Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arukkaani
Arukkaani
Arukkaani
Ebook113 pages37 minutes

Arukkaani

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன் தம்பி மனைவி வள்ளி மூன்று பௌர்ணமிகள் மட்டுமே உயிரோடு இருப்பாள் என்று சித்தர் கோவில் பூசாரி சொல்லிவிட அவளை எப்படியும் காப்பாற்றியே தீருவேன் என்ற அருக்காணியின் முன் வரும் அடுக்கடுக்கான பிரச்சனைகள் என்னென்ன? வள்ளி காப்பாற்றப்படுகிறாளா?

விடை சொல்கிறது அருக்காணி,

Languageதமிழ்
Release dateJul 17, 2021
ISBN6580145507222
Arukkaani

Read more from Gavudham Karunanidhi

Related to Arukkaani

Related ebooks

Reviews for Arukkaani

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arukkaani - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    அருக்காணி

    Arukkaani

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    http://www.pustaka.co.in/home/author//gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    அருக்காணி வாசலுக்கு வெளியே நின்றிருந்தாள்.

    ‘இந்த மாமா எங்க தான் போனார்?’ நிமிடத்திற்கொரு முறை அந்த எண்ணம் வந்து போனது. உள்ளே அடுப்பில் நெத்திலி கருவாடும் கத்தரிக்காயும் போட்டு வைத்த குழம்பு தெருவெங்கும் மணம் வீசியபடி கொதித்துக் கொண்டிருந்தது.

    அருக்காணிக்கு திருமணம் முடிந்து வருடங்கள் பல ஆனாலும் அவளின் மாமா… கணவன் ஆறுமுகத்தின் மேல் இருந்த பாசமும் காதலும் கொஞ்சமும் குறையவில்லை. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ஒவ்வொரு வருடம் முடிய முடிய பாசம் அவள் மனதிலேயே வட்டி போட்டு பன்மடங்காய் பெருகியிருந்தது.

    ‘லேய்... குமாரு...’ மகனைக் கூப்பிட,

    உள்ளே படித்துக்கொண்டிருந்த குமார் எழுந்து வந்தான்.

    என்னம்மா?

    அப்பாவை இன்னும் காணோமே… ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடறியா? அருக்காணி முகத்தை பாவமாய் வைத்துக் கேட்க குமாருக்கு சிரிப்பு வந்தது.

    என்னம்மா நீ? அவர் என்ன சின்னக் குழந்தையா? வந்திடுவார் மா…

    எதுக்கும் நீ.... என்று அருக்காணி ஆரம்பிக்க,

    அங்கே பாரு மா.... குமார் கை காட்டிய திசையில் பார்க்க ஆறுமுகம் கையில் ஒரு சேவலுடன் வந்தான்.

    என்ன.... வெளியில் நின்னுட்டிருக்கீங்க?

    ஆறுமுகம் கேட்க…

    குமார் சிரித்தபடி சொன்னான்.

    எல்லாம் உங்களுக்காகத்தான்....

    எனக்காகவா?

    நீங்க வர்றதுக்கு லேட் ஆச்சுன்னு அம்மாக்கு இருப்பு கொள்ளல....

    ஆறுமுகம் ஓரக்கண்ணால் அருக்காணியைப் பார்த்தான்.

    படிக்கிற புள்ளைய படிக்க விடமாட்டியா?

    அதில்லங்க மாமா....

    என்ன… அதில்லை.... இதில்லைன்னு… சோறு ரெடி ஆயிடுச்சா?

    ஆமாங்க மாமா…

    புள்ள சாப்பிட்டானா?

    இன்னும் இல்லைங்க மாமா…

    எனக்காக காத்திருக்காதேன்னு எத்தனை முறை சொல்றது? போ.... போய் சாப்பாடு எடுத்து வை....

    சொன்ன ஆறுமுகம் கை கால் கழுவப் போனான்.

    அருக்காணி உள்ளே ஓடினாள்.

    சூடான சோறைத் தட்டில் போட்டு ஆற வைத்தாள். குழம்பை வேறு சிறிய பாத்திரத்திற்கு மாற்றி நெத்திலி. கருவாட்டின் துண்டுகளை கத்தரிக்காயுடன் எடுத்துப் போட்டாள்.

    குமாரு… வந்து சாப்பிடு… தட்டில் போட்டு வைக்க குமார் எடுத்துக் கொண்டான்.

    ஆறுமுகம் வந்து அமர்ந்தான்.

    தனக்கு முன் அந்த சிறிய பாட்டிலை வைத்தான். அதிலிருந்த பிராந்தியைக் கொஞ்சம் தம்ளரில் ஊற்றி நீர் கலந்தான்.

    ஒரு மிடறு விழுங்கியவன் நெத்திலி கருவாட்டை குழம்புடன் எடுத்து வாயில் போட அந்தக் காரம் சூடாக உள்ளே இறங்க கண்கள் மூடி அந்த உணர்வை அனுபவித்த ஆறுமுகம்.

    அருக்காணி... கூப்பிட்டான்.

    மாமா...

    குழம்பு ஏ ஒன்... அவன் சொல்ல அருக்காணி முகத்தில் மகிழ்ச்சி.

    சாப்பிடுங்க மாமா...

    ம்ம்...

    ஆறுமுகம் தம்ளரில் இருந்த மிச்ச பிராந்தியையும் குடித்து முடித்தான்.

    தனக்கு முன் வைக்கப்பட்ட தட்டில் இருந்த சோற்றைக் குழம்புடன் பிசைந்தான்.

    ‘குமார் எங்க?" கேட்க,

    அவன் உள்ளே இருக்கான் மாமா

    டிவி பார்த்துட்டு சாப்பிடறானா?

    ஆமா மாமா...

    எத்தனை தடவை சொல்றது? டிவி பார்த்துட்டு சாப்பிட்டா என்ன சாப்பிடறோம்னு கூட தெரியாது... ஆறுமுகம் முகம் கோபமாக அருக்கானியின் முகம் வாடியது. அதைப் பார்த்தவன்.

    சரி... சரி... உன் புள்ளைய ஒண்ணும் சொல்லல... மூஞ்சிய தூக்கி வெச்சுக்காத

    ஆறுமுகத்தின் மிகப்பெரிய பலவீனம் அருக்காணி முகம் வாடினால் தாங்க மாட்டான்.

    சோற்றைப் பிசைந்தவன் அதை எடுத்தான்.

    எப்பவும் போல உனக்குத்தான் முதல் மரியாதை அவளுக்கு ஊட்டி விட்டான்.

    அவள் நெஞ்சம் நிறைய அவனைக் காதலாய் பார்த்தாள்.

    என்ன ஒரு மாதிரி பார்க்கிறே?

    மாமாவை கவனிச்சு ரொம்ப நாளாச்சு...

    வேண்டாம்மா... உன் கவனிப்பு... இன்னிக்கு தூங்கணும் நான் ஆறுமுகம் சொல்ல அருக்காணி சிரித்தாள்.

    இருவரும் சாப்பிட்டு முடித்து சமையல்கட்டைத் துடைத்தனர்.

    உள்ளே சென்றனர். குமார் சன் டிவியின் இரவு ஒன்பதரை மணி திரைப்படத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

    விஜயகாந்த் பொன்னம்பலம் சண்டைக்காட்சி ஓடிக்கொண்டிருக்க,

    குமாரு... நாளைக்கு பார்த்துக்கலாம்... போய் நேரமாப் படு... ஆறுமுகம் சொல்ல,

    சரிப்பா... டிவியை அணைத்தவன் தன் அறைக்குச் சென்றான்.

    ஆறுமுகம் கட்டிலில் போய் படுத்தான்.

    ‘இன்னிக்கு வேலை அதிகம் தான்...’ யோசித்தவன்...

    அருகில் படுத்த அருக்காணியை தலையில் கோதி விட்டான்.

    என்ன மாமா... தூக்கம் வரலையா? கை கால் பிடிச்சு விடட்டுமா?

    பாசமாய் கேட்டவளைப் பார்த்தான்.

    உள்ளே நெகிழ்ந்தது. தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

    முத்தமிட முயன்றவனைத் தடுத்தாள்.

    என்னாச்சு?

    ஆறுமுகம் கேட்க,

    அருக்காணி சிரித்தாள்.

    யாரோ இன்னிக்கு தூங்கப் போறேன்னு சொன்னாங்க... அவனை மாதிரியே

    Enjoying the preview?
    Page 1 of 1