Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sample
Sample
Sample
Ebook100 pages31 minutes

Sample

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெண் பார்க்கப் போகும் நாயகனிடம் ஒரு மாதம் வாழ்ந்து பார்த்தால் மட்டுமே தன்னால் அந்த திருமண பந்தத்தில் ஈடுபடமுடியும் என்று நாயகி சொல்கிறாள். அதில் எல்லாமே அடங்கும் அதாவது உடலுறவு வைத்துக்கொள்வது உள்பட என்று நாயகி சொல்வது நாயகனை அதிர வைக்கிறது.

நாயகன் சம்மதிக்கிறான்.

ஒரு மாத சாம்பிள் வாழ்க்கை தொடங்குகிறது. இருவருக்கும் இடையில் நிகழும் ரசவாத மாற்றம் இருவரையும் எங்கனம் இணைக்கிறது ? இணையும் வேளையில் நாயகியை முன்னர் பெண் பார்த்தவன் கொண்டு வரும் இடையூறு என்ன? அது அவர்களை எப்படி பாதிக்கிறது? படித்து மகிழுங்கள் காதல் ரசம் சொட்டும் "சாம்பிள்"

Languageதமிழ்
Release dateSep 13, 2021
ISBN6580145507440
Sample

Read more from Gavudham Karunanidhi

Related to Sample

Related ebooks

Reviews for Sample

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sample - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    சாம்பிள்

    Sample

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    சிவா விழித்துக்கொண்டான். மழை பெய்யும் சத்தம் காதில் கேட்டது. சிவா பரவசமாக உணர்ந்தான். அருகில் அனிதா உறங்கிக் கொண்டிருக்க அவள் முகத்தையே பார்த்தான்.

    இன்னும் ஒரு வாரம் இருக்கின்றது. இவள் சொன்ன கெடு முடிய. என்ன சொல்லப் போகிறாள் என்று தெரியவில்லை.

    தனக்குள் எண்ணிய சிவா அனிதாவின் கலைந்திருந்த ஆடையை சரி செய்தான். போர்வையால் முகத்தை மட்டும் விட்டுவிட்டு போர்த்தி விட்டான்.

    நெற்றியில் முத்தமிட்டான். அனிதா தூக்கத்திலும் புன்னகைத்தாள்.

    இரவு அவள் அவனை ஆவேசமாய் கொஞ்சியது நினைவிற்கு வர தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.

    மழை வலுத்தது. அனிதாவும் மழை மாதிரிதான்.

    பெய்யுமா பெய்யாதா என்று எதிர்பார்க்க வைத்து பெய்ய ஆரம்பித்து பின் பேய் மழையாய் மாறி ஆவேசமாய் அன்பைப் பொழிவதில் அனிதாவும் மழைதான்.

    பால்கனிக்கு வந்து நின்ற சிவா இடைவிடாமல் பெய்யும் மழையை வேடிக்கை பார்த்தான். இந்த மாதம் முழுவதும் மழை இருக்கிறதாம். வானிலை அறிக்கை சொல்கிறது. சில நேரங்களில் வானிலை அறிக்கை உண்மையாகக் கூட மாறிவிடும் என்பதற்கு இது உதாரணம்.

    சிவாவிற்கு திருச்சூர் மிகவும் பிடித்துவிட்டது. எப்பொழுதும் பெய்யும் மழையும் குளிர்ந்த காற்றும் வடக்குநாதன் சிவனும் பரமேக்காவு பகவதியும் திருவம்பாடி உண்ணிக்கிருஷ்ணனும் இந்த மூன்று வார காலத்தில் அவனை இந்த ஊரை மிகவும் பிடிக்கச் செய்துவிட்டனர்.

    மலையாளம் மிகவும் எளிதான மொழி. எளிதில் கற்றுக்கொள்ளலாம். இல்லை என்றாலும் அனைத்து மலையாளிகளுக்கும் தமிழ் தெரியும். தமிழில் பேசினால் அனைவரும் புரிந்து கொள்வர். அவர்கள் தமிழர்களை அண்ணா என்று அழைப்பதே தனி அழகுதான்.

    சிவாவிற்கு நவம்பர் வந்தால் இருபத்தெட்டு வயது முடிகிறது. சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் ஃப்ளுயண்ட் சிஸ்டம்ஸில் பணி. ஆனால் கடந்த ஆறு மாதங்களாக வொர்க் ஃப்ரம் ஹோம் தான். அதனால்தான் அனிதா சொன்ன கண்டிஷனை அவனால் ஏற்றுக்கொள்ள முடிந்தது.

    அவள் முதன் முதலில் அந்த கண்டிஷனை சொல்லும்பொழுது அவன் திகைத்து நின்றது இப்போதும் அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது.

    ***

    காஞ்சிபுரம்.

    ரங்கசாமிகுளம்.

    என்னங்க இவன் எங்க போனான்? நேரமாகுது.

    அலமேலுக்கு டென்ஷன் கூடியது.

    பரந்தாமன் புன்னகைத்தார்.

    கவலைப்படாத. இன்னும் அரை மணி நேரம் இருக்கு. வந்துடுவான்.

    இப்ப பார்க்கிறது தான் இவனுக்கு கடைசிப் பொண்ணு இனிமே நான் இவனுக்குப பொண்ணு பார்க்க வரமாட்டேன்.

    சொன்ன அலமேலுவைப் பார்த்து பரந்தாமன் சிரித்துக்கொண்டார்.

    ஒவ்வொரு முறையும் அலமேலு சொல்லும் வழக்கமான டயலாக் இது. அதற்கு காரணம் அவர்களின் மகன் சிவா.

    அவனுக்கு எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் பிடிக்காமல் இருந்தது.

    ஏண்டா இப்ப பார்த்த பொண்ணுக்கு என்ன குறை?

    குறை சொல்றதுக்கு ஒண்ணுமில்லம்மா

    அப்புறம் ஏன் வேண்டாம்னு சொல்றே?

    என்னம்மா சொல்ற? எனக்குப் பிடிக்க வேண்டாமா?

    நீதானடா சொன்ன? குறை ஒண்ணும் இல்லன்னு.

    ரெண்டும் வேற வேறம்மா. எனக்கு வரப்போற பொண்டாட்டின்னா அவ கிட்ட ஏதாவது ஒண்ணு என்னை ஈர்க்கணும்.

    சிவா சொல்ல அலமேலு வழக்கம்போல் அவனை முறைக்க பரந்தாமன் சிரித்துக்கொண்டார்.

    அப்படி என்னதான் எதிர்பார்க்கிற?

    ஒரு நாள் அவர் தன் மகனிடம் கேட்க

    சிவா சொன்னான்.

    வெளிப்படையாகப் பேசணும். எதார்த்தமா இருக்கணும் இயல்பா இருக்கணும். நடிக்கக் கூடாது.

    மகன் எண்ண ஓட்டத்தை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.

    சரி இவனுக்குன்னுப் பிறந்தவ எங்கயோ இருக்கா. நேரம் வரும்போது தன்னால முன்னாடி வருவா.

    எண்ணிக்கொண்டார்.

    சரியான நேரம் வரும்போது ஏகாம்பரநாதர் அருள்புரிவார்.

    என்னங்க நான் கேட்டுட்டுருக்கேன் என்ன யோசனை?

    அலமேலு மிக

    Enjoying the preview?
    Page 1 of 1