Nizhal Thedum Nijangal
By Latha Baiju
()
About this ebook
நிஜ உலகத்தில் அல்லாமல் நிழலாய் மனதுக்குள் ஒரு உலகம் படைத்து அதற்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் நாயகி. தன் காதலால் நிகழ்வுக்கு கொண்டு வருவானா நாயகன். நிழல் வேறு நிஜம் வேறென்று புரிந்து இருவரும் இல்வாழ்வில் இணைந்தார்களா என்பதே நிழல் தேடும் .நிஜங்கள்..
Read more from Latha Baiju
Kaadhalenbathu Yaathenil Rating: 5 out of 5 stars5/5Mazhaiyodu Uravadi Rating: 4 out of 5 stars4/5Kannanin Seethai Rating: 3 out of 5 stars3/5Brahmanin Panithuli Rating: 5 out of 5 stars5/5Avalum Naanum Rating: 5 out of 5 stars5/5Layam Thedum Thaalangal Rating: 5 out of 5 stars5/5Nesa Veli Rating: 4 out of 5 stars4/5Aaruyire... En Oruyire... Rating: 5 out of 5 stars5/5Uyir Sumantha Urave Rating: 0 out of 5 stars0 ratingsVizhigalukku Vilangidu Rating: 3 out of 5 stars3/5Mun Anthi Saral Nee... Rating: 5 out of 5 stars5/5Ithayame Ithayame Rating: 4 out of 5 stars4/5Maiyal Thelintha Nilavu Rating: 5 out of 5 stars5/5Neeyenge Ninaivugalange Rating: 2 out of 5 stars2/5Thirukkural Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Manam Kooduthillaiye Rating: 5 out of 5 stars5/5Uyir Unarum Va(li)zhiyo Kaadhal Rating: 3 out of 5 stars3/5Aboorva Raagangal Rating: 4 out of 5 stars4/5Vaasal Vantha Vanaville Rating: 5 out of 5 stars5/5Vanam Vasapadum Thooram Rating: 0 out of 5 stars0 ratingsNishaptha Mozhigal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Ratchagan Rating: 0 out of 5 stars0 ratingsThedamal Ponal Kaanamal Poven Rating: 0 out of 5 stars0 ratingsVidiyalil Oru Vennila Rating: 5 out of 5 stars5/5Pazhamozhi Kathaigal Rating: 5 out of 5 stars5/5Imaipeeli Neeyadi Rating: 4 out of 5 stars4/5Kaadhal Thotta Rating: 0 out of 5 stars0 ratingsCelluloid Kanavugal Rating: 1 out of 5 stars1/5Appavin Dairy Rating: 5 out of 5 stars5/5
Related to Nizhal Thedum Nijangal
Related ebooks
Nenjamellam Kaadhal Rating: 5 out of 5 stars5/5Rajanodu Rani Vanthu Serum! Rating: 4 out of 5 stars4/5Anbin Vaasaliley... Rating: 0 out of 5 stars0 ratingsVizhigalukku Vilangidu Rating: 3 out of 5 stars3/5Endhan Manam Unnai Sutruthey... Rating: 4 out of 5 stars4/5Thenralaga Nee Varuvaayaa Rating: 5 out of 5 stars5/5Natchathira Poonthottathil Rating: 0 out of 5 stars0 ratingsVidiyalil Oru Vennila Rating: 5 out of 5 stars5/5Uyirin Uyire Rating: 4 out of 5 stars4/5Nesa Veli Rating: 4 out of 5 stars4/5Uyir Sumantha Urave Rating: 0 out of 5 stars0 ratingsPookkale Oivedungal! Rating: 5 out of 5 stars5/5Then Pothigai Santhana Kaatrey! Rating: 3 out of 5 stars3/5Maiyal Thelintha Nilavu Rating: 5 out of 5 stars5/5Tholai Thoora Velicham Nee! Rating: 4 out of 5 stars4/5Azhagai Pookkuthe... Rating: 5 out of 5 stars5/5Vanam Vasapadum Thooram Rating: 0 out of 5 stars0 ratingsNallathor Veenai Seithe...! - Part 1 Rating: 5 out of 5 stars5/5Panneeril Nanaintha Pookkal Rating: 3 out of 5 stars3/5Aayiram Nilavae Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsSippi Vantha Muthu... Rating: 4 out of 5 stars4/5Vaarayo Vennilave! Rating: 5 out of 5 stars5/5Vizhigalil Ethanai Mozhigal! Rating: 0 out of 5 stars0 ratingsEngirundho Vandhan Rating: 1 out of 5 stars1/5Nishaptha Mozhigal Rating: 0 out of 5 stars0 ratingsEngey Enathu Kavithai? Rating: 0 out of 5 stars0 ratingsJagame [Kaadhal] Thanthiram Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Cafe Rating: 5 out of 5 stars5/5Thiruttu Payale Rating: 0 out of 5 stars0 ratingsEppozhuthum Un Soppanangal…! Rating: 4 out of 5 stars4/5
Reviews for Nizhal Thedum Nijangal
0 ratings0 reviews
Book preview
Nizhal Thedum Nijangal - Latha Baiju
http://www.pustaka.co.in
நிழல் தேடும் நிஜங்கள்
Nizhal Thedum Nijangal
Author:
லதா பைஜூ
Latha Baiju
For more books
http://www.pustaka.co.in/home/author/latha-baiju
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
1
என் நிழலின் நிஜமாய்
நினைவுக்குள் நிறைந்து நிற்பவனே...
நிழல் தேடும் நெஞ்சத்துக்கு
நிஜம் தன்னை உரைத்துவிட மாட்டாயா...
கோவை ரயில் நிலையம்...
டிடிங்... டிடிங்... டிடிங்...
மைக்கில் அறிவிப்பு வரப் போவதற்கான ஓசையைத் தொடர்ந்து ஒரு பெண்ணின் குரல் மிதந்து வந்தது.
பயணிகளின் பணிவான கவனத்திற்கு... வண்டி எண் 1.. 2.. 6.. 7.. 3.. சென்னை கோயம்பத்தூர் சேரன் எக்ஸ்பிரஸ் பிளாட்பார்ம் நம்பர் ஐந்தில் இன்னும் சற்று நேரத்தில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது...
காலை நேரக் குளிரில் இதமாய் மிதந்து வந்த தமிழ் அறிவிப்பைத் தொடர்ந்து ஹிந்தி, ஆங்கிலத்திலும் அதையே மொழிபெயர்த்து சொல்லிக் கொண்டிருந்தது.
ரயிலில் வந்து கொண்டிருக்கும் தங்கையை அழைத்துச் செல்வதற்காய் வந்து காத்திருந்த ராஜேஷ் தன் கையைத் திருப்பி மணியைப் பார்த்தான். நேரம் காலை ஐந்து நாப்பது தாண்டி விட்டதை அவன் கடிகாரத்தில் இருந்த ரேடியம் முட்கள் உணர்த்தியது.
அந்த காலை நேர சில்லிப்பிலும் பரபரப்பாய் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த மக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
சற்று நேரத்தில் பாங்க்.........
என்று காற்றைக் கிழித்துக் கொண்டு ஹாரன் ஒலிக்க இருட்டில் சின்ன வெளிச்சப் புள்ளி ஒன்று உற்பத்தியாகி பெரியதாய் நெருங்கி வந்தது. ஒரு பெரிய அலறலோடு நெளிந்து வந்து பிரேக் போடப்பட்டதும் தன் இரும்பு உடலின் மூச்சை சர்ராக்...
என்று பெருமூச்சோடு நிறுத்திக் கொண்டது.
நீளமாய் நீண்டு கிடந்த வண்டியில் இருந்து ஜனங்கள் கீழே உதிர்ந்து கொண்டிருக்க ரிசர்வேஷன் போகியில் இருந்து களைப்புடன் வெளியே வந்தாள் சத்யா. சரியாகத் தூங்காமல் களைத்திருந்தாலும் பறந்து கொண்டிருந்த தலைமுடியை ஒதுக்கி முகத்தைக் கழுகி நெற்றிக்கு ஒரு சின்னப் பொட்டைத் தொட்டிருந்தாள்.
சென்னையில் எஞ்சினியரிங் கடைசி பரீட்சையை முடித்த கையோடு அவளது செல்லத் தாத்தாவின் உடல்நிலை சீரியசாக இருப்பதாக வந்த செய்தி கேட்டு அடுத்த நாள் நண்பர்களுடன் இருந்த கொண்டாட்டத்தை கேன்சல் செய்தவள் அவசரமாய் வண்டியேறி இருந்தாள்.
கீழே இறங்கியவள் பார்வையை ஓட்ட அவள் கண்ணில் கையை அசைத்துக் கொண்டே அவளை நோக்கி வந்து கொண்டிருந்த அண்ணன் ராஜேஷ் சிக்கினான்.
அண்ணா... தாத்தாக்கு இப்போ எப்படி இருக்கு...
என்று கேட்டுக் கொண்டே வந்தவளின் கையில் இருந்த பேகினை வாங்கிக் கொண்டான் ராஜேஷ்.
கொஞ்சம் சீரியஸா தான் இருக்கும்மா... மூச்சு விடவே கஷ்டப் படுறாரு... உன்னை தான் பார்க்கணும்னு நேத்திருந்து சொல்லிக்கிட்டே இருக்காரு... இன்னையோட உன் பரீட்சை முடிஞ்சிருமேன்னு தான் நேத்து சொல்லலை...
என்றான்.
அச்சோ... டாக்டர் என்ன சொல்லுறார் அண்ணா...
என்றாள் கவலையுடன்.
டாக்டர் கையை விரிச்சுட்டார்மா... இன்னும் ஒரு வாரம்... பத்து நாள்தான்... அதுக்கு மேல போகாதுன்னு வீட்டுக்கு கூட்டிப் போக சொல்லிட்டார்...
என்றான் நடந்து கொண்டே. கார் நிறுத்தியிருந்த இடத்துக்கு வந்து பேகை உள்ளே வைத்தவன் சத்யா அமர்ந்ததும் காரை நகர்த்தினான்.
அவர்களின் தாத்தா பரமேஸ்வரனுக்கு நுரையீரலில் ஏதோ பிரச்சனை இருக்க வெகு நாட்கள் மருந்துகளின் உபயத்தில் நாட்களைத் தள்ளிக் கொண்டிருந்தவர் இப்போது தன் இறுதி நாட்களை எண்ணத் தொடங்கி விட்டார். குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் அவருக்கு விடை கொடுக்க வீட்டில் கூடி இருந்தனர்.
சத்யாவிற்கு தாத்தாவை மிகவும் பிடிக்கும்... சிறு வயதிலேயே அவளது தந்தை இறந்துவிட இரண்டு குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்த மகளையும் பேரக் குழந்தைகளையும் தங்களுடைய பொறுப்பாக ஏற்றுக் கொண்டு இது வரை அவர்களுக்கு எந்தக் கஷ்டமும் தெரியாமல் பாதுகாப்பையும் அன்பையும் வாரி வழங்குபவர்.
அவளுக்கு என்ன வேண்டுமென்றாலும் அவரிடம் தான் கேட்பாள்... அவருக்கும் மகள் வயிற்றுப் பேத்தியான அவள் தான் பேரக் குழந்தைகளிலே மிகவும் செல்லம்... சத்யாவின் தந்தை ராகவன் தபால் துறையில் வேலையில் இருந்தார். ஒரு ஹார்ட் அட்டாக்கில் அவர் இதயம் துடிப்பதை நிறுத்திக் கொள்ள அவர் மனைவி சாரதாவிற்கு அதே துறையில் வேலை கிடைத்தது.
ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாய் இரு குழந்தைகளை பெற்றோரின் பொறுப்பில் விட்டுவிட்டு அவர் வேலைக்கு சென்று வரத் தொடங்கினார்... அளவான செல்வத்துடன் வளமான வாழ்வு வாழ்ந்து வந்தனர். ராஜேஷ் ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில் நல்ல பதவியில் இருந்தான். சத்யா இப்போது தான் எஞ்ஜினியரிங் முடித்து வீடு திரும்புகிறாள்.
சத்யாவின் கையைப் பரிவுடன் பற்றிக் கொண்டன அந்த முதிர்ந்த சுருங்கிய கைகள். மகள் குடும்பமும் மகன் குடும்பமும் நெருங்கிய சொந்தங்களும் வீட்டில் நிறைந்திருந்தனர்.
ச... சத்திம்மா...
என்று அவளை அருகில் அழைத்து அமர்த்திக் கொண்டார். மூச்சு விடவே சிரமப் பட்டுக் கொண்டிருந்த அவரைக் கண்டு அவள் கண்கள் கலங்கியது. அவள் தோளில் ஆதரவாய் கை வைத்தார் பாட்டி வைதேகி. மகள் சாரதாவையும் மகன் சங்கரையும் கை காட்டி அருகில் அழைத்தார். சத்திம்மா... தாத்தாக்கு ஒரு ஆசை...
என்றார் அவள் கையைப் பிடித்துக் கொண்டே.
என்ன ஆசை பாட்டி... இத்தனை பேர் இருக்கோம்... அவரோட ஆசையை நிறைவேத்தி வைக்க முடியாதா என்ன...
என்றாள் தாத்தாவின் கைகளை ஆறுதலாய்த் தடவிக் கொண்டே கமுறிய குரலுடன்.
அது நீ நினைச்சா தான்மா நிறைவேத்த முடியும்...
நானா... என்னண்ணு சொல்லுங்க பாட்டி... என் தாத்தாவின் ஆசையை நான் நிறைவேத்த மாட்டேனா...
என்றாள் வருத்தத்துடன்.
ம்ம்... தாத்தாக்கு உனக்கும் நம்ம பிரகாஷ்க்கும் கல்யாணம் செய்து பார்க்கணும்னு ஆசை... எங்க எல்லாருக்கும் இதில் விருப்பம் தான்... உன்னோட சம்மதம் மட்டும் தான் பாக்கி... நீயும் சரின்னு சொன்னா... நாளைக்கே நாள் நல்லாருக்கு... நம்ம சொந்தங்களும் எல்லோரும் இருக்காங்க... இங்கேயே தாத்தா முன்னாடி வீட்ல கல்யாணத்தை வைச்சுக்கலாம்மா...
என்றவர் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க அவள் அதிர்ச்சியோடு நோக்கினாள்.
பாட்டி... என்ன சொல்லறீங்க... எனக்கு.... நான்...
என்று அவள் வார்த்தைகளை சொல்ல முடியாமல் முழுங்கவும்,
எனக்கு தெரியும்மா... உனக்கு இன்னும் மேல படிக்கணும்னு ஆசைன்னு... ஆனா தாத்தா ஆசையை இப்போ நிறைவேத்தி வைக்கலேன்னா அது எப்பவும் நம்ம மனசுல ஒரு உறுத்தலா இருக்கும்மா...
அதில்லை பாட்டி... சட்டுன்னு கல்யாணம்னு சொன்னா...
என்று தயங்கியவளை ஆதரவாய் தோளில் கை வைத்து சமாதானப் படுத்தினார்.
சத்திமா... உன் கல்யாணத்தைப் பார்க்கனும்னு அவருக்கு ரொம்ப ஆசை... அதை மனசுல வச்சுக்கிட்டு தான் அவர் இப்படிக் கிடந்து இழுத்துகிட்டு அவஸ்தைப்படுறார்னு நினைக்கறேன்... அவர் கஷ்டப் படுறதைப் பார்க்க என்னால முடியலை...
என்றவர் வாயைப் பொத்திக் கொண்டு குலுங்கி அழுதார்.
அதைக் கேட்டு பதறியவள், பாட்டி...
என்று அவரை கண்ணீருடன் அழைக்க,
உன் கல்யாணத்தைப் பார்க்கணும்னு தான் அவர் உடம்பில் உசுரு ஒட்டிக் கிட்டு இருக்கோ என்னவோ... சம்மதம்னு சொல்லு கண்ணு...
என்றார் அவள் கையைப் பிடித்துக் கொண்டு.
இத்தனை நாள் தங்களை ஒரு குறையும் அறியாமல் பார்த்துக் கொண்ட அந்த வயதான உள்ளங்களின் அன்பும் அக்கறையும் அவள் மனதில் வந்து போனது.
அவள் அருகில் வந்த அன்னை சாரதா, என்னடா... பாட்டி அழுகுறாங்க பாரு... உன்னால தாத்தா ஆசையை நிறைவேத்த முடியாதா...
என்றார் அவள் காதில் மெல்ல. அதைக் கேட்டதும் அவள் மனதில் ஏதேதோ எண்ணங்கள் போராடிக் கொண்டிருக்க தாத்தாவின் அருகே அமர்ந்திருந்தவள் சட்டென்று எழுந்தாள். அதற்குள் அவள் கையைப் பற்றியிருந்தார் பரமேஸ்வரன்.
அவளிடம் கெஞ்சலாய் ஒரு பார்வையை பார்த்தவர் மூச்சை இழுத்துவிடக் கஷ்டப் பட்டுக் கொண்டே சம்மதிக்குமாறு தலையசைத்து வேண்டினார். அந்தக் கண்களின் ஏக்கமான அந்தப் பார்வை அவள் மனதை ஏதோ செய்ய சம்மதமாய் தலையாட்டியவள் எழுந்து அவள் அறைக்கு சென்று விட்டாள்.
ம்ம்ம்... எப்படியோ மாமா ஆசைப்படி என் மருமகளும் கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டா... இனி நடக்க வேண்டியதைப் பார்க்கலாம்...
என்றார் பிரகாஷின் அன்னை வாசுகி.
சத்யாவின் மாமா சங்கரும் அத்தை வாசுகியும் அரசு வங்கியில் வேலை செய்து வந்தனர். பிரகாஷ் பாங்களூரில் ஒரு ஐடி கம்பெனியில் நல்ல பதவியில் இருந்தான். ஒரே பையன். அழகாய் இருப்பான்... மிகவும் பொறுமையானவன். இப்போது தாத்தாவின் உடல் நிலை காரணமாய் லீவில் வந்திருந்தான்.
பிரகாஷிற்கும்