Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manam Thiruda Vandhaya..?
Manam Thiruda Vandhaya..?
Manam Thiruda Vandhaya..?
Ebook190 pages2 hours

Manam Thiruda Vandhaya..?

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

இளங்கோவும், சம்யுக்தாவும் காதலித்து வந்த நிலையில், இளங்கோவின் மாமா தன் மகள் திவ்யாவை இளங்கோவிற்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். இளங்கோவை தாவ்யாவிற்கு திருமணம் செய்துவைக்க அவர் என்ன செய்தார்? இறுதியில் இளங்கோ யாரை திருமணம் செய்தான்? படித்து அறிவோம்...

Languageதமிழ்
Release dateSep 23, 2023
ISBN6580133810123
Manam Thiruda Vandhaya..?

Read more from Muthulakshmi Raghavan

Related to Manam Thiruda Vandhaya..?

Related ebooks

Reviews for Manam Thiruda Vandhaya..?

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manam Thiruda Vandhaya..? - Muthulakshmi Raghavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மனம் திருட வந்தாயா..?

    Manam Thiruda Vandhaya..?

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசிரியர் கடிதம்...

    கவிதை சொல்லவா...?

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    ஆசிரியர் கடிதம்...

    மனம் விட்டுப் பேசலாமா...?

    என் பிரியத்துக்குரிய வாசக... வாசகிகளே...!

    இந்த முறை மாப்பிள்ளை, முறைப்பெண் உறவுமுறை இன்னும் வழக்கத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை... எனது இளம் வயதில் இது போன்ற உறவு முறைகளின் கலாட்டாக்களைக் கண்டு களித்திருக்கிறேன்... என் கதைகளில் நான் கொண்டு வருவது அந்த நிகழ்வுகளைத்தான்...

    என்ன புள்ள... மாமனுக்கு எப்பக் கறிக்கஞ்சி ஊத்தப் போற என்று வடிவேலு கேட்பது காமெடியல்ல... மதுரை வட்டாரத்தின் முறை மாமன்களின் கேலிப் பேச்சு... முறைப் பெண்களும் சளைத்தவர்கள் அல்ல... பட்டிக்காடா, பட்டணமா படத்தில் மனோரமா கொடுப்பதைப் போல...

    ‘இந்தாங்கறேன் கோழிக்குழம்பு...

    இந்தாங்கறேன் சுக்கா வருவல்...’

    என்று கொடுத்துக் கட்டி விடுவார்கள்... மதுரை மங்கைகள் வீர மங்கைகள்... பகடிக்குப் பதில் பகடி... லந்துக்கும் பதில் ‘லந்து’ எதை தூள் கிளப்பி விடுவார்கள்...

    திருவிழா முடிந்தவுடன் மஞ்சு விரட்டு நடக்கிறதோ இல்லையோ... முறை மாமன், முறைப்பெண் முறையில் உள்ள ஆண்களும் பெண்களும் ஒருவர்மீது ஒருவர் மஞ்சத்தண்ணியை ஊற்ற விரட்டுவார்கள்... ஓடி ஒளிவதும்... ஓடி ஒளிபவர்களின் மீது எங்கிருந்தோ மஞ்சத்தண்ணி பாய்வதும்... பதிலுக்கு இவர்கள் அவர்களைத் துரத்துவதும் என்று அது ஒரு கோலாகலமான தருணமாக இருக்கும்...

    ஊரெல்லாம் மஞ்சத்தண்ணியை ஊற்றும் முறை மாமன்கள் என்மீது ஊற்றப் பயப்படுவார்கள்... நான் ஒன்றும் டெர்ரர் இல்லைங்க... பயந்தாங்கோழி... என் அப்பாவும், சித்தப்பாவும் டெர்ரர்கள்... அதிலும் என் சித்தப்பா டெர்ரரோ டெர்ரர்... அவருக்கு மீசைக்காரர் என்றொரு காரணப் பெயருண்டு... அடர்ந்த, கனத்த மீசையை முறுக்கிக் கடகடவென்ற நட்புச் சிரிப்புடன் அவர்...

    ‘என்ன... மாப்பிள்ள...?’ என்று வினவினால் முறைமாமன்கள் எபௌட் டவுன் போட்டு எனக்குப் புறமுதுகு காட்டி...

    ‘ஹி... ஹி... ஒன்னுமில்லங்க மாமா...’ என்று பயந்தோடி விடுவார்கள்...

    ம்ஹீம்... இப்படியாப்பட்ட சித்தப்பா இருக்கும் போது நான் எங்கே மஞ்சத்தண்ணியில் நனைவது...? ஏக்கப் பெருமூச்சுடன் மற்றவர்களை வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்...

    என் மகனின் காலம் இது... மஞ்சத் தண்ணியெல்லாம் இப்போது இல்லையென்றாலும் அவன் சிறு வயதிலிருந்தே என் தம்பி மகளை வம்புக்கு இழுப்பான்... எட்டு வயது தம்பி மகளை இவன் திருவிழாவுக்குப் போயிருக்கும் போது கேலியாக உற்றுப் பார்க்க குழந்தை என் தம்பியின் பின்னால் ஒளிந்து கொண்டு...

    மாமா என்னை உத்துப் பாக்கறாக... என்று சிணுங்கியதில் ஒளிந்திருப்பது பரவசம்...

    இளமைக் காலங்கள்தான் எத்தனையெத்தனை பரவசங்களை ஒளித்து வைத்திருக்கிறது...!

    மற்றொரு ஆசிரியர் கடிதத்தில் பேசலாம்...

    நட்புடன்

    முத்துலட்சுமி ராகவன்

    கவிதை சொல்லவா...?

    இளமைக்காலம்

    நந்தவனம் எந்தன் மனம்

    நர்த்தனம்தான் உந்தன் குணம்...

    பூப்பறிக்க வருவாயா...?

    புதுவசந்தம் தருவாயா...?

    நீ வரும் நாளில்

    என் மனதின் உயிர்ப்பு...

    நிலவொளியில் கதைபேச

    ரகசியமான காத்திருப்பு

    இளமை என்பது பிருந்தாவனம்தான்

    அதில் உலாவுவது நமது மனம்தான்...

    - முத்துலட்சுமி ராகவன்

    1

    நீலக்கடல் ஒரு சேலையைப் போல நீண்டிருந்தது... நீலவண்ணப் பட்டாடையைப் போல மயக்கியது... காற்றில் சேலை சளசளத்து ஆடுவதைப் போல வெண்மை நிற அலைகளுடன் கரையைத் தொட்டு விலகி அவளது மனதைக் கவர்ந்தது...

    அழகா இருக்குல்ல... செல்போனில் வீடியோ எடுத்தபடி சிலாகித்தாள் சம்யுக்தா...

    அழகாத்தான் இருக்கும்... கடல் அழகா இல்லாம எப்படி இருக்கும்...?

    முன்பக்க சீட்டில் உட்கார்ந்திருந்த சக்கரவர்த்தி சொன்னார்... காரை ஓட்டிக் கொண்டிருந்த பெர்ணான்டோ சிரித்தான்...

    டாட்... நீங்க இப்ப ஜோக்கடிச்சீங்களா...?

    செல்போனை இறக்கிய சம்யுக்தா கேட்டாள்...

    இல்லையே... சும்மா பேசினேன்... தட் இஸ் நாட் எ ஜோக்...

    அதை பெர்ணான்டோ அங்கிளிடம் சொல்லுங்க...

    அம்மா...? பெர்ணான்டோ குரல் எழுப்ப...

    நான் உங்களுக்கு அம்மாவா...? என்று சிணுங்கினாள் சம்யுக்தா...

    பெர்ணான்டோ அதற்கும் சிரித்தான்... நாற்பதைக் கடந்த வயதிலிருப்பவனுக்கு சம்யுக்தா ஒரு குழந்தை... அவன் தூக்கி வளர்த்த குழந்தை... அவள் எதைச் சொன்னாலும் சிரிப்பான்... அவளிடம் மற்றவர்கள் எதைச் சொன்னாலும் சிரிப்பான்...

    சக்கரவர்த்தியின் வீட்டில் டிரைவராக வேலைக்குச் சேர்ந்தபோது அவன் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து வெளியே வந்திருந்த அநாதை... கர்த்தரும், மாதாவும் மட்டுமே அவனுக்குச் சொந்தம்... வேலை கேட்டுக் கேட்டைத் திறந்து வந்தவனைப் பார்த்து மூன்று வயதுக் குழந்தையாக சிரித்து வரவேற்றவள் சம்யுக்தா... கள்ளங் கபடமற்ற பிள்ளைச் சிரிப்பில் மயங்கி நின்றவனைப் பார்த்து இரு கைகளையும் விரித்து நீட்டி...

    தூக்கு... என்றாள்...

    பெர்ணான்டோ பயந்தான்... வெள்ளை மாளிகையைப் போல பிரம்மாண்டமாக எழுந்து நின்றிருக்கும் பங்களா... பரந்த மைதானம் போல விரிந்திருக்கும் போர்டிகோ... அதில் வரிசை கட்டி நிற்கும் கார்கள்... ஊட்டியின் மலர் பூங்காவைத் தோற்கடிக்கும் தோட்டம்... அதன் மையத்தில் கொடைக்கானலின் லேக் வியூவைப் போல ஒரு நீச்சல் குளம்... அந்த வீட்டின் குட்டி இளவரசி கைகளை விரித்து நீட்டித் தூக்கச் சொல்லி அழைத்தால் அவன் தொட்டுத் தூக்கி விடுவதா...?

    பெற்றவர்கள் யாரென்று பெர்ணான்டோவுக்குத் தெரியாது... அவன் கடவுளின் குழந்தை என்பார் ஃபாதர் அல்போன்ஸ்... அநாதை விடுதியில் வளர்ந்தவன் அவன்... குறிப்பிட்ட வயதுக்கு மேல் ஆசிரமத்தில் இருக்கக் கூடாது என்பது விதி... அவனுக்குப் படிப்பு ஏறவில்லை... அத்தகைய சிறுவர், சிறுமிகளுக்கு டிரைவிங், டெய்லரிங் போன்ற கைத்தொழில்கள் கற்றுத்தரப் பட்டிருந்தன... பெர்ணான்டோ காரோட்டக் கற்றுக் கொண்டிருந்தான்... ஃபாதர் அல்போன்ஸின் சிபாரிசுக் கடிதத்துடன் சக்கரவர்த்தியைப் பார்க்க வந்திருந்தான்...

    வாசலிலேயே அவன் தடுத்து நிறுத்தப் பட்டான்... செக்யூரிட்டியிடம் சக்கரவர்த்திதான் அவனை வரச் சொல்லியிருக்கிறார் என்று அவன் எவ்வளவோ மன்றாடியும் செக்யூரிட்டி அவனை கேட்டைத் தாண்டி வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை...

    ஐயாகிட்ட ஒரு வார்த்த கேட்டுட்டு என்னப் போகச் சொல்லுங்கய்யா... என்று அவன் கெஞ்சிக் கூத்தாடிய பின் போனால் போகிறதென்று போன் போட்டுக் கேட்டான்... பெர்ணான்டோவை அனுமதிக்கும்படி சக்கரவத்தி சொன்ன பின்னால்தான் கேட்டைத் திறந்து விட்டான்...

    அப்பேற்பட்ட கட்டுக் காவல்களுடன் இருக்கும் சக்கரவர்த்தியின் வீட்டுக் குழந்தையை அவன் எப்படித் தூக்கிக் கொஞ்ச முடியும்...?

    குழந்தையின் முகம் அவனை வசீகரித்தது... அப்போது அவனுக்கு இருபது வயதிருக்கும்... வயதுக்கேற்ற உடல்வா கில்லாமல் ஒல்லியாக இருப்பான்... அவனை ஏற இறங்கப் பார்த்த குழந்தை... என்ன நினைத்ததோ...

    தூக்கு என அதட்டியது...

    வேண்டாம் பாப்பா... என்றான் இவன்...

    அவ்வளவுதான்... குழந்தை தரையில் உருண்டு புரண்டு சப்தம் போட்டு அழ ஆரம்பித்து விட்டது... இவன் இன்னும் பயந்து போனான்... வீட்டுக்குள் இருந்து ஓடிவந்த தாவணிப் பெண்ணொருத்தி குழந்தையைத் தூக்க முயன்ற வண்ணம்...

    யாருய்யா நீ... என்று அதட்டினாள்...

    பெர்ணான்டோ... தந்தியடித்தான்...

    என்னாது... கடலை உருண்டையா...?

    கடலை உருண்டையில்லைங்க... பெர்ணான்டோ...

    என்னா ஆண்டையோ... உனக்கு இன்னா வேணும்... எப்படி நீ இங்க வந்த...?

    கேட்டைத் திறந்து விட்டாங்க... அது வழியாத்தான் வந்தேங்க...

    கிண்டலு...?

    அதெல்லாம் இல்லைங்க... கர்த்தர் மேல ஆணை...

    கர்த்தர் மேல ஆணை வைக்கிற... நீ என்ன கிறிஷ்டினா...?

    ஆமாங்க...

    அவள் அவனை ஏற இறங்கப் பார்த்து விட்டுக் குழந்தையை அள்ளிக் கொள்ள முயன்றாள்... அது அவளது கைகளை தட்டி விட்டு அவனை நோக்கிக் கை காட்டி அழுகையைத் தொடர்ந்தது...

    என்னாய்யா... குழந்த உன் பக்கம் கையக் காமிக்குது... பயமுறுத்தினியா...? தாவணிப் பெண் சந்தேகமாக கேட்டாள்...

    ஏங்க... என்னைப் பார்த்தாப் பூச்சாண்டியாட்டமா இருக்கு...? அவன் ஆற்றாமையுடன் கேட்டான்...

    இல்லய்யா... குச்சியப் போல இருக்கு... அவள் வாயைப் பொத்திக் கொண்டாள்...

    பதிணெட்டு வயது தாவணிப் பெண்ணின் வாயிலிருந்து வந்த மதிப்புரை வாலிப வயதிலிருந்த பெர்ணான்டோவை பாதித்தது... அவன் இமைக்காமல் அவளை ஓர் பார்வை பார்த்துவிட்டு...

    அநாதை ஆசிரமத்தில வளர்ந்தவன் எப்படி இருப்பான்...? என்று கேட்டான்...

    அந்தப் பெண்ணின் சிரிப்பு நின்று விட்டது... இரக்கமாக அவனைப் பார்த்தவள்...

    நீ அநாதையா...? என்று கேட்டாள்...

    ம்ம்ம்... அவன் தலையாட்டினான்...

    இந்த உலகத்தில அநாதைன்னு யாரும் இல்லைய்யா... மனுசக் கழுதைக்கு மனுசக் கழுதைதான் உறவு, ஆதரவு... ஆமாம்... பாப்பா ஏன் உன்னக் கை காட்டி அழுகுது...?

    தூக்கச் சொல்லுச்சு... நான் தூக்கலை... அதான்...

    என்னா மன்சன்ய்யா நீ... அழகுப்பாப்பா தூக்கச் சொன்னா தூக்க வேணாமா...? உனக்குக் குழந்தைகன்னாப் பிடிக்காதா...?

    பாப்பாவைப் பிடிக்காம இருக்குமா...? நான் எப்படிக் குழந்தையைத் தூக்கறது...?

    என்னாய்யா நீ... குழந்தையைத் தூக்கத் தெரியாதா...?

    அதில்லங்க... முன்னேப் பின்னே தெரியாதவன் குழந்தையைத் தூக்கினா வீட்டில இருக்கிறவங்க கோவிச்சுக்க மாட்டாங்களா... அதிலயும் நான் வேல கேட்டு வந்திருக்கேன்...

    இந்த வீட்டில் அப்படியெல்லாம் நினைக்க மாட்டாங்கய்யா... பணத்தில மட்டும் பெரிய மனுசங்களா இருக்காம குணத்திலயும் பெரிய மனுசங்களா இருக்கிறவங்க இருக்கிற வீடுய்யா இது... அய்யாவும், அம்மாவும் தங்கமானவங்க... நீ புள்ளயத் தூக்கு...

    அந்த நொடியை இப்போது நினைத்துப் பார்த்தாலும் சிலிர்த்துப் போவான் ஃபெர்ணான்டோ... பூக்குவியலைக் கையில் அள்ளினால் எப்படியிருக்கும்...? அப்படி உணர்ந்தான் அவன்... அவனுடைய தோளின் மீது கை போட்டுச்

    Enjoying the preview?
    Page 1 of 1