Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ingey Tharkolai Seiyapaduvargal
Ingey Tharkolai Seiyapaduvargal
Ingey Tharkolai Seiyapaduvargal
Ebook97 pages32 minutes

Ingey Tharkolai Seiyapaduvargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு கல்லூரியில் மூன்று மாணவிகள் தற்கொலை செய்ததை நம்ப முடியாத அவள் தோழி மீண்டும் விசாரணைக்கு வேண்டிக் கொள்ள துப்பு துலக்குகிறது அசோக் & டீம்.

விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் இங்கே தற்கொலை செய்யப்படுவார்கள். வாசிப்போமா?

Languageதமிழ்
Release dateSep 6, 2021
ISBN6580145507384
Ingey Tharkolai Seiyapaduvargal

Read more from Gavudham Karunanidhi

Related to Ingey Tharkolai Seiyapaduvargal

Related ebooks

Related categories

Reviews for Ingey Tharkolai Seiyapaduvargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ingey Tharkolai Seiyapaduvargal - Gavudham Karunanidhi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இங்கே தற்கொலை செய்யப்படுவார்கள்

    Ingey Tharkolai Seiyapaduvargal

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    அப்பா எப்படிப்பா ஃபீல் பண்ணுறீங்க? கீர்த்தனா கேட்டாள்.

    ரொம்ப சந்தோசமா நிம்மதியா இருக்கேன். நம்ம ஊருக்குப போய் அங்க இருக்கிற நம்ம நிலத்துல விவசாயம் பண்ணனும். அதான்மா என்னோட ஆசை

    புன்னகைத்தார் கலிவரதன். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் டி.எஸ்.பி பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்.

    மகள் கீர்த்தனா சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறாள். அப்பாவும் மகளும் மட்டும் தான். அம்மா நான்கு வருடங்களுக்கு முன்பு தவறிவிட்டார்.

    கீர்த்தனா சென்னையில் விடுதியில் தங்கிப் படிக்க, கலிவரதன் கோவையில் பணிபுரிந்து வந்தார். வழக்கமாக ஓய்வு பெறுபவர்கள் எதையோ இழந்தது போல் உணர்வர். கலிவரதன் மட்டும் மகிழ்ச்சியாக இருந்தார்.

    சர்வீஸ்ல இருந்த காலம் முழுக்க நேர்மையா இருந்திருக்கேன் மக்களுக்கு சேவை செஞ்சிருக்கேன்கிறதில் எனக்கு ரொம்பப் பெருமை. இனியும் எனக்கு செய்ய வேண்டிய கடமைகள் இருக்கு. என் பொண்ணோட கல்யாணம். ஊருக்குப் போய் இயற்கை விவசாயம் பண்ணனும்.

    அனைவரிடமும் பெருமையாகச் சொல்வார்.

    அப்பா ஓய்வு பெற்றதால் கீர்த்தனா வந்திருக்கிறாள். அவர்களின் பங்களாவைக் காலி செய்துவிட்டு சொந்த ஊருக்குப் போக வேண்டும் அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

    சாப்பிடுங்கப்பா கீர்த்தனா சப்பாத்தியும் சிக்கனும் கொண்டு வந்து வைத்தாள்.

    வெளியே புல்வெளியில் மூங்கில் நாற்காலியில் அமர்ந்திருந்தவர் அங்கேயே சாப்பிட ஆரம்பித்தார். இரவு நேரத்தில் வீசும் காற்று அவருக்கு மிகவும் பிடிக்கும்.

    கீர்த்தனா

    அப்பா

    ஸ்டடிஸ் எல்லாம் எப்படிமா போகுது?

    நல்லாப்பண்றேன் பா

    நைஸ்

    நீ ஒரு கார்டியாலஜிஸ்ட் ஆகணும் அதுதான்மா என்னோட ஆசை.

    கலிவரதன் இதை கீர்த்தனாவிடம் சொல்வது ஆயிரமாவது முறை. கீர்த்தனா மௌனமாய் தலையசைத்தாள். அவளுக்குத் தெரியும். எதற்காக அப்பா அப்படி சொல்கிறார் என்று.

    அம்மாவிற்கு இதய நோய் இருந்து எவ்வளவு செலவழித்தும் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது அவர் மனதில் அப்படியே உறைந்துவிட்டது.

    இருவரும் சாப்பிட்டு முடித்தனர். கீர்த்தனா தட்டுகளை எடுத்துக் கொண்டு கழுவச் சென்றாள்.

    வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் கீழே எடுத்து வைக்கப்பட்டிருந்தன. பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்க்கு சொல்லியாகிவிட்டது. அவர்கள் மறுநாள் காலை வருவார்கள்.

    கீர்த்தனா அனைத்து பொருட்களின் மீதும் பார்வையைப் பதித்தாள்.

    அது என்ன காக்கிக் கலரில் ஏதோ ஒரு கவர்.

    கீர்த்தனா குனிந்து அதை எடுத்தாள். பிரிக்கப்படாத ஒரு கவர்.

    யாரோ கொரியர் அனுப்பி இருக்கிறார்கள். யாரென்று பார்த்தாள். ஃப்ரம் அட்ரஸில் வந்தனா என்றிருந்தது.

    யார் இந்த வந்தனா?

    டு அட்ரஸில் கலிவரதன் பெயர் இருந்தது.

    அப்பாவிற்கு வந்திருக்கிறது ஆனால் கவர் பிரிக்கப் படாமலேயே இருக்கிறது. கவரைப் பார்த்தால் வந்து வருடங்கள் ஆனது போல் பழையதாகத் தெரிந்தது.

    பிரிக்கலாமா?

    கீர்த்தனா ஒரு நிமிடம் யோசித்தாள்.

    வேண்டாம் அப்பாவிடம் கொடுப்போம். தீர்மானித்தாள் கவரை எடுத்துக் கொண்டு கலிவரதனிடம் சென்றாள்.

    அப்பா

    என்னம்மா?

    இந்தக் கவர் வீடு ஒதுக்கி வைக்கும் போது பார்த்தேன்.

    என்ன கவர் இது?

    தெரியலப்பா ஆனா வந்து ரொம்ப வருஷமா இருக்கும் போல இருக்கு.

    ஆச்சரியமா இருக்கு கவர் இன்னும் பிரிக்காம இருக்கு

    சொன்ன கலிவரதன் அந்த கவரை வாங்கிக் கொண்டார்.

    பிரித்தார்.

    உள்ளே ஒரு வெள்ளை பேப்பர் இருந்தது. அதில் எழுதப்பட்ட வார்த்தைகள் மிகத்தெளிவாக இருக்க கலிவரதன் படிக்க ஆரம்பித்தார்.

    ‘ஐயா நாங்க ராயல் பேரா மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ். இந்த லெட்டர் எழுதுவது வந்தனா. ஃபைனல் இயர் ஸ்டுடன்ட்,

    எங்க காலேஜ் பத்தி நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க. பேப்பர்ல கூட வந்திருக்கும். எங்களோட தோழிகள் மூணு பேர் விடுதியோட கிணத்தில் செத்துக் கிடந்தது பேப்பர்ல நியூஸ் வந்துச்சு. போலீஸ் வந்தாங்க

    Enjoying the preview?
    Page 1 of 1