Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaattrukku Thoothu Vittu...!
Kaattrukku Thoothu Vittu...!
Kaattrukku Thoothu Vittu...!
Ebook189 pages1 hour

Kaattrukku Thoothu Vittu...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ராஜீவ் மற்றும் சஹானா என்பவர்கள் காதல் திருமணத்தில் இணைந்து, வாழ்க்கை எனும் பயணத்தை தொடர்கிறார்கள். இவர்களுக்கு அஸ்வினி என்ற குழந்தை பிறக்கிறது.

எல்லோருக்கும் அன்பு ஒரே மாதிரியான எதிர்ப்பார்ப்புகளைத் தருவதில்லை சில நேரங்களில் ஏமாற்றமாகிவிடுகின்றன. இதற்கான காரணம் என்ன? இவர்கள் வாழ்வில் ஏன் விவாகரத்து என்ற தருணம் யாரால் ஏற்பட்டது? வாசிப்போம் காற்றுக்கு தூது விட்டு...

Languageதமிழ்
Release dateJul 24, 2021
ISBN6580140906940
Kaattrukku Thoothu Vittu...!

Read more from Lakshmi Sudha

Related to Kaattrukku Thoothu Vittu...!

Related ebooks

Reviews for Kaattrukku Thoothu Vittu...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaattrukku Thoothu Vittu...! - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    காற்றுக்கு தூது விட்டு...!

    Kaattrukku Thoothu Vittu...!

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    வாங்க பேசலாம்

    உலக அளவில் சில விநோதமான சம்பவங்கள் நடக்கின்றன. ஸ்பெயினைச் சேர்ந்தவர் மார்கோஸ். அவர் காட்டில் கிட்டத்தட்ட பன்னிரெண்டு ஆண்டுகள் ஓநாயால் வளர்க்கப்பட்டு இருக்கிறார். அவர் மூன்று வயதில் தன் தாயை இழந்து விட்டார். தந்தை மறுமணம் செய்து கொண்டார். சரியான கவனிப்பு இல்லை.

    ஒரு நாள் ஒரு முதியவர் அவரைக் காட்டுக்கு அழைத்துச் சென்றார். முதியவரிடம் இருந்து சில வேலைகளையும் மார்கோஸ் கற்றுக்கொண்டார்.

    ஆனால் முதியவர் இறந்து விட, ஏழு வயதில் தனிமையாகக் காட்டில் விவரம் தெரியாமல் இருக்கத் தொடங்கினார்.

    காட்டு விலங்குகளிடம் அன்பாக அவர் நடந்துகொண்டார். ஒரு ஓநாய் அவரை அரவணைத்து வளர்க்கத் தொடங்கியது. ஓநாய்க் குட்டிகளுடன் நேரத்தை ஜாலியாகக் கழிக்கத் தொடங்கினான் இச்சிறுவன்!

    மான், பாம்பு, ஓநாய்க் குட்டிகள் என விலங்குகள்தான் இவனுக்கு ஃபிரெண்ட்ஸ். ஓநாய் அவனைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும்.

    பெர்ரி, காளான் முதலியவற்றை ஓநாய் சாப்பிடச் சொல்லும். விஷ உணவுகளைச் சாப்பிட விடாமல் செய்யும்.

    இப்படியாக இருபது வயது வரை 'ஜங்கிள் பாய்' ஆக இருந்தவனை ராணுவ வீரர்கள் மீட்டு எடுத்தனர். ஆனால் மார்கோஸிற்கு, மொழி புரியவில்லை. மனிதர்களின் வாழ்க்கை முறையும் பிடிக்கவில்லை.

    காட்டுக்குள் திரும்பச் சென்று விடலாம் என்று நினைத்துக் காட்டிற்குள் பல முறை சென்று இருக்கிறான் அவன்.

    ஆனால் இப்பொழுது அவனை அங்கே தங்க ஓநாய் 'அம்மா' அனுமதிக்கவில்லை. பிரத்யேகமான ஒலி கொடுத்தால் ஓநாய்கள் அவனிடம் வரும். கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்தும்.

    ஆனால் பிற்காலத்தில் மார்கோஸ் மீது மனித குணமும், வாசனையும் வரத் தொடங்கியதால், ஓநாய்கள் மார்கோஸ் வந்தால் குரல் கொடுப்பதோடு நிறுத்திக்கொண்டன.

    இப்பொழுது மார்கோஸிற்கு வயது எழுபத்திரண்டு. இவருக்கு இப்ப ரொம்ப டிமாண்ட். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் இவரின் அனுபவத்தைத் திரட்டி ஆவணப்படுத்துகிறார்கள்.

    ஜங்கிள் புக் கதை நிஜம்தான்!

    என் நாவல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் 'அன்பு இல்லம்' பதிப்பகத்தாருக்கு என் நன்றி.

    என் நாவல்களைத் தொடர்ந்து படித்து ஆதரவு தெரிவித்து வரும் என் வாசகர்களுக்கும் என் நன்றி.

    விமர்சனங்களை வரவேற்கிறேன்.

    அன்புடன்,

    லட்சுமி சுதா

    lakshmisudha2010@yahoo.com

    lakshmisudha2010@gmail.com

    1

    இது இரவும்

    இல்லை!

    இது பகலும்

    இல்லை!

    அந்தி மாலை!

    மஞ்சள் பூக்கள்

    போர்த்திய சாலை!

    பூக்களின் கலவையாக

    நீ நடந்து வர

    குழம்பியது

    நான் மட்டும்

    இல்லை!

    மலர்களுமே!

    அட! இது

    காலைப் பொழுதா என்ன?

    சொல்லடி பெண்ணே!

    அழகான காலைப் பொழுது.

    பெயர் தெரியாத பறவைகளின் சப்தம் கேட்டுக் கண் விழித்தாள் சஹானா. இன்னொரு புதிய நாள் உதயமாகிவிட்டது.

    காலம்தான் எவ்வளவு வேகமாகச் சுழல்கிறது. யாருக்கும் காத்துக்கொண்டிருக்காமல், தன் போக்கில் ஓடுகின்ற காலம்தான் இந்த உலகின் நியதியா?

    யுகம் யுகங்களாகக் காலம் சுழல்கிறது. யாருக்கு என்ன நிகழ்ந்தாலும் எனக்குக் கவலை இல்லை என்பதுபோல் காலம் சுழல்கிறது.

    எல்லோருக்கும் காலம் ஒரே மாதிரியான விளைவுகளையும், எதிர்பார்ப்புகளையும், சவால்களையும் அளிப்பது இல்லை.

    அந்த மாதிரி இருந்தால் இந்த வாழ்க்கையில் எந்தச் சுவாரசியமும் இல்லை. அதனால்தான் தன் வாழ்க்கை எப்பொழுதுமே, சவால்கள் நிறைந்ததாக இருக்கிறதுபோல என நினைத்தபடியே படுக்கையில் தன் அருகில் உறங்கும் அஸ்வினியைப் பார்த்தாள் அவள்.

    இன்றைக்குப் பள்ளி விடுமுறை. அதனால் குழந்தை மெதுவாகவே எழுந்திருக்கட்டும். பாவம், இன்று ஒரு நாளாவது நிம்மதியாகத் தூங்கட்டும் என மனதிற்குள் நினைத்தபடியே, படுக்கையில் இருந்து எழுந்தாள் சஹானா.

    இன்று இவளை கிரெச்சில் விட்டு விட்டு கோர்ட்டுக்குப் போக வேண்டும். ஐந்தாவது படிக்கும் குழந்தைக்கு கிரெச் அதிகப்படிதான்.

    ஆனால் பாதுகாப்பான இடம் வேறு ஏதும் இல்லை. மழை என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை.

    சென்னைவாசிகளுக்கு, மழை என்பது பயத்தை அளிக்கும் விஷயமாக, அண்மைக் காலங்களில் மாறிவிட்டது.

    சரியாக தூர் வாரப்படாத ஆறுகளும், ஏரிகளும் இதற்குக் காரணம். மழை வந்தால் தண்ணீர் தேங்கி வெளியேற வர முடியாமல் சாலைகள் திணறுகின்றன அரசியல்வாதிகளின் ஊழல் பெருத்துவிட்டது.

    மக்கள் மன்றத்தில், தீர்ப்பு வரும்பொழுது அவர்களுக்குப் புரியும், நியாயத்தின் அருமை என்று நினைத்தபடியே காலை வேலைகளைக் கடகடவென முடித்தாள்.

    அஸ்வினிக்குத் தேவையான உணவை ஹாட் பேக்கில் வைத்து மூடினாள். பின்பு வாட்டர் பாட்டிலில் தண்ணீர் ஊற்றி வைத்தாள்.

    அஸ்வினியை எழுப்பினால் இப்பொழுது சரியாக இருக்கும் என முடிவு செய்தவள் அவன் அறைக்குச் சென்றாள்.

    ஹாய் அஸ்வினி குட்டி... குட் மார்னிங். எழுந்திருங்க... என்றபடியே அவள் கன்னத்தைத் தட்டினாள்.

    ம்... அம்மா... இன்னும் கொஞ்ச நேரம்... என்று சிணுங்கினாள் அஸ்வினி.

    ப்ளீஸ் அம்மா, இன்னும் டென் மினிட்ஸ்.

    நோ பேபி... ஃபைவ் மோர் மினிட்ஸ் ஒன்லி... என்றாள் தீர்மானமாக அவள்.

    ஓ.கே. அம்மா தேங்க்ஸ்... என்றபடியே தலையணையைக் கட்டிக்கொண்டாள் அஸ்வினி.

    கைபேசி சிணுங்கும் ஒலி கேட்க, ஹாலிற்கு விரைந்தாள் சகானா.

    திரையில், தியாகு என்று ஒளிர்ந்தது.

    ஹாய் தியாகு... குட் மார்னிங்.

    ஹாய் சஹானா, குட் மார்னிங். இன்னிக்கு அந்த டைவர்ஸ் கேஸை நீதான் ஹேண்டில் செய்யணும்.

    ஏன் சார்தானே அதைப் பார்க்கணும்.

    இல்ல... அவர் வீட்டில எமெர்ஜென்ஸி. அவர் வொய்ஃபுக்கு சின்ன ஆக்ஸிடெண்ட். அதனால அவர் ஹாஸ்பிடலுக்குப் போய் இருக்கார்.

    ஓ... ஓ.கே. இப்ப எப்படி இருக்காங்க மேடம்?

    ம்... திங்க் ஷி இஸ் பெட்டர். நீ சீக்கிரம் கிளம்பி வா. கேஸ் டீடெயில்ஸ் நான் தயாராக எடுத்து வைக்கிறேன்.

    ஓ.கே. தியாகு. ஷ்யூர்... தேங்க்ஸ் ஃபார் தி இன்ஃபர்மேஷன்... என்றபடியே இணைப்பைத் துண்டித்தாள் சஹானா.

    ஹீட்டரில் வெந்நீர் தயாராக இருக்கும். குளித்துவிட்டு, அஸ்வினியைக் கிளப்பலாம் என்று நினைத்துக்கொண்டே, குளியல் அறை நோக்கிச் சென்றாள்.

    குளித்துவிட்டுத் தனக்குப் பிடித்தமான, சிவப்பு வண்ணப் புடவையை உடுத்திக்கொண்டவள், பூஜை அறையில் இருந்த சாமி படங்களுக்குப் பூப்போட்டு ஆரத்தி எடுத்தாள்.

    வாராஹியே, இந்த நாளில் நீ நல்லவர்களுக்குத் துணை புரி... என்று வேண்டியபடியே, கற்பூர ஆரத்தி எடுத்து முடித்தாள்.

    அம்மா, பாருங்க... நானே கண் விழித்து விட்டேன்... என்று அவளைப் பின்புறமாக வந்து, அணைத்துக் கொண்டாள் அஸ்வினி.

    ஓ... குட் கேர்ள். அதே மாதிரி சீக்கிரம் பிரஷ் செய்து, குளிச்சுட்டு வாங்க... என்றாள் புன்னகைத்தபடியே.

    ஓ.கே. அம்மா... என்றபடியே குளியல் அறை நோக்கிச் செல்லும் அஸ்வினியைப் பார்த்து மனம் நெகிழ்ந்தது.

    பாவம் குழந்தை! என்று நினைக்கும் பொழுது பெருமூச்சு ஒன்று அவளை அறியாமல் பிறந்தது.

    அடுத்த முப்பது நிமிடத்தில், அவள், அஸ்வினியை அழைத்துக்கொண்டு, வீட்டைப் பூட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

    அஸ்வினியின் கிரெச் அவள் வீட்டில் இருந்து, ஐந்து நிமிடங்கள் தான். அதனால் ஸ்கூட்டியில் அவளை விட்டு விட்டு, ஆபீஸுக்குச் சென்று விடுவாள். இன்று மழையினால் சாலை எங்கும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியபடி இருந்தது.

    ரெயின் கோட் அணிந்திருந்ததால், மழையின் வீரியம் தெரியவில்லை.

    தொடர்ந்து அதேபோல் சீராக மழை பெய்தபடி இருந்தது.

    அம்மா ரெயின் ரெயின் கோ அவே பாடினாலும் மழை போகாது போல.

    யெஸ் அஸ்வினி. மழை நல்லதுதான். பெய்யட்டும். நீ இப்ப சமர்த்தா கிரெச்சுக்குப் போ. சாயங்காலம் பார்க்கலாம். குட் கேர்ளா சாப்பிடணும். ஓ.கே.வா...

    ஓ.கே. ஐ வில் ட்ரை... என்று சொல்லிவிட்டு செல்லும் அஸ்வினியைப் பார்த்து தனக்குத் தானே சிரித்துக்கொண்டாள்.

    பை பேபி... என்று சொல்லிவிட்டு ஸ்கூட்டியைக் கிளப்பினாள்.

    அவளுடைய ஆஃபீஸ் மந்தவெளியில் உள்ளது.

    அடையாறில் இருந்து மந்தவெளிக்குச் செல்ல நார்மலாக முப்பது நிமிடங்கள் ஆகும்.

    ஆனால் இந்த மாதிரி மழையில் இன்னும் கூட கொஞ்சம் நேரம் கண்டிப்பாக ஆகும். வேறு வழியில்லை.

    மழை நீரிலும், டிராபிக்கிலும் நீந்தித்தான் போக வேண்டும் என்று தன்னைத் தானே தேற்றிக்கொண்டாள்.

    ஒரு வழியாக பத்து மணிக்கு அலுவலகத்தை அடைந்தாள்.

    ஹாய் சஹானா... மழை போதுமா? என்றான் தியாகு.

    ம்... போதும். ஆனால் போதாது.

    ஏய் காலையில... என்ன காமெடி இது... வடிவேலு மாதிரி.

    ம்... காமெடி இல்லை. தத்துவம். மழை போதும்னு ஏன் சொன்னேன்னா ரோடெல்லாம் அவ்வளவு மோசமா இருக்கு. பப்ளிக் எல்லாருக்கும் கஷ்டம். ஆனால் வறட்சி போகணும்னா மழை வேணும். அதனால தான் போதாது அப்படின்னு சொன்னேன்... என்றாள் ரெயின் கோட்டைக் கழற்றியபடியே அவள்.

    ஆஹா... சூப்பர். என்ன ஒரு தத்துவம்.

    ஏய் போதும். கேஸ் ஷீட் ரெடியா? நான் படிக்கணும்.

    யெஸ்... பிரிண்ட் அவுட் எடுத்து உன் டேபிள் மேல் வெச்சுருக்கேன்.

    ஒ.கே. தேங்க்ஸ்.

    ம்... சுருக்கமா, உனக்காகச் சொல்றேன். ஹஸ்பண்ட் பெயர் மனோகர், வைப் சர்மிளா. லவ் மேரேஜ். கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆயிடுச்சு. மியூச்சுவல் கன்சன்ட்டில் டைவர்ஸ் கேட்கறாங்க.

    ஓ... என்ன ரீசன்... லவ் மேரேஜ் தானே!

    ரொம்ப பெரிய ரீசன் எனக்குத் தெரிஞ்சு ஏதும் இல்லை. இரண்டு பேர் ஈகோதான் காரணம்.

    ஓ.கே. நான் பேசறேன். வந்துட்டாங்களா? எப்ப அப்பாயின்ட்மென்ட்?

    ம்... இன்னும் அரை மணி நேரம் டயம் இருக்கு.

    ஓ.கே... தேங்க்ஸ். நான் கேஸ் ஹிஸ்டரியைப் படிக்கறேன்... என்றபடியே அறைக்குள் சென்றாள்.

    அடுத்த கால் மணி நேரம்,

    Enjoying the preview?
    Page 1 of 1