Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ulagathin Uchiyiley
Ulagathin Uchiyiley
Ulagathin Uchiyiley
Ebook141 pages58 minutes

Ulagathin Uchiyiley

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘உலகத்தின் உச்சியிலே’ என்பது ‘உலகின் மையக்கோடு’ என்று கூறப்படுகின்ற இடத்தை நான் கண்டு வந்ததன் நினைவாக கூறுவது. கடந்த 2016 மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நான் குடும்பத்துடன் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்று வந்தேன். இங்கிலாந்தில் லண்டனில் எங்கள் மகன் வசித்து வருகின்றார். நானும் எனது மனைவியும் மூன்று மாதங்கள் இங்கிலாந்து நாட்டில் தங்கியிருந்து பல இடங்களைச் சுற்றிப் பார்த்து, மகிழ்ந்து, திரும்பி வந்தோம். அந்த இன்ப நினைவலைகளை வாசகர்கட்குப் படைப்பதில் பெருமை கொள்கின்றேன்.

இதில் உள்ளவைப் பயணக் கட்டுரைகள் அல்ல. எனது தனிப்பட்ட பயணத்தின் தனிப்பட்ட அனுபவக் கட்டுரைகள். ஆகவே இதை என்னுடைய கண்ணோட்டத்தில் எழுதி உள்ளேன். வாசகர்கள் படித்து இங்கிலாந்து நாட்டைப்பற்றிய ஒரு மேம்போக்கான கண்ணோட்டத்தை அறிந்துகொள்ள முடியும். ஆகவே வாசகர்களே, பயணியுங்கள் இங்கிலாந்தை நோக்கி!

Languageதமிழ்
Release dateNov 29, 2021
ISBN6580147707466
Ulagathin Uchiyiley

Read more from Thanjai Ezhilan

Related to Ulagathin Uchiyiley

Related ebooks

Related categories

Reviews for Ulagathin Uchiyiley

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ulagathin Uchiyiley - Thanjai Ezhilan

    https://www.pustaka.co.in

    உலகத்தின் உச்சியிலே

    Ulagathin Uchiyiley

    Author:

    தஞ்சை எழிலன்

    Thanjai Ezhilan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/thanjai-ezhilan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    காணிக்கை

    என் குடும்பத்தினருக்கு

    நூலாசிரியரின் பிற நூல்கள்

    1. வாழ்க்கைப் பயணத்திலே

    2. தமிழ்த் திருமணம்

    3. மாமன்னன் கரிகால் சோழன்

    4. தமிழ் மொழி - இலக்கியம் (ஓர் அறிமுகம்)

    5. மடமையைக் கொளுத்துவோம்

    வழங்கப் பெற்ற விருதுகள்

    1. எழுத்துச் சுடர் - (2014)

    2. பாரதி பணிச் செல்வர் - (2014)

    3. பாவேந்தர் விருது - (2015)

    4. தமிழ் இலக்கிய மாமணி - (2016)

    என்னுரை

    ‘உலகத்தின் உச்சியிலே’ தலைப்பைப் பார்த்ததும் நான் ஏதோ உலகில் உயர்ந்த நிலையை எட்டிவிட்டதாகவோ அல்லது இலக்கிய உலகில் உயரப் பறந்துவிட்டதாகவோ அல்லது எழுத்துலகில் ஏறிச் சென்றுவிட்டதாகவோ அல்லது வாழ்க்கையில் ஏதோ ஓர் உயர்ந்த இடத்தை இந்த உலகில் அடைந்து விட்டதாகவோ எண்ணிவிட வேண்டாம்.

    ‘உலகத்தின் உச்சியிலே’ என்பது ‘உலகின் மையக்கோடு’ என்று கூறப்படுகின்ற இடத்தை நான் கண்டு வந்ததன் நினைவாக கூறுவது. கடந்த 2016 மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நான் குடும்பத்துடன் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்று வந்தேன். இங்கிலாந்தில் லண்டனில் எங்கள் மகன் வசித்து வருகின்றார். நானும் எனது மனைவியும் மூன்று மாதங்கள் இங்கிலாந்து நாட்டில் தங்கியிருந்து பல இடங்களைச் சுற்றிப் பார்த்து, மகிழ்ந்து, திரும்பி வந்தோம். அந்த இன்ப நினைவலைகளை வாசகர்கட்குப் படைப்பதில் பெருமை கொள்கின்றேன்.

    நாங்கள் லண்டன் புறப்பட்டுச் செல்லும்போது, உலகத்தின் உச்சியைக் காண வேண்டும் என எண்ணவில்லை. ஆனால் அந்நாடு சென்று பல இடங்களைக் கண்டு களித்தோம். அப்படிக் காணும்போது, அங்கு ஓடும் தேம்ஸ் நதி என்னைத் திக்குமுக்காடச் செய்தது. ஒருநாள் நான் இணையதளத்தில், தேம்ஸ் நதியைப்பற்றி அறிந்துகொள்ள முயன்றபோது, அந்நதி உற்பத்தியாகி சிறிது தூரத்திலேயே கிரீன்விச் நகரம் இருப்பதை கண்டு கொண்டேன். பிறகு தொடர்ந்து அந்நகரைப் பற்றியும், தேம்ஸ் நதிப்பற்றியுமான தேடலில், கிரீன்விச் நகரம் லண்டனுக்கு வெகு அருகில் உள்ளது என அறிந்து கொண்டேன். நான் முன்பே படித்திருந்ததுதான், கிரீன்விச் நகரம்தான் உலகின் மையக் கோடு (0°) அமைந்து உள்ள நகரம் என்பது. ஆனால் அது லண்டன் நகரத்தின் வெகு அருகில் அமைந்திருந்தது எனக்கு உற்சாகத்தை அளித்தது என்றால் மிகையில்லை.

    நான் நமது நாட்டிலிருந்து புறப்படும்போது, அந்நாட்டில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் மற்றும் மேடம் டுஸ்ஸாட் அருங்காட்சியகம், லண்டன் டவர் பாலம், வெஸ்ட் மினிஸ்டர் தேவாலயம், நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் விக்டோரியா மகாராணியின் பக்கிங்காம் அரண்மனை போன்றவற்றைப் பார்த்து வரவேண்டும் என்றுதான் எண்ணியிருந்தேன். இதில் கேம்பிரிட்ஜ் பல்கலை, தூரம் அதிகம் உள்ளதால் அந்நகரைத் தவிர மேற்கூறிய அனைத்து இடங்களுடன் மேலும் சில இடங்களைக் கண்டு வந்தேன்.

    பயணக் கட்டுரை என்பது, ஒரு இடத்திற்குச் சென்று, அங்கு பார்த்தவை, கேட்டவை, தெரிந்து கொண்டவை போன்றவற்றைப் பற்றி எழுதுவது. ஆனால் இதில் உள்ள கட்டுரைகள் பயணக் கட்டுரைகள் அல்ல. ஏனெனில் நான் சுற்றுலாப் பயணம் செல்லவில்லை. என் மகனுடன், குடும்பத்துடன் சில நாட்கள் சேர்ந்து இருந்து வரலாம் என்றுதான் சென்று வந்தேன். அங்கு சென்றபின், ஒவ்வொரு வாரமும், என் மகனின் விடுமுறை நாட்களில் மேற்கண்ட இடங்கள் தவிர மேலும் பல இடங்கட்கும் சென்று வந்தோம். அப்படி சில இடங்களைக் கண்டுகளித்து, ஒரு இனிய அனுபவத்தை உணர்ந்ததால், இதை நமது வாசகர்கட்குச் சொல்லலாம் என எழுத எண்ணினேன். அதன் வெளிப்பாட்டு அவாதான் இந்நூல்.

    இதில் உள்ளவைப் பயணக் கட்டுரைகள் அல்ல. எனது தனிப்பட்ட பயணத்தின் தனிப்பட்ட அனுபவக் கட்டுரைகள். ஆகவே இதை என்னுடைய கண்ணோட்டத்தில் எழுதி உள்ளேன். வாசகர்கள் படித்து இங்கிலாந்து நாட்டைப்பற்றிய ஒரு மேம்போக்கான கண்ணோட்டத்தை அறிந்துகொள்ள முடியும். ஆகவே வாசகர்களே, பயணியுங்கள் இங்கிலாந்தை நோக்கி!

    நன்றி! வணக்கம்.

    தஞ்சை எழிலன்

    செல்: 9884144575

    உள்ளடக்கம்

    1. லண்டன் பயணம்

    2. ஐக்கியப் பேரரசு

    3. லண்டன் நகரம்

    4. ரெட்டிங் நகரம்

    5. கேவர்ஷாம் படகு சவாரி

    6. வின்சர் கோட்டை

    7. போர்ட்ஸ் மௌத் கப்பல் தளம்

    8. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம்

    9. வெல்லிங்டன் கண்ட்ரி பார்க்

    10. டவர் பாலம்

    11. பக்கிங்காம் அரண்மனை

    12. லண்டன் தமிழ்ச் சங்கம்

    13. பிரிட்டன் அருங்காட்சியகம்

    14. மேடம் டூஸ்ஸாட் அருங்காட்சியகம்

    15. டிரஃபால்கர் சதுக்கம்

    16. கிரீன்விச்

    17. சென்னை திரும்புதல்

    1. லண்டன் பயணம்

    எனது மகன் லண்டனில் குடும்பத்துடன் வசிக்கின்றான். 2015-நவம்பர் மாதம் இரண்டாவது பேரன் பிறந்திருந்தான். முதல் பேரன் 2010-ல் பிறந்தவன். நவம்பர் டிசம்பர் மாதங்களில் தட்பவெப்பநிலை சரியாக இருக்காது என்பதாலும், ஏற்கனவே எங்கள் சம்மந்தி அங்கே இருந்ததாலும், எங்கள் லண்டன் பயணம் பிப்ரவரி மாதத்திற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி எனது மகன், விசா, மற்ற நடைமுறைகளைத் தொடங்கி எனக்கு 26.2-ல் விபரத்தைக் கூறினான். நானும் விசாவுக்குத் தேவையான ஆவணங்களை சேகரித்துக் கொண்டு 01.3.2016 அன்று சென்னையில் உள்ள பிரிட்டன் விசா அலுவலகம் சென்றோம். அங்கு நானும் எனது மனைவியும் எல்லா நடைமுறையையும் முடித்து வந்தோம். இன்னும் சில நாளில் குறுஞ்செய்தி வரும் என்றும் அப்போது அலுவலகம் வந்து விசாவைப் பெற்றுச் செல்லுமாறு கூறினர். ஆச்சரியம் பாருங்கள். 01.3.2016-ல் தான் விசா அலுவலகம் சென்று வந்தோம், 04.3.2016ல் மாலை எனக்குக் குறுஞ்செய்தி வந்து விட்டது. 05.3 மற்றும் 06.3 ஆகிய நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் 07.3.2016-ல் சென்று விசாவைப் பெற்றுக் கொண்டோம். உடனே எனது மகனுடன் தொடர்பு கொண்டு விபரம் கூறியதும், 9 அல்லது பத்து தேதியில் பயணச் சீட்டு ஏற்பாடு செய்வதாக கூறினான். அதன்படி 10.3.2016 - காலை புறப்படுவதற்கு ஸ்ரீலங்கா விமான சேவையில் பயணச் சீட்டு ஏற்பாடு செய்துவிட்டான். இடைப்பட்ட 08, 09 ஆகிய இரண்டு நாட்களும் எங்கள் பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டோம்.

    10.3.2016 காலை 9.30 மணிக்கு எங்கள் விமானம். நாங்கள் 6.00 மணிக்கெல்லாம் அண்ணா பன்னாட்டு விமான நிலையம் சென்றுவிட்டோம். பன்னாட்டு விமான சேவைக்கு மூன்று மணி நேரம் முன்னதாகவே விமான நிலையத்தில் இருக்க வேண்டும். எங்கள் விமானம் 09.30 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு, ஸ்ரீமதி பண்டார நாயகா விமான நிலையமான கொழும்பு நகர் சென்று, அங்கிருந்து வேறொரு விமானத்தில் லண்டன் பயணமாக வேண்டும். நாங்கள் எங்கள் சுமைகளுடன் விமான நிலையத்தின் உள்ளே, 6.30 மணிக்கு சென்று விட்டோம். எங்கள் பயணத்தை இனிதாக்க வழியனுப்ப வந்தவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு உள்ளே சென்றோம். அங்கு வரிசையில் நின்று, எங்கள் சுமைகள் எடைபோடப்பட்டு உள்ளே அனுப்பப்பட்டன. பின்பு எங்களது பயண ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, பாதுகாப்புச் சோதனைகளும் முடிந்து நாங்கள் உள்ளே செல்ல 8.30 மணிக்கு மேல் ஆகிவிட்டது. உள்ளே பயணிகளோடு நாங்கள் அமர்ந்திருந்தோம். சுமார் 9.00 மணியளவில் எங்கள் விமானம் தாமதம் என்று மட்டும் செய்தி, மின்னணு பலகையில் ஒளிர்ந்தது. ஆனால் நேரம் குறிப்பிடப்படவில்லை. பிறகு அரை மணி நேரத்திற்குப்பின்பு சுமார் 10.20 க்குப் புறப்படும் என அறிவிப்பு வந்தது. சென்னையிலிருந்து கொழும்புவிற்கு சுமார் 1.30 மணி நேர பயணம். பிறகு அங்கிருந்து 12.10 மணிக்கு லண்டன் ஹீத்ரு விமான நிலையம் செல்ல வேண்டும். அப்பயணம் 11.30 மணி நேரம். எங்கள் விமானம் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டு, கொழும்பு விமான நிலையத்தை அடைந்தது. அங்கும், பாதுகாப்புச் சோதனைகள், பயண ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, 12-10 வரை

    Enjoying the preview?
    Page 1 of 1