Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Padigal
Padigal
Padigal
Ebook263 pages1 hour

Padigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நான் உங்களுக்குப் புதிதல்ல. கலைமகள் காட்டிய கதவு வழியாக வந்து நானே எதிர்பார்க்காத அளவிற்கு உங்களுடைய ஆதரவை ஏற்கெனவே பெற்றிருக்கிறேன்.

சிறுகதை எழுதிக் கொண்டிருந்த நேரம். நாவல் எழுத ஆசை கொண்டு துணிந்து நான் என் கரத்தில் பேனாவை எடுத்தேன். இலக்கிய உலகில் ஏற்கெனவே நீந்திடும் எண்ணற்ற சுறா மீன்கள், திமிங்கலங்களுடன் ஒரு சிறு மீனாக நானும் நீந்திக் களிக்க ஆசை கொண்டேன்.

பெருந்தன்மை கொண்ட வாசகர்களாகிய உங்களது ஆதரவு அமோகமாக எனக்குக் கிடைத்தது; ஆமாம் இலக்கிய உலகின் கதவு திறக்கப்பட்டு, நானும் உள்ளே பிரவேசம் செய்துவிட்டேன்.

புது உலகில் அதிசய சந்திப்புகள், மெய்சிலிர்க்க வைக்கும் உணர்வுகள். எல்லாவற்றிலும் என்னையே மறந்து விட்டிருந்தேன். இரு கரம் நீட்டி வரவேற்ற என் அன்பு வாசகர்கள் என்னை மேலும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் மேலே முன்னேறினேன்.

படிகளைக் கண்டேன், ஒவ்வொரு படியாக ஏற ஆரம்பித்து விட்டேன். நீங்களும் உடன் வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் - பெருமிதத்துடன் ஏறுகிறேன். இறுதிப் படியில் உங்களது மேலான தீர்ப்பும், ஆதரவும் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

கலைமகள் கதவைத் திறந்து தமிழுக்கு என்னை அறிமுகப்படுத்தினாள். கலைமகள் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமான நான் அவளுடைய அருட்கடாட்சத்தினால் உங்களுக்கு மேலும் மேலும் நல்ல நாவல்களைப் படைத்து மகிழ்விப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆதரவு தாருங்கள்.

Languageதமிழ்
Release dateMay 14, 2022
ISBN6580132608277
Padigal

Read more from Kamala Sadagopan

Related to Padigal

Related ebooks

Reviews for Padigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Padigal - Kamala Sadagopan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    படிகள்

    Padigal

    Author:

    கமலா சடகோபன்

    Kamala Sadagopan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kamala-sadagopan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. கன்னியின் குழந்தை

    2. காலனின் களியாட்டம்

    3. கிட்டியது எட்டவில்லை

    4. கீழே விழுந்தது நீங்களல்ல, நான்தான்

    5. குழப்பம் ஆரம்பித்தது

    6. ஹரிணியின் வேதனை

    7. பிரசாத்தின் எதிர்ப்பு

    8. ஹரிணியின் மிரட்டல்

    9. பிரசாத் செய்த பயங்கரக் குற்றம்

    10. ஈஸ்வரனின் வெறுப்பு

    11. சந்தானத்துடன் சந்திப்பு

    12. பிரசாத்தின் புது சிக்கல்

    13. முதல் படி உயர்ந்தது

    14. ஹரிணி சொன்ன கதை

    15. வள்ளிக்கு வெளிச்சமாகியது

    16. பிரசாத் கேட்ட பரிசு

    17. எதிர்பாராத ஆபத்து

    18. இது நன்மையா? தீமையா?

    19. எல்லையைத் தொட்டது

    20. ஹரிணியின் குழப்பம்

    21. 'ஹரி நம் தலைமகன்!’

    முதற்பதிப்பு முன்னுரை

    நான் உங்களுக்குப் புதிதல்ல. கலைமகள் காட்டிய கதவு வழியாக வந்து நானே எதிர்பார்க்காத அளவிற்கு உங்களுடைய ஆதரவை ஏற்கெனவே பெற்றிருக்கிறேன்.

    சிறுகதை எழுதிக் கொண்டிருந்த நேரம். நாவல் எழுத ஆசை கொண்டு துணிந்து நான் என் கரத்தில் பேனாவை எடுத்தேன். இலக்கிய உலகில் ஏற்கெனவே நீந்திடும் எண்ணற்ற சுறா மீன்கள், திமிங்கலங்களுடன் ஒரு சிறு மீனாக நானும் நீந்திக் களிக்க ஆசை கொண்டேன்.

    பெருந்தன்மை கொண்ட வாசகர்களாகிய உங்களது ஆதரவு அமோகமாக எனக்குக் கிடைத்தது; ஆமாம் இலக்கிய உலகின் கதவு திறக்கப்பட்டு, நானும் உள்ளே பிரவேசம் செய்துவிட்டேன்.

    புது உலகில் அதிசய சந்திப்புகள், மெய்சிலிர்க்க வைக்கும் உணர்வுகள். எல்லாவற்றிலும் என்னையே மறந்து விட்டிருந்தேன். இரு கரம் நீட்டி வரவேற்ற என் அன்பு வாசகர்கள் என்னை மேலும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் மேலே முன்னேறினேன்.

    படிகளைக் கண்டேன், ஒவ்வொரு படியாக ஏற ஆரம்பித்து விட்டேன். நீங்களும் உடன் வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் - பெருமிதத்துடன் ஏறுகிறேன். இறுதிப் படியில் உங்களது மேலான தீர்ப்பும், ஆதரவும் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

    கலைமகள் கதவைத் திறந்து தமிழுக்கு என்னை அறிமுகப்படுத்தினாள். கலைமகள் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமான நான் அவளுடைய அருட்கடாட்சத்தினால் உங்களுக்கு மேலும் மேலும் நல்ல நாவல்களைப் படைத்து மகிழ்விப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆதரவு தாருங்கள். திருவல்லிக்கேணி,

    சென்னை - 5

    26-10-78

    கமலா சடகோபன்

    இரண்டாம் பதிப்பு முன்னுரை

    இதை நினைத்ததும் அடுத்ததாக ஏற்றம் என்னும் சொல் நம் நினைவில் எழுவது இயல்பு.

    தமிழ் எழுத்தாளர்களின் கூட்டுறவுச் சங்கம் (தமிழுறவு) 1978-ஆம் வருடம் முதன் முதலாக இதை வெளியிட்டது. இதன் முதல் ஏற்றம் இது.

    மற்றொரு ஏற்றமாக தமிழ் வளர்ச்சித் துறை 1978 ஆம் ஆண்டின் சிறந்த நாவலாக இதைத் தேர்ந்தெடுத்து, முதல் பரிசு அளித்தது.

    1981ஆம் ஆண்டு வள்ளுவர் தினத்தன்று நமது முன்னாள் முதல்வர் அமரர் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் பரிசுத் தொகையையும், சான்றிதழையும் எனக்கு அளித்தார்.

    அடுத்ததாக இன்னொரு ஏற்றமும் எனக்குக் கிடைத்துவிட்டது. நான் விளக்கம் எதுவும் கூறாவிட்டாலும், நீங்களே அது என்னவென்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

    மணிமேகலையின் அமுதசுரபியைப் போன்று வற்றாத அளவில், மேலும் மேலும் தமிழ் நூல்களை தமிழ் வாசகர்களுக்கு அளித்து வரும் படிகள் என்னும் இந்த நாவலை, இரண்டாவது பதிப்பாக வெளியிடுகிறது. ஏற்கனவே என்னுடைய படைப்புகள் இரண்டிற்கு ஆதரவு அளித்துள்ளது அந்தத் தொடரில் இதுவும் சேருகிறது. இதை எனக்குக் கிடைத்த ஏற்றமாகப் பெருமையுடன் கருதுகிறேன்.

    திரு. திருநாவுக்கரசு அவர்களுக்கும் எனது நன்றி.

    கமலா சடகோபன்

    திருவல்லிக்கேணி,

    சென்னை - 5

    24-2-89

    1. கன்னியின் குழந்தை

    அந்த வரிசையிலுள்ள அத்தனை புத்தகங்களுமேதான் ஏற்கெனவே படித்து முடித்துவிட்ட புத்தகங்களாக இருப்பதை உணர்ந்த ஹரிணி அலட்சியத்துடன் உதட்டைப் பிதுக்கினாள். சேச்சே. இது என்ன லைப்ரெரி? எல்லாமே வெறும் பழைய புராணங்களும், அதுவும் கந்தல் புராணங்களையே வைத்துக்கொண்டு லைப்ரெரி என்ற பெயர் வேறு. நகரங்களில் விலைபோகாத சரக்கை கிராமங்களுக்கு அனுப்பிவிட்டு, கிராமங்களை சீர்திருத்துவதற்காக லைப்ரெரியை ஆரம்பித்து, கிராம மக்களின் அறிவை வளர்க்கச் செய்வதாகப் பெருமை வேறு பீற்றிக்கொள்வதாக இருக்கிறது. ஏதோ நியூவேவ் அது இது என்று அமர்க்களப்படுகிறது. ஆனால் அந்த நியூவேவ், கிராமங்கள் வரையில் எட்டுவதே இல்லை...

    என்ன ஹரிணி? இன்னுமா உனக்குப் புத்தகம் கிடைக்கல்லே?

    ஹரிணி திரும்பிப் பார்த்தாள். பஞ்சாயத்துக் காரியாலயத்தின் குமாஸ்தாவும், அந்த லைப்ரெரியை நிர்வகிப்பவனுமான சந்தானம்தான் அவள் பின்னால் வந்து நின்று கொண்டிருந்தான்.

    நீங்களும், உங்க லைப்ரெரியும். நீங்கதான் மெச்சிக்கணும். புதிய புத்தகங்கள் வரவழைக்க துப்பைக்காணோம். எல்லாம் நான் படிச்ச புத்தகங்களாகவே இருக்கு.

    அம்மா பரதேவதையே... நீ படிக்காத புத்தகம் இனிமேல் நான் எழுதினால்தான் உண்டு. புத்தகம் கொடுத்து எனக்குக் கட்டுப்படியாகாது.

    நல்ல ஐடியா... அதையே செய்யுங்க. நீங்க எழுதின புத்தகத்தை நான் படிச்சாலே போதும். பிரச்சினையே வேறுவிதமாகத் தீர்ந்துடும்.

    எப்படித் தீரும்?

    எனக்கு உங்க கதையைப் படிச்ச உடனேயே படிக்கிற ஆசையே ஒழிஞ்சுடும். லைப்ரெரி பக்கமே நான் வராதிருப்பேன். எங்க வீட்டிலேயும் சந்தோஷப்படுவாங்க என்று சொல்லிச் சிரித்தாள். சந்தானமும் அவளுடன் சேர்ந்து சிரித்தான்.

    அது சரி ஹரிணி, உங்க வீட்டிலே உன்னை லைப்ரெரிக்கு வருவதற்காகத் திட்டறாங்களா?

    என்னை நேர்முகமாக எதுவும் திட்டுவதில்லே... ஆனாலும், லைப்ரெரி சாக்கிலே, உங்களைச் சந்திக்க இரண்டு வேளையும் இங்கு வருவதாக அவர்கள் நினைக்கலாம் இல்லையா?

    ஐஸி! அப்படின்னா நம்மைப் பற்றிய விஷயம் அவர்களுக்குத் தெரிஞ்சிருக்கும்.

    என்னது உம்? எப்படித் தெரியுமாம் அவர்களுக்கு? நீ ஏதாவது உளறியிருப்பே.

    இந்த அழகான லைப்ரெரிக்கு என்னைத் தவிர யார் வராங்க? நான் மட்டும் அடிக்கடி வந்தால், எங்க அப்பாவுக்கு விஷயத்தை ஊகிக்க முடியாதாக்கும்...

    நானே உங்க அப்பாவிடம் நம் காதலைப் பற்றி தைரியமாகச் சொல்லிப் பேசட்டுமா?

    இதோ பாருங்க. காதல்னு பெரிய வார்த்தையை எல்லாம் பேசாதீங்க. நாம் ரெண்டு பேரும் மணக்க விரும்பறோம்... அதை அப்பாவிடம் சொல்லுங்க போதும்!

    ஏன், உங்க அப்பாவுக்கு காதல்ன்னா பிடிக்காதா?

    அப்பாவை ஏன் இழுக்கறீங்க? நம் விஷயத்திலே அந்த வார்த்தையை உபயோகிப்பது எனக்கே பொருத்தமாகத் தோணல்லே.

    உனக்கு என்னிடம் நம்பிக்கை ஏற்படல்லே.

    சந்தானம், காதல் ஒரு தெய்வீகமான உணர்ச்சியாகத்தான் பல தலைமுறைகளாக நினைக்கிறோம். என்னை நீங்க மணக்க விரும்பறீங்க. அதற்குத் தடையா எத்தனைக் கஷ்டங்கள் வந்தாலும், எந்தவிதமான சூழ்நிலையிலும் மனம் மாறாமல் என்னை மனைவியாக ஏற்க நீங்க விரும்பினால் அதைக் காதல் என்று சொல்லலாமே தவிர, நம்முடைய சாதாரண விருப்பத்திற்கெல்லாம் காதல் என்று ஒரு பெயரைச் சொல்லி, அந்த வார்த்தையை மதிப்புக் குறைவாகப் பேச நான் விரும்பல்லே.

    ஹரிணி, நான் வெறும் அன்னக்காவடி. கேட்பார் யாரும் இல்லாத அனாதை நான். உங்க அப்பாவோ கோவிலில் மணி அடிக்கிற பரம்பரையிலே வந்தவர். நம் கல்யாணத்துக்கு என்ன தடங்கல் வரப்போகிறது சொல்லேன். நிச்சயம் நடக்கத்தான் போறது.

    ரொம்ப சந்தோஷம் அதுக்காக எங்க பரம்பரையை நீங்க இழுக்க வேண்டாம். நீங்க கல்யாணத்துக்குள்ளே நிறைய புது புத்தகங்கள் வரவழைக்கலேன்னா, நானே உங்களை மணக்க மறுத்துடுவேன்.

    உத்தரவு தேவி! உன்னைக் கல்யாணம் பண்ணிண்டப்புறம் மட்டும் என்ன? அப்பவும் இந்தப் புத்தகத்தைத்தான் எப்பவும் படிக்சுண்டேயிருக்கப் போறே. நான் உன் வாயைப் பார்த்துண்டு உக்கார்ந்திருக்கணும்.

    ஹரிணி கலீரென்று சிரித்தாள். அதேசமயம் மாடிப் படிக்கட்டுகளில் யாரோ ஏறிவரும் காலடி சப்தம் கேட்கவே சட்டென்று திரும்பி புத்தகங்களைப் பார்க்க ஆரம்பித்தாள். சந்தானமும் நகர்ந்து தன் மேஜை அருகில் சென்றான்.

    ஒரு கிழவர் மெள்ள ஏறி வந்தார். அவர் பட்டணத்திலிருக்கும் தன் பிள்ளைக்கு கடிதம் எழுதுவதற்காக சந்தானத்தின் உதவியை அடிக்கடி நாடுவது வழக்கம்.

    அப்பா சந்தானம், ஒரு லெட்டர் எழுதணும்.

    தெரியுமே, பெரியவரே! நீங்க இங்கே வந்தால் லெட்டர் எழுதும் வேலை வந்திருக்குனு அர்த்தம். இந்த இடத்திலே எனக்கு இருக்கிற வாடிக்கைக்காரர்களே ரெண்டு பேர்கள்தாளே?

    ஹரிணி குறும்புடன் சிரித்தபடி கேட்டாள்: ஸார். யார் அந்த ரெண்டு வாடிக்கையாளர்கள்னு எனக்குச் சொல்லுவீங்களா?

    அதுவா? இன்னிக்கு ரெண்டு பேருமே வந்தாச்சு. அவங்க போனதும், நானும் கதவை இழுத்து மூடிண்டுப் போக வேண்டியதுதான்.

    இதோ ஒண்ணு புறப்பட்டாச்சு சார் என்று குறும்புடன் உரக்க இழுத்தபடி, கையில் ஒரு புத்தகத்துடன் அவள் போக முயன்றாள்.

    இரு இரு... அந்தப் புத்தகத்தின் நம்பரைச் சொல்லு, குறிச்சுக்கறேன் என்றான் சந்தானம்.

    கன்னிப் பெண்ணின் குழந்தை என்ற அந்தப் புத்தகத்தின் பெயரைப் படித்ததும் அவன் முகம்சுளித்தான்.

    ஐயைய, புத்தகத்தின் தலைப்பே மோசமாக இருக்கே, புத்தகம் எப்படி இருக்குமோ?

    கவலைப்படாதீங்க சார். இப்போ புத்தகத்தின் தலைப்புக்கும் உள்ளே இருக்கும் கதைக்கும் சம்பந்தமே இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும், நான் எதைப் படிச்சால்தான் உங்களுக்கென்ன?

    அதுசரி சந்தானம் கிழவரின் பக்கம் திரும்பினான்.

    ஹரிணி கோவிலைச் சுற்றி இருந்த அக்ரஹாரத்தினுள் நுழைந்தாள். அவள் தன் வீட்டினுள் நுழைந்தபோது நடையின் பெரிய கதவு தாழ் போடாமல் மூடி இருந்தது. புத்தகத்தை சேலைத் தலைப்பினால் மூடி மறைத்துக் கொண்டு கதவை சப்தம் செய்யாமல் திறந்தாள். உள்ளே அவளது தாய் சிவகாமி, எதையோ சொல்லிப் புலம்பி அழுது கொண்டிருந்தாள். அப்பா மகாதேவன் அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தார்.

    இது எனக்கு நல்லதிற்கா வந்திருக்கு? என்னை அழிக்கிறதுக்குனு வந்திருக்கு.

    அப்படிச் சொல்லாதே சிவகாமி. உன்னையே நம்பிண்டு இருக்கும் ஹரிணியை மறந்துட்டியா? எனக்குதான் நீ இல்லாம என்ன முடியும்?

    ஐயோ, உங்களுக்குப் புரியலையே. வயசு வந்த பெண் ஹரிணி. அவ முகத்திலே விழிக்கவே நான் வேதனைப்படுகிறேன். கல்யாணம், கார்த்திகைன்னு எதுவுமே அவளுக்கு நாம் செய்யல்லியே.

    ஹரிணிக்கு முதலில் குழப்பமாக இருந்தாலும் பிறகு புரிந்துவிட்டது அவளுடைய கல்யாணத்தைப் பற்றித்தான் அவளுடைய தாய் இவ்வளவு வேதனைப்படுகிறாள்.

    ஹரிணி அப்பொழுதுதான் உள்ளே நுழைவதைப் போல் ஏதோ ஒரு பாட்டை உரக்க ஹம்மிங் செய்து கொண்டே உள்ளே நுழைந்தாள்.

    அவளைக் கண்டதும், மகாதேவன் குனிந்த தலையுடன் வெளியே சென்றுவிட்டார். சிவகாமி தன் கண்களைத் துடைத்தபடி சமையலறையினுள் சென்றாள்.

    ஹரிணி அங்கேயே சிந்தனையுடன் உட்கார்ந்தாள். அம்மா அவளுடைய கல்யாண விஷயமாகக் கவலைப்படுகிறாள் என்றால் பொருளாதார விஷயமாகத்தான் இருக்கும். இப்பொழுதுதான் சந்தானத்தைப் பற்றிக் கூறுவதற்குச் சரியான சமயம். சந்தானம் யாருமில்லாத தனி மனிதன். அதனால் பொருளாதார விஷயமான பிரச்சினை எதுவும் எழாமல் அவன் அவளுக்காகவே அவளை ஏற்பான். அம்மாவிடம் அவள் சொல்லிவிட்டால், அம்மா அப்பா காதில் போட்டு விடுவாள். விஷயம் சுலபமாகிவிடும்.

    ஹரிணி உள்ளே சென்றாள். சிவகாமி எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டு சமையலறையில் உட்கார்ந்திருந்தாள்.

    அம்மா, அப்பா சாப்பிட்டாரா?

    ஊம்

    நாம் ரெண்டுபேரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடலாமே.

    எனக்குப் பசிக்கல்லே. நீ சாப்பிடும்மா. சிவகாமி எழுந்திருக்க முயன்றாள்.

    எனக்கு வேண்டாம். கொஞ்சநேரம் போகட்டும் என்று அவள் தாயின் மடியில் தலையை வைத்துப் படுத்துக் கொண்டாள்.

    அம்மா, கொஞ்ச நாட்களாகவே சரியாக சாப்பிடுவதில்லை. சோர்வுடன் இருக்கே. ஏதோ உனக்கு நீயே வேதனைப்படறே. என்னம்மா விஷயம்?

    எனக்கு ஒண்ணும் இல்ல, ஹரிணி.

    எல்லாம் எனக்குத் தெரியும். என் கல்யாணத்தைப் பற்றிகவலைப்படுறே இல்லையா? சிவகாமி அதிர்ச்சியுடன் மகளைப் பார்த்தாள். அம்மா, நீ இனிமேல் அந்தக் கவலையை விடு. நீ நினைக்கிறாப்பிலே அது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயமில்லே.

    சிவகாமி தன் முகத்தைக் கைகளால் அறைந்து கொண்டு குரலைவிட்டு அழுதாள். பதறிக்கொண்டு எழுந்த ஹரிணி அந்தக் கரங்களைப் பிடித்துத் தடுத்தாள்.

    அம்மா, என்னம்மா இது? எதுக்கு இப்படி அழறே?

    ஹரிணி, நான் எப்படியடி உனக்குச்சொல்லுவேன்.

    பரவாயில்லேம்மா... எதுவாக இருந்தாலும் சொல்லு.

    வேதனையுடன் மகளை நிமிர்ந்து பார்த்த சிவகாமி குரல் நடுங்கக் கேட்டாள்.

    ஹரிணி, நீயும் வயது வந்த பெண்... பாப்பா இல்லே என்னைப் பார்த்தால் கூடவா உனக்கு விஷயம் புரியல்லே

    ஹரிணிக்கு ஒன்றுமே விளங்கவில்லை. தாயை வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள். சிவகாமியே தலைகுனிந்தபடி பேசினாள்.

    ஹரிணி, உன்னை நான் பதினேழு வயசிலே பெற்றேன். உனக்குப் பிறகு குழந்தை பிறக்கவேயில்லை. ஏன்? ஒரு கருச்சிதைவுகூட ஏற்பட்டதில்லே. ஆனால் என்காலத்திலே குடும்பக்கட்டுப்பாடு இவ்வளவு தீவிரமாகவும் இல்லே. இயற்கையாவே உனக்குப் பிறகு எனக்கு எல்லாம் நின்னுடுத்து.

    ஆமாம், நீ இப்போ... அதற்கு மேல் எப்படிப் பேசுவது என்று தெரியாமல் ஹரிணி நிறுத்தினாள்.

    ஆமாம் ஹரிணி, இப்போ ஐஞ்சு மாசம் நான். இப்படி ஒரு சோதனை எனக்கு வரும்னு நான் எதிர்பார்க்கவேயில்லை.

    ஹரிணிக்குத் தன் தாயின் மனவேதனை புரிந்துவிட்டது. அவள் மேல் பரிதாபம் கொண்ட அவள்தான். அந்த சமயத்தில் தன் கடமையை பொறுப்புடன் செய்வதுமில்லாமல், மிகவும் ஜாக்கிரதையுடன் பழகி தாயினுடைய மனநிலையை மாற்ற வேண்டும் என்று நினைத்தாள்.

    அம்மா, என் அருமை அசட்டு அம்மாவே... இதற்கா இவ்வளவு வேதனைப்படுகிறே?... எனக்கு ஏற்படும் குஷியிலே எனக்கு என்ன செய்யறதுனனே தெரியலே. அது சரிம்மா. உனக்கு எப்படித் தெரிஞ்சது?

    போடி அசடு! நீ எழுந்துபோ வெளியிலே... உன்னிடம் நான் சொல்லியிருக்கவே கூடாது.

    அம்மா இந்த அசட்டுத்தனமான கவலையை எல்லாம் விட்டுடு. இனிமேல் நான் சொல்றபடிதான் நீ கேட்கணும்

    ஹரிணி, உன்னை ஒருவன் கையிலே தாரைவார்த்துக் கொடுக்க வேண்டிய சமயத்திலே இப்படி வயிற்றிலே ஒண்ணை வளரவிடுகிறது எனக்கு எவ்வளவு அவமானம்ங்கிறது உனக்குத் தெரியலியே.

    ஏம்மா, நீ தாரைவார்த்துக் கொடுத்தால் மட்டும் போதுமா? பொரியிடவும், தாம்பூலம் மடிச்சுக் கொடுக்கவும் எனக்கு ஒரு தம்பி வேண்டாமா? அந்தத் தம்பியும் பிறந்த பிறகுதான் நான் கல்யாணம் செய்துக்கப் போறேன்!"

    போடி கழுதை! சிரிப்பும் அழுகையும் கலந்து சிவகாமியின் குரலில் ஒலித்தது. அன்றிலிருந்து ஹரிணி முற்றிலும் மாறிவிட்டாள். சிவகாமியைப் பெற்றவள் இருந்தால், அவள் கர்ப்பிணியான தன் மகளை எப்படிப் பேணிக் காப்பாற்றுவாளோ, அதைப்போல ஹரிணி தன் தாயைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டாள். ஆனால் அப்படி அவள் செய்யச் செய்ய சிவகாமிக்கு வேதனை அதிகமாகிக் கொண்டே இருந்தது. உள்ளே தன் குமுறலை அடக்கி ஒடுங்கினாள்.

    தற்செயலாக ஒரு நாள் ஹரிணியைக் கடைத்தெருவில் சந்தித்த சந்தானம் என்னம்மா, லைப்ரெரி பக்கம் வர்ரதே இல்லை! என்று கேட்டான்.

    அந்தப் புத்தகத்தை உங்க லைப்ரெரியிலிருந்து எந்த வேளையில் எடுத்து வந்தேனோ, எங்க வீட்டிலேயே ஒரு குழந்தை பிறக்கப் போகிறது.

    "நீ என்ன புத்தகம் எடுத்துவந்தே? ஏதோ

    Enjoying the preview?
    Page 1 of 1