Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mayankuthamma Jenmangal Yaavum! - Part 2
Mayankuthamma Jenmangal Yaavum! - Part 2
Mayankuthamma Jenmangal Yaavum! - Part 2
Ebook83 pages31 minutes

Mayankuthamma Jenmangal Yaavum! - Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பூர்வ ஜென்ம ஞாபகம் தொடரும்., பூர்வ ஜென்ம சொந்தங்களின்., தொடர்புகள் கிடைத்து.., அடுத்து என்ன!?., அடுத்து என்ன!? என்று கிடு கிடு வெனத் தொடரும் குறு நாவல்..,

Languageதமிழ்
Release dateMay 8, 2023
ISBN6580161709788
Mayankuthamma Jenmangal Yaavum! - Part 2

Read more from Bheeshma

Related to Mayankuthamma Jenmangal Yaavum! - Part 2

Related ebooks

Reviews for Mayankuthamma Jenmangal Yaavum! - Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mayankuthamma Jenmangal Yaavum! - Part 2 - Bheeshma

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மயங்குதம்மா ஜென்மங்கள் யாவும்! - பாகம் 2

    (மறுஜென்மக் கதை)

    Mayankuthamma Jenmangal Yaavum! - Part 2

    Author:

    பீஷ்மா

    Bheeshma

    For more books

    https://www.pustaka.co.in/home/author/bheeshma

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 16

    மிக அழகாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டு, ஆனந்துக்கு வீடியோ கால் செய்தாள் மாலினி.

    உடனே அட்டென்ட் பண்ணி அவளைப் பார்த்த ஆனந்த்,ப்பா... மூச்சே நின்னுடும் போலருக்கு மாலு. இவ்ளோ அழகு என்னை விட்டுட்டு ஸ்வீடன்ல போய் என்னை டார்ச்சர் பண்ணுதே! நான் என்ன செய்வேன்!? அடுத்த ப்ளைட்ல எனக்கு டிக்கெட் புக் பண்ணி ஓடி வந்துட மாட்டோமான்னு இருக்குடா.

    மூச்சு விடாமல் அவன் பேசிய ஸ்டைல் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல் தோன்ற, ஒரு புன்னகையுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்த மாலினியை.

    என்ன மாலு, ஒண்ணுமே சொல்ல மாட்டேன்ங்கறே!? என்னை ஞாபகம் இருக்கா?

    படபட வென்று கண்கள் சிமிட்டி,யார் நீங்க! நான் ஏன் உங்களுக்கு போன் பண்ணினேன்!? ஒண்ணுமே தெரியலியே! சிரித்தாள்.

    ம்ம்ம் ஆமா இல்ல... இப்ப நீதான் போன் பண்ணின இல்லயா!? அதான் இங்க மழை பிச்சு உதறுது. ம் நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லலியே!?

    என்ன கேட்டீங்க? அம்மால்லாம் எப்படி இருக்காங்க!?

    அம்மாவும் உன்னை ரொம்பவே மிஸ் பன்றாங்கம்மா. உன் கிட்ட சொல்லாம கொள்ளாம நாங்க எல்லாரும் அங்க கிளம்பி வந்து உனக்கு சர்ப்ரைஸ் கொடுத்தாலும் கொடுப்போம்.

    ஹேய்... ஹேய்... அந்த மாதிரில்லாம் செஞ்சுடாதீங்கப்பா... இதோ நானே ப்ராஜெக்ட் சீக்கிரம் முடிச்சுட்டு இல்லன்னா பிரேக் பண்ணிட்டு அங்க வர்றா மாதிரி இருக்கேன்.

    என்னது! பிரேக் பண்ணிட்டு வரப் போறியா!? நெஜம்மாவா? என் மஹாராணிக்கு எங்க மேல எல்லாம் திடீர்னு கரிசனம் வந்த காரணம் என்னவோ?

    நான் சொல்றதக் கேட்டு நீங்க கோபப்படக் கூடாது. அப்போதான் நான் ஒரு விஷயம் சொல்வேன்.

    கோபப்படக் கூடாதா! அப்படி கோபப்படறா மாதிரி நீ ஒன்னும் பண்ண மாட்டியே! இந்த அழகு முகத்தைப் பார்த்தால் யாருக்காவது கோபப்படத் தோணுமா!? சரி... சொல்லு.

    தனது பயணத்தில் டாக்டர் கங்காவைச் சந்தித்ததிலிருந்து, அவர் மூலம் ஆராய்ச்சியில் தெரிய வந்த ஜென்மங்கள் பற்றியும், நேற்றைய கனவில் வந்த ஜென்மம் வரை அனைத்தையும் ஒன்று விடாமல் விவரித்தாள்.

    நீங்க அவ்ளோ சொல்லியும் நான் கேக்காம, விடாம இவ்ளோ காரியம் பண்ணியிருக்கேன். சாரிங்க... என்னால அந்தக் கனவ ஈசியாக் கடந்து போக முடியலங்க... டாக்டர் கங்கா சென்னையில வச்சு மீதி ஆராய்ச்சி பண்ணலாம்னு சொல்லியிருக்காங்க.

    ஆனந்திடமிருந்து ஒரு நீண்ட மௌனம்... பதிலேதும் சொல்லாமல் வீடியோவில் அவளைப் பரிதாபமாகப் பார்த்தான்.

    சாரி... சாரி... ஆனந்த்... கோவிச்சுக்கிட்டீங்க பாத்தீங்களா! எனக்காக என்னை மன்னிக்கக் கூடாதா?

    உம்மேல என்னால கோபப்பட முடியாதும்மா. இவ்ளோ ஸ்ட்ரைன் எடுத்துக்கறியே! அது தேவையா? நம்ம வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்கள் மாத்ரம் போதாதா!? வில்லனைப் பத்தி தெரிஞ்சே ஆகணுமா?

    சரி, ஆனந்த்... தெரிஞ்ச வரைக்கும் போதும்... ஆனா இதுவரைக்கும் தெரிய வந்ததுல அந்த மணி மாறன் பத்தி நமக்கு எதுவுமே தெரிய வரலியே! எனக்கு அந்தக் கனவு விடாம வந்ததுக்கு என்ன காரணம்னு தெரிஞ்சுக்க வேண்டாமா!?

    அது, தானா தெரியும் போது தெரியட்டும். நீ ஏன் வீணா ஸ்ட்ரைன் பண்ணிக்கணும்ங்கறது தான் என்னோட கன்ஸெர்ன். அத மட்டும் நீ புரிஞ்சுக்கவே மாட்டேன்கிறே!

    ஓகே ஆனந்த்... இனிமே நீங்க என்ன சொல்றீங்களோ அதுதான் எனக்கு வேத வாக்கு. சந்தோஷமா!

    முதல் முறையாக ஆனந்த் முகத்தில் ஒரு பெரிய திருப்தியும்,

    Enjoying the preview?
    Page 1 of 1