Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mounamana Neram...
Mounamana Neram...
Mounamana Neram...
Ebook130 pages1 hour

Mounamana Neram...

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

கௌசிக் வைசாலி இவர்களின் அழகான வாழ்க்கையில் புயலாக வரும் நிஷா, யார் இவள்? நிஷாவின் மூலம் கௌசிக்கும் வைசாலிக்கும் இடையே நடக்கும் பனிபோர் என்ன? நனது வாழ்வை தக்க வைத்துக்கொள்ள வைசாலி செய்யும் செயல்கள் என்ன? நிஷா கௌசிக்கை விட்டு பிரிந்தாளா? வைசாலி கௌசிக் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? வாசித்து தெரிந்து கொள்வோம்.

Languageதமிழ்
Release dateSep 9, 2023
ISBN6580133810114
Mounamana Neram...

Read more from Muthulakshmi Raghavan

Related to Mounamana Neram...

Related ebooks

Reviews for Mounamana Neram...

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mounamana Neram... - Muthulakshmi Raghavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மௌனமான நேரம்...

    Mounamana Neram...

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    1

    சீரியல் விளக்குகளால் அந்த திருமண மண்டபம் ஜொலித்துக் கொண்டிருந்தது... வாசலில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க... மண்டபத்திற்குள் பட்டுப்புடவை அணிந்த பெண்கள் இங்கும் அங்கும் கால்களில் சக்கரமில்லாமல் பரபரப்பாக போய் வந்து கொண்டிருந்தார்கள்...

    ‘எல்லாக் கல்யாணங்களிலும் இது போல்தான் பெண்கள் பரபரக்கிறார்கள்...’ மணமேடையில் அமர்ந்திருந்த கௌசிக் நினைத்துக் கொண்டான்... ஹோமத்திலிருந்து வந்த புகை கண்ணைக் கரித்தது...

    சீக்கிரமாக தாலியைக் கட்டச் சொன்னால் தேவலை... என்ற நினைவு எழ... அருகில் அமர்ந்திருந்த வைசாலியைப் பார்த்தான்...

    அவளது பார்வை ஹோமத்தீயின் மீது பதிந்திருந்தது... அந்த திருமணத்துக்கு சாட்சியாக இருக்கும் அக்கினியிடம் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருப்பவளைப் போல அவள் அக்கினியையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்...

    அவளின் அந்தத் தோற்றம் கௌசிக்கை சங்கடப் படுத்தியது... ‘ஏன் இப்படி இருக்கிறாள்...?’ என்ற எண்ணம் அவன் மனதில் எழுந்தபோதே...

    ‘ஏன் என்று என்னைக் கேட்கிறாயா...? உனக்கு அதற்கான காரணம் தெரியாதா...?’ என்று அவனின் மனச்சாட்சி அவனிடம் திரும்பிக் கேட்டது...

    ‘என்மேல் என்ன தவறு...?’ அவன் மனதில் மெல்லிய கோபம் எழுந்தது...

    ‘நான்தான் சொன்னேனே... எனக்கொரு காதலி இருக்கிறாள்... திடீரென்று ஒரு நாள் என்னை விட்டுப் பிரிந்து... காற்றில் கலந்த புகைபோல காணாமல் போய் விட்டாள்... அவளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்னு சொன்னேனா இல்லையா... அதை உணக்கையாய் கேட்டு விட்டு... அதனால் என்ன பரவாயில்லை... நான் உங்களைக் காதலிக்கிறேன்... ஒரு நாள் வாழ்ந்தாலும் உங்களுடன் வாழ்ந்தால் போதும்... என்று இவள்தானே சொன்னாள்... அப்போது அப்படிச் சொல்லிவிட்டு... இப்போது உம்மென்று உட்கார்ந்திருந்தால் என்ன அர்த்தம்...? அன்றைக்கு மட்டும் ஏன் அப்படிச் சொன்னாள்...?’

    வைசாலியும் தன் மனதிற்குள் அப்போது அதே கேள்வியைத்தான் கேட்டுக் கொண்டிருந்தாள்...

    ‘ஏன் அப்படிச் சொன்னேன்...?’ அவள் மனம் குமைந்தது...

    ‘பார்த்த முதல் பார்வையிலேயே இவனிடம் மயங்கிப் போய் விட்டேனே... அதனால் அப்படிச் சொன்னேனா...? இவனிடம் பேசிக் கொண்டிருக்கும்பொழுது முடியவே முடியக்கூடாது என்று தவித்துப் போனேனே... அதனால் அப்படிச் சொன்னேனா...? இவனின் அருகே அமர்ந்திருக்கும்போது இவனின் அருகாமை நிலைக்க வேண்டும் என்று என் மனம் துடித்ததே... அதனால் அப்படிச் சொன்னேனா...?’

    எதனால் அப்படிச் சொன்னாள் என்று அவளால் இதுவரை அனுமானிக்கவே முடியவில்லை... ஆனாலும் வைசாலி கௌசிக்கிடம் அப்படிச் சொல்லிவிட்டது என்னவோ உண்மைதான்...

    காத்திருக்கிறேன் கௌசிக்... உங்கள் மனம் என் பக்கம் திரும்பும் வரை காத்திருக்கிறேன்... ஆனால் இந்தக் கல்யாணத்தை மட்டும் வேண்டாம்ன்னு சொல்லி விடாதீங்க...

    உனக்குப் புரியவில்லையா வைசாலி...? நான் நிஷாவைக் காதலிக்கிறேன்... அவள் மேல் உயிரையே வைத்திருக்கிறேன்...

    அவள்தான்... இப்போது எங்கேயிருக்கிறாள்ன்னே தெரியலைன்னு சொன்னீங்களே...

    இதைச் சொல்லும்போது... இந்த அளவுக்கா நான் தாழ்ந்துவிட்டேன் என்று மனதிற்குள் துடித்துப் போய் விட்டாள் வைசாலி...

    ‘நீ காதலிக்கும் பெண் இப்போது உன்னுடன் இல்லை... அதனால் நீ என்னை ஏற்றுக்கொள்... என்றைக்கு நீ அவளை மறக்கிறாயோ... அன்றைக்கு நீ என்னுடன் வாழ்ந்தால் போதும்... அதுவரை உன்னிடம் மனைவியென்ற உரிமையைக் கோரமாட்டேன்... தயவு செய்து ஊரறிய என்னைத் திருமணம் செய்து கொள்...’

    ஏறக்குறைய இது யாசகம் இல்லையா...? கௌசிக்கின் முன்னால் மண்டியிடும் செயல் இல்லையா...? யாருக்கும் தலை வணங்காத வைசாலி இதைச் செய்யலாமா...?

    செய்தாள்... வைசாலி அதைச் செய்தாள்... அவன் முன் மண்டியிட்டு காதல் பிச்சை கேட்டாள்... இன்னொருத்தியிடம் அவனது மனம் இருப்பது தெரிந்தும் அவள் வாழ்வை பணயம் வைத்தாள்...

    ஏன்...? அவனை அவளால் மறக்க முடியவில்லை... காதல் தீ அவள் மனதில்... இந்த மணமேடையில் யாக குண்டத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் அக்கினியைப் போல... எரிந்து கொண்டிருந்தது... அதன் தகிப்பைத் தாங்க முடியாதவளாக அவனது பாதத்தில் தஞ்சம் புகுந்தாள் அவள்...

    ‘உன்னை நினைக்கவே...

    நொடிகள் போதுமே...

    உன்னை மறக்கவே...

    யுகங்கள் ஆகுமே...’

    இந்தப் பாடலை ஒரு மெல்லிசையாகத்தான் கௌசிக்கை சந்திப்பதற்கு முன்னர்வரை அவள் ரசித்து வந்தாள்... கௌசிக்கை சந்தித்த பின்னால் தான்... அந்தப் பாடலின் வரிகளை உணர்வுபூர்வமாக அவள் அனுபவித்தாள்...

    ‘உன்னைத் தொட்டக் காற்று வந்து...

    என்னைத் தொட்டது...

    அதுவே போதுமென்று பெண்மை

    இன்று கேட்டுக் கொண்டது...’

    அவனைத் தொட்ட காற்று அவளைத் தொட்டதிலேயே நெகிழ்ந்து உருகியவள்... அவனுக்கு மனைவியாக... அவனருகேயே இருக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் இறுகப் பற்றிக் கொண்டுவிட்டாள்...

    நம் வைசாலியை கௌசிக்கிற்காக பெண் கேட்கிறாங்க ஜானகி... நீயென்ன சொல்றே...?

    வைசாலியின் தந்தை நரசிம்மன் கேட்டபோது தொலைக்காட்சியில் ஆழ்ந்திருந்த வைசாலியின் இதயம் ஒரு வினாடி அந்தச் செய்தியை நம்ப முடியாமல் நின்று பின் அடித்தது...

    ‘கௌசிக்கிற்காக என்னைப் பெண் கேட்கிறாங்களா... இது நிஜம்தானா...?’

    அன்று நம்ப முடியாமல் கையைக் கிள்ளிக் கொண்டதும் கை வலித்த உணர்வை இன்றும் அனுபவித்தாள் வைசாலி...

    அவளது ஆசைப்படியே அந்தத் திருமணம் மணமேடை வரை வந்தவிட்டது... அவளும் மணப் பெண்ணாக கௌசிக்கின் அருகே அமர்ந்து விட்டாள்... மாப்பிள்ளை கோலத்தில் இருக்கும் கௌசிக் இன்னும் சற்று நேரத்தில் ஊர் அறிய தாலியை எடுத்து அவள் கழுத்தில் கட்டப் போகிறான்... நினைக்கும்போதே அவளது நெஞ்சம் சிலிர்த்தது...

    ‘பொன் மாங்கல்யம்...

    வண்ணப்பூச்சரம்...

    மஞ்சள் குங்குமம்...

    என்றும் நீ தந்தது...’

    Enjoying the preview?
    Page 1 of 1