ஏன்
By தேவிபாலா
()
About this ebook
மௌலி, கௌரி இருவரும் குடும்ப ஜோசியர் வீட்டில் இருந்தார்கள்!
“சொல்லுங்க!”
“நவீன், ரம்யா ரெண்டு பேர் ஜாதகங்களும் கொண்டு வந்திருக்கேன்! பாத்துட்டு யாருக்கு, எப்ப நடக்கும்னு சொல்லுங்களேன்!”
“அதுக்கென்ன! குடுங்க!”
அவர் வாங்கி வெகுநேரம் பார்த்தார்!
“உங்க பொண்ணுக்கு செவ்வா தோஷம் இருக்கு!”
“அய்யோ!”
“ஏன் பதட்டப்படறீங்க? அதுல தப்பே இல்லைம்மா! அதுக்குப் பொருத்தமான ஜாதகம் பார்த்துக் குடுத்துட்டா ஒரு பிரச்னையும் வராது!
பொண்ணுக்கு குருபலம் வர இன்னும் ஒரு வருஷம் ஆகும்! அதனால கல்யாண முயற்சிகளை இப்ப எடுக்காதீங்க! எடுத்தாலும் நடக்காது! பையனுக்கு குருபலம் வந்தாச்சு! அதிகபட்சம் மூணு மாசத்துக்குள்ளே நடந்துடும்!”
“அப்படியா?”
“தப்பில்லையே! அவனுக்கும் 28 வயசாயிடுச்சில்லை? நடத்திடுங்க! இனி ஏன் தாமதிக்கறீங்க?”
“நல்லது ஜோசியரே! பொருத்தமான ஜாதகத்தை நீங்களே எடுத்துக்குடுங்க!”
“என்ன மாதிரி பொண்ணை நீங்க எதிர்பார்க்கறீங்கனு சொல்லிடுங்க. வெறும் ஜாதகம் மட்டும் போதாது. நம்ம எதிர்பார்ப்புகளும், ஜாதகமும் ரெண்டுமே பொருந்தி வந்துட்டா, எல்லாம் நல்லபடியா இருக்கும்!இவன் பி.டெக் முடிச்சு, ஒரு வருஷம் காத்திருந்து வேலை கிடைச்சது! அஞ்சு வருஷமா வேலைக்குப் போறான். சம்பளம் நாப்பதுரூபாய் வாங்கறான். அழகன்! புத்திசாலி!”
“தெரியுமே!”
“அதே ரகப் படிப்பு - சம்பளம், தகுதிகள் எல்லாம் உள்ள பொண்ணு வேணும்னு எதிர்பார்க்கறான். கண்டிப்பா வேலைக்குப் போற பொண்ணா இருக்கணும்...”
“பாத்துடலாமே!”
“குடும்பமும், நல்லா இருக்கணும். ஐடில இருக்கற பொண்ணுங்க அடங்கறதில்லைனு ஒரு புகார் வருது!”
“அப்படி இல்லீங்க! நல்லது, கெட்டது எல்லாத்லேயும் இருக்கு! அதைப் பொருட்படுத்த முடியுமா? நாம வாழற வாழ்க்கைல தான் இருக்கு!”
“சரி! சீக்கிரம் பாருங்க!”
இருவரும் புறப்பட்டு வீட்டுக்கு வந்தார்கள்.
ரம்யா ஏழு மணிக்கு வந்தாள்! நவீன் வர மணி பத்தாகி விட்டது!
சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்த அப்பா விவரங்களைச் சொன்னார்!
“அப்பா! நாப்பது ரூபாய்ல பிடித்தம், இன்ஷ்யூரன்ஸ் எல்லாம் போக முப்பதுதான் கைக்கு வருது! அதுல கார் டியூ எட்டு ரூபாய் போகுது! கைல இருபத்தி ரெண்டுதான்! என் செலவுக்கு வச்சிட்டு பதினைஞ்சு குடுத்தேன்! இப்ப அதுக்கும் வழியில்லை!”
“இதெல்லம் எனக்குத் தெரியாதா தம்பி?”
“இல்லைப்பா! பெண் வீட்டார், எனக்குப் பெரிய சம்பளம்னு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோட வரப் போறாங்க!”
“அப்படியெல்லாம் நடக்காதுப்பா!”
“பண விவகாரத்துல தப்பு வந்துடக்கூடாது!”
அப்பா சந்திர மௌலிக்கு மறுபடியும் கவலை வந்தது
Read more from தேவிபாலா
தான் - தன் சுகம் Rating: 0 out of 5 stars0 ratingsதொட்டில் வரை காதலி! Rating: 0 out of 5 stars0 ratingsநதிமூலம் Rating: 0 out of 5 stars0 ratingsமனசு ஒரு தினுசு! Rating: 0 out of 5 stars0 ratingsபாப விமோசனம் Rating: 0 out of 5 stars0 ratingsநதிக்கரையோரம்! Rating: 0 out of 5 stars0 ratingsசொன்னது என்னாச்சு? Rating: 0 out of 5 stars0 ratingsவளர்ப்பு Rating: 0 out of 5 stars0 ratingsபழைய பாடம் தேவையில்லை! Rating: 0 out of 5 stars0 ratingsமனசுக்கு மட்டும்! Rating: 0 out of 5 stars0 ratingsநீதான் என் காதலி Rating: 0 out of 5 stars0 ratingsபிரசாதப் பொட்டலம் Rating: 0 out of 5 stars0 ratingsகோடையில் பனி மழை! Rating: 0 out of 5 stars0 ratingsபாகீரதி Rating: 0 out of 5 stars0 ratingsஅழகான ஆபத்து Rating: 0 out of 5 stars0 ratingsபோர்க்களப் பூக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsபனித்திரை Rating: 0 out of 5 stars0 ratingsசூரியன் சுடவில்லை! Rating: 0 out of 5 stars0 ratingsவா, சுகி வாசுகி Rating: 0 out of 5 stars0 ratingsமயான மலர்கள் Rating: 0 out of 5 stars0 ratingsகோடைத் தள்ளுபடி Rating: 0 out of 5 stars0 ratingsபட்டாசு பட்டம்மா..! Rating: 0 out of 5 stars0 ratingsபேராசை! Rating: 0 out of 5 stars0 ratingsதானாகத் தெரியும்! Rating: 0 out of 5 stars0 ratingsஉன்னோடு ஒரு நாள்! Rating: 0 out of 5 stars0 ratingsஎப்பவும் உன் நிழலில்! Rating: 0 out of 5 stars0 ratingsகொஞ்சிப் பேசக் கூடாதா Rating: 0 out of 5 stars0 ratingsபட்டு மாமி! Rating: 0 out of 5 stars0 ratingsஇன்று பாதி! நாளை மீதி! Rating: 0 out of 5 stars0 ratingsகேட்டேன் தந்தாய்! Rating: 0 out of 5 stars0 ratings
Related to ஏன்
Related ebooks
Yen Rating: 5 out of 5 stars5/5Puli Vaal Rating: 0 out of 5 stars0 ratingsபுலி வால் Rating: 0 out of 5 stars0 ratingsDeepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsThakka Vachuko! Rating: 4 out of 5 stars4/5Sonthakkaranga Rating: 4 out of 5 stars4/5சொந்தக்காரங்க! Rating: 0 out of 5 stars0 ratingsNee Eppa Varuvey? Rating: 0 out of 5 stars0 ratingsAssai Oonjalil Aadum Velaiyil Rating: 0 out of 5 stars0 ratingsஆசை ஊஞ்சலில் ஆடும் வேளையில்..! Rating: 0 out of 5 stars0 ratingsKadai Thenkai Rating: 3 out of 5 stars3/5Ponal Varathu! Rating: 0 out of 5 stars0 ratingsMannil Iranguthu Aakaayam Rating: 5 out of 5 stars5/5மண்ணில் இறங்குது ஆகாயம் Rating: 0 out of 5 stars0 ratingsஎப்பவும் உன் நிழலில்! Rating: 0 out of 5 stars0 ratingsAzhaithal Varuven! Rating: 0 out of 5 stars0 ratingsஜரிகை வேட்டி Rating: 0 out of 5 stars0 ratingsKadhal Vedham Rating: 5 out of 5 stars5/5Mounam Pesattum Rating: 5 out of 5 stars5/5மௌனம் பேசட்டும்! Rating: 0 out of 5 stars0 ratingsKattil Pazhakkam Rating: 0 out of 5 stars0 ratingsKathiruppai Kaadhalane Rating: 0 out of 5 stars0 ratingsKaalathin Kattalai! Rating: 0 out of 5 stars0 ratingsஅதிகாரப் பிச்சை..! Rating: 0 out of 5 stars0 ratingsAlaikal Ointhuvidum! Rating: 0 out of 5 stars0 ratingsKaatraluththa Mandalam Rating: 5 out of 5 stars5/5Thalli Nil Kanmani! Rating: 0 out of 5 stars0 ratingsஇப்போது இல்லை! Rating: 0 out of 5 stars0 ratingsIlam Solai Pooththathaa Rating: 0 out of 5 stars0 ratingsPadma Viyugam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for ஏன்
0 ratings0 reviews
Book preview
ஏன் - தேவிபாலா
1
அப்பா சந்திரமௌலி ரிடையராகி விட்டார். ஐம்பத்தி எட்டு வருஷம் வேலை பார்த்து ஓடாகத் தேய்ந்து, இன்று ஓய்வு பெற்று விட்டார்!
மாலை மரியாதைகளோடு அப்பாவை வீட்டுக்கு ஏறத்தாழ இருபது பேர் அழைத்து வந்தார்கள்!
அவர்களுக்கெல்லாம் இரவு உணவுக்கு தடபுடலாக ஏற்பாடு செய்து - அவர்கள் மௌலியை புகழ்ந்து தள்ளி (பாதிக்கு மேல் பொய், போலி வேஷம்) சாப்பாட்டை ஒரு பிடி பிடித்து விட்டு புறப்பட்டுப் போனார்கள். அன்று சனிக்கிழமை! வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்டு முடிவதற்குள் இரவு பத்தாகி விட்டது!
சரிப்பா!
ரொம்ப களைப்பா இருக்கு! படுக்கலாம்! காலைல பேசிக்கலாம்!"
சரிப்பா!
நவீன்! நாளைக்கு உனக்கு வேலை உண்டா?"
இல்லைப்பா!
ரம்யா.. உனக்கு?
எனக்கும் லீவுதான்பா!
அப்படீன்னா, காலைல யாரும் எங்கேயும் போகாதீங்க! நிறையப் பேசணும்! நான் ஆபீஸ்ல பொறுப்புகளை ஒப்படைச்ச மாதிரி இங்கேயும் கொஞ்சம் வேலை இருக்கு!
அதெல்லாம் எதுக்குப்பா?
இல்லை நவீன்! செய்யணும். செய்ய வேண்டியதை காலாகாலத்துல செஞ்சிடணும். சரி நாளைக்கு பேசிக்கலாமே! நான் படுக்கறேன். கௌரி! கொஞ்சம் வெந்நீர் கொண்டு வா குடிக்க!
பால்தானே குடிப்பீங்க?
இனிமே வேண்டாம்! நான் சொன்னபடி செய்!
நவீன் அருகில் வந்தான்!
அப்பா மனசு ரொம்ப பாதிச்சிருக்காம்மா?
ஒரு மாசமாவே மூட் அவுட்லதான் இருக்கார்டா! பின்ன என்னப்பா? வாங்கின சம்பளத்துல பாதிகூட இனி வராது. குடும்பத்துல ஏதாவதொரு செலவைக் குறைக்க முடியுமா? ரம்யாவுக்கு கல்யாணம் நடந்தாகணும். மருத்துவச் செலவு! நீங்க ரெண்டு பேரும் சின்னப் புள்ளைங்க. எப்படீடா கவலையில்லாம இருக்க முடியும்? உங்கப்பா வாய் விட்டுப் பேசறார். நான் உள்ளே வச்சு புழுங்கறேன் நவீன்!
ஏம்மா கவலைப்படற? நான் இல்லையா? பாத்துக்க மாட்டேனா? விட்டுருவேனா?
மாட்டேப்பா! இருந்தாலும் இத்தனை நாள் பொறுப்புகளை சுமந்தவங்களுக்கு அதுலேருந்து ஓய்வு பெறும்போது மனசும், ஒடம்பும் சோர்ந்து தானே போகும்?
இது எல்லாருக்கும் உள்ளதுதானேமா! மனசு சோர்ந்துட்டா ஒடம்புல பிரதிபலிக்கும்! வேண்டாம். அப்பா கவலைப்பட்டாலும், நீ தைரியம் சொல்லணும்.
ஆமாம்மா! அண்ணன் சொல்றதுதான் சரி!
ரம்யா ஆமோதித்தாள்!
காலைல பேசிக்கலாம். கவலைப்படாதேம்மா!
அம்மா கௌரி உறங்கவில்லை இரவு முழுக்க! காலையில் சற்றே தாமதமாக எழுந்து குளித்து, சாமி கும்பிட்டு, காலை உணவை அனைவரும் சாப்பிட்டார்கள்!
வாங்கப்பா எல்லாரும்!
மௌலி அழைத்தார்!
நவீன்! நான் ரிடையர் ஆயாச்சு. மொத்தப் பணம் - எல்லா பிடிப்பும் போக, எட்டரை லட்சம் வந்திருக்கு! ரம்யா கல்யாணத்துக்கு அதை அப்படியே எடுத்து வச்சிடலாம்!
அது போதுங்களா?
கௌரி கேட்க-
அம்மா! பத்தாத பணத்துக்கு நான் லோன் போடறேன்! நீ கவலைப்படாதே!
மௌலி சந்தோஷமாக மகனைப் பார்த்தார்.
சர்வீஸ்ல இருக்கும் போது பிடித்தம் போக 24 ஆயிரம் கைல வரும் தம்பி! நான் கைல ரெண்டாயிரத்தை வச்சுகிட்டு மீதி 22 ரூபாயை உங்கம்மா கைல கொடுத்துடுவேன்! நீ சம்பாதிக்கத் தொடங்கி அஞ்சு வருஷமாச்சு! நம்ம வீட்ல எல்லா வசதிகளோடும் தாராளமா இருக்கோம். எதையும் குறைக்க முடியலை! மாச பட்ஜெட் கிட்டத்தட்ட முப்பதாயிரம் ரூபா ஆகுது! நான் பதினைஞ்சும், நீ பதினைஞ்சும் போட்டு குடும்பம் நடத்தினோம். மீதிப் பணத்துல உங்கம்மா நகைச்சீட்டு, டெபாஸிட்னு போனா! நீ உன்னோட சேமிப்பை வச்சு கார் வாங்கி, அதுக்கு ட்யூ கட்டிட்டு இருக்கே!
சரிப்பா!
இனிமே எனக்கு பென்ஷனா பத்தாயிரம் வரும். காரணம் நடுவுல ரெண்டு ஃபைனல் வித்ட்ராயல் போட்டாச்சு! அதுல மருத்துவச் செலவு, அது இதுன்னு ஒரு மூணு ரூபா வச்சுக்கிட்டா ஏழாயிரம்தான் நான் குடும்பத்துக்கு தர முடியும்! நீதான் மீதி இருபத்தி மூணாயிரத்தை போடணும்! வேறவழியே இல்லை!
நவீன் ஒரு மாதிரி மனக் கணக்கு போடத் தொடங்கினான். ‘எப்போதும் தரும் பதினைஞ்சை விட எட்டாயிரம் அதிகம் தர வேண்டும்! பல செலவுகள் அடிபடும்!’
என்னப்பா பேசலை?
படக்கென நவீன் சிரித்தான்.
செஞ்சிடலாம்பா! குடும்பம்னா செஞ்சுதான் ஆகணும். நீங்க இத்தனை காலம் செய்யலையா? நான் இப்ப அஞ்சு வருஷமாத்தானே சம்பாதிக்கறேன்! அதுக்கும் முன்னால எங்க ரெண்டு பேரையும் படிக்க வச்சு, இந்த வீட்டைக் கட்டி, எந்த வசதிகளும் குறையாம, நீங்க நடத்தலியாப்பா?
மௌலி நெகிழ்ந்து விட்டார்.
மகனின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.
பெருமையா இருக்குடா! நாங்க குடுத்து வச்சிருக்கோம்!
ரம்யா குறுக்கிட்டாள்!
நானும் கிட்டத்தட்ட ஒரு வருஷமா சம்பாதிக்கறேன். மாசம் பதினைஞ்சு ரூபாய் வருதில்ல? துண்டு விழற எட்டு ரூபாயை எடுத்துக்குங்கப்பா!
இல்லைம்மா! நீ முதல் மாசம் சம்பளம் வாங்கும்போதே நாங்க முடிவு செஞ்சிட்டோம், உன் சம்பளத்தை தொடறதில்லைனு!
ஏன்பா?
கஷ்டம்மா! அந்தப் பணம் எங்களுக்கு சொந்தமில்லை! நீ இன்னொரு வீட்டுக்குப் போற பொண்ணு!
அப்பா! அப்படி போனாலும், என்னைப் பெத்து வளர்த்து ஆளாக்கினது நீங்கதானே! என் பணத்துல உங்களுக்கும் உரிமை உண்டு! ஆணுக்கு பெண் சளைக்கலை இங்கே!
ஒரு பெண் சிங்கமா நீ?
நவீன் கிண்டலடிக்க,
எதுக்கும்மா... ஆசையா நீ வாங்கிக்குடு. ஏத்துக்கிறோம். முழுமையா சொந்தம் கொண்டாடறது தப்பு!
சரிப்பா! கல்யாணம் ஆகறவரைக்கும் எடுத்துக்கலாமே?
"இல்லைம்மா! கமிட் ஆயிட்டா கஷ்டம்! ஒரு வருஷ காலம் அந்தப் பணத்தை குடும்பத்துக்குள்ளே கொண்டு வந்துட்டு, உனக்குக் கல்யாணம்