Vizhuthugal Thangum Uravugal
By Chitra.G
()
About this ebook
"காரணமின்றி காரியமில்லை… காரியமின்றி காரணமுமில்லை, என்பது வாழ்வின் சூட்சுமத்தை உரைக்கும் சொலவடை. ஒவ்வொரு காரியத்தின் பின்னால் ஒரு காரணமும்… ஒவ்வொரு காரணத்தின் முன்னால் ஒரு காரியமும்.. கண்டிப்பாக வீற்றிருக்கும். அதனை, அவசியமான நேரத்தில், சரியான முறையில் ஆழ்ந்து புரிந்து கொள்வதிலும், துணை நிற்பதிலும் நீடித்து வாழ்கிறது உறவு
Read more from Chitra.G
En Nandhavanathu Poo Rating: 0 out of 5 stars0 ratingsNesapoovin Narumanam Rating: 5 out of 5 stars5/5Anbenum Pookkal Malaratum.... Rating: 0 out of 5 stars0 ratingsEnnul Nee Pathitha Suvadu Rating: 0 out of 5 stars0 ratingsMaya Enum Poonchiragu Rating: 0 out of 5 stars0 ratingsKattil Vizhuntha Mazhaithuli Rating: 0 out of 5 stars0 ratingsUn Thogai En Tholil Rating: 0 out of 5 stars0 ratingsDheetchanya Rating: 0 out of 5 stars0 ratingsParapatharke Siragugal... Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vizhuthugal Thangum Uravugal
Related ebooks
Manathoodu Oru Naal... Rating: 0 out of 5 stars0 ratingsThinnai Vaitha Veedu Rating: 5 out of 5 stars5/5Kaathal Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsAayul Dhandani Rating: 5 out of 5 stars5/5Un Uyirai Naanirukka... Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Mudichu Rating: 5 out of 5 stars5/5Nandhalala Rating: 5 out of 5 stars5/5Enthanuyir Kaadhalaney! Rating: 5 out of 5 stars5/5Karpoora Kaatru Rating: 0 out of 5 stars0 ratingsகாத்திருந்த கண்களே... Rating: 0 out of 5 stars0 ratingsUyarndhavargal Rating: 5 out of 5 stars5/5Unathu Vizhiyil Enathu Payanam Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Naan Santhithen Rating: 2 out of 5 stars2/5Sol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsNee Varum Paathaiyil... Rating: 5 out of 5 stars5/5Dhvani Rating: 0 out of 5 stars0 ratingsEyanthira Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsIlamai Ennum Poongatru Rating: 0 out of 5 stars0 ratingsVeliyilla Velladugal Rating: 0 out of 5 stars0 ratingsAtho! Avan Thaan! Rating: 0 out of 5 stars0 ratingsBrindavanamum Nondha Kumaranum Rating: 5 out of 5 stars5/5Unnaik Kan(Gun) Theduthey Rating: 5 out of 5 stars5/5Nijam Pondra Poi Rating: 0 out of 5 stars0 ratingsKadaisiyil Rating: 0 out of 5 stars0 ratingsKanave Kalaiyadhe! Rating: 5 out of 5 stars5/5Avalum Solval Theerpu! Rating: 0 out of 5 stars0 ratingsParijadha Poove! Rating: 0 out of 5 stars0 ratingsPottuvetcha Vatta Nilaa Rating: 5 out of 5 stars5/5Ellaigalin Vilimbil Rating: 5 out of 5 stars5/5Ennuyire... Rating: 5 out of 5 stars5/5
Reviews for Vizhuthugal Thangum Uravugal
0 ratings0 reviews
Book preview
Vizhuthugal Thangum Uravugal - Chitra.G
https://www.pustaka.co.in
விழுதுகள் தாங்கும் உறவுகள்
Vizhuthugal Thangum Uravugal
Author:
சித்ரா.ஜி
Chitra.G
For more books
http://www.pustaka.co.in/home/author/chitra-g
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 1
மலையருவியாய் மழை ஊற்றிக் கொண்டிருந்தது. அதற்குத் துணையாக இடியும் மின்னலும். மாலையில் ஆரம்பித்தது இன்னும் தொடர்கிறது. இன்றுமட்டுமல்ல இரண்டு மாதங்களாக இப்படித்தான். மழை இல்லையே என்று ஏங்கும் மக்கள் ஒருபுறம் இருக்க, இப்படி விடாமல் பெய்கிறதே என்று சற்று வருத்தமாகவும் இருக்கிறது. இங்கு பெய்து என்ன பயன். மலை உச்சியில் பொழிந்து, சரிவுகளில் வழிந்தோடி பள்ளத்தாக்குளில் மாயமாகிறது.
உறக்கம் பிடிக்காமல் புரண்டு புரண்டு இருபுறமும் மாறி, மாறி படுத்ததில் உடல் வலிப்பதை உணர முடிகிறது.
மனதில் ஏற்பட்ட வலியைவிட இதுவொன்றும் பெரிதில்லை என்றாலும், படுத்தவுடன் உறங்கிப்பழகிய உடல் அசௌகரியமாக உணர்ந்தது. மணி என்ன இருக்கும். தலையணைக்கு அடியில் இருந்த போனை தன்னை யறியாமல் துளாவி எடுத்தன கைகள். பனிரெண்டை காட்டியது போன். இவ்வளவு நேரமா உறங்காமல் இருக்கிறோம்.
அறிவு கணக்குப் போட்டாலும் மனது உறங்க மறுத்தது. அப்படியே கிடப்பதற்கு சலிப்பாக இருந்தது. எழுந்து ஜன்னலோரம் செல்லலாமா என்று மூடியிருந்த கம்பளியை அரவம் இல்லாமல் விலக்கினேன். அருகில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள் மனைவி துளசியும், மகன் அருணும். கட்டிலைவிட்டு இறங்கி மெதுவாக ஜன்னல் ஓரத்தில் நின்று கொண்டு வெளியில் வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினேன்.
ஜன்னல் கண்ணாடியில் சாரலால் கீற்று கீற்றாக வழிந்தோடிக் கொண்டிருந்தது மழைநீர்.
வெளியில் வழிந்த மழைநீரால் பனிபோல கண்ணாடியின் உள்ளுக்குள் படிந்த புகை போன்ற நீர்த்திவலைகளின் மீது கைகளால் கோடு கிழித்தேன்.
குறுக்கும் நெடுக்குமாக உருவமில்லாமல் அலைபாய்ந்தன விரல்கள்.
மின்னல் வெளிச்சத்தில் மலைச் சரிவுகளில் தெரிந்த விளக்கு வெளிச்சங்கள் மழைத் துளிகளையும் ஊடுருவி நட்சத்திரங்கள் போல ஜொலித்து வானம் தரைக்கு இறங்கியது போலத் தெரிந்தது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமின் தலைநகர் அய்ஜலில் உள்ள மத்திய அரசின் குவார்டர்ஸ் ஒன்றில் நின்று கொண்டிருந்தேன்.
சமதளமாக இருந்த மலைப்பிரதேசத்தில் வசதியாக அமைந்திருந்த தொகுப்பு வீடுகள்.
மேலொன்றும், கீழொன்றுமாக இரண்டு வீடுகள்.
கீழ் வீட்டில் உடன் வேலை செய்யும் ஹிமாச்சலப் பிரதேச நண்பன் அர்ஜூன் வர்மா.
வீட்டைவிட்டு வெளியில் வந்த இந்த பத்து வருடங்களில் எங்கள் யூனிட் எங்குச் சென்றாலும் என்னுடன் பயணிக்கும் சக பணியாளன்.
எங்கள் பணியில் இது சாத்தியமில்லை என்றாலும், உறவுகளை விட்டு விலகி இருக்கும் எங்களுக்கு உறவாக இருக்கட்டும் என்று கடவுள் விட்டு வைத்திருக்கிறார் என்கிற நினைப்பு அடிக்கடி எழுவதை தவிர்க்க முடிவதில்லை.
நாட்டின் எல்லையோர மாநிலங்களில் சாலைகள் அமைக்கும் மத்திய அரசின் (BRO) பணியில் இன்ஜினியர்களாக இருக்கின்றோம் இருவரும். அவனுக்கு இரண்டு குழந்தைகள். ஒரு பெண் குழந்தை பனிரெண்டு வயது, ஆண் பிள்ளை அருணின் வயது. மனைவி பூனம் வர்மா.
துளசியைவிட வயதில் பெரியவளாக இருந்தாலும் என்னை பையா(அண்ணா) என்று ஹிந்தியில் அழைப்பவள், துளசியை பாபி(அண்ணி) என்றே அழைப்பாள். இன்றைய நிலையில் எங்களுக்கு சொந்தம், பந்தம், ஊர், உறவு எல்லாம் இவர்களே.
நினைவுகள் எங்கெங்கோ பறந்தன. தொடர்மழையால் காலை எழுந்தவுடன் எங்கெல்லாம் மலைச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து ஆட்களை வைத்து சரிசெய்யவேண்டும். மற்ற நேரங்களில் மலையைக் குடைந்து ரோடு அமைக்கும் பணி.
வேலை எப்பொழுதும் எல்லையோர மாநிலங்களில் மட்டுமே இருக்கும்.
சில சமயங்கள் அண்டை நாடுகளுக்குள்ளும் வேலை நிமித்தமாக பயணம் செய்ய வேண்டியிருக்கும்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நாட்டின் வடக்கு மாநிலங்களுக்கும், வடகிழக்கு மாநிலங்களுக்கும் மாறி மாறி பயணம்.
இதுதான் வேலை என்றான பிறகு சலிப்பு வருவதில்லை.
சிறுவயதிலிருந்து ஓரிடத்தில் நிற்கப் பிடிக்காத எனக்கு இந்த வேலை பிடித்தமானதுதான்.
இப்படியான அலைச்சலால் எப்பொழுதும் படுத்தவுடன் தழுவிக் கொள்ளும் உறக்கம் இன்று பிடிபடவில்லை. அப்படி ஓடி ஓடி வேலை செய்வதே ஊரை நினைக்காமல் உறங்குவதற்கே. ஆனால்