ஒரு பக்கம் தோப்பும் மறு பக்கம் ஓடையும் இருக்க காற்று ஜிலுஜிலுவென்று வீசியது. இந்த மாதிரி சூழலில் புல்லட்டை ஓட்டிக் கொண்டு செல்வதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் பின்னால் மனதிற்கு நெருக்கமானவர் எவரேனும் இருந்தால் அது அனுபவித்து உணர வேண்டிய உணர்வு மட்டுமே. சொல்ல முடியாது.

    அம்மன் கோவிலைத் தாண்டியதும் எங்கள் வீடு.

    வீட்டின் முன் பைக்கை நிறுத்தினேன். பாத்ரூமில் தண்ணீர் விழும் சத்தம் கேட்க அம்மா என்று எண்ணிக் கொண்டு உள்ளே நுழைந்தேன். அப்பொழுது என் அலைபேசி அடித்தது.

    யார் என்று பார்த்தேன். அம்மாதான்.

    திகைத்தபடி எடுத்தேன்.

    அம்மா

    வீட்டுக்கு வந்துட்டியா முத்து?

    வந்துட்டேன்மா

    நான் ஜோசியர் வீடு வரைக்கும் வந்தேன். அரை மணி நேரத்துல வந்துருவேன்.

    சரிம்மா

    நீ அனிதாவை சாப்பாடு போடச் சொல்லி சாப்பிடு.

    அம்மா சொல்ல என் மனதிற்குள் உற்சாகமாக விசிலடித்துக்கொண்டேன்.

    அனிதா வந்திருக்கிறாளா? அவள் தானா பாத்ரூமில்? மனம் பரபரப்பானது.

    அனிதா என் மாமா மகள். கரூர் அரசு கலைக் கல்லூரியில் எம்.எஸ்.சி முதல் வருடம் படிக்கிறாள். எங்கே எப்போது எந்த சந்தர்ப்பத்தில் சந்திக்க நேர்ந்தாலும் அவள் விழிகள் அடிக்கடி என்

    Enjoying the preview?
    Page 1 of 1