Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Avalum Naanum
Avalum Naanum
Avalum Naanum
Ebook126 pages1 hour

Avalum Naanum

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

அழகான இரு தோழியருக்குள் மலரும் நட்பு காதலால் கருகிப் போகுமா... காதலை விட நட்பே சிறப்பென்று உணர்த்துகிறார்கள் காவ்யாவும் அஞ்சலியும்... ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து புரிதலை வளர்த்துக் கொண்டால் எந்த சூழ்நிலையும் நட்பு மாறுவதில்லை... அப்படிப்பட்ட தோழியரின் நட்பை சொல்லும் கதையே அவளும் நானும்...

Languageதமிழ்
Release dateJul 15, 2020
ISBN6580134405622
Avalum Naanum

Read more from Latha Baiju

Related to Avalum Naanum

Related ebooks

Reviews for Avalum Naanum

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Avalum Naanum - Latha Baiju

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    அவளும் நானும்

    Avalum Naanum

    Author :

    லதா பைஜூ

    Latha Baiju

    For more books

    https://www.pustaka.co.in/home/author/latha-baiju

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    மாலை நான்கு மணி. சென்னை ரயில்நிலையம் ஜனத்திரளால் நிறைந்திருந்தது. தஞ்சாவூர் செல்வதற்கான சென்னை எக்மோர், திருசெந்தூர் எக்ஸ்பிரஸ் தனது பிளாட்ஃபார்மில் வந்து நின்றதும், தடதடவென்று பயணிகள் கூட்டம் உதிர்ந்து விலகியதும், மகளுக்கான இருக்கையின் எண்ணை சரிபார்த்து அவளது லக்கேஜை மேலே வைத்துவிட்டு அவளிடம் வந்தார் ஈஸ்வர்.

    அஞ்சும்மா… பார்த்து பத்திரமாப் போயிட்டு வாடா… அப்பப்போ அப்பாவுக்கு போன் பண்ணிட்டே இரு… ஒவ்வொரு ஸ்டேஷன் வந்ததும் காவ்யாவுக்கு போன் பண்ணி நீ எங்கே இருக்கேன்னு சொல்லிடு… இப்ப பார்த்து அப்பாவுக்கு ஆபீஸ் ஆடிட்டிங் வந்திருச்சு… இல்லேன்னா நானும் உன்னோட வந்திருப்பேன்… என்ற தந்தையின் புலம்பலைக் கேட்டவள் மெதுவாய் புன்னகைத்தாள்.

    அப்பா… இதையே எத்தனை தடவைதான் சொல்லுவிங்க… உங்களுக்கு பயமா இருந்தா நான் தனியா போகலைப்பா… என்றாள் மகள்.

    இல்லடா… காவ்யா அவ்ளோ தூரம் சொல்லிட்டுப் போயிருக்கா… நம்ம வீட்டுக் கல்யாணம் மாதிரி… பவ்யா உனக்கும் அக்கா போலத்தானே… எல்லாரையும் மாதிரி கல்யாணத்தன்னிக்கு போயி நின்னா நல்லாவா இருக்கும்… காவ்யா வீட்ல வருத்தப்படுவாங்க… நீ பத்திரமா போயிட்டு வாடா… என்றவர் டவலால் முகத்தைத் துடைத்துக்கொண்டார்.

    வழியில் எதுக்கும் இறங்காதே… தண்ணி பாட்டில் வச்சிருக்கே தானே… என்றவரின் பரிதவிப்பை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. சரிப்பா… நான் பார்த்துக்கறேன்… நீங்க பயப்படாம இருங்க… பாட்டியை நேரத்துக்கு மாத்திரை போட சொல்லுங்க… நீங்களும் வேளாவேளைக்கு சாப்பிடுங்க… கல்யாணத்துக்கு எப்படியாவது நீங்களும் வந்திடுங்கப்பா… பவ்யாக்கா வருத்தப்படுவாங்க… என்றாள் அஞ்சலி.

    ம்ம்… சரிம்மா… முயற்சி பண்ணறேன்… நீ பத்திரமாப் போயிட்டு வா… என்றவர் ரயில் எடுப்பதற்கான ஒலிபரப்பு கேட்கவும் கீழே இறங்கி கையசைத்து விடைகொடுத்தார்.

    ஜன்னலோரமாய் தன் இருக்கையில் அமர்ந்திருந்த அஞ்சலியின் கண்களுக்கு காட்சிகள் பின்னோக்கி ஓட அவள் எண்ணங்களும் பின்னோக்கி நகர்ந்தன.

    அம்மா… நான் ஸ்கூலுக்குப் போக மாத்தேன்… என்னை வீட்டுக்கே கூத்தித்துப் போங்க… கண்ணிலிருந்து கண்ணீர் அருவியாய்க் கொட்ட கையைக் காலை உதறிக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள் காவ்யா. பேபி ஷாலினி கட்டிங் செய்யப்பட்ட தலையும், எடுப்பான கண்ணும் மூக்குமாய் குட்டி பொம்மைபோல அழகாய் இருந்தாள்.

    காவ்யா குட்டி… அம்மா சொன்னா கேப்பேல்ல… நீ குட் கேர்ள் தானே… ஸ்கூலுக்குப் போனாதானே படிச்சு பெரிய ஆளாக முடியும்… அப்பாபோல ஆபீஸ் எல்லாம் போகணும்ல… அப்பதானே நீ நினைக்கறதெல்லாம் வாங்க முடியும்… நீ அழாம சமத்தா இருந்தா, அம்மா உனக்கு சாக்கி தருவேனாம்… சரியா… அழக்கூடாது… என்று கண்ணைத் துடைத்து சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள் அவளது அன்னை கவிதா.

    எனக்கு சாக்கி வேந்தாம்… ஆபீஸ் போக வேந்தாம்… அம்மாதான் வேணும்… என்று மீண்டும் தேம்பத் தொடங்கிய மகளை சமாதானிக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள். அப்போது அவர்களுக்கு அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு குட்டிப்பெண் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

    காவ்யாம்மா… அங்கே பாரு… அந்தப் பாப்பா எவ்ளோ சமத்தா அழாம நின்னு உன்னையே பாக்குது… நீ அழுகுறதைப் பார்த்து அழுமூஞ்சின்னு அவ அம்மாகிட்டே சொல்லப்போகுது… என்றதும், காவ்யா தலையைத் தூக்கி அந்தப் பெண்ணை பார்க்கவும், அந்தக் குட்டி தேவதை சிநேகமாய் சிரித்தது. பளீரென்று மனதை சுண்டி இழுக்கும் கள்ளம்கபடமற்ற அழகான சிரிப்பு. கவிதா அவளிடம் சிநேகமாய் சிரித்துக்கொண்டே பேசினாள்.

    ஹலோ குட்டி… உங்க பேரென்ன… நீங்க எந்தக் கிளாஸ்… என்றவளிடம், மை நேம் இஸ் அஞ்சலி ஆண்ட்டி… நான் எல்கேஜி ஏ கிளாஸ்… வாட் ஈஸ் யுவர் நேம்… இந்தா சாக்கி… என்று காவ்யாவிடம் தலையாட்டிக்கொண்டே சாக்கலேட்டை நீட்டியது.

    அழுவதை மறந்து அவளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காவ்யா அமைதியாய் இருக்க, கவிதாதான் கூறினாள். இவ பேரு காவ்யாடா செல்லம்… வாங்கிக்கோமா… அஞ்சலி எவ்ளோ அன்பா சாக்கி கொடுக்கறா… என்றவள், அஞ்சலி நீ ரொம்ப கியூட்டா அழகா இருக்கே… உன் அம்மா எங்கே… என்றாள் சிரிப்புடன். அம்மா சாமிகிட்டே போயிட்டாங்க ஆண்ட்டி… எனக்கு அப்பா மட்டும் தான்… அதோ அங்கே ஒருத்தரோட பேசிட்டு இருக்கார்… என்று தந்தையைக் காட்டிய குழந்தையின் கண்ணில் சிறு ஏக்கம் தோன்றி மறைந்தது.

    ஓ காட்… என தனக்குள் சொல்லிக்கொண்ட கவிதா, சாரிடா செல்லம்… என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவளிடம் தன் கையில் உள்ள மிட்டாயை நீட்டினாள் காவ்யா.

    அஞ்சலி… இந்தா நீயும் சாப்பிடு… நாம ரெண்டுபேரும் சாப்பிடலாம்… என்ற காவ்யாவை அவள் அன்போடு பார்க்க பெருமையோடு பார்த்தாள் கவிதா.

    காவ்யா… அஞ்சலி எப்படி கியூட்டா அழாம இருக்கா பார்த்தியா… நீயும் அவளை மாதிரி குட் கேர்ளா அழுகாம இருக்கணும்… என்று கவிதா சொல்லிக் கொண்டிருக்கும்போதே அங்கு வந்தான் காவ்யாவின் தந்தை குணசேகர்.

    காவ்யாகுட்டி… இதோ உங்களுக்காக அப்பா ஜெம்ஸ் வாங்கிட்டு வந்துட்டேன்… என்றவன் உடன் இருந்த அஞ்சலியைக் கண்டதும், இந்த குட்டி ஏஞ்சல் யாரு… இந்தாங்க உங்களுக்கும் ஜெம்ஸ்… என்று நீட்டவும் தயக்கத்துடன் வாங்கிக்கொண்டு, தேங்க்ஸ் அங்கிள்… என்று சிரித்தாள் அஞ்சலி.

    அவளைப் பற்றிக் கணவனிடம் கூறிய கவிதா, ரெண்டுபேரும் ஃப்ரண்ட்ஸ் ஆகிட்டாங்க… பார்த்திங்களா… காவ்யாகூட அழுகையை நிறுத்திட்டா… இனி இவங்க ரெண்டுபேரும் விளையாடிப்பாங்க… இல்லடா செல்லம்… ரெண்டுபேரும் கை குடுங்க… எனவும், யோசனையுடன் அஞ்சலியைப் பார்த்தாள் காவ்யா. அவளிடம் புன்னகைத்த அஞ்சலி அவளே கை நீட்ட, சிரிப்புடன் கையைப்பற்றி குலுக்கிக்கொண்டாள் காவ்யா.

    சரிம்மா… நாங்க கிளாஸ்க்கு போறோம்… நீங்க கிளம்புங்க… என்றாள் சமத்தாக. அதற்குள் அஞ்சலியின் தந்தை ஈஸ்வரும் அங்கே வந்துவிட, தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு குழந்தைகளை வகுப்பில் விட்டுவிட்டுக் கிளம்பினர். அன்று குழந்தைகளுக்குள் தொடங்கிய நட்பு அவர்களோடு சேர்ந்து வளர்ந்தது.

    ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது ஒரு பையன் அஞ்சலியின் தலையில் கொட்டி விட, அழுது கொண்டிருந்தவளைக் கண்டு கோபம்கொண்ட காவ்யா, அவனை மிஸ்ஸிடம் சொல்லிகொடுத்து அடிவாங்க வைத்தாள்.

    இருவரின் பால்யமும் ஒன்றாகவே கழிய, விடுமுறை நாட்களில் காவ்யாவின் வீட்டில்தான் இருப்பாள் அஞ்சலி.

    Enjoying the preview?
    Page 1 of 1