Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

London Paarkka Vaareengala! Sydney Paarkka Vaareengala?
London Paarkka Vaareengala! Sydney Paarkka Vaareengala?
London Paarkka Vaareengala! Sydney Paarkka Vaareengala?
Ebook182 pages1 hour

London Paarkka Vaareengala! Sydney Paarkka Vaareengala?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பயணக் கட்டுரைகளைப் படிப்பதில் பெரும்பாலோருக்கு ஆர்வம் இருக்கிறது; பார்க்க முடியாத இடங்களை மனக் கண்களால் பார்க்க அந்தக் கட்டுரைகள் உதவுகின்றன. அது மட்டுமல்ல; அந்த ஊருக்கோ, நாட்டுக்கோ பயணம் செய்வதற்கு முன்னால் அந்த இடத்தைப் பற்றி தெரிந்துகொள்ளவும் உதவுகிறது உலகில் 200 நாடுகளுக்கு மேல் இருக்கின்றன. எல்லோராலும் எல்லா இடங்களுக்கும் செல்ல இயலாது. ஆகையால் படிப்பதன் மூலம் அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.

Languageதமிழ்
Release dateNov 19, 2022
ISBN6580153509245
London Paarkka Vaareengala! Sydney Paarkka Vaareengala?

Read more from London Swaminathan

Related to London Paarkka Vaareengala! Sydney Paarkka Vaareengala?

Related ebooks

Related categories

Reviews for London Paarkka Vaareengala! Sydney Paarkka Vaareengala?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    London Paarkka Vaareengala! Sydney Paarkka Vaareengala? - London Swaminathan

    http://www.pustaka.co.in

    லண்டன் பார்க்க வாறீங்களா! சிட்னி பார்க்க வாறீங்களா?

    London Paarkka Vaareengala! Sydney Paarkka Vaareengala?

    Author :

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. நான் கண்ட ஸ்பானிய அரண்மனை

    2. போர்ச்சுகல்லில் யோகா பரவுகிறது!

    3. ரொம்ப நாளாக எனக்கொரு (டான்யூப் நதி) ஆசை!

    4. வியன்னா விஜயம் வெற்றி

    5. சங்கீதத்துக்கும், ஓவியத்துக்கும் பஞ்சமில்லாத வியன்னா நகரம்

    6.வியன்னா நகர ஓவிய மியூசியங்கள்

    7.கிரேக்க நாட்டுத் தீவில் இன்பச் சுற்றுலா

    8.உலகம் வியக்கும் கண்டுபிடிப்பு - கிரேக்க நாட்டில் சிந்து சமவெளிக் குரங்கு

    9.ஏதென்ஸ் நகரமும் இந்துசமயத் தொடர்பும்

    10.அதீனா சிலையும் மத வெறியர்கள் அதை அழித்த கதையும்

    12.ரோம் நகரில் 700 மித்ரன் கோவில்கள்!

    13.DAVID IN FLORENCE இத்தாலியின் புகழ்பெற்ற டேவிட் சிலை

    14.ஜனகனுக்கு ஒரு நீதி! நீரோ மன்னனுக்கு வேறொரு நீதி?

    15.ரோம், கிரீஸில் வாஸ்து கடவுள்

    16.ஆஸ்திரேலியாவில் இந்துக் கோவில்கள்!

    17.ஆஸ்திரேலியா நாட்டு மலையில் அதிசய கணபதி!

    18.ஆஸ்திரேலியாவில் ஒரு அற்புத புத்தர் கோவில்!

    19.ஆஸ்திரேலியாவில் கடலோர பொங்கு நீரூற்று

    20.உலகின் மிகப் பெரிய இயற்கை அதிசயம்!

    21.பிரிஸ்பேன் நகர அதிசயங்கள்!

    22.HONG CONG சீனர்களின் அபார ஜோதிட நம்பிக்கை!

    23.சுவீடன் நாட்டில் மர்ம புத்தர் சிலை!

    24.லண்டன் பார்க்க வருகிறீர்களா?- PART 1

    25.லண்டன் பார்க்க வருகிறீர்களா ?- PART 2

    26.லண்டன் பார்க்க வருகிறீர்களா?- PART 3

    27.பக்கிங்ஹாம் அரண்மனை பற்றிய அதிசய செய்திகள்

    28.லண்டன் 'பூங்கா' பார்க்க வாறீங்களா?

    29.பிரிட்டனில் பேய் வீடுகள் பட்டியல் வெளியீடு, லண்டன் பேய் தோல்வி

    30.லண்டனில் ஆர்க்கிட் (Orchids) மலர்க் கண்காட்சி

    31.புகழ் பெற்ற லண்டன் சர்ச்சில் மநு நீதி நூல்!

    32.லண்டன் கண்காட்சியில் அரிய SEX செக்ஸ் புஸ்தகம்!

    33.புதிய ஐடியாக்கள் -New Ideas from STRATFORD UPON AVON

    முன்னுரை

    பயணக் கட்டுரைகளைப் படிப்பதில் பெரும்பாலோருக்கு ஆர்வம் இருக்கிறது; பார்க்க முடியாத இடங்களை மனக் கண்களால் பார்க்க அந்தக் கட்டுரைகள் உதவுகின்றன. அது மட்டுமல்ல; அந்த ஊருக்கோ, நாட்டுக்கோ பயணம் செய்வதற்கு முன்னால் அந்த இடத்தைப் பற்றி தெரிந்துகொள்ளவும் உதவுகிறது உலகில் 200 நாடுகளுக்கு மேல் இருக்கின்றன. எல்லோரா லும் எல்லா இடங்களுக்கும் செல்ல இயலாது. ஆகையால் படிப்பதன் மூலம் அறிவை வளர்த்துக் கொள்ளலாம். எனக்கு பத்துப் பதினைந்து நாடுகளுக்குச் செல்லும் பாக்கியம் கிட்டியது. நான் கண்டு வியந்த விஷயங்களை அவ்வப்போது குறித்தும் எழுதியும் வந்தேன்.

    அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றது பற்றியும் பின்னர் ஆஸ்திரேலியா சென்றது பற்றியும் எழுதிவிட்டு, நான் வசிக்கும் லண்டனின் பெருமையை கடைசியில் எழுதி இருக்கிறேன்.

    பல்லாண்டுகளாக என் பிளாக்குகளில் வந்த பயணக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல் ஆகும். ஒவ்வொரு நாட்டையும் ஊரையும் பற்றி ஒவ்வொரு புஸ்தகம் எழு தும் அளவுக்கு தகவல்கள் இருக்கின்றன. ஆயினும் குறுகிய விஜயத்தின்போது எவ்வளவு பார்க்க முடியுமோ அவ்வளவு பார்த்து அந்த செய்திகளை மற்றவர்களுடன் பகிர்வதும் ஆனந்தமே. என்னுடைய ‘பிளாக்’கில் முதல் முதலில் கட்டுரை வெளியான தேதியும் கட்டுரையின் வரிசை எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுரைகளைப் படித்தவுடன் வெளிநாடுகளைப் பார்க்கும் துடிப்பு உங்களுக்கும் ஏற்படும். அது நிறைவேற இறைவன் அருள் புரிவானாகுக.

    அன்புடன்

    லண்டன் சுவாமிநாதன்

    நவம்பர் 2022

    காசு வேண்டாம்! விசா வேண்டாம்!! 10 நாடுகளைக் காட்டறேன்!!!

    சிட்னி, பிரிஸ்பேன், பெரும் பவளப் பாறைத் திட்டு (ஆஸ்திரலியா), ஹாங்காங், நியூயார்க் (அமெரிக்கா ) ஸ்டாக்ஹோம் (சுவீடன் ), மாட்ரிட் (ஸ்பெயின்), லிஸ்பன் (போர்ச்சுகல்), ஏதென்ஸ் சான்டோரினி தீவு, (கிரீஸ்), வியன்னா (ஆஸ்திரியா), லண்டன், (பிரிட்டன்), ரோம், பிளாரன்ஸ் (இதாலி) - நான் கண்ட 10 நாடுகளை நீங்களும் காண வாருங்கள் :

    1. நான் கண்ட ஸ்பானிய அரண்மனை

    ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட் (Madrid, Capital of Spain). அங்கே அனைவரும் பார்க்கவேண்டிய முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்று பிரம்மாண்டமான அரண்மனை (Royal Palace) ஆகும். நாங்கள் ஆகஸ்ட் 27ம் தேதி (2022) அரண்மனைக்குச் சென்றோம். லண்டனிலுள்ள பக்கிங்ஹாம் அரண்மனை போல இரு மடங்கு பெரியது. அரண்மனைக்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. ஆயினும் முன்பகுதியில் புகைப்படம் எடுக்கலாம். வெளிநாடுகளில் எல்லா சுற்றுலாத் தலங்களிலும் புஸ்தகங்கள், நினைவுப் பொருட்களை விற்பார்கள். இது போல இந்தியாவிலும் செய்யவேண்டும். பிரிட்ஜி Fridgeல் பொருத்தக் கூடிய காந்தத்தில்(Fridge Magnets) படம் இருக்கும். அங்கே விற்கும் பென்சில், பேனாக்களில் கூட அந்த இடத்திலுள்ள முக்கிய பொருட்களின் படம்தான் இருக்கும்.

    ஸ்பானிய அரண்மனையில் 1,50,000 க்கும் மேலான பொருட்கள் இருக்கின்றன. எல்லா முக்கியப் பொருட்களின் படங்களும் இருக்கும் புஸ்தகத்தைத் தேடினேன். அப்படி ஒரு புஸ்தகமும் இல்லை. கிடைத்த புஸ்தகம் ஒன்றை மட்டும் வாங்கினேன். அதிலுள்ள விஷயங்களையும் நான் கண்ட விஷயங்களையும் சுருக்கி வரை கிறேன்.

    ஸ்பானிய அரண்மனையில் 3400க்-கும் மேலான அறைகள் இருக்கின்றன.இப்போதும் அங்கே ஸ்பானிய அரச குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஆகையால் எல்லா இடங்களுக்கும் நாம் செல்ல முடியாது. உலகத் தலைவர்கள் வரும்போதும், அரசாங்க நிகழ்ச்சிகளின் போதும் அரண்மனைக்குள் செல்லமுடியாது.

    எல்லா அரண்மனைகள் போலவே இங்கும் அனுமதிக்க கட்டணம் (Entrance fee) உண்டு. ஆயினும் ஏராளமான பொக்கிஷங்களை காணமுடிகிறது. பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் இப்படிச் செல்ல முடியாது. ஆண்டுக்கு ஒரு முறை கோடைகாலத்தில் ஒரே ஒரு அறையை மட்டும் திறந்துவைத்து காசு வாங்கிவிடுவார்கள் !

    மாட்ரிட்டில் உள்ள இந்த அரண்மனையில் அந்த நாட்டின் பிரபல ஓவியர்கள் வரைந்த படங்கள் இருக்கின்றன; அது மட்டுமின்றி உலகப் புகழ்பெற்ற ஓவியர்கள் வரைந்த படங்களும் பல அறைகளை அலங்கரித்தன. இப்போது அவை ப்ராடோ மியூஸியத்தில் (Prado Museum, Madrid) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    மன்னருக்குச் சொந்தமான அரண்மனைக் கட்டிடங்கள், வழிபாட்டு இடங்கள், தோட்டங்கள் 20, 500 ஹெக்டேரில் பரந்து விரிந்து கிடக்கின்றன.

    அரண்மனைக்குள் நுழைந்தவுடன் உயரமான படிக்கட்டுகளைக் காணலாம்.அதில் ஏறும்போதே மேலேயும் சுவர்களிலும் தீட்டப்பட்ட வண்ண ஓவியங்களைக் காணலாம். உயரமான பளிங்குச் சிலைகளையும் காணலாம். எங்கு நோக்கினும் ராஜா ராணி சிலைகள்தான். ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு கதை உண்டு. ஏலத்தில் விட்டால் ஒவ்வொரு சிலையும் பொருளும் மில்லியன் கணக்கில் விலை க்குப் போகும்.அடுத்த அறை ஆடல், பாடலுக்காகக் கட்டப்பட்டது ஆனால் மூன்றாம் சார்லஸ் இதை காவலர்களுக்கான அறையாக மாற்றிவிட்டார். ஓவியங்கள் அனைத்தும் தத்ரூபமாக இருக்கும். அடுத்தாற்போல் ஹால் ஆப் காலம்ஸ்- HALL OF COLUMNS அதாவது தூண்கள் அறை; இதன் வழியாக மஹாராணி வசிப்பிடத்துக்குப் போகலாம்.

    அடுத்தது மகாராஜாவின் ANTEROOM ஆன்டி ரூம்; முக்கிய மண்டபத்துக்கு முன்னாலுள்ள அறை ஆன் டிரூம்; இங்குதான் மூன்றாவது சார்லஸ் சாதாரணக் குடிமகன்களை சந்திப்பாராம். மத்திய உணவு அருந்தும் இடமும் இதுதான் இது பற்றி 1782ம் ஆண்டு வந்த ஒரு யாத்ரீகர் எழுதிவைத்துள்ளார்; அவர் எழுதியதாவது:-

    இங்கேதான் மன்னர் மதிய உணவை சாப்பிடுவார்; அப்போது மந்திரிகள் வந்து வாழ்த்துவார்கள். அவர் சாப்பிடத் துவங்கியவுடன் இளவரசர் அறைக்குச் சென்று, அங்கே சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் இளவரசரை வாழ்த்துவர்; மன்னர் சாப்பிட்டு முடிக்க ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகும். மன்னர் சாப்பிட்டு முடித்த பின்னர் சிலருடன் மட்டும் பேசுவார். முதலில் சாப்பாட்டுத் தட்டுகள் வரும். அதை, ஒருவர் மன்னர் முன்னே வைப்பார். ஒயினும் WINE தண்ணீரும் குடுவையில் வைக்கப்படும். அதை மன்னர் குடிக்கும்போது அதைக் கொண்டுவந்த சேவகர் மண்டியிட்டு வணக்கம் சொல்லுவார். மன்னர் சாப்பிடுகையில், அரசாங்கத்துக்கான போப்பாண்டவர் தூதர் (NUNCIO) அவருக்கு சற்று பின்னே நிற்பார். சாப்பிடும்போது மன்னன் பேசக்கூடிய ஒரே நபர் அவர்தான்.எல்லோரும் நீல உடை அணிந்திருப்பார்கள். மன்னர் கிறிஸ்தவர்கள் சொல்லும் மந்திரத்தைச் (GRACE) சொன்னபின்னர் உடம்பின் முன் சிலுவை அடையாளம் போடுவார்".–இது யாத்ரீகர் எழுதிய குறிப்பு ஆகும்.

    இதற்குப்பின் இருப்பது சம்பாஷணை/ உரையாடல் அறை (Conversation hall; இதுதான் மன்னரின் இரவுச் சாப்பாடு அறை. இங்கே மன்னருக்கு முன்னர் வட்டமாக அமர்ந்து வெளிநாட்டு தூதுவர்கள் பேசுவர்.

    கட்டிடம் முழுவதும் விதவிதமான கடிகாரங்கள், பிரம்மாண்டமான அலங்கார விளக்குகளைக் காணலாம். பல இடங்களில் தங்கம் உ ள்ளது தங்க முலாம் பூசப்பட்ட அ லங்காரப் பொருட்கள் இருக்கும். மஹாராணி அறையில் பெரிய ஓவியங்களும் மன்னரின் சிம்மாசன அறையில் சிங்கச் சிலைகளும் இருக்கும் சிம்மானமும் இருக்கும். ஸ் பிங்ஸ் தா ங்கும் பெரிய மேஜைகள் பார்க்க மிக அழகானவை

    மன்னர் கேளிக்கையுடன் விருந்து வைக்கும் மேஜையில் ஒரே நேரத்தில் 100 பேருக்கு மேலாக அமர்ந்து சாப்பிடலாம். கிரேக்க புராணங்களில் மற்றும் பைபிளில் வரும் பெரியோர்களும் கதாபாத்திரங்களும் ஓவியங்களிலும் சிலைகளிலும் இருக்கும். அவைகளின் கதை தெரிந்தால் நன்கு பார்த்து ரசிக்கலாம்.

    இந்த அரண்மனையின் புதிய கட்டிடங்கள் 300 ஆண்டுப் பழமையானவை. அதற்கு முன்னர் இதற்கு அல் கஸார் (Alazar) என்று பெயர்.மூர்(Moor) மக்களின் கோட்டை ன்று பொருள். வட ஆப் பிரிக்காவில் வாழ்ந்த முஸ்லீம்கள் மூர் இன மக்கள் ஆவர். அந்த முஸ்லீம்கள் சுமார் 1000 ஆண்டுகளுக்கு ஐபீரிய தீபகற்பத்தை ஆண்டார்கள். ஐபீரிய தீபகற்பம் என்பது

    Enjoying the preview?
    Page 1 of 1