Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nallavai Naarpathu
Nallavai Naarpathu
Nallavai Naarpathu
Ebook64 pages23 minutes

Nallavai Naarpathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எந்த சூழ்நிலையிலும் தளராத உள்ளம் கொண்டவனுக்கு இந்த உலகில் முடியாதது என்று எதுவுமில்லை. நம்மீது நாமே வைக்கும் நம்பிக்கையே தன்னம்பிக்கையாகும். நம்பிக்கை, விடாமுயற்சி, உழைப்பு இருந்தால் வாழ்க்கையில் நாம் முன்னேறுவது எளிது என்பதை நல்லவை நாற்பதில் வாசிப்போம்.

Languageதமிழ்
Release dateMay 28, 2022
ISBN6580116508458
Nallavai Naarpathu

Read more from Kavi. Muruga Barathi

Related to Nallavai Naarpathu

Related ebooks

Reviews for Nallavai Naarpathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nallavai Naarpathu - Kavi. Muruga Barathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நல்லவை நாற்பது

    Nallavai Naarpathu

    Author:

    கவி. முருகபாரதி

    Kavi. Muruga Barathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavi-muruga-barathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    நூலாசிரியர்

    கவி. முருகபாரதி M.A., M.A., M.A., M.SC., M.Com., M.B.A., M.Phil., PGDCA...

    கடந்த 16 ஆண்டுகளில், பல்துறை சார்ந்த, சுமார் 75,000 பேருக்கு... தங்களின் வேலையை இன்னும் நன்றாகச் செய்யவும், வாழ்க்கையை இன்னும் நன்றாக வாழவும், மனித வள மேம்பாட்டுப் பயிற்சிகளை (HR Training) வழங்கியுள்ளார். யோசி (YOSI) மனிதவள மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனத்தின், நிறுவனர்.

    இதுவரை சுமார் 2500 மேடைகளில் பேசியுள்ள முருகபாரதி - கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், மனநல ஆலோசகர், சமூக சேவகர் என்று பல விதங்களில், நல்லெண்ணங்களை விதைத்து வருகிறார்.

    நல்ல செய்தி (www.NallaSeithi.com) என்ற செய்தி இணையதளத்தை நடத்தி வருகிறார். தன் குடும்பத்தினரோடு இணைந்து கவிராசன் அறக்கட்டளை, தன் மாணவர்களோடு இணைந்து நீதான், போன்ற பல அமைப்புகளின் மூலம் நற்பணிகளை ஆற்றி வருகிறார்.

    ஒழுக்கமான, நேர்மையான, அறம் போற்றும் வாழ்க்கை வாழும் இவர், தான் ஈட்டும் பொருளையும் சொத்தாய் சேர்க்காமல், நற்பணிகளுக்கே செலவிடுகிறார். திருமணம் கூட செய்து கொள்ளாமல், பொதுநலனுக்காகவே வாழ்ந்து வருகிறார்.

    மாணவர்களுக்கும், தொழில் செய்பவர்களுக்கும், சமூகத்துக்கும் நல்லனவற்றை மட்டுமே வழங்கிவரும் முருகபாரதி, தன் நாற்பதாவது வயதில், நல்லவை நாற்பது என்ற இந்நூலை, எழுதியுள்ளார். இது, இவர் எழுதியுள்ள 12-ஆவது நூல் ஆகும்.

    மேலும் விவரங்கள் மற்றும் தொடர்புக்கு... www.murugabarathi.in என்ற இணையதளத்தைக் காணவும்.

    பொருளடக்கம்

    நம்பிக்கை... அதானே எல்லாம்!

    நலம் அன்புடன்...!

    கற்றலின் மீது காதல் கொள்ளுங்கள்!

    உறவுகள் மேம்பட...!

    வளர்ச்சிக்கான பசி...!

    வேலை விழும் வரை காத்திருக்காதீர்...!

    சக்தி முன்னே...!

    பணத்தை வித்தியாசமாகப் பாருங்கள்!

    பகிர்வினால், வாழ்க்கைக்குத் தயார் ஆகுங்கள்!

    புத்துணர்ச்சி மீண்டும்...!

    நம்பிக்கை... அதானே எல்லாம்!

    1) தன் மீது நம்பிக்கை:

    "பறவை ஒன்று, மரக்கிளையின் மீது அமர்வது... கிளையை நம்பி அல்ல; தன் சிறகுகளை நம்பி!" என்று சொல்வார்கள். அப்படித்தான், ஒவ்வொரு உயிரும் வாழ்வதன் அடிப்படையும்... மற்றவர்கள் மீதான நம்பிக்கை அல்ல; தன் மீதான நம்பிக்கையே...! அதனால்தான், வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே உள்ள வேற்றுமையைக் கூட, விவேகானந்தர் எளிதாகச் சொல்வார்... நம்பிக்கையே வாழ்க்கை; நம்பிக்கை இன்மையே மரணம்! என்று.

    உயிர் வாழ்வதற்கே நம்பிக்கைதான் அடிப்படை என்றால், உயர்வாக வாழ்வதற்கு... வாழ்வில் உயர்வதற்கு... தன்னம்பிக்கை அவசியம் என எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இயற்கையின் குறைபாட்டால், மாற்றுத் திறனாளிகளாகவும், மாற்றுப் பாலினத்தவராகவும் இருப்பவர்கள் கூட, தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு, பல துறைகளிலும் சாதிப்பதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அப்படி இருக்கையில், சமூகக் குறைபாடுகளான ஏழ்மையும், சாதியும் உங்களை என்ன செய்துவிட முடியும்? எதை

    Enjoying the preview?
    Page 1 of 1