En Manathu Ondruthaan..!
4/5
()
About this ebook
ஷர்மிளா, ஊர்மிளா இருவரும் சகோதரிகள். கௌசிக் என்பவன் ஊர்மிளாவை காதலித்தான். ஷர்மிளா கௌசிக்கை காதலிப்பது தெரிந்து ஊர்மிளா விட்டுக்கொடுத்தாள். ஊர்மிளா யாரை திருமணம் செய்தாள்? அவள் ஏன் கௌசிக்கை விட்டுக்கொடுத்தாள்? படித்து அறிவோம்...
Read more from Muthulakshmi Raghavan
Kothikkum Panithuli..! Rating: 4 out of 5 stars4/5Puram Solla Virumbu Rating: 4 out of 5 stars4/5Kandalum Pothum Kangal Rating: 5 out of 5 stars5/5Nilavodu Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsSollathan Ninaikkirean Rating: 3 out of 5 stars3/5Uzhavan Magal..! Rating: 5 out of 5 stars5/5January Maatham Kanavugal Pookkum Rating: 4 out of 5 stars4/5Kuyil Paattu...! Rating: 5 out of 5 stars5/5Nee Engey... Rating: 5 out of 5 stars5/5Malai Nerathu Mayakkam... Rating: 0 out of 5 stars0 ratingsThanjamena Vanthavaley Rating: 1 out of 5 stars1/5Unnodu Naan..! Rating: 4 out of 5 stars4/5Markazhi Paniyil..! Rating: 0 out of 5 stars0 ratingsManam Thiruda Vandhaya..? Rating: 5 out of 5 stars5/5Poove Mayangathey Rating: 4 out of 5 stars4/5Mugil Maraitha Nilavu... Rating: 0 out of 5 stars0 ratingsMounamana Neram... Rating: 4 out of 5 stars4/5Mellisaiyaai Oru Kaadhal... Rating: 0 out of 5 stars0 ratingsNila Veliyil Rating: 4 out of 5 stars4/5Nenjathiley Nee Netru Vandhai Rating: 4 out of 5 stars4/5Neethaney Enathu Nizhal... Rating: 0 out of 5 stars0 ratingsKalvanai Kaadhali Rating: 4 out of 5 stars4/5Kaatrodu Thoothu Vittean Rating: 4 out of 5 stars4/5Rhythm Atra Swaram Rating: 3 out of 5 stars3/5Mannavan Vanthaanadi... Thozhi..! Rating: 4 out of 5 stars4/5Sollamaley... Poopoothathey Rating: 0 out of 5 stars0 ratingsUnmeethu Nyabagam... Rating: 0 out of 5 stars0 ratingsNee Enthan Vennilavu Rating: 0 out of 5 stars0 ratingsNizhalodu Nizhalaga Rating: 0 out of 5 stars0 ratings
Related to En Manathu Ondruthaan..!
Related ebooks
Markazhi Paniyil..! Rating: 0 out of 5 stars0 ratingsOttraiyadi.. Paathaiyiley... Rating: 0 out of 5 stars0 ratingsUnnaivida Oru Urava..? Rating: 0 out of 5 stars0 ratingsUnmeethu Nyabagam... Rating: 0 out of 5 stars0 ratingsMannavan Vanthaanadi... Thozhi..! Rating: 4 out of 5 stars4/5Unnodu Naan..! Rating: 4 out of 5 stars4/5Kaadhalagi Kasinthurugi... Rating: 0 out of 5 stars0 ratingsManjal Veyil Maalai Neram... Rating: 4 out of 5 stars4/5Nila Soru Rating: 0 out of 5 stars0 ratingsRhythm Atra Swaram Rating: 3 out of 5 stars3/5Thennam Paalai... Rating: 0 out of 5 stars0 ratingsManam Thiruda Vandhaya..? Rating: 5 out of 5 stars5/5Agni Paravai... Rating: 0 out of 5 stars0 ratingsEnni Irunthathu Edera... Part - 5 Rating: 3 out of 5 stars3/5Aasaiya... Kobama...? Rating: 0 out of 5 stars0 ratingsEnni Irunthathu Edera... Part - 8 Rating: 4 out of 5 stars4/5Kaathirunthen... Kaatriniley... Rating: 0 out of 5 stars0 ratingsUzhavan Magal..! Rating: 5 out of 5 stars5/5Puthithaga Oru Bhoopalam Rating: 4 out of 5 stars4/5En Nenjam Un Thanjam... Rating: 3 out of 5 stars3/5Yaarukku Mappillai Yaaro... Rating: 4 out of 5 stars4/5Neengatha Ninaivugal... Rating: 0 out of 5 stars0 ratingsVidiyalil Oru Vennila Rating: 5 out of 5 stars5/5Mayakkum Penney...! Manthaara Poovey...!! Rating: 2 out of 5 stars2/5Vaarayo Vennilave! Rating: 5 out of 5 stars5/5Inbame Iniyavale... Rating: 3 out of 5 stars3/5Uyir Sumantha Urave Rating: 0 out of 5 stars0 ratingsPakkam Vara Thudithean... Rating: 4 out of 5 stars4/5Partha Mudhal Naaley Rating: 4 out of 5 stars4/5Malai Nerathu Mayakkam... Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for En Manathu Ondruthaan..!
1 rating0 reviews
Book preview
En Manathu Ondruthaan..! - Muthulakshmi Raghavan
https://www.pustaka.co.in
என் மனது ஒன்றுதான்..!
En Manathu Ondruthaan..!
Author:
முத்துலட்சுமி ராகவன்
Muthulakshmi Raghavan
For more books
https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
1
‘சுள்’ளென்று முகத்தில் அடித்த சூரியனின் கதிர்களில் கண்விழித்தாள் ஊர்மிளா... கண்களை கசக்கி விட்டபடி ஜன்னலைப் பார்த்தாள்... வெளிச்சத்தில் கண்கள் கூசின... உறக்கம் பறந்தோடி விட்டதில் எழுந்து உட்கார்ந்து ஏஸியைப் பார்த்தாள்... அணைக்கப் பட்டிருந்தது...
பூட்டியிருந்த அறை ஜன்னல்கள் திரை விலக்கப்பட்டு... தாழ் விலக்கப் பட்டு... பப்பரப்பா என்று விரிந்து கிடப்பதின் மர்மம் என்ன...?
ஏஸியின் இதமான குளிரில் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தவளின் போர்வையைப் பறித்து அவள் முகத்தைத் தொட்டு சூரியக் கதிர்கள் கொஞ்சி விளையாடிய காரணம் என்ன...?
‘யார் இந்த சதி வேலையைச் செய்தது...?’
அறிந்து கொண்டு அவர்களுடன் குடுமிப்பிடி யுத்தம் செய்யும் சங்க முழக்கத்தை அறைகூவ எண்ணி வாய் திறந்தவளின் நாசியில் ‘கமகம’ வென காபியின் மணம் நுழைந்தது...
ம்ஹா...!
சங்க முழக்கத்தை மறந்து காபியின் வாசம் பிடித்தவளின் கையில் காபிக் கப்பைத் திணித்தாள் சர்மிளா...
காபின்னா இது காபி...
காபிக் கப்பை வாங்கிக் கொண்ட ஊர்மிளா காபியை உறிஞ்சியபடி தங்கையை முறைத்தாள்...
ஏண்டி குரங்கே... ஏஸியை ஆஃப் பண்ணின...?
குரங்கெல்லாம் நீதான்... ஐ ஆம் எ ஏன்ஜல்...!
ஓ...!
இதழ் குவித்த ஊர்மிளா தங்கையை ஏற இறங்க பார்த்து விட்டு...
அதை நீ சொல்லக் கூடாது...
என்றாள்...
நீ சொல்லுவன்னு நான் கனவு காண மாட்டேன்...
நீ ஏன்ஜலோ... ஜன்ஜலோ... என்னவாவோ இருந்து விட்டுப் போ... என் ரூமோட ஏஸியை ஆஃப் பண்ண யார் உனக்குப் பவர் கொடுத்தது...?
இந்த பவர் ஆஃப் அட்டர்னியை அம்மாதான் கொடுத்தாங்க...
அம்மா...?
யெஸ்... அம்மா...!
யு மீன் அவர் மம்மி... அன்னபூரணி...?
யெஸ்... நம்மளை பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த சாட்சாத் அன்னபூரணியேதான் இந்த அவசரச் சட்டத்தை அமுல் படுத்தியிருக்காங்க... இதைப் பத்தின வேற சட்ட விளக்கங்கள் ஏதாவது வேணும்னா... நீ அப்படியே எழுந்து... மெதுவா அடிமேல அடி வைச்சு அன்னநடை போட்டு கிச்சன் கேபினட்டுக்குப் போயி கேட்டுக்கலாம்... அங்கே கரண்டியும் கையுமா இருக்கிற நம்ம கிச்சன் கேபினட் அன்னபூரணியம்மா கரண்டியைச் சூடு பண்ணிக்கிட்டு உனக்கு விளக்கம் சொல்லத் தயாராக் காத்திருக்காங்க...
அறை வாசலை நோக்கிக் கை காட்டினாள் சர்மிளா... அவள் தந்த விளக்கத்தில் ஊர்மிளாவின் யுத்த முழக்கம் எங்கேயிருக்கிறது என்று கண்டு கொள்ள முடியாத இடத்திற்கு ஓடி ஒளிந்து கொண்டது...
தண்ணீர் தெளித்த சுடுபாலாக அடங்கிப் போனாள்...
சரி... சரி... ஏஸியை ஆஃப் பண்ணினதோட நிறத்திக்க வேண்டியதுதானே...? உன்னை யாரு ஜன்னல் ஸ்கிரினை விலக்கி கதவுகளையும் திறந்து விடச் சொன்னது...?
என்று பாய்ந்தாள்...
இதுவும் நம்ம அம்மா அன்னபூரணியோட உத்தரவுதான்... அமலாக்கினதுதான் நான்...
வாட்...?
என்னத்த வாட்...? அவங்கதான் சொன்னாங்க... அடியே சர்மிளா... அந்த எருமை மாடு தூங்கற ரூமில ஏஸியை ஆஃப் பண்ணினா மட்டும் போதாது... விடிஞ்சிருச்சுங்கிற சுரணை வந்து அது எழுந்திருக்கனும்னா ஜன்னல் கதவைத் திறந்து விடு... அப்பத்தான் சுள்ளுன்னு வெயில் பட்டு எருமை மாடு கண் முழிக்கும்ன்னாங்க... யு நோ ஊர்மி... அந்த எருமை மாடு யாரும்மான்னு நான் கேட்கவே இல்லியே... கன்ஃபர்மா நீதான் அந்த எருமை மாடுன்னு எனக்குத் தெரியுமே... எப்படி என் அறிவு...?
சர்மிளா பீற்றிக் கொண்ட பீற்றலில் கண் சிவந்தாள் ஊர்மிளா.
திமிராடி...?
இல்லேன்னு சொல்லுவேன்னு பார்த்தியா...? ஆமாம்... அதுக்கு இப்ப என்னாங்கிற...?
அடிதாண்டி வாங்கப் போற...?
சொல்லிக்கொண்டே கையில் அகப்பட்ட தலையணையைத் தூக்கி தங்கையின் மீது விட்டெரிந்தாள் ஊர்மிளா... மயிரிழையில் விலகிக் கொண்ட சர்மிளா அறை வாசலில் நின்று தலைக்கு மேல் இரண்டு கைகளையும் உயர்த்தி கொம்பு போலக் காட்டி... நாக்கைத் துருத்தி அழகு காட்டி விட்டு...
எஸ்கேப்...
என்று ஓடி விட்டாள்...
சர்மிளாவை ஓர் அடிகூட அடிக்க முடியாத காட்டத்துடன் அறையை விட்டு வெளியே வந்தாள் ஊர்மிளா... நெட்டி முறித்து... அழகாக சோம்பல் முறித்தாள்... கொட்டாவியை சொடுக்குப் போட்டு அடக்கினாள்...
ஷேம், ஷேம் அத்தை...! இம்புட்டு லேட்டா எழுந்துட்டு கொட்டாவியா விடறீங்க... ஐய்யே...
மாடி ஹாலில் போடப்பட்டிருந்த சோபாக்களில் ஒன்றிலிருந்து குரல் வந்தது... எட்டிப் பார்த்தாள்... சோபாக்குள் கால்களை மடக்கிப் போட்டு உட்கார்ந்து மடியில் நோட்புக்கை விரித்து வைத்து வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருந்தான் ஆறுவயது மயூர்... ஊர்மிளாவின் புன்னகை விரிந்தது... அண்ணன் மகனின் பக்கத்தில் உட்கார்ந்து அவன் மீது சரிய முயன்றாள்... அவன் ஆட்சேபத்துடன் நகர்ந்து உட்கார்ந்ததில் அவன்மீதான் பிரியம் அதிகரிக்க இன்னும் சரிந்தாள்...
டோன்ட் டிஸ்டர்ப் மி...
என்றான் அவன் மழலையாக...
ஏனாம்...? மயூர்க்குட்டியை டிஸ்டர்ப் பண்ணினா என்னவாம்...?
என்னவா...? உங்களுகென்ன அத்தை... நோ ஸ்கூல்...! நோ டீச்சர்...! நோ ஹோம் வொர்க்...! ம்ஹீம்... எனக்கு அப்படியா...?
அண்ணன் மகன் விட்ட பெருமூச்சில் சிரித்து விட்டாள் ஊர்மிளா...
என்னவோ பார வண்டி இழுக்கறவனைப் போல பேசற...?
அத்தையின் பேச்சுக்குப் பதில் பேச்சு பேசாமல் ஸ்கூல் பேகை இழுத்து அதில் நோட் புக்கை செறுகினான் மயூர்... அவனுடைய ஸ்கூல்பேக் பார வண்டியைப் போலவே கனத்தது... இத்தனை பாரத்தை இளம்பிஞ்சுகள் எப்படிச் சுமப்பார்கள்...? என்பதை பள்ளி நிர்வாகம் எண்ணிப்பார்தால் தேவலை என்றிருந்தது ஊர்மிளாவுக்கு... படிக்கும் குழந்தைகள் பொதி சுமப்பதைப் போலப் பள்ளிப் பைகளை சுமக்க வேண்டுமா...?
என்னடா உன் பேக் இத்தனை கனம் கனக்குது...?
அம்புட்டு நாலெட்ஜ் அதில இருக்காம்...
யார் சொன்னது...?
வேற யார் சொல்லுவாங்க... எல்லாம் எங்க கிளாஸ் மிஸ்தான் சொன்னாங்க...
உங்க கிளாஸ் மிஸ்ஸா...?
ம்ம்ம்...
மயூரின் ‘கிளாஸ் மிஸ்’ எனப்படும் வகுப்பு ஆசிரியை நர்மதாவை அண்ணன் மகனை பள்ளியில் விடப் போன தருணங்களில் ஊர்மிளா பார்த்திருக்கிறாள்... அந்த நினைவில்...
ஏண்டா... அந்த லேடியைப் பார்த்தா எக்கச்சக்க வயசா இருக்கும் போல இருக்கே... இன்னுமா அவங்களுக்கு மேரேஜ் ஆகலை...?
என்று சந்தேகம் கேட்டாள்.
வீட்டுப் பாடம் எழுதுவதை நிறுத்தி விட்டு நிமிர்ந்து அத்தையைப் பார்த்த மயூரின் விழிகளில் அவள் எப்படி என்ஜினியராக ஒரு ஐ.டி கம்பெனியில் குப்பை கொட்டுகிறாள் என்ற சந்தேகம் இருந்தது...
என்னடா...?
இவ்வளவு மக்கா அத்தை நீங்க...?
டப்பிங் பட டயலாக்கைப் போல மயூர் கேட்டதில் தான் அவ்வளவு பெரிய மக்கா என்று அயர்ந்து போனாள் ஊர்மிளா...
அப்படியெல்லாம் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்து விடாதேடா மயூர் குட்டி...
என்று அவசரமாக மயூரிடம் சொன்னாள்.
எதை வைத்து இவ்வளவு பெரிய முடிவுக்கு நீ வந்தேடா...?
தகவல் அறியும் பாவனையில் கேட்கவும் செய்தாள்...
பின்னே என்ன அத்தை...?
மயூர் விளக்கம் சொல்ல ஆரம்பித்த போது ஊர்மிளா வாயை மூடிக் கொண்டு கவனமாக அண்ணன் மகன் என்ன சொல்கிறான் என்பதை செவி மடுத்திருக்கலாம்... அவள் அதை விட்டு விட்டு பின்னால் திரும்பித் தேடிப் பார்த்தாள்... அத்துடன் நிறுத்தாமல்...
என் பின்னாலே எதுவுமே இல்லையேடா...
என்று ‘ஙே...’ என்று விழிக்கவும் செய்தாள்...
மயூரால் தாள முடியவில்லை...
ஹைய்யோ... ஹைய்யோ...
என்று தன் கையிலிருந்த நோட்டால் தன் தலையில் மொத்திக் கொண்டான்...
வலிக்கப் போகுதுடா குட்டி...
பாசத்துடன் அதை நிறுத்தினாள் ஊர்மிளா...
உங்களுக்கெல்லாம் யாருத்தை வேலை கொடுத்தது...?
உனக்கேண்டா இந்தக் காண்டு...? ஏற்கனெவே இருக்கிற ஐ.டி கம்பெனிகளை இழுத்து மூடிக்கிட்டு இருக்காங்க... இதில நீ வேற கண்ணு வைக்கறியா...?
உங்களைக் கண்ணு வைச்சிட்டாலும்...! ம்ஹீம்...
இத்தனூண்டு பொடியன் அலுத்துக் கொள்வதைப் போல தன் புத்தியில் என்ன குறைவு என்று யோசித்துப் பார்த்தாள் ஊர்மிளா... ஒரு மண்ணும் விளங்கவில்லை... போகுது போ என்று தள்ளி விட்டு விட்டு...
‘யார் சொன்னது...? என் அண்ணன் மகன்தானே...?’ என்று மனதைத் தேற்றிக் கொண்டு அண்ணன் மகனிடம் பேசிக் கொண்டிருந்த பேச்சைக் கண்டினியூ செய்தாள்...
விடுடா... விடுடா... நீ சொல்ல வந்ததைச் சொல்லு...
எங்க மிஸ்ஸீக்கு மேரேஜாகி பாப்பா கூட இருக்கு...
அப்புறம் எதுக்குடா அவங்களை மிஸ்ஸீன்னு கூப்பிடறீங்க... மிஸஸ்ன்னுல்ல கூப்பிடனும்...?
ஊர்மிளா விளக்கம் கேட்டதில் கடுப்பாகிப் போனான் பொடியன்...
அம்மா...
ஓங்கிச் சப்தம் போட்டான்...
என்னடா...
மாடியறைகளில் ஒன்றிலிருந்து வெளிப்பட்டாள் சவிதா...
அவள் கையில் அயர்ன் பண்ண கொடுக்கப்பட்ட சட்டை இருந்தது...
இந்த அத்தையை ஏன்னு கேளுங்க...
மொட்டைக் காத்தான் குட்டையில் விழுந்தான் என்பதைப் போல மொட்டையாக தகவல் சொல்லி ஊர்மிளாவின் பக்கம் மயூர் கை காட்ட எதற்காக நாத்தனாரை ஏன் என்று கேட்க வேண்டும் என்று தெரியாமல்... ‘ஙே...’ என்று விழிப்பது இப்போது சவிதாவின் முறையாகி விட்டது...
யாரை வேண்டுமானாலும் ஏன் என்று கேட்டு விடலாம்... நாத்தனாரை ஏனென்று கேட்க வீட்டுக்கு வாழ வந்த மருமகளால் முடியாது என்பதை ஆறு வயது மயூருக்கு எப்படி அவள் புரிய வைப்பாள்...?
2
மக்கள் திலகம் என்னவோ ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை என்று மிக இலகுவாக பாடி விட்டார்... அப்படி ஏன் என்று