Puthuputhu Anubavangal Part - 4
By Sivasankari
()
About this ebook
She has many novels, novellas, short stories, travelogues, articles and biographies to her credit. Her works have been translated into several Indian languages, English, Japanese and Ukrainian. Eight of her novels have been made into films, having directed by renowned directors like K. Balachander, SP Muthuraman and Mahendran. Her novel 'Kutti' on girl child labour, filmed by the director Janaki Viswanathan, won the President's Award. Sivasankari's novels have also been made as teleserials, and have won the national as well as regional 'Best Mega Serial' awards.
As a multi-faceted personality, she has won many prestigious awards including Kasturi Srinivasan Award, Raja Sir Annamalai Chettiyar Award, Bharatiya Bhasha Parishad Award, 'Woman of the year 1999-2000' by the International Women's Association, and so on.
'Knit India Through Literature' is her mega-project involving intense sourcing, research and translations of literature from 18 Indian languages, with a mission to introduce Indians to other Indians through culture and literature.
Read more from Sivasankari
Mookkanaangayiru Rating: 5 out of 5 stars5/5Andhamma Romba Nallavanga Rating: 5 out of 5 stars5/5Nappaasai Rating: 0 out of 5 stars0 ratingsAairam Kaalathu Payir Rating: 5 out of 5 stars5/5Thavam Rating: 5 out of 5 stars5/5Vetkam Kettavargal Rating: 0 out of 5 stars0 ratingsAmma Rating: 5 out of 5 stars5/5Deivam Nindru Kollum Rating: 0 out of 5 stars0 ratingsPaarvai Rating: 0 out of 5 stars0 ratingsSuriya Vamsam - Part 1 Rating: 5 out of 5 stars5/5Paalangal Rating: 0 out of 5 stars0 ratingsAmma Sonna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsPayirai Meyum Veligal Rating: 5 out of 5 stars5/5Ivalum Avalum Rating: 0 out of 5 stars0 ratingsAvargalukku Puriyathu Rating: 5 out of 5 stars5/5Nooleni Rating: 5 out of 5 stars5/5Kuzhappangal Rating: 0 out of 5 stars0 ratingsOru Singam Muyalagirathu Rating: 4 out of 5 stars4/5Overdose Rating: 0 out of 5 stars0 ratingsPrayachchitham Rating: 4 out of 5 stars4/5Innoru Karanam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Puthuputhu Anubavangal Part - 4
Related ebooks
Anbu Vellam Rating: 0 out of 5 stars0 ratingsSila Anubavangal Sila Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsOru Vaanam Pala Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsPookkalin Punnagai Nee...! Rating: 1 out of 5 stars1/5Naanaa Ponathum Thaanaa Vandhathum Rating: 0 out of 5 stars0 ratingsAindhu Naadugalil Arubathu Naal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratings‘Gopu’win Chinna Chinna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsPuthuputhu Anubavangal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsMeenottam Rating: 0 out of 5 stars0 ratingsChina Pona Pena! Rating: 0 out of 5 stars0 ratingsChutti Poonaiyum Kutti Pettiyum Rating: 0 out of 5 stars0 ratingsSunduvin Sanniyasam Rating: 0 out of 5 stars0 ratingsOru Kaandhamum Oru Irumbu Thundum Rating: 0 out of 5 stars0 ratings‘Gopu’win Sirapana Kathaigal Collection 4 Rating: 0 out of 5 stars0 ratingsRendu Idly, Oru Vadai Rating: 0 out of 5 stars0 ratingsOru Manithanin Kathai Rating: 4 out of 5 stars4/5Oru Nijamana Poi Rating: 0 out of 5 stars0 ratingsJakartavil 100 Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsAinthum Moondrum Onpathu Rating: 1 out of 5 stars1/5Verpidi Man Rating: 0 out of 5 stars0 ratingsMayilvizhi Maan Rating: 0 out of 5 stars0 ratingsJayakanthan Munnuraigal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsInippum Karippum Rating: 0 out of 5 stars0 ratingsPachaikili Rating: 0 out of 5 stars0 ratingsVithaithal Vilaiyum! Rating: 5 out of 5 stars5/5Kalveri Kolluthadi... Rating: 5 out of 5 stars5/5Myna Unnai Kolvena? Rating: 0 out of 5 stars0 ratingsApple Desam Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Kalaikindrana Rating: 0 out of 5 stars0 ratingsDecember Poo Teacher Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Puthuputhu Anubavangal Part - 4
0 ratings0 reviews
Book preview
Puthuputhu Anubavangal Part - 4 - Sivasankari
http://www.pustaka.co.in
புதுப்புது அனுபவங்கள் தொகுதி – 4
(ஐரோப்பிய நாடுகள் பயணக்கதைகள்)
Puthuputhu Anubavangal Part - 4
(Europe Nadukal Payana Kaadhaikal)
Author:
சிவசங்கரி
Sivasankari
For more books
http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. வெள்ளி என்றால், வெனிஸ் நகரம்தான்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
class=text_
>அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
2. ஒலா, ஒலே, உலா!
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
3. செக்கோஸ்லாவாகியா
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
1. வெள்ளி என்றால், வெனிஸ் நகரம்தான்
1998
என்னுரை
இது என்னுடைய பதிமூன்றாவது பயண நூல்.முந்தைய பயணங்களிலெல்லாம் முதலில் கணவருடன், அப்புறம் தனியாகச் சென்றுவந்தது ஒருவகையான அனுபவம் என்றால், இந்த முறை பதினேழு நாள்கள் ஐரோப்பாவின் ஒன்பது நாடுகளுக்கு, முன்பின் அறிமுகமில்லாத பன்னாட்டு மனிதர்களுடன் ஒரே குழுவில் போனது இன்னொரு வகையான அனுபவம்.
பள்ளியில் படித்த நாள்களில் என்.சி.சி. 'காம்ப்' சென்ற சமயத்தில், காலை ஐந்து மணிக்கு எழுந்து, ஆபீசர் ஏழு மணிக்கு விசில் ஊதும் முன் அவசரமாய்க் குளித்துத் தயாராகி, தேகப்பயிற்சி செய்து 'மார்ச் ஃபாஸ்ட்' நடை பழகி, அரைமணி அவகாசத்தில் காலைச் சிற்றுண்டியும், பின்னர் மதிய உணவும் தின்று, வகுப்புகளைக் கவனத்தைச் சிதறவிடாமல் கவனித்து, மாலை கலை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து, ஒருவழியாய் இரவு படுக்கையில் வந்து விழும்போது உடம்பு, 'அம்மாடி!' என்று ஓய்ந்திருந்தாலும், மனசு மட்டும், 'ஆஹா! என்ன மாதிரியான அனுபவங்கள்!' என்று சிலிர்த்துப்போயிருக்கும். 'காஸ்மாஸ்' டூரில் நான் கழித்த அந்தப் பதினேழு நாள்களும் கிட்டத்தட்ட அந்த மாதிரி, 'ட்ரில்' வாங்காத குறையாய், நிதானமாய் மூச்சுவிட நேரம் தராததாய் அமைந்தது எவ்வளவு நிஜமோ, அவ்வளவு நிஜம், இந்தப் பயணத்தில் எனக்குக் கிட்டிய அனுபவங்களும் ‘எக்ஸ்போஷர்'களும் என் அறிவுக்கும் சிந்தனைத்திறனுக்கும் உரம் சேர்த்து, ஒரு மனுஷியாக நான் மேலும் கொஞ்சம் வளர உதவியதும்! பண்பாடு கலாச்சார ரீதியாகப் பெரு மளவில் வேறுபட்ட மனிதர்கள் ஒன்றாக மேற்கொள்ளும் பயணம், விட்டுக்கொடுப்பது, அனுசரித்து நடப்பது, கூட்டாக ஒரு காரியத்தைச் செய்வது போன்ற நானாவித விஷயங்கள் மேல் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில், நமக்குச் சமுதாயம் குறித்துப் புதிய விழிப்புணர்வு ஜனிப்பதை யாரும் மறுக்க இயலாது. இப்பயணத்தை சாத்தியமாக்கிய இறைவனுக்கும், அனைத்து உதவிகளும் செய்த திரு.சிவராமனுக்கும் ('ஏர் இந்தியா முன்னாள் அதிகாரி) என் நன்றி.
எழுத்துலகில் நான் அடியெடுத்துவைத்த தருணத்தில் என்னை உற்சாகப்படுத்தி ஊக்கமளித்தவர்களில் திரு. சாவி முக்கியமானவர். எழுத்தாளரின் பார்வையில் ஒவ்வொரு பிரயாணத்திலும் புதிது புதிதாய் ஏதேனும் விஷயங்கள் படிந்து கொண்டேயிருக்கும்...கூர்ந்து கவனி!
என்று 1970-ல் என் முதல் பயணக் கதையில் சொல்லிக்கொடுத்ததோடு, சொல்பவற்றை எளிமையாக, சுவாரஸ்யமாக, சுருக்கமாய்ச் சொல்லும்படியாக எழுத்து அமைந்து, வாசகர்களுக்கு அவர்களே உன்னோடு அந்தந்த இடங்களுக்குப் பயணித்த உணர்வை உண்டுபண்ணுவதாக இருக்கவேண்டும்...
என்று பயணக்கதை எழுத எனக்கு வழிகாட்டித் தந்தவரும் அவர்தான். எழுத்துலகப் பிதாமகர், பீஷ்மரான அவர், என்னுடைய முதல் பயணக்கதைக்கு முன்னுரை எழுதித் தந்ததோடு இந்த நூலுக்கும் அருமையான முன்னுரையைத் தந்து, என்னை மறுபடியும் கெளரவித்திருக்கிறார். அவரை நமஸ்கரித்து என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
'சாவி' பத்திரிகையில் இது தொடராகப் பிரசுரமானபோது திரு. கோபுலுவின் அற்புதமான சித்திரங்கள் அதற்கு மெருகூட்டி அழகு சேர்த்தனர். அவருக்கு என்னுடைய மனப்பூர்வமான நன்றி.
'வானதி பதிப்பகத்தை' என் தாய்வீடு என்று எப்போதும் சொல்லி வந்திருக்கிறேன். என்னுடைய புத்தகங்களை ஆதியிலிருந்து வெளியிடும் நிறுவனம் என்பதால் மட்டுமல்ல, திரு. திருநாவுக்கரசுவும் அவரது மனைவியும் எப்போது என் வீட்டுக்கு வந்தாலும், பெற்றோர் வீட்டிலிருந்து சீர்வரிசை வருவது போன்று கூடை நிறைய பழங்கள், தின்பண்டங்கள் என்று எடுத்துவரும் வழக்கத்தாலும்தான்! அவர்களுக்கு என் நன்றி.
அன்புடன்,
சிவசங்கரி
1
பல வருடங்களுக்கு முன் வெளிவந்த - பதினைந்து வருடங்களுக்கு மேலேயேகூட ஆகியிருக்கலாம் - 'இஃப் இட் ஈஸ் ட்யூஸ்டே, இட் மஸ்ட் பி பெல்ஜியம்' (If it is Tuesday, it must be Belgium) என்ற ஆங்கிலப்படத்தை உங்களில் பலர் பார்த்திருக்கலாம். படத்தில் மேலோங்கியிருந்த நகைச்சுவையை ரசித்துவிட்டு, அத்துடன் மறந்தும் போயிருக்கலாம். நானும் அந்தப் படத்தைப் பார்த்தேன். எக்கச்சக்கத்துக்கு சிரித்தேன். ஆனால், 'தரமான பொழுதுபோக்குப்படம் ஒன்றைப் பார்த்தேன்' என்ற நிறைவோடு அந்த அனுபவத்தை என்னால் ஒதுக்க முடியவில்லை. எனக்குள் உண்டான பாதிப்பு கொஞ்சம் வித்தியாசமானது!
ஏன், சென்ற மாதம் நான் சென்றுவந்த ஒன்பது நாடுகள் சூறாவளிப் பயணத்திற்கே, 'நரசுஸ் காபி' விளம்பரத்தில் சொல்வது போல, 'இதுதான், இதுதான் காரணம் என்று மேற்சொன்ன ஆங்கிலப்படத்தை நோக்கி விரலை நீட்டவேண்டிவரும் என்றால், பாதிப்பின் தீவிரம் உங்களுக்குப் புரிகிறதுதானே?
சுற்றிவளைக்காமல், தலையைச் சுற்றி மூக்கைத் தொடாமல் நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன். ஐரோப்பாவில் சுற்றுலா செல்வதற்காக வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்து ஒரே பஸ்ஸில் பயணிக்கும் நபர்களின் விதவித அனுபவங்களை விவரிப்பதுதான் "செவ்வாய் என்றால் இது பெல்ஜியம்தான்' என்ற படத்தின் கதை. மொழி, சாப்பாடு, பழக்கவழக்கங்கள், தோற்றம் என்ற அனைத்திலும் மாறுபடும் மனிதர்கள், பம்பரமாய் சில தினங்கள் பயணிப்பதால் உண்டாகும் கஷ்டநஷ்டங்கள் - 'இது இரவா பகலா, இந்த நாடா அந்த நாடா, என்ன தேதி, காலையாமாலையா, சாப்பாடு கிடைக்குமா கிடைக்காதா?' - போன்றவை நகைச் சுவையோடு சொல்லப்பட்டதைப் பார்க்கையில், 'அட! இந்த மாதிரியான அனுபவம் நமக்கு இதுவரை கிட்டியதில்லையே!' என்ற ஏக்கமும், 'அவசியம் ஒருதரம் இந்த ரீதியில் ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும்!' என்கிற ஆசையும் என்னுள் சூல் கொண்டது நிஜம்.
'எதற்கும் காலம் கனிந்துவர வேண்டும்' என்ற கூற்றை உறுதிப் படுத்துவது போல, முயற்சி எடுக்கும்போதெல்லாம் ஏதாவது தடங்கல் வந்து, யானை கர்ப்பமாய் உள்ளுக்குள்ளேயே தங்கி விட்ட அந்த ஆசை, ஒருவழியாய் கடந்த ஜூன் மாதம் ஒரு சுபயோக சுபதினத்தில் ஆரோக்கியமாய் பிரசவமாயிற்று.
ஐரோப்பிய நாடுகளில் சூறாவளிப் பயணம் மேற்கொள்ளத் தீர்மானித்த கையோடு, எந்தக் கம்பெனியின் நீரைத் தேர்ந்தெடுப்பது என்று விசாரிக்க முற்பட்டேன். உலகளவில் 'எஸ்.ஓ.டி.சி.', 'டிரஃபால்கர்', 'க்ளோபஸ்', 'தாமஸ் குக்', 'காஸ்மாஸ்' - என்று பல நிறுவனங்கள் புகழ் பெற்றிருந்தாலும், பயண விவரம், சாப்பாடு, கட்டணம் போன்ற விஷயங்களை அலசிப்பார்த்த பின், இறுதியில் 'காஸ்மாஸ்' நிறுவனத்துக்கு என் வாக்கை அளித்தேன்.
'எஸ்.ஓ.டி.சி.' அல்லது 'தாமஸ் குக்' ஏற்பாடு செய்யும் பயணத்தில் இந்தியர்கள் பெரும்பான்மையில் இருப்பதில், இந்திய உணவு கிடைக்கும் என்பது உண்மைதான்... என்றாலும், 'ரோமில் இருக்கும்போது ரோமானியரைப் போல இரு' என்ற பழமொழிக்கேற்ப வெளிநாட்டினரோடு பயணித்து, முற்றிலும் வித்தியாசமான அனுபவங்களைப் பெறவேண்டும் என்பது என் விருப்பமாக இருந்ததே... என்ன செய்ய!
பம்பாயில் இயங்கும் 'காஸ்மாஸ் அலுவலகத்திற்கு இங்கே 'தாமஸ் குக் பிரதிநிதியாகச் செயல்படுவதால், அவர்களோடு தொடர்பு கொண்டேன். என் அதிர்ஷ்டம், முன்பு 'ஏர் இந்தியாவில் மேலாளராக இருந்த திரு. சிவராமன், தற்சமயம் 'தாமஸ் குக்'கில் வேலை பார்ப்பதில், 'காஸ்மாஸ்' பற்றிய அத்தனை விவரங்களும் மறுநாளே என்னிடம் சேர்ப்பிக்கப்பட்டன.
ஒரு வாரத்திலிருந்து இருபத்திநான்கு நாள்கள் வரை பலவிதங்களில் அமைக்கப்பட்டிருந்த பயணங்களிலிருந்து 'பெஸ்ட் ஆஃப் யூரப்' என்ற பதினேழு நாள் நீரைத் தேர்ந்தெடுத்தேன். ஜனவரியில் துவங்கி டிசம்பர் வரை அறுபத்து நான்கு முறைகள் நடத்தப்படவிருந்த டூர் தேதிகளிலிருந்து, ஜூலை இருபது புறப்படவிருந்த க்ரூப்பில் என் பெயரைப் பதிவுசெய்தேன்.
பெல்ஜியம், ஹாலந்து, ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி, ஸ்விட்ஸர்லாந்து, மொனாகோ, ஃபிரான்ஸ் - இவற்றில் பதினேழு, இங்கிலாந்தில் ஆறு, போகவர இரண்டு - ஆக மொத்தம் இருபத்தைந்து நாள்கள்.
பயணத்திற்கான பணத்தைக் கட்டி, பாஸ்போர்டை 'தாமஸ் குக்' ஊழியர் கையில் கொடுத்துவிட்டு, விசா, அது, இது என்று எது குறித்தும் எந்தக் கவலையும் இல்லாமல் நான் இருக்க, இரண்டு வாரத்தில் "ஷெங்கன்' (ஐரோப்பிய நாடுகளில் ஒட்டுமொத்தமாய் செல்லுபடியாகும் விசா), ஸ்விஸ், பிரிட்டிஷ் விசாக்கள் வீடு தேடி வந்துவிட்டன.
இதனடுவில், என்னுடைய பயணம் பற்றிக் கேள்விப்பட்ட உற்றாரும் சுற்றாரும், உதவும் நினைப்பில் ஆளாளுக்கு,
கையில் உலர்ந்த பழங்கள் எடுத்துக்கொண்டு போ...பஸ்ஸில் போகும்போது சாப்பிட உதவும்!
என்றும்,
சி.என்.என். இல் பார்த்தேன்... லண்டன், பாரிஸ், சுவிட்ஸர்லாந்தில் சீதோஷ்ணம் பதினைந்து டிகிரிதான்! குளிரும்... ஸ்வெட்டர், மஃப்ளர், ஷால் வகையறா எடுத்துக்கொண்டாயா?
என்றும்,
ஜெர்மனியில் ஏதாவது உதவி தேவைப்பட்டால், இந்த நபருடன் தொடர்புகொள்ளுங்கள்...கட்டாயம் உதவுவார்!
என்றும்,
இத்தாலியில் பவழம் ரொம்ப மலிவாகக் கிடைக்கும்...அவசியம் நாலு சரம் வாங்கி வா!
என்றும் விதவிதமான அறிவுரைகள் கொடுத்ததும் சேர்ந்துகொண்டது.
"நீங்கள் சுத்த சைவம்... அமெரிக்கா என்றால் எப்படியோ சமாளித்துவிடலாம்... ஆனால், ஐரோப்பிய நாடுகளில் நிச்சயம் திண்டாடிவிடுவீர்கள்! அதனால், இந்தக் 'குக்கரை' கையோடு கொண்டு செல்லுங்கள்...' என்று கன அக்கறையுடன் கூறி சேலத்திலிருந்து வந்திருந்த நண்பர்கள் வசுமதியும் அவள் கணவர் சுகுமாரும் நீட்டியதைக் கையில் வாங்கிப் பார்த்தேன்.
சின்னதாய் ரெக்ஸின்பை... ஜிப்பை அவிழ்த்தால், ஒரு பிஸ்கெட் டப்பா அளவில் எவர்சில்வர் கிண்ணம். அதனுள் செருகப் பட்டிருக்கும் ஹீட்டர். இழுத்தால், கிண்ணமும் ஹீட்டரும் தனித்தனியாக வந்துவிடுகின்றன. கிண்ணத்தில் பக்கவாட்டில் மடங்கியிருக்கும் கம்பிகளை நீட்டினால், கைப்பிடியோடு கூடிய 'சாஸ் பேன்' மாதிரியான பாத்திரம் ரெடி.
ஹீட்டரின் வயிற்றுப் பகுதியில் சுற்றிவைத்திருக்கும் ஒயரைப் பிரித்து ப்ளக்கைப் பொருத்தி, ஸ்விட்சைத் தட்டி, பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அது கொதித்ததும் அரிசியைக் களைந்து போட்டால், எண்ணி இருபது நிமிடங்களில் பொலபொலவென்று சோறு தயார்! புளிக்காய்ச்சலோ பொடியோ கொண்டுபோனால், கலந்து சாப்பிடலாம். அல்லது, எங்கும் கிடைக்கும் தயிரை வாங்கி தயிர்சாதம் செய்து சாப்பிட்டால், ஒருநாள் சாப்பாட்டுக் கஷ்டத்தைச் சமாளித்துவிடலாம். எப்படி ஐடியா!
இதுவரை, சீனா, எகிப்து என்று சைவ உணவு கிட்டாத இடங்களுக்குச் சென்றபோதுகூட கையில் பொடி, ஊறுகாய் என்று எதையும் எடுத்துச் செல்லாமல், கிடைக்கும் பழங்கள், சீஸ், ரொட்டியை வைத்துச் சமாளித்தவள், வசுமதியின் அக்கறையோடு கூடிய வார்த்தைகளைத் தட்ட முடியாமல், அரைமனதுடன் அந்தக் குட்டி குக்கரையும், ஒரு கிலோ அரிசியையும் பெட்டியில் எடுத்துவைத்தாலும், நீரில் கிட்டத்தட்ட ஆறு ஏழு நாள்கள் வயிறு வாடாமல், கொலைப் பட்டினி கிடக்காமல், என்னை மட்டுமல்ல, என்னோடு வந்த இன்னும் இருவரையும் (இவர்களைப் பற்றின விவரங்கள் அடுத்த அத்தியாயத்தில்.... அதுவரை சஸ்பென்ஸ்!) காப்பாற்றியதை இங்கே குறிப்பிடவில்லையென்றால், நான் மனுஷியே அல்ல. "சோறு படைத்தவர்கள் சுகமாய் வாழட்டும்!என்று வடமொழியில் வாழ்த்துவதைப்போல, வசுமதியையும் அவள் கணவர் சுகுமாரையும் வாழ்க' என்று மனதார வாழ்த்துகிறேன்.
பதினேழாம் தேதி நள்ளிரவு 'ஏர் இந்தியா’ விமானத்தில் கிளம்பி, மும்பை வழியாக, மறுநாள் மதியம் ஒரு மணிக்கு லண்டன் ஹீத்ரோவிமானக்கூடத்தை அடைந்தேன். ’ஏர்இந்தியா’வின் க்ளப் கிளாஸ்' உபசரிப்பும் சாப்பாடும், வழக்கம்போல முதல் தரம்!
விமானக்கூடத்திற்கு சிவராமனின் மகள் ஷோபாவும் மருமகன் சஞ்சயும் வந்திருந்தார்கள். அவர்களுடன் ஒரு நாள் தங்கிவிட்டு, இருபதாம் தேதி காலை 'காஸ்மாஸ்' டூரில் சேர்ந்து கொள்வதற்கு ஏதுவாய், சனிக்கிழமையே லண்டன் நகரிலுள்ள பிரிட்டிஷ் மொனார்க் என்ற கம்பெனியில் 'தாமஸ் குக்' சென்னையில் தந்திருக்கும் வவுச்சரைக் காட்டி பயணச்சீட்டை வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது ஏற்பாடு. இதற்காக ஏர்போர்ட்டிலிருந்து வீட்டுக்குக்கூடப் போகாமல் ஒருமணிநேரம் பயணித்து, லண்டன் நகரின் மையப்பகுதிக்குச் சென்று குறிப்பிட்ட விலாசத்திற்குப் போனால்....என்ன ஏமாற்றம்! 'விடுமுறை' பலகை வாசலில் தொங்க, ஆளரவம் இல்லாமல் இடம் வெறிச்சோடியிருந்தது.
பயணச்சீட்டு இல்லாவிட்டால் பஸ்ஸில் ஏற்றமாட்டேன் என்று சொல்லிவிடுவார்களோ என்ற கவலை எழ, என்னிடமிருந்த வவுச்சரில் 'உதவிக்குத் தொடர்புகொள்ள' என்று குறிப்பிடப் பட்டிருந்த தொலைபேசி எண்ணை சஞ்சயிடம் தந்தால், அவர் 'இது லண்டன் நகர எண் இல்லையே! மான்செஸ்டர் நம்பர்!' என்றதும், நிஜமாகவே 'என்ன செய்வோம்' என்ற கவலை அதிகரித்தது.
எதற்கும் முயற்சித்துப்பார்க்கலாமென்று சஞ்சய் மான்செஸ்டர் எண்ணுடன் தொடர்புகொண்டதும், அங்கிருந்து பேசிய ஒரு பெண்மணி, என் பெயர் கம்ப்யூட்டரில் இருப்பதையும், திங்கள் காலை பயணச்சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூற, அப்பாடி... மறுபடியும் முகத்தில் கொஞ்சம் சிரிப்பு மலர்ந்தது!
திங்கள் காலை ஐந்து மணிக்கு எழுந்து குளித்துத் தயாராகி, மினி டாக்ஸியை போன் செய்து வரவழைத்துப் பயணிக்கையில், இனி பதினேழு நாள்களுக்கு, தெரிந்த முகத்தைப் பார்க்க முடியாது; தாய்மொழியில் பேச இயலாது; ஜம்பமாய் சமாளித்துக்கொள்வேன் என்று வந்துவிட்டேன், ஆனால் சாப்பாட்டுக்கு என்ன கஷ்டப்படப் போகிறேனோ - போன்ற சந்தேகங்கள் நெருஞ்சி முள்ளாய் உறுத்தியதைத் தவிர்க்க முயன்று, தோற்று, சுமார் ஏழரை மணி அளவில் 'டிராவலர்ஸ் செக் இன் ஹோட்டலை அடைந்து, பெட்டியைத் தூக்கிக்கொண்டு வரவேற்பறைக்குள் நுழைந்த கணத்தில், நீங்கள் சிவசங்கரிதானே?
என்று யாரோசுத்த கொங்கு நாட்டுத் தமிழில் வினவியது, 'இன்பத்தேன்' வந்து காதுகளில் பாய்ந்த மாதிரியான உணர்வைத் தோற்றுவித்தது!
2
காஸ்மாஸ்' டூர்கள் மேலைநாட்டவர்களால் நடத்தப் படுவதில், அவற்றில் அதிகமாய் இந்தியர்களைக் காணமுடியாது... அதுவும், தமிழர்களைப் பார்ப்பது வெகு துர்லபம்!
என்று ரொம்பத் தெரிந்த தினுசில் ஒருசிலர் கூறியிருந்ததை வேதவாக்காக நம்பியிருந்தவளுக்கு, பயணம் துவங்கும் முன்னரே தமிழ் தம்பதி அறிமுகமானது எத்தகைய சந்தோஷத்தைக் கொடுத்திருக்கும் என்பதை நான் விவரிக்கத் தேவையில்லை.
கோயமுத்தூர்வாசிகளான வெங்கடேஷ் என்ற வெங்கியும், அவர் மனைவி ஜெயந்தியும், ரொம்ப நாள்களாகப் பரிச்சயமானவர்கள் போன்ற நட்புடன் கையைப் பற்றி உட்காரவைத்து, காபி வாங்கித் தந்து உபசரித்தார்கள். நாங்கள் 'பெஸ்ட் ஆஃப் யூரப் டூருக்குப் போகிறோம்... நீங்களும் அதற்குத்தானே? வாட் எ சர்ப்ரைஸ்! முதல் காரியமாய் இந்தியாவுக்கு போன் செய்து என் அம்மாவிடம் இந்த விஷயத்தைத் தெரிவிக்க வேண்டும்!
என்று வெங்கி பேசிக்கொண்டேபோக, அடுத்துவரும் நாள்களில் உற்சாகத்துக்கும் கலகலப்புக்கும் பஞ்சமே இராது என்பது எனக்குப் புரிந்துபோயிற்று.
சாதாரணமாய் ஒருவர் ஒரு விவரத்தைச் சொல்லி, அது பலித்ததென்றால், 'அவர் வாயில் சர்க்கரை போடவேண்டும்!' என்பது வழக்கம், அல்லவா? பலிக்காவிட்டால்? வாயில் வந்ததைச் சொன்ன வாய்க்கு 'மணல்தான் சரி!' என்ற புதுப் பழமொழி உண்டாக்கலாமா? எதற்காகச் சொல்கிறேன் என்றால், 'இந்தியர்கள் இப்பயணத்தை மேற்கொள்வது அபூர்வம்' என்றதற்கு நேரெதிராய், ஐம்பத்தியோரு பேர் அடங்கிய எங்கள் குழுவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இந்தியர், அல்லது இந்திய வம்சாவளியினர் என்பதால்தான்! தமிழகத்திலிருந்து நாங்கள் மூவர், உத்திரப் பிரதேசத்திலிருந்து இலியாஸ் என்ற முகம்மதியரைத் தவிர, ஹாங்காங்கில் குடியேறிவிட்ட ஹிம்னானி குடும்பத்தைச் சார்ந்த அறுவர், அமெரிக்காவில் வசிக்கும் படேல் குடும்பத்தார் நால்வர்...ஆக மொத்தம் பதினான்கு இந்தியர்கள்!
இதைத்தவிர, நிறைவைத் தந்த இன்னொரு ஆச்சர்யம்-குழுவில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் என்பது! எழுபத்திரண்டு வயதிலிருந்து எட்டு வயது வரை எல்லாதலைமுறைகள் சார்பிலும் பெண்கள் இருந்து, எந்த அனுபவத்தையும் பலவிதக் கண்ணோட்டங்களிலிருந்து பார்க்க, சிந்திக்க உதவியது என்னைப் பொறுத்தவரை பெரியப்ளஸ் பாயிண்ட்தான்.
நானாவித டூர்களில் பயணம் செய்யவிருந்த அனைவரும் ‘டிராவலர்ஸ் செக் இன்’ ஹோட்டலில் பெயர்ப்பதிவு செய்து கொண்டபின், வரிசையாய் நின்ற பஸ்களில் ஏறி சுமார் ஒருமணி நேரம் பயணித்து, டோவர் என்னும் இடத்தை அடைந்தோம். அங்கிருந்து சின்னக் கப்பலில் பிரிட்டிஷ் கால்வாயைக் கடந்து, ஃபிரான்ஸ் நாட்டிலுள்ள காலே என்ற துறைமுகத்துக்குச் செல்ல இன்னொரு ஒன்றரை மணிநேரப் பயணம். இந்த இடத்தில்தான் அவரவர் செல்லவேண்டிய பயண அட்டவணைப்படி பயணிகளைக் குழுக்களாகப் பிரித்து, நீரைத் துவக்கினார்கள்.
'காஸ்மாஸ்' பஸ், நம்மூர் பேருந்தைவிடக் கிட்டத்தட்ட இரண்டு பங்கு பெரிதாக இருக்கிறது. வயிற்றுப்பகுதியை சாமான்கள் வைக்கும் இடமாக அமைத்திருப்பதில், செங்குத்தாய் ஆறு படிகள் ஏறினால்தான் பஸ்ஸின் மேல்தளத்திலுள்ள இருக்கைகளை அடையமுடியும். இரண்டிரண்டாய் வசதியான இருக்கைகள். வெளிப்புறக் காட்சிகளை மறைக்காத விசா..ஆ...லமான கண்ணாடி,திரைச்சீலைகள்; ஏ.சி. வசதி. முன்னால் ஓட்டுனரின் ஆசனத்திற்கு அருகில், நம்முடைய பயணத்திற்கு வழிகாட்டி, விவரங்களை எடுத்துச்சொல்லும் ஆசிரியர், நம்முடைய குறைகளைக் காதுகொடுத்துக் கேட்டு அதற்குத் தீர்வுகளை முயற்சிக்கும் உதவியாளர்- என்று ஓர் அஷ்டாவதானியாகச் செயல்பட்ட 'டூர் டைரக்டரின்' மைக்ரோஃபோன் வசதியுடனான இருக்கை.
ஐரோப்பிய நாடுகளில் ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான 'காஸ்மாஸ்' பயணங்கள் நடத்தப்படுவதால், குழப்பம் ஏதும் வராமலிருக்கவேண்டி, ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனி நம்பரைத் தந்து, அதை ஸ்டிக்கரில் எழுதி நம்முடைய பெட்டி மேல் ஒட்டச் சொல்லிவிட்டார்கள். பொதுவாக ஐரோப்பிய டூர்களை '5' என்ற எண்ணைக் கொண்டும், எத்தனை நாள் பயணம் என்பதைத் தெரிவிக்க '17' என்ற எண்ணையும், தொடர்ந்து அந்த ரக டூரை மேற்கொள்ளும் எத்தனாவது பஸ் அது என்பதை உணர்த்த ஒரு நம்பரையும் சேர்த்துவிடுவதில், எங்களுடைய டூர் நம்பர் – ‘5171’என்றானது.
இதைத் தவிர, எங்கள் குழுவில் இருந்த அத்தனை