Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puthuputhu Anubavangal Part-3
Puthuputhu Anubavangal Part-3
Puthuputhu Anubavangal Part-3
Ebook360 pages2 hours

Puthuputhu Anubavangal Part-3

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Sivasankari (born October 14, 1942) is a renowned Tamil writer and activist. She has carved a niche for herself in the Tamil literary world during the last four decades with her works that reflect an awareness on social issues, a special sensitivity to social problems, and a commitment to set people thinking.

She has many novels, novellas, short stories, travelogues, articles and biographies to her credit. Her works have been translated into several Indian languages, English, Japanese and Ukrainian. Eight of her novels have been made into films, having directed by renowned directors like K. Balachander, SP Muthuraman and Mahendran. Her novel 'Kutti' on girl child labour, filmed by the director Janaki Viswanathan, won the President's Award. Sivasankari's novels have also been made as teleserials, and have won the national as well as regional 'Best Mega Serial' awards.

As a multi-faceted personality, she has won many prestigious awards including Kasturi Srinivasan Award, Raja Sir Annamalai Chettiyar Award, Bharatiya Bhasha Parishad Award, 'Woman of the year 1999-2000' by the International Women's Association, and so on.

'Knit India Through Literature' is her mega-project involving intense sourcing, research and translations of literature from 18 Indian languages, with a mission to introduce Indians to other Indians through culture and literature.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580101803308
Puthuputhu Anubavangal Part-3

Read more from Sivasankari

Related to Puthuputhu Anubavangal Part-3

Related ebooks

Related categories

Reviews for Puthuputhu Anubavangal Part-3

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puthuputhu Anubavangal Part-3 - Sivasankari

    http://www.pustaka.co.in

    புதுப்புது அனுபவங்கள்

    தொகுதி – 3

    Puthuputhu Anubavangal Part-3

    Author:

    சிவசங்கரி

    Sivasankari

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1.பிரமிட் தேசம் 2005

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    2.சொர்க்கங்களில் சில நாள்கள் 1995

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    3.மகாத்மா பிறந்த மண்ணில் தென்னாப்பிரிக்கப் பயணக்கதை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1.பிரமிட் தேசம் 2005

    1

    பள்ளி, கல்லூரிகளில் படித்த நாட்களில், 'எந்த அயல்நாட்டுக்கு உல்லாசப்பயணம் மேற்கொள்ள விரும்புகிறீர்கள்?' என்ற கேள்வி எழுந்தபோதெல்லாம், 'எகிப்து', 'சீனா', அப்புறம் 'அமெரிக்கா' என்று நான் மட்டுமல்ல, என் சினேகிதிகளில் பலரும்கூடக் கண்கள் குடையாய் விரிய ஒரே பதிலைத் தொடர்ந்து கூறியிருக்கிறோம்!

    நவீன விஞ்ஞானத்திலும், நாகரிகத்திலும், வசதியிலும் வளர்ந்துவிட்ட அமெரிக்காவைக் காட்டிலும், ஐயாயிரம் ஆண்டுச் சரித்திரத்தைத் தன்னுள் அடக்கிய எகிப்தும் சீனாவும், மாணவிகளாக இருந்த எங்களை ஈர்த்திருந்ததுநிஜம். அதுவும், எகிப்து - மேகக்கூட்டத்தை முட்டியவாறு கடந்தகால நிகழ்வுகளுக்கு சாட்சியாய் நிற்கும் பிரமிடுகள், கம்பீரமான சிங்கமுக ஸ்ஃபிங்ஸ், உலகிலேயே நீளமான நதி என்ற பெருமையைத் தட்டிக்கொண்ட நைல், அதில் பவனி வந்த உலகப்பேரழகி கிளியோபாட்ரா, முகங்களை சல்லாத்துணி மூட, இடை எங்கே என்று தேடும்படியான உடல்களைக் கொண்ட பெண்கள் ஆடும் 'பெல்லி டான்ஸ்', அரபு நாடுகளுக்கே உரித்தான சாம்பிராணிப்புகை, அத்தர் மணம், கண்ணுக்கெட்டியவரை பரந்து விரிந்திருக்கும் பாலைவனங்கள், அவற்றில் வரிசையாய்ச் செல்லும் பாலைவனக்கப்பல்கள், புகழ்பெற்ற ரத்னக்கம்பளங்கள், பபைரஸ் ஓவியங்கள்... என்று நாங்கள் படித்து, கேட்டுத் தெரிந்துகொண்ட ஏராளமான விவரங்கள் எகிப்து நாடு குறித்து அந்த இளம்பிராயத்தில் உண்டுபண்ணியிருந்த அழகான கனவு எங்களில்எத்தனை பேருக்கு பலித்திருக்கிறது என்று தெரியாது; ஆனால் எனக்கு? இரண்டு முறை.

    ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள தமிழ்ச்சங்கங்களின் அழைப்பை ஏற்று 1991-ம் ஆண்டு சென்றபோது, கூட்டங்களை முடித்துக்கொண்டு, தனி ஆளாய் ஐந்து நாட்களுக்கு எகிப்துக்குச் சென்றுவந்தது முதல் முறை.

    சென்ற மாசம் எஸ்.ஓ.டி.ஸி. (S.O.T.C.) என்ற டிராவல் கம்பெனி மூலம் தோழி பிரியா நாராயணுடன் எகிப்துக்கும், கொசுறாகத் துருக்கி நாட்டுக்கும் சென்றுவந்தது இரண்டாம் முறை.

    எஸ்.ஓ.டி.ஸி. நிறுவனத்தார் ஒரு நல்ல பயணத்திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ஒருதரம் அவர்கள் மூலம் ஏதாவது வெளிநாட்டுக்குச் சென்றுவந்த பிறகு, குறிப்பிட்ட பணம் செலுத்தி 'டிராவல் க்ளப்'பில் அங்கத்தினர் ஆகிவிட்டால், அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கு, வருஷத்துக்கு ஒரு முறை அவர்கள் கைகாட்டும் எட்டு நாடுகளில் ஏதேனும் ஒன்றிற்கு இலவசமாய் (வரிகள், விசா கட்டணம், இத்தியாதிகளை நாம்தான் செலுத்தவேண்டும்) சென்றுவரலாம்! அதாவது, நாம் ஆஸ்திரேலியாவுக்குப் போகத் தீர்மானித்துக் கிளம்பினால், விமானத்தில் அழைத்துச்சென்று ஒருநாள் அங்கு அவர்கள் செலவில் தங்கச் செய்து, அதற்கும் மறுநாள் மீண்டும் இங்கு அழைத்துவந்துவிடுவார்கள்! இதில் விமானச் செலவும், அங்கு ஓட்டலில் தங்கும் செலவும் நமக்கு முழுசாய் மிச்சமாகும்! ஆனால், அத்தனை தொலைவு செல்பவர்கள், போன மச்சான் திரும்பி வந்தான் என்று உடனே திரும்ப விரும்பாததில், உபரிப்பணம் செலுத்தி அவர்கள் ஏற்பாடு செய்யும் சுற்றுலாப்பயணத்தை - add on itinerary - செய்வது வழக்கமாயிருக்கிறது.

    பிரியாவும் நானும் இத்திட்டத்தின் மூலம் முதல் வருஷம் ஸ்விட்ஜர்லாந்துக்கும், இரண்டாம் வருஷம் கென்யா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே நாடுகளுக்கும் சென்றுவிட்டு, இந்த வருஷம் எகிப்து, துருக்கி பயணத்தைத் தேர்ந்தெடுத்தோம்

    முதல் தடவை எகிப்துக்குச் சென்றபோது தனியாய் இருந்த காரணத்தால், கெய்ரோ, அலெக்ஸாண்ட்ரியா நகரங்களுக்கு மட்டுமே என்னால் பயணிக்க முடிந்தது. அதாவது, எகிப்தின் தலைப்பகுதியை மட்டுமே கண்டுகளிக்க முடிந்தது. இந்தப் பயணத்தில் நைல் நதியில் நான்கு நாட்கள் உலா வருவதன் மூலம் தென்கோடியில் உள்ள அஸ்வான் நகரில் துவங்கி, நைல் நதிப் பள்ளத்தாக்கை ஒட்டியுள்ள அனைத்து முக்கியப் புராதனச் சின்னங்களையும் பார்க்க முடியும் என்பது, இந்தப் பயணத்தைத் தேர்வு செய்யத் தூண்டியது.

    சென்னையிலிருந்து பம்பாய்க்குச் சென்று, சர்வதேச விமானக்கூடத்தில் எகிப்து விமானத்தில் பயணச்சீட்டுப் பெற முனைந்தபோது, அதிருஷ்டதேவதை எங்களைப்பார்த்து லேசாகப் புன்னகைத்தாள். அங்கிருந்த ஆபீஸருக்கு என்ன தோன்றியதோ, எங்களைப் பார்த்ததும் முதல் வகுப்புக்கு மாற்றிக்கொள்ள விருப்பமா? ஒருவருக்கு வெறும் 2500 ரூபாய்தான்!' என, கேட்டதை நம்பமாட்டாமல் நாங்கள் முழித்தோம். பின்னே? எகானமி வகுப்பை விட 40 ஆயிரம் கூடுதலாய் கொடுத்து முதல் வகுப்பில் பயணிப்பதை அவர் 2500-க்குத் தருகிறேன் என்றால், திகைக்காமல் என்ன செய்ய! அந்த ஆபீஸர் மனசை மாற்றிக்கொள்ளும் முன், போகவர முதல் வகுப்புக்கு உபரிப்பணம் கொடுத்து டிக்கெட்டிலும் பதிவுசெய்துகொண்டு, 7 மணி நேரம் படு வசதியாகப் பயணித்ததில், போகும்போதும் சரி, வரும்போதும் சரி, பயண அலுப்பு எங்களைத் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை!

    மும்பையிலிருந்து ஷார்ஜா வழியாகக் கெய்ரோ போகும் நேரத்தில் எகிப்தின் ஐயாயிர வருஷ வரலாற்றைக் குட்டியாகத் தெரிந்து கொண்டு விடலாமா?

    பொதுவாக ஆய்வாளர்கள் எகிப்தின் வரலாற்றை அரசபரம்பரையின் ஆட்சிக்கு முன் (கி.மு. 5000), ஆரம்பகால அரசபரம்பரை (கி.மு. 2920-2575), பழைய அரசபரம்பரை (கி.மு. 2575-2134), மத்திய அரசபரம்பரை (கி.மு. 2050-1786), புதிய அரசபரம்பரை (கி.மு. 1550-1070), கிரேக்கர்கள் காலம் (Ptolemaic Era - கி.மு. 332-30), ரோமானியர் காலம் (கி.மு. 30 - கி.பி. 640), அரேபியர்கள் காலம் (கி.பி. 640-1517), ஓட்டோமான் காலம் (Ottomon - கி.பி. 1517-1798) என்று கட்டம் கட்டிக்கொண்டே வந்து 1952-லிருந்து எகிப்தின் நவீனக் காலம் துவங்கியது என்று குறிப்பிடுகிறார்கள். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மெனேதோ (Menetho) என்ற எகிப்து மதகுரு எழுதி நமக்குக் கிடைத்துள்ள குறிப்புகளின்படி, அந்நாட்டை ஆதிநாளிலிருந்து சுமார் 30 அரசபரம்பரைகள் ஆண்டு வந்த விவரங்கள் தெரியவருகின்றன. மூன்றாம் அரசபரம்பரையைச் சார்ந்த ஜோஸர் (Zoser), கிறிஸ்து பிறப்பதற்கு 2700 ஆண்டுகளுக்கு முன் கட்டட நிபுணர் இம்ஹோடெப் (Imhoteb) இன் உதவியுடன் சக்காரா என்ற இடத்தில் கட்டிய முதல் 'படிக்கட்டு பிரமிட்'டும், பின்னர் பழைய அரசபரம்பரையைச் சார்ந்த கியாப்ஸ், அவரது மகன், பேரன், கீஸா (Giza) என்ற இடத்தில் கட்டிய பிரமிடுகளும், ஸ்ஃபிங்ஸும் (Sphinx), மற்றும் பல ஆலயங்களும் நான்காயிரம் வருஷ சரித்திரத்தின் சான்றுகளாக இன்னமும் நிலைத்திருப்பது, பிரமிக்கவைக்கும் உண்மைகள். கிரேக்கர்களின் படையெடுப்பு நிகழும்வரை அந்த மண்ணில் கோலோச்சிய மன்னர்கள், சூரிய, சந்திரர்கள், நைல் நதி, இயற்கை, மற்றும் மிருகத்தலை கொண்ட மனிதர்களைக் கடவுளாகக் கருதி வழிபட்டதில், பின்னர் நாட்டைக் கைப்பற்றிய கிரேக்கர்களும் ரோமானியர்களும், ஆதி எகிப்தியர் நம்பிக்கைகளை 'பேகன் வழிபாடு' (Pagan Cult) என்று அழைத்தார்கள். இந்த பேகன் வழிபாடு, அதில் வழிபடப்பட்ட கடவுள்கள் பற்றிய விவரங்கள் கேட்க சுவாரஸ்யமாய் இருந்தாலும், எக்கச்சக்கமாய்த் தலையைச் சுற்றவைப்பதாகவும் இருப்பதில், இப்போது அவற்றை எழுதி உங்களைக் குழப்பாமல், அந்தந்த கோவில்கள், நினைவுச் சின்னங்களுக்குச் செல்லும்போது சில விஷயங்களை மட்டும் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

    கெய்ரோவில் எங்கள் விமானம் இறங்கியபோது மணி மாலை 5. இந்தியாவுக்கும் எகிப்துக்கும் நேரத்தில் 2 1/2 மணி வித்தியாசம். அதாவது அங்கு 5 என்றால் இந்தியாவில் மணி 7 1/2.

    இமிக்ரேஷனை முடித்துக்கொண்டு வெளியே வந்ததும் டூர் கைட் எங்கள் பெயர்களைக் கொண்ட பலகையுடன் காத்திருந்தார். இந்தியாவிலிருந்து இந்தப் பயணத்திற்காக ஒரே விமானத்தில் வந்தபோதும், அறிமுகம் இல்லாததால் தனித்தனியாய் வந்தவர்கள், டூர் கைட் அருகே ஒன்றுசேர்ந்தோம். பட்டுக்கோட்டையில் மருத்துவமனை நடத்தும் டாக்டர் நிலோஃபர் (நீலு), அவரது வக்கீல் கணவர் காதர்; பல வருஷங்களாய் சினிமாக் கம்பெனிகளுக்குக் காஸ்ட்யூம் வழங்கிய பெருமை கொண்ட 'நாதமுனி கம்பெனி'யைச் சார்ந்த ராஜேந்திர பிரசாத், அவரது நண்பர் மனோகர்; அஸ்ஸாமில் பேராசிரியராய் பணிபுரியும் அகமத், அவர் மனைவி எலிஸா, 9 வயசுப் பிள்ளை நிஜாமுதீன்; அப்புறம், பிரியா, நான் - ஆக, மொத்தம் 9 பேர்தான்!

    'என்னயும் சேர்த்து நாம் பத்து பேரும் அடுத்துவரும் 7 நாட்களையும் ஒன்றாகச் செலவிடப்போகிறோம் என்பதால் இந்த க்ரூப்பை நான் குடும்பம்' (family) என்று அழைக்கப் போகிறேன்' என்று சொன்ன கைட், 'என் பெயர் இஹாப் எம். அல் அஹ்ரூடி (Ihab M, AI, Agroudy). என்னை நீங்கள் முழு பெயர் சொல்லித்தான் அழைக்கவேண்டும்' என்று கறாராய்க் கூற, இரண்டு முறை அப்பெயரைச் சொல்லிப் பார்த்ததும் தொண்டையில் கமறல் எடுத்து அவஸ்தை உண்டானதே ஒழிய, பெயரை முழுசாய் உச்சரிக்க முடியவில்லை! அரபு மொழியில் 'ஹ' என்ற எழுத்தை அடித்தொண்டையிலிருந்து அழுத்தி உச்சரிக்கவேண்டும். அந்த அவஸ்தை புரிந்த மாதிரி அவரே, 'விளையாட்டுக்குச் சொன்னேன்! என்னை நீங்கள் 'பாப்' (Bob) என்றே கூப்பிடலாம்' என்று கூறி கண்களைச் சிமிட்டி சிரித்ததும், நாங்களும் அம்மாடி என்று பெருமூச்சு விட்டோம்.

    'பாப்' எங்களுக்குக் கைடாகக் கிட்டியது ஒரு வரப்பிரசாதம். ஏன் சொல்கிறேன் என்றால், ஸ்விட்ஜர்லாந்துக்குப் போனபோது வந்த கைட், கையேடுகளைப் பிரித்துவைத்துக்கொண்டு படித்தார், நாமாக ஏதாவது கேட்டாலும் பேந்தப் பேந்த விழித்தார்; கென்யாவிலோ, கைடுக்கு வேலையே இல்லை... விமானக் கூடத்தில் வண்டியில் ஏற்றி, நேராக ஐந்து மணிநேரம் காட்டுப்பாதையில் பயணிக்கவைத்து, 'மஸைய் மாரா' என்ற காட்டுப்பகுதி ஹோட்டலில் தங்கவைத்துவிட்டு, 'இனி உங்கள் பாடு, மிருகங்கள் பாடு' என்று கையைத் தட்டிக்கொண்டு போய்விட்டார்! ஆனால் இவர்களுக்கு நேர்மாறாக, எகிப்து பற்றி அனைத்துத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்ததோடு, கேட்காமலேயே புள்ளிவிவரங்கள், கதைகளை அள்ளிவிட்டு, யாரும் ஒரு கணம்கூட சோம்பி உட்கார இடம் தராமல், எகிப்தின் ஐயாயிரம் ஆண்டு வரலாற்றை எங்களுக்குப் படம் காட்டியதைப் போல பாப் விவரித்த நேர்த்தி வெகு அபாரம்!

    இனி, டைம் காப்ஸ்யூலில் ஏறிக்கொண்டு பாப்-ன் வர்ணனைகளுடன் ஐயாயிரம் வருஷத்திய எகிப்தினை ஒரு சுற்று சுற்றி வரலாமா?

    2

    1952-ல் குடியரசு உரிமை பெற்று, சுமார் 10 லட்சம் சதுரக் கிலோமீட்டர் விஸ்தீரணம் கொண்ட இன்றைய எகிப்தில், 97 விழுக்காடு நிலப்பரப்பு பாலைவனமாகவும், எஞ்சியுள்ள பகுதி பசுமையான நைல் பள்ளத்தாக்காகவும் திகழ்கிறது. பிரும்மாண்டமான வறண்ட பாலைவனப் பகுதிகளின் நடுவில் பச்சை போர்த்தின நைல் பள்ளத்தாக்கு கிட்டத்தட்ட 7000 வருஷங்களாக, 240 தலைமுறைகளின் வழியே இப்படியே இருந்திருக்கிறது என்பது ஆச்சர்யமான புள்ளிவிவரம்! 7 கோடி மக்கள்தொகையில் 96 விழுக்காடு இஸ்லாமியர்கள் என்பதால் இஸ்லாம் நாட்டு மதமாகவும், அரபு மொழி எல்லோரும் பேசும் மொழியாகவும் இருக்கின்றன.

    அலெக்ஸாண்ட்ரியா, கெய்ரோ முதலான நகரங்களைக் கொண்ட தலைப்பகுதியை 'கீழ் எகிப்து' என்றும், நைல் பள்ளத்தாக்கை 'மேல் எகிப்து' என்றும் குறிப்பிடுவதைப் படிக்கும்போது, 'மேலே வடக்கில் இருப்பதைக் கீழ் என்றும், கீழே தெற்கில் இருப்பதை மேல் என்றும் கை தவறி எழுதிவிட்டாளோ என்ற சந்தேகம் எவருக்கும் எழுவது இயல்பு. எனக்கும் எழுந்தது! கிழக்கிலுள்ள சூடான் நாட்டிலிருந்து நைல் நதி எகிப்தில் நுழைவதால் அதைப் பிரதானப்படுத்தி மேல் எகிப்து என்றும், டெல்டாப்பகுதியை கீழ் எகிப்து என்றும் குறிப்பிடுகிறார்கள் என்ற விவரத்தைக் கேட்ட பிறகே என் சந்தேகம் தீர்ந்தது!

    இன்றைய எகிப்தின் தலைநகரமான கெய்ரோவை எகிப்தியர்கள் அதன் இரண்டு பழமையான பெயர்களால் - 'மிசிர்' (இதை மசிர் என்றும் உச்சரிக்கலாம். Misr / Masr); அல் காஹிரா (AI Qahira) என்றும் செல்லமாய் அழைக்கிறார்கள். 'வெளிநாட்டில் வாழும் எந்த எகிப்தியரிடமும் 'மிசிர்' என்று சொல்லிப்பாருங்கள், அப்படியே உருகிவிடுவார்! எங்களுக்குத் தாய்நாட்டுப்பற்று மிக அதிகம்' என்றார் பாப், கெய்ரோவைச் சுற்றிக்காட்டிய தருணத்தில்!

    வளைகுடா, ஆப்ரிக்க நாடுகளின் மிகப்பெரிய நகரமாய்க் கருதப்படும் கெய்ரோவுக்கு ‘உலகின் தாய்' என்ற பட்டப்பெயரும் உள்ளது. இதன் மக்கள்தொகை 1.7 கோடி. பழைய அரசபரம்பரையின் தலைநகராக விளங்கிய மெம்ஃபிஸ், முதல் பிரமிட் கட்டப்பட்ட சக்காரா, சூரியனை வழிபட்ட குருமார்கள் வாழ்ந்த ஹிலியோபோலிஸ் (Heliopolis) - போன்று ஒரு காலத்தில் கொடிகட்டிப்பறந்த 6 நகரங்களை உள்வாங்கிக் கொண்டு இன்றைய கெய்ரோ பிறந்து வளர்ந்திருக்கிறது. பொதுவாய், பழுப்பு, சாம்பல் நிறக் கட்டடங்களையும், பூமியையும் கொண்ட கெய்ரோவைச் சுற்றிவருகையில் பிரமிடுகள், மசூதிகள், அந்தக்கால நினைவுச்சின்னங்கள், கழுதை வண்டிகள் என ஒருபக்கம் இருந்தாலும், நவநாகரிக ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், கடுகு சிதறின மாதிரி எங்கும் காணப்படும் வெளிநாட்டுப்பயணிகள், கலைக்கூடங்கள் போன்ற காட்சிகளும் நம் கவனத்தை ஈர்ப்பதில், பல நூற்றாண்டுகளில் ஒரே சமயத்தில் பயணிக்கும் உணர்வு கண்டிப்பாய் யாருக்கும் எழும்.

    கெய்ரோ நகரத்தின் வராலாற்றில் முக்கிய அடையாளங்களாக கீஸா பிரமிடுகளையும், முகமத் அலியின் மசூதியையும் சொல்கிறார்கள். பிரமிடுகள் பற்றின விவரங்களைப் பின்னர் எழுதவிருப்பதனால், நவீன கெய்ரோவுக்கு அஸ்திவாரம் போட்டவர் என்று அறியப்படும் முகமத் அலியை லேசாக அறிமுகப்படுத்திக்கொள்ளலாம்.

    துருக்கியிலிருந்து எகிப்தை ஆண்ட ஓட்டமான் சுல்தானின் படைத் தளபதியாய் இருந்தவர் முகமத் அலி. அவருடைய வீரத்தையும் திறமையையும் மெச்சி ஓட்டமான் அவரை எகிப்தின் பாஷாவாக (Pasha) நியமித்தார். அச்சமயம் அங்கு சிற்றரசர்களாகவும், கொஞ்சம் படைபலம் பொருந்தியவர்களாகவும் இருந்த மாம்லுக்கர்களின் (Mamluke) பரம்பரையை வேரோடு அழிக்க உறுதிபூண்ட முகமத் அலி, ஒரு பெரும் சதிக்குத் திட்டம் தீட்டினார். சுமார் 470 மாம்லுக்கத்தலைவர்களிடம் வெகு நைச்சியமாய் நட்புடன் பேசி விருந்துக்கு வரவழைத்து, அவர்களுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்து உபசரித்து வழியனுப்பிவிட்டு, அனைவரும் ஒரு குறுகிய சந்தின் வழியே வெளியேறியபோது தன் ஆட்களை ஏவி, ஒருவரையும் விட்டுவைக்காமல் கொலை செய்தார். பின்னர், எந்த எதிர்ப்புமின்றி முழுமையாக ஆட்சி செய்ய முடிந்ததும், ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக எகிப்தை உருவாக்கும் எண்ணத்துடன் மேல்நாட்டு நிபுணர்களின் உதவியுடன் பல தொழிற்சாலைகளைக் கட்டி, புகைவண்டித் தொடர்புகளை ஏற்படுத்தி, விவசாயம் நன்கு செழிக்க புது கால்வாய்களை வெட்டியவர் என்பதாலேயே நவீன எகிப்துக்கு அடிகோலிய பெருமை அவருக்குக் கிட்டியது. முகமத் அலியின் ஆட்சியின்போதுதான் தெற்கிலிருக்கும் சூடான் நாட்டின்மேல் படையெடுத்துச் சென்று அங்கு விளைந்த விசேஷத் தரமுள்ள பருத்தியை இங்கு கொணர்ந்து பெருமளவில் பயிரிடுவது நடந்தது. இன்றைக்கு உலகளவில் அறியப்படும் எகிப்தியப் பஞ்சு - Egyptian Cotton - ஜனித்த கதை இப்படித்தான்.

    கெய்ரோவின் நட்சத்திர ஹோட்டலான ஷெரடனில் எங்கள் குழு தங்க ஏற்பாடாயிருந்தது. ஹோட்டலை விட்டு வெளியே வந்தால் - சாரிசாரியாய் பபைரஸ் ஓவியங்கள், சலவைக்கல் சிலைகள், ஸ்கார்ஃப் போன்ற பல்வேறு பொருட்களை மலிவு விலையில் விற்கும் கடைகள் இருந்தது, ஊரை விட்டுப் புறப்படுகையில் இங்குமங்கும் அல்லாடாமல் ‘ஸுவ்னீர்களை' வாங்க வசதியாய் இருந்தது.

    அறைக்கு வந்து முகம் கழுவின கையோடு ஏற்கனவே முடிவு செய்திருந்த விதத்தில் நீலு, காதர், பிரியா, நான் - நால்வரும், கீஸா பிரமிடுகளில் எட்டு மணிக்குத் துவங்கிய ஒலி-ஒளி நிகழ்ச்சியைக் காணப் புறப்பட்டோம். இதை என் முதல் பயணத்தில் பார்த்திருந்தேன். ஒலி - ஒளி நிகழ்ச்சிகளைப் பல நாடுகளில், பல இடங்களில் நான் பார்த்திருந்தாலும், கீஸா நிகழ்ச்சியின் சிறப்பை வேறு எதிலும் பெற முடியாததில், அந்த அனுபவத்தின் சிலிர்ப்பு இன்னமும் என் மனசில் இருக்கிறது.

    'தலைக்கு மேல் கருநீல ஆகாயம், வாரி இறைத்திருந்த நட்சத்திரங்கள், கண்ணுக்கெட்டிய தூரம் விரிந்திருந்த பாலைவனம், அதில் குன்றுகளாகக் கட்டப்பட்டிருந்த பிரமிடுகள். காவல் தெய்வம் ஸ்ஃபிங்ஸ் 'பாலைவனத்தின் குரலைக் கேளுங்கள்' என்று கனமான த்வனியில் கதையைத் துவங்க, கம்பீரமான இசை பின்னணியில் ஒலிக்க, புரான எகிப்தின் மாமன்னர்களோடு, கிளியோபாட்ராவும், ஆண்டனியும், ஸுஸரும், அலெக்ஸாண்டரும் தத்தம் படைகளுடன் பவனி வர... ஆஹா!'

    மேற்கண்டவாறு என் முதல் பயணத்தொடரில் விவரித்திருந்த அற்புதமான அந்த அனுபவத்தை என்னால் ஆயுசுக்கும் மறக்க இயலாது என்பதால், மீண்டும் அந்தப் பயணத்திற்கு 25 எகிப்திய பவுண்டு கொடுத்து (ஒரு எகிப்து பவுண்டு சுமார் ஏழு ரூபாய்க்குச் சமம்) என்னைத் தயார் செய்து கொண்டேன்.

    என் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. அமாவாசை ஆன ஆறாவது நாள் என்பதால், வெட்டிப்போட்ட நகம் மாதிரி காட்சி தந்த பிறைச்சந்திரன்; அதன் அருகில் ஒற்றை நட்சத்திரம்; மெதுமெதுவாய் கறுத்த வானம் ; லேசர் காட்சிகளைச் சேர்த்து மெருகேற்றப்பட்ட ஒலி-ஒளி நிகழ்ச்சி... ரமிக்கவைத்த அனுபவம்தான்! ஆனால், 12 வருஷங்களுக்கு முன் அத்துவானமாய் இருந்த இடத்தைச் சுற்றி கட்டடங்கள் வந்துவிட்டதில், நிகழ்ச்சி துவங்கி, ஐயாயிர வருஷப் பயணத்திற்கு எங்களைத் தயார்பண்ணிக்கொண்ட நொடியில், சற்றுத் தள்ளியிருந்த ஒரு உயரமான இடத்திலிருந்து கார் ஒன்று விளக்குகளைப் போட்டபடி சாலையில் செல்வதைப் பார்க்க முடிய, சட்டென்று யாரோ என்னை உலுக்கி நிகழ்காலத்தில் தள்ளிவிட்ட மாதிரியான ஏமாற்றம் என்னைப் பீடிக்கவே செய்தது. ரொம்பக்

    Enjoying the preview?
    Page 1 of 1