Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mayankuthamma Jenmangal Yaavum! - Part 1
Mayankuthamma Jenmangal Yaavum! - Part 1
Mayankuthamma Jenmangal Yaavum! - Part 1
Ebook94 pages34 minutes

Mayankuthamma Jenmangal Yaavum! - Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பூர்வ ஜென்ம ஞாபகம் படுத்தும் பாட்டில் அந்த ஜென்ம நபர்களைத் தேடும்.., திருப்பங்கள் நிறைந்த.., உணர்ச்சிகள் இழைந்தோட.., விறு விறுப்பான குறு நாவல்..,

Languageதமிழ்
Release dateApr 29, 2023
ISBN6580161709781
Mayankuthamma Jenmangal Yaavum! - Part 1

Read more from Bheeshma

Related to Mayankuthamma Jenmangal Yaavum! - Part 1

Related ebooks

Reviews for Mayankuthamma Jenmangal Yaavum! - Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mayankuthamma Jenmangal Yaavum! - Part 1 - Bheeshma

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    மயங்குதம்மா ஜென்மங்கள் யாவும்! - பாகம் 1

    மறுஜென்மக் கதை!

    Mayankuthamma Jenmangal Yaavum! - Part 1

    Author:

    பீஷ்மா

    Bheeshma

    For more books

    https://www.pustaka.co.in/home/author/bheeshma

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 01

    அத்தியாயம் 02

    அத்தியாயம் 03

    அத்தியாயம் 04

    அத்தியாயம் 05

    அத்தியாயம் 06

    அத்தியாயம் 07

    அத்தியாயம் 08

    அத்தியாயம் 09

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 01

    வெளியே பலத்த மழை பெரும் சப்தத்துடன் பெய்து கொண்டிருப்பது திரைச் சீலை போட்டு மூடி கதவுகள் திறந்திருந்த சாளரம் வழியே கேட்டு மெதுவாகக் கண் விழித்த கயல்விழி தனது கை கால்கள் கட்டிலுடன் கட்டி வைக்கப்பட்டிருப்பதை உணர்ந்து.

    தன்னை விடுவித்துக் கொள்ளப் போராடி யார் இந்த வேலையைச் செய்தது என்று சுற்று முற்றும் பார்த்து, தன் அசைவுகளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் மணிமாறனைக் கண்டு திடுக்கிட்டாள்.

    மெல்ல அருகில் வந்த மணிமாறன், என்ன கயல்விழி. மயக்கம் தெளிந்ததா!? உன் மயக்கம் தெளிந்து உன்னை அனுபவிக்கத்தான் இத்தனை நேரம் நான் காத்திருந்தேன்.

    துரோகி... நான் உன் முதலாளியின் மகள்... நானும் உனக்கு முதலாளி... எனக்கு வணக்கம் செய்து சேவை செய்ய வேண்டிய நீ இந்த நீசத்தனமான எண்ணம் கொண்டு என்னைக் கட்டி வைத்திருப்பது என் தந்தைக்கும், மற்றவர்களுக்கும் தெரிந்தால் உன் உயிர் உன் உடலில் தங்க விடுவார்களா!? மரியாதையாய் என்னை அவிழ்த்து விடு... நான் உன்னை யாரும் எதுவும் செய்து விடாமல் காத்து மன்னித்து அனுப்புகிறேன்.

    பெருங்குரலில் நகைத்த மணிமாறன், கண்ணே! இப்போது நீதான் எனக்கு அடிமை... இதோ அவிழ்க்கத்தான் போகிறேன்... கட்டை அல்ல... உன் அழகை மறைத்து எனக்கு துரோகம் செய்யும் உன் ஆடைகளை.

    கிட்டே நெருங்கியவன் அவள் முகத்தருகே தன் இதழ்களைக் கொண்டு வந்தபோது.

    தூக்கிவாரிப் போட்டு எழுந்தாள் மாலினி. என்ன கனவு இது!? கடந்த சில வருடங்களாக மாதத்தில் இரண்டு முறையாவது இதே கனவு அதே மழைச் சத்தத்துடன் சிறிதும் மாற்றமில்லாது வந்து தூக்கத்தைக் கலைத்து அவளைக் கலக்கத்தில் ஆழ்த்துகிறது.

    கனவின் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு திரைப்படத்தைப் போல மனதில் தங்க. வந்த கனவின் பலன் என்னவென்று அறிய அத்தனை கனவுப் பலன்கள் புத்தகத்தையும் ஒரு முறைக்குப் பலமுறை படித்தும்... ஏதும் விளங்காததால் மாலினி ஒரு முடிவுக்கு வந்து.

    கனவுக்கான பலன்கள் சொல்லும் கன்சல்ட்டன்சி நடத்தும் ‘கனவுப் பலன் கல்யாண்ஜி’யைச் சந்திக்க அப்பாய்ன்ட்மெண்ட் வாங்கி.

    செல்லலாமா? வேண்டாமா? என்று பலமுறை சிந்தித்துப் பின் போய்ப் பார்த்துத்தான் கேட்போமே என்று.

    வெற்றிலை, பாக்கு தாம்பூலத்துடன் பணமும் வைத்து அவரது ஆபீஸ் வெயிட்டிங் ஹாலில் இப்போது வெயிட் பண்ணிக் கொண்டிருந்தாள்.

    ஓவர் பிஸிபோல் அலப்பறை பண்ணி... வெயிட் பண்ணிக் கொண்டிருக்கும் ஐந்து பேரையும் பவ்யமாய் உட்கார வைப்பதில் வெற்றி கண்ட கல்யாண்ஜி ஒவ்வொருவரையாய் அழைத்து பலன் சொல்ல ஆரம்பித்தார்.

    மாலினியின் முறை வந்ததும், மெல்ல அறைக்குள் நுழைந்த மாலினியிடம், ம்... சொல்லும்மா... டீட்டெய்லா உன் கனவ ஆரம்பத்திலேர்ந்து.

    தான் கண்ட கனவை மனதையும், மூளையையும் ஒருநிலைப்படுத்தி கண்களை அவ்வப்போது மூடியும், திறந்தும் சொல்ல ஆரம்பித்தாள்.

    தன்னை கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தங்களிடம் பணி புரியும் மணிமாறன் என்றொருவன் பலவந்தப்படுத்த முயலும் கனவினைப் பற்றிக் கூறி நிறுத்திய மாலினி, கல்யாண்ஜியை ஆர்வமாய்ப் பார்த்தாள்.

    என்னம்மா நிறுத்திட்ட? காது குடைந்து கொண்டே, வந்த கொட்டாவியை சொடக்குப் போட்டு நிதானமாய் விட்டார்.

    அவ்வளவுதான் அங்கிள்.

    என்னம்மா அது நடந்துதா? அவன் செய்ய வந்த வேலைய முடிச்சிட்டானா? கொஞ்சமும் கூச்சமின்றி கண்களில் ஒரு ஆர்வம் மின்னக் கேட்ட கல்யாண்ஜியைத் தலையில் கொட்ட வேண்டும் போல் ஆத்திரம் எழ, எரிச்சலுடன்.

    அதெல்லாம் ஒன்னும் ஆகல அங்கிள், இது என்னோட பூர்வ ஜென்ம நினைவா இருக்குமா!?

    வெரி கரெக்ட்... உனக்கே நிறையத்தான் தெரிஞ்சிருக்கேயம்மா.

    எரிச்சல் மண்டினாலும் ஒரு அமர்த்தலான பெருமையுடன் அவரைப் பார்த்தாள் மாலினி.

    ஓகேம்மா... உன் கனவுப் படி உன்னச் சீரழிக்க உங்க வீட்டுப் பணியாள் ஒருவன் ம்ம்ம்... பேர் என்னமோ சொன்னியே... மதிமாறன்.

    இடைமறித்த மாலினி, "மதிமாறன் இல்ல. மணிமாறன்

    Enjoying the preview?
    Page 1 of 1