Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Heravin Jokes
Heravin Jokes
Heravin Jokes
Ebook109 pages35 minutes

Heravin Jokes

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'நகைச்சுவை ஒன்றுதான் மனிதனின் வாழ்க்கைக்கு சிறந்த மருந்து’ மகிழ்ச்சிகரமான, திருப்தி தரக்கூடிய வாழ்க்கை அமைவதற்கு நகைச்சுவை ஓர் இன்றியமையாத சாதனம் ஆகும். பெருஞ்செல்வத்தால் அடைய முடியாததை நகைச்சுவையினால் அடைய முடிகிறது. வாருங்கள் சிரிப்போம்.

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580131108314
Heravin Jokes

Read more from Jayadhaarini Trust

Related to Heravin Jokes

Related ebooks

Related categories

Reviews for Heravin Jokes

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Heravin Jokes - Jayadhaarini Trust

    http://www.pustaka.co.in

    ஹேராவின் ஜோக்ஸ்

    Heravin Jokes

    Author :

    ஹேமலதா சுந்தர்

    Hemalatha Sundar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jayadhaarini-trust

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    பணத்தால் ஒருவன்

    S.VE. SHEKHER

    வாழ்க வளமுடன்

    முன்னுரை

    அன்பார்ந்த வாசகர்களே,

    வணக்கம். என் கனவு நினைவாகிறது. நான் ஒரு முழு நகைசுவை புத்தகத்தை உங்களிடம் சமர்ப்பிக்கிறேன். இந்த புத்தகத்தை நீங்கள் படிப்பதற்கு முன் நான் என் கதையை, இப்புத்தகம் எழுத எது என்னைத் தூண்டியது என்பதைச் சொல்ல ஆசைப்படுகிறேன். நான் எப்பொழுதும் சிறுகதைகள், கட்டுரைகள் தமிழில் எழுத ஆசைப்படுவேன். என் எழுத்தாற்றலை அதிகரிக்க உண்மையாகவே சிரமப்பட்டு உழைத்தேன். என் நினைவிற்கு பல புகழ்பெற்ற எழுத்தாளர்கள் முன் மாதிரியாக வந்தார்கள். சில வருடங்களக்கு முன் ‘கெட்டதே நடக்கும்’ என எதிர்மறையாக இருந்தேன். ஆனால் நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு இம்மியளவு கூட அது உதவியாக இல்லை என்பதை அறிந்தேன்.

    பல நாள் சிந்தனைக்கு பின் ‘நகைச்சுவை ஒன்றுதான் மனிதனின் வாழ்க்கைக்கு சிறந்த மருந்து’ என்ற தீர்க்கமான முடிவிற்கு வந்து, நகைச்சுவைகளை எழுத ஆரம்பித்தேன். மகிழ்ச்சிகரமான, திருப்தி தரக்கூடிய வாழ்க்கை அமைவதற்கு நகைச்சுவை ஓர் இன்றியமையாத சாதனம் ஆகும். பெருஞ்செல்வத்தால் அடைய முடியாததை நகைச்சுவையினால் அடைய முடிகிறது. ஒரு ஆராய்ச்சிக் குழுவின் முடிவின்படி செல்வம் ஒரு மனிதனின் மகிழ்ச்சிக்கு 10% மட்டுமே உதவுகிறது. இதைப்பற்றி ஓர் ஆங்கில மேதை கீழ்வருமாறு கூறியிருக்கிறார்.

    பணத்தால் ஒருவன்

    இதை மனத்தில் கொண்டுதான் என் முழு கவனத்தையும் நகைச்சுவையில் திருப்ப நான் தீர்மானித்தேன். எனக்குத் தேவையான ஊக்கத்தை என் கணவர் திரு.R. சுந்தர் அவர்களும் என் நண்பர் திரு ரங்கசுதன் அவர்களும் என் குழந்தைகளும் தந்தனர். என் படைப்புகள் புகழ்பெற்ற பத்திரிகையில் வெளிவந்த போது சிறிது வெற்றி கிடைத்தது. நகைச்சுவை சங்க நடவடிக்கைகளிலும் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். சங்க உறுப்பினர்கள் என்னை நன்றாக ஊக்குவித்ததோடு மட்டுமல்லாமல் திரு பாஸ்கி அவர்கள் நடத்திய ‘ஓஹோ’ ஜோக் நிகழ்ச்சியில் அறுவை ஜோக்குகளை எழுத வைத்து வந்த கடிதங்களை தேர்ந்தெடுத்து ‘கடி மன்னன்’ ‘கடி மன்னி’ விருது தருவது என முடிவு செய்ததில் ‘கடிமன்னி’ என்ற விருது எனக்கு கிடைத்தது. இப்படி என்னை உற்சாகப்படுத்திய அவருக்கு என நன்றி. வானொலி பண்பலை வரிசையில் ஆன்லைன் ஜோக்குகளில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்தது.

    இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து என்னை ஒரு புத்தகம் எழுதும் முடிவிற்கு கொண்டு வந்தது. என் சொந்த வாழ்வில் நடந்த நடைபெற்ற பல நகைச்சுவை துணுக்குகள், கணவன் - மனைவி துணுக்குகள், நண்பர் துணுக்குகள், மருத்துவர் துணுக்குள், ஆசிரிய - மாணவர், மாணவியர் துணுக்குகள், கடி ஜோக்ஸ், வக்கீல் வழக்கு மன்ற துணுக்குகள் இப்படி பல துணுக்குகளை எழுதினேன். இதில் வரும் துணுக்குகள் நான் கேட்டதும், பார்த்ததும், படித்ததும் ஆகும். இந்த அனுபவங்களின் வாயிலாக இப்போது இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளேன்.

    இந்நூலிற்கு அணிந்துரை வழங்கிய காமடி கிங் திரு. S.Ve. சேகர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. கார்ட்டூன்களை வரைந்த திரு. P.N. ஸ்ரீகாந்த் அவர்களுக்கும் என் நன்றிகள்.

    இது எனது முதல் முயற்சி. சில தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். உங்களுடைய ஆலோசனைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அது என் வருங்கால சாதனைக்கு பெரும் உதவியாக இருக்கும்.

    நன்றி.

    ஹேமலதா சுந்தர்

    Rosy Matilda Apt.,

    B3, முதல் மாடி,

    27/8, கோபாலபுரம் முதல் தெரு

    சென்னை - 600 086

    : 2811 1971

    S.VE. SHEKHER

    பொதுவாகவே பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்று சொல்வார்கள். யார் சொல்வார்கள் என்றால் பெண்களிடம் ஜோக் சொல்லி சிரிக்காமல் பாதிக்கப்பட்ட ஆண்களாக இருக்கும்.

    என்னைப் பொறுத்தவரை ஆணைவிட பெண்ணுக்கு நகைச்சுவை உணர்வு மிக அதிகம். திருமதி ஹேமலதா சுந்தர் எழுதியுள்ள ஹேராவின் ஜோக்ஸ் என்ற இந்த புத்தகத்தைப் படித்தாலே புரியும்.

    Bank-ல லோன் வாங்கிட்டு அதை ஏன் பட்டினி போட்டே? நீங்கதானே சாமி சொன்னீங்க லோன் வாங்கிட்டு தண்ணிக்காட்டக்கூடாதுன்னு.

    சாதாரணமாகவே போன்ல ஒரு மணி நேரம் பேசற உங்கம்மா இன்னிக்கு 1/2 மணி கூட பேசலியே ஏன்?

    அது ராங் நம்பர் அப்பா.

    ஏண்டா ஜோக் எழுதுவதை நிறுத்திட்டே.

    எங்கம்மா சாகும்போது நாலுபேரு சிரிக்கிறமாதிரி எதையும் செஞ்சுடாதேன்னாங்க அதான்.

    பிளாட்பாரம் லேகிய வியாபாரியை ஏன் அரெஸ்ட் பண்றாங்க? அவன் வித்த

    Enjoying the preview?
    Page 1 of 1