Oliyai Thedi...
()
About this ebook
நன்மை தீமைகளை எடுத்துக்காட்டும் இயல்புடையனவாக இருக்கின்றன. சிறுகதைகளுக்கென்று புதிய இலக்கணங்களையும் உத்திகளையும் பலர் ஏற்படுத்தத் தொடங்கியுள்ளனர். இயல்பு நிலையில் கதை சொல்லும் உத்தி மறைந்து வருகிறது. இயல்பான கதைகள் காலத்தின் உண்மையான சாயல்களைக் காட்ட வல்லவை.
படிக்கப் படிக்க அனுபவம் வளருகிறது என்பதால் தான் நான் படிக்கும் சுபாவத்தை அதிகம் வளர்த்துக்கொண்டுள்ளேன். ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் இருந்த போது பல சிறுகதைகளை எழுதி பாதுகாப்பாக வைத்திருந்தமையால் ஒரு நூலாக வெளிவர வாய்ப்பு கிடைத்தது.
Read more from Jayadhaarini Trust
Rasamadevi Part - 3 Rating: 0 out of 5 stars0 ratingsSri Hayagreevar Sthothiram Rating: 0 out of 5 stars0 ratingsSilapathigaram - Seevagasinthamani Oru Oppaivu Rating: 0 out of 5 stars0 ratingsRasamadevi Rating: 0 out of 5 stars0 ratingsSinthanai Thooralgal Rating: 0 out of 5 stars0 ratingsHeravin Jokes Rating: 0 out of 5 stars0 ratingsGeethodhayam Rating: 0 out of 5 stars0 ratingsSirappuyar Seevagasinthamani Rating: 0 out of 5 stars0 ratingsJune 3 Rating: 0 out of 5 stars0 ratingsThenum Thinaimaavum Rating: 0 out of 5 stars0 ratingsRasamadevi Part - 2 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Oliyai Thedi...
Related ebooks
Oorkkolam Rating: 0 out of 5 stars0 ratingsManathil Vizhuntha Mazhai Thuliye….! Rating: 5 out of 5 stars5/5Vaazhvil Vetri Rating: 0 out of 5 stars0 ratingsOrey Urimai Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Charanadainthen Rating: 5 out of 5 stars5/5Innum Konjam Manithargal... Rating: 0 out of 5 stars0 ratingsOru Kudumbathil Nadakkirathu! Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Nee Thaaney Rating: 0 out of 5 stars0 ratingsOru Coffee Kudikalama? Rating: 4 out of 5 stars4/5Oondru Kol Rating: 0 out of 5 stars0 ratingsIni Vazhkkai Inikkum! Rating: 0 out of 5 stars0 ratingsAagayam Kaanatha Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsArabu Desathil Thagappan Samy Rating: 0 out of 5 stars0 ratingsAvalukkendru Oru Manam Rating: 0 out of 5 stars0 ratingsUdanai Nirkindraan Rating: 0 out of 5 stars0 ratingsRangoon Periyappa Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Karanam Rating: 0 out of 5 stars0 ratingsVellam Vadintha Piragu… Rating: 0 out of 5 stars0 ratingsOru Kaandhamum Oru Irumbu Thundum Rating: 0 out of 5 stars0 ratingsPasithalum Puli... Rating: 0 out of 5 stars0 ratingsKaattrum Kathitavanum Rating: 0 out of 5 stars0 ratingsNee Varum Paathaiyil... Rating: 5 out of 5 stars5/5Naalai Meethi Rating: 0 out of 5 stars0 ratingsThavikkum Idaiveligal Rating: 0 out of 5 stars0 ratingsMalligai Mu(yu)tham Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsUyiril Kalantha Geetham! Rating: 0 out of 5 stars0 ratingsBoodha Kannadi Samy! Rating: 0 out of 5 stars0 ratingsKannile Anbirunthal! Rating: 0 out of 5 stars0 ratingsMeetchi Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Oliyai Thedi...
0 ratings0 reviews
Book preview
Oliyai Thedi... - Jayadhaarini Trust
http://www.pustaka.co.in
ஒளியைத் தேடி…
சிறுகதைகள்
Oliyai Thedi…
Sirukathaigal
Author:
அ. மாணிக்கவள்ளி
A. Manikkavalli
For more books
http://www.pustaka.co.in/home/author/jayadhaarini-trust
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
வாழ்த்துரை
முன்னுரை
1. முதலீடு
2. மனத்தின் ரணம்
3. பிரிக்காத கைகள்
4. அக்காவுக்கு மட்டும்
5. போலி நட்பு
6. வாய்மையும் பொய்மையும்
7. தமிழ் வழிக் கல்வி
8. பேரம்
9. சொந்த வீடு கட்டனும்
10. நட்சத்திரம்
11. தாய்மை
12. ப்ளஸ் டூ
13. தியாகப்பூக்கள்
14. இங்கேயும் ஒரு புயல்
15. சிசு
16. ஒளியைத் தேடி
வாழ்த்துரை
தமிழ்ப் படைப்புலகில் முன்பெல்லாம் சிறுகதை எழுத்தாளர்கள் அதிகரித்திருந்தார்கள். கவிதை எழுதுபவர்கள் குறைவாக இருந்தனர். கவிதையின் கட்டுப்பாடுகளும் வடிவங்களும் சிதைக்கப்பட்ட பிறகு எழுதத் தெரிந்த எல்லோருக்குள்ளும் கவிஞர்கள் பிறப்பெடுக்கத் தொடங்கினர். சிறகதைகளை எழுதும் எழுத்தாளர்களுக்குச் சற்றே பின்டைவு ஏற்பட்டது. புகழ்மிக்க ஏடுகளும் இதழ்களும் சிறுகதைகளை மிகவும் சுருக்கமாக வெளியிட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டதால் சிறுகதை எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை வெளிக்கொண்டுவரப் பதிப்பகங்களை நாடவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பதிப்பகங்களோ, புகழ்மிக்க இதழ்களில் வெளியான சிறுகதைகளை மட்டுமே தொகுத்தளிக்க முடியும்
என்றும் கூறுவதுண்டு.
நன்மை தீமைகளை எடுத்துக்காட்டும் இயல்புடையனவாக இருக்கின்றன. சிறுகதைகளுக்கென்று புதிய இலக்கணங்களையும் உத்திகளையும் பலர் ஏற்படுத்தத் தொடங்கியுள்ளனர். இயல்பு நிலையில் கதை சொல்லும் உத்தி மறைந்து வருகிறது. இயல்பான கதைகள் காலத்தின் உண்மையான சாயல்களைக் காட்ட வல்லவை.
அன்புடன்
ரமணன்
முன்னுரை
படிக்கப் படிக்க அனுபவம் வளருகிறது என்பதால் தான் நான் படிக்கும் சுபாவத்தை அதிகம் வளர்த்துக்கொண்டுள்ளேன். ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் இருந்த போது பல சிறுகதைகளை எழுதி பாதுகாப்பாக வைத்திருந்தமையால் ஒரு நூலாக வெளிவர வாய்ப்பு கிடைத்தது.
அ. மாணிக்கவள்ளி
1. முதலீடு
உதவி செய்தால் உபத்திரவமே பரிசாகக் கிடைக்கும் என்று சிலர் புலம்புவது நியாயமென்றே தோன்றியது உதயசங்கருக்கு. ஒரு காலத்தில் செல்வத்தில் கோலோச்சி விட்டு இன்று இலையுதிர்கால மரமாய் பண இலைகளை முற்றிலுமாக உதிர்த்து விட்டு மொட்டையாக நிற்கிறான். வசந்த காலம் இனி, தன் வாழ்க்கையில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறதா?
என்பதே அவன் முன் தற்பொழுது வளைந்து நிற்கும் கேள்விக்குறி.
வசதியாய் இருந்த பொழுது பல வகைகளில் தன்னால் இயன்ற அளவிற்கு உதவிகளைச் செய்திருக்கிறான் உதயசங்கரன். ஆனால் இன்று அவனை எட்டிப் பார்ப்பதற்கு எவருமில்லை. மனைவியிடம், மகன், மகளும் கூட இவனைப் பல சிக்கல்களில் தனியாக தவிக்க விட்டு விட்டு மனைவியின் அம்மா வீட்டிற்கே சென்று விட்டார்கள்.
பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு, வீழ்ந்து கிடக்கும் தனக்கு யாராவது மீண்டும் வணிகம் தொடங்க உதவுவார்களா என்று ஏங்கியது கணேசனின் மனம். செய்வதறியது தெருவில் வருத்தத்துடன் சென்று கொண்டிருந்தான். ஒரு காலத்தில் இவனுடைய தயவால் முன்னுக்கு வந்தவர்கள் கூட இன்று இவனைக் கண்டதும் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள்.
தனியே வணிகம் செய்து கொண்டிருந்தவனிடம் கூட்டு வணிகம் செய்யலாம் என்று ஆசைகாட்டி, மோசம் செய்து விட்ட தன்னுடைய பழைய நண்பன் ராகவனை நினைத்து மனத்தில் நொந்து கொண்டான். லாபத்தை மட்டும் சமமாய்ப் பகிர்ந்து கொண்டு நஷ்டம் வந்தவுடன், கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டவனை நினைத்தபொழுது, ஒட்டுமொத்த மனித இனத்தின் மீது உதயசங்கருக்கு எரிச்சலும், கோபமும் வந்தன.
ஒவ்வொரு நாளையும் வேதனையுடன் தள்ளிக் கொண்டிருந்தவனுக்கு விடியல் என்பதே வாழ்வினில் இல்லாமல் போய்விடுமோ என்ற பயமே அவநம்பிக்கையை விதைத்ததால் தொழிலுக்கு முதலீடாக ஏற்கெனவே பணம் வாங்கியவர்களுள் சிலர் திருப்பிக் கொடுத்தால் கூட அதையே தன் தொழிலுக்கு முதலீடாகக் கொள்ளலாம் என்று நினைத்தான். ஆனால் எந்த ஒரு பயனும் கருதாமல் உதயசங்கர் கொடுத்த பணத்தில் ஒரு பைசா கூடத் திரும்பவில்லை.
வேதனையுடன் தெருவில் சென்று கொண்டிருந்த உதயசங்கருக்கு எதிரில் வந்த மகிழ்வுந்தில் ஏற்கெனவே தெரிந்த முகம் ஒன்று தெரிந்த போதிலும் கவனிக்கவில்லை. யாரும் கவனிக்க மாட்டார்கள் என்பதால். இவனைக் கடந்து சென்று விட்ட வண்டி சில வினாடிகளில் இவனை நோக்கி திரும்பி வந்தது. இறங்கி வந்தவனைப் பார்த்தபொழுது உதயசங்கருக்கு சற்றே குழப்பமாக இருந்தது அடையாளம் கண்டு கொள்ள இயலாமல்.
சில வருடங்களுக்கு முன் உதயசங்கரிடம் கடன் வாங்கி வியாபாரம் செய்யப்போகிறேன்