Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maha Periyavaa - Part 5
Maha Periyavaa - Part 5
Maha Periyavaa - Part 5
Ebook177 pages1 hour

Maha Periyavaa - Part 5

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பக்தி என்பது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்தது. இதைத்தான் பல சொற்பொழிவுகளில் சொல்லி வருகிறேன்.
‘அரச மரத்தைச் சுற்றி விட்டு அடிவயிற்றைத் தடவிப் பார்த்தாளாம்’ என்று கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல் ஓர் ஆலயத்துக்குப் போய் வந்தவுடனே அல்லது ஒரு மகானின் திருச்சந்நிதிக்குப் போய் வந்தவுடனே பலனை எதிர்பார்க்கின்றார்கள் பலர்.
காலில் குத்திய முள்ளை உடனே எடுத்து விடலாம். ஆனால், அந்த முள் குத்திய காயம் ஆறுவதற்கு சில நாட்கள் ஆகும்.
ஆனால், மகான்கள் வழிபாட்டில் பலன்கள் என்பது உடனுக்குடன் கிடைக்கும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்கிற வரிசையில் குருவுக்குப் பிறகுதான் தெய்வம்.
ஆக, மகா பெரியவா போன்ற குருமார்களை ஆத்மார்த்தமாக வழிபட்டால், பலன் உண்டு நிச்சயம்.
தெய்வத்தின் சந்நிதிக்கோ, மகானின் ஜீவ சமாதிக்கோ சென்று ஒரு பிரார்த்தனை வைக்கின்றோம் என்றால், ‘இங்கு கருவறையில் வீற்றிருக்கின்ற தெய்வமோ மகானோ வெறும் கல் அல்ல... ஒப்பற்ற சக்தி. இந்த சக்திதான் எத்தனையோ பேரின் கஷ்டங்களைத் தீர்த்து வருகிறது. அந்த வகையில் நான் வைக்கும் பிரார்த்தனைகளையும் செவி மடுத்துக் கேட்டு, உரிய நிவாரணத்தை நமக்கும் அருளும்’ என்கிற பாஸிடிவ் எண்ணம் சம்பந்தப்பட்டவருக்கு இருக்க வேண்டும்.
அப்படி இல்லாமல், ‘இந்த தெய்வம் நமக்கெல்லாம் எங்கே உதவப் போகிறது? இதற்கு உயிர் இருக்கிறதா, என்ன? இது வெறும் கல்தானே!’ என்கிற நெகடிவ் எண்ணம் பிரார்த்திப்பவரின் மனதில் ஒரு விநாடி நேரம் தோன்றி விட்டால், பிரார்த்தனை பலன் கொடுக்காது.
நம்பிக்கை மட்டுமே பரிபூரண சரணாகதி!
பரிபூரண சரணாகதிதான் பக்தி.
Languageதமிழ்
Release dateOct 23, 2020
ISBN6580138306192
Maha Periyavaa - Part 5

Read more from P. Swaminathan

Related to Maha Periyavaa - Part 5

Related ebooks

Reviews for Maha Periyavaa - Part 5

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maha Periyavaa - Part 5 - P. Swaminathan

    http://www.pustaka.co.in

    மகா பெரியவா – தொகுதி 5

    Maha Periyavaa - Part 5

    Author:

    பி. சுவாமிநாதன்

    P. Swaminathan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/p-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. வயிற்று வலியைப் போக்கிய பகவான்

    2. வாரியாருக்குக் கிடைத்த இறுதி ஆசிர்வாதம்

    3. கீழே விழுந்தவரைத் தாங்கிப் பிடித்தார்

    4. அருவருப்பும் அவலமும் மாறிய அதிசயம்

    5. தரிசனம் கிடைத்தது... ஆஸ்திகர் ஆனார்

    6. 'எங்க ஊர்ல மழை வருமா?'

    7. ராமேஸ்வரத்தில் குவிந்த அரிசி மூட்டைகள்

    8. உதாசீனம் செய்தால் உத்தரவாதம் இல்லை

    9. இருட்டறையில் கிடைத்த அட்சதை ஆசிர்வாதம்

    10. 'ராத்திரி தங்கிட்டு கார்த்தால போங்கோ!'

    11. கேட்டு வாங்கிய பிட்சை ஆகாரம்

    12. மருத்துவமனை வந்து பணம் கட்டிய மகான்

    13. இறந்தவரை மீண்டும் உயிர்ப்பித்த அதிசயம்

    14. ஈ.பி. சீனிவாசனுக்கு எதிர்பாராத ஆசி

    மகா பெரியவா - தொகுதி V

    'செந்தமிழ்க் கலாநிதி'

    'குருகீர்த்தி ப்ரச்சாரமணி'

    பி. சுவாமிநாதன்

    என்னுரை

    பக்தி என்பது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்தது. இதைத்தான் பல சொற்பொழிவுகளில் சொல்லி வருகிறேன்.

    'அரச மரத்தைச் சுற்றி விட்டு அடிவயிற்றைத் தடவிப் பார்த்தாளாம்' என்று கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல் ஓர் ஆலயத்துக்குப் போய் வந்தவுடனே அல்லது ஒரு மகானின் திருச்சந்நிதிக்குப் போய் வந்தவுடனே பலனை எதிர்பார்க்கின்றார்கள் பலர்.

    காலில் குத்திய முள்ளை உடனே எடுத்து விடலாம். ஆனால், அந்த முள் குத்திய காயம் ஆறுவதற்கு சில நாட்கள் ஆகும்.

    ஆனால், மகான்கள் வழிபாட்டில் பலன்கள் என்பது உடனுக்குடன் கிடைக்கும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்கிற வரிசையில் குருவுக்குப் பிறகுதான் தெய்வம்.

    ஆக, மகா பெரியவா போன்ற குருமார்களை ஆத்மார்த்தமாக வழிபட்டால், பலன் உண்டு நிச்சயம்.

    தெய்வத்தின் சந்நிதிக்கோ, மகானின் ஜீவ சமாதிக்கோ சென்று ஒரு பிரார்த்தனை வைக்கின்றோம் என்றால், 'இங்கு கருவறையில் வீற்றிருக்கின்ற தெய்வமோ மகானோ வெறும் கல் அல்ல...  ஒப்பற்ற சக்தி. இந்த சக்திதான் எத்தனையோ பேரின் கஷ்டங்களைத் தீர்த்து வருகிறது. அந்த வகையில் நான் வைக்கும் பிரார்த்தனைகளையும் செவி மடுத்துக் கேட்டு, உரிய நிவாரணத்தை நமக்கும் அருளும்' என்கிற பாஸிடிவ் எண்ணம் சம்பந்தப்பட்டவருக்கு இருக்க வேண்டும்.

    அப்படி இல்லாமல், 'இந்த தெய்வம் நமக்கெல்லாம் எங்கே உதவப் போகிறது? இதற்கு உயிர் இருக்கிறதா, என்ன? இது வெறும் கல்தானே!' என்கிற நெகடிவ் எண்ணம் பிரார்த்திப்பவரின் மனதில் ஒரு விநாடி நேரம் தோன்றி விட்டால், பிரார்த்தனை பலன் கொடுக்காது.

    நம்பிக்கை மட்டுமே பரிபூரண சரணாகதி!

    பரிபூரண சரணாகதிதான் பக்தி.

    நம் மனதில் பக்தியை வளர்க்கா விட்டால், இந்த மனம் பாழாகி விடும்.

    'ஒரு மகான் அவதரித்தார்; வாழ்ந்தார்' என்பதோடு நில்லாமல், இந்த தேசத்துக்கு எத்தனையோ நல்ல விஷயங்களைச் சொல்லி, புதிய மாற்றங்களையும் மகா பெரியவா ஏற்படுத்திச் சென்றிருக்கிறார் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

    ஆன்மிக உலகில் புரட்சியாளர் என்று ஆதி சங்கரரையும், ராமானுஜரையும் சொல்வோம். அவர்களுக்கு அடுத்து அந்தப் புரட்சியை மிக அமைதியாக நடத்தி, உலகத்தின் பார்வையைத் தன் பக்கம் திருப்பியவர் காஞ்சி மகா பெரியவா என்றால், மிகை இல்லை.

    'மகா பெரியவா தொகுதி V' இன்று உங்கள் கரங்களில் தவழ்வதற்குக் காரணம் - 'மாலை மலர்' நாளிதழ். இந்த அனுபவங்கள் அனைத்தும் 'மகா பெரியவர்' என்ற தலைப்பில் அதில் வெளிவந்தன. இத்தகைய வாய்ப்பை எனக்கு வழங்கிய இந்தக் குழுமத்தின் அதிபர் திரு. சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்களுக்கு நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.

    இந்தத் தொடரின் வெற்றிக்கு உழைத்த என் அனைத்து நண்பர்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகளை மிக்கப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மகா பெரியவா சரணம்.

    அன்புடன்,

    பி. சுவாமிநாதன்

    98401 42031

    email: swami1964@gmail.com 

    facebook: https://www.facebook.com/swami1964

    Website: http://pswaminathan.in

    youtube channel: www.youtube.com/channel/UCVPS6VyvZW2oJVB3zkzh7Ng

    1. வயிற்று வலியைப் போக்கிய பகவான்

    'மாமருத்துவர்' என்றால் ஆன்மிகத்தில் ஸ்ரீதன்வந்திரி பகவானைக் குறிக்கும். மகாவிஷ்ணுவின் ஓர் அவதாரம்தான் இந்த தன்வந்திரி பகவான்.

    நம்மை நோய் அணுகாமல் இருப்பதற்கு இவரை வேண்டிக் கொண்டால், நற்பலன் நிச்சயம். தன்வந்திரி பகவானுக்கென்று பிரத்தியேகமாக அமைந்த கோயில்கள் குறைவு. அவற்றில் குறிப்பிடத் தகுந்த ஓர் ஆலயம் வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே அனந்தலை மதுராவில் 'ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்' என்ற பெயருடன் அமைந்துள்ளது. வைத்தியக் கடவுளான இவர் கழுத்தில் ஸ்டெதாஸ்கோப் மாட்டிக் கொண்டு, மருத்துவர்கள் அணியும் ஒயிட் கோட் அணிந்து திருக்காட்சி தருவார்.

    அதுபோல் நடமாடும் தன்வந்திரி பகவானாக சமீப காலத்தில் நம்மிடையே வாழ்ந்தவர் - இன்னமும் வாழ்ந்து கொண்டிருப்பவர் - காஞ்சி மகா பெரியவா.

    இந்த மகான் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல... இன்றைக்கும் தன்னை பரிபூரணமாகச் சரண் புகும் பக்தகோடிகளுக்கு அவர்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருகிறார். நோய்களைக் குணமாக்கி வருகிறார்.

    மிக மிக சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வே இதற்குக் கண் கண்ட உதாரணம்.

    சென்னை கே.கே. நகரில் வசித்து வருபவர் சுகந்தி. இவரது கணவர் பெயர் விஸ்வநாதன்.

    சுகந்தியின் வயிற்றில் மிக்ஷீக்ஷீவீtணீதீறீமீ ஙிஷீஷ்றீ ஷிஹ்ஸீபீக்ஷீஷீனீமீ என்கிற ஒரு பிரச்னை இருந்து வந்தது.

    இது வயிறு சம்பந்தமான ஒரு வியாதி.

    இந்தப் பிரச்னை இருந்தால் உடலுக்கு என்ன ஆகும்?

    என்ன சாப்பிட்டாலும், சாப்பிட்டதற்கு உண்டான ஒரு திருப்தி ஏற்படாது.

    எது சாப்பிடாலும் அது ஜெரிமானம் ஆகாமல், மேலே எதிர்த்துக் கொண்டு வருவது போல் இருக்கும். ஏப்பம் ஏப்பமாக வரும்.

    வாய் மற்றும் தொண்டையில் எரிச்சல் காணப்படும்.

    காரம், உப்பு தவிர்க்கப்பட வேண்டும். எதையும் வேக வைத்துச் சாப்பிட வேண்டும்.

    படுக்கையை விட்டு எழுந்தால் தலை சுத்தல் வரும்.

    வயிறு முழுவதும் நிறைந்திருக்கக் கூடாது. அதாவது, அதிகமான உணவை எடுத்துக் கொள்ளக் கூடாது.

    ஜெரிமானம் ஆகாத காரணத்தால், உணவை மூன்று வேளை எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக ஆறு வேளை எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் சுகந்திக்கு அறிவுறுத்தி இருந்தார்கள்.

    -மேலே குறிப்பிடப்பட்ட அத்தனையையும் படித்தாலே நமக்குத் தலை சுற்றுகிறது. இப்படிப்பட்ட ஒரு பிரச்னை எவர் ஒருவருக்கு இருந்தாலும், அவரது நிலை பரிதாபத்துக்குரியதுதான்.

    ஆனால், சுகந்தி இவற்றை எல்லாம் அனுபவித்து வந்திருக்கிறார்.

    அதுவும் ஒரு வருடமா, ரெண்டு வருடமா என்றால், கொஞ்சநஞ்சமில்லை. சுமார் பதினாறு வருடங்களாக இந்தப் பிரச்னையுடன் போராடி இருக்கிறார். ஒரு விசேஷத்துக்குப் போனால் வயிறு நிரம்பச் சாப்பிட முடியாது. பிடித்த அயிட்டமாக இருக்கிறதே என்று ஓரிரு பீஸ் எக்ஸ்ட்ரா எடுத்தும் சாப்பிட முடியாது.

    இவை எல்லாம் சாதாரணமான வயிற்றுப் பிரச்னை என்ற நினைப்பிலேயே அதிக காலத்தை ஓட்டி இருக்கிறார் சுகந்தி.  இப்படி வித்தியாசமான ஒரு பெயர் கொண்ட வியாதி தனக்கு இருப்பது வெகு நாட்களாக சுகந்திக்குத் தெரியவே இல்லை. 'எல்லாம் சாதாரணமான அஜீரணக் கோளாறாகத்தான் இருக்கும்... போகப் போக சரியாகி விடும்' என்றே ஒவ்வொரு நாளையும் கழித்திருக்கிறார்.

    ஒரு கட்டத்தில் வலியைப் பொறுக்க முடியாமல் போனது. அந்த நேரத்தில் ஒரு நாள் மருத்துவமனைக்குப் போய் பரிசோதனை செய்து பார்த்தபோதுதான் இது என்ன பிரச்னை என்பது தெரிய வந்தது. மருத்துவர்கள் இந்த நோயின் பெயரைச் சொல்லி, அதற்குண்டான விளக்கத்தைச் சொன்னபோது ஆடிப் போய் விட்டார் சுகந்தி.

    சுகந்தியை ஆறுதல்படுத்தி, ''விரைவில் குணமாக்கி விடலாம். கவலைப்படாதீர்கள்'' என்று சொல்லி, சிகிச்சைகளும் ஆரம்பமாயின.

    'இத்தனை வருடங்களாக இந்த வியாதியுடன் இருந்திருக்கிறோமே... என்ன பிரச்னை என்பது இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சைகள் துவங்கி இருக்கின்றன... இந்த நிலையில் நான் எப்போது பூரண நலம் பெறுவது?'

    - இதைப் பற்றி யோசித்த சுகந்திக்கு மகா பெரியவாதான் தன்வந்திரி பகவானாகத் தெரிந்தார். 'அவரை விட்டா நமக்கு வேறு யாரும் கிடையாது' என்று நம்பி, தினமும் தான் வணங்கும் மகா பெரியவாளிடம் இந்தப் பிரச்னை பற்றிச் சொல்லி மனமுருகப் பிரார்த்தித்திருக்கிறார்.

    தன் உண்மையான பக்தகோடிகளுக்கு இன்றைக்கும் மகா பெரியவா கற்பக விருட்சமாக - காமதேனுவாக அருளி வருகிறார்.

    அதுபோல் தன் ஆத்மார்த்த பக்தையான சுகந்தியின் பிரச்னைக்கும் மகா பெரியவாளே அற்புதமான தீர்வை அருளினார்.

    எப்படி அருளினார்?

    கனவின் மூலம்!

    ஒரு நாள் நள்ளிரவு சுகந்தி நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும்போது அவரது கனவில் மகா பெரியவா எழுந்தருளினார். நடமாடும் தெய்வம் தன் கனவில் தோன்றியவுடன் பயபக்தியோடு நமஸ்கரித்து வணங்கினார்.

    அதன் பின் இது நாள் வரை சுகந்தி தவித்துக் கொண்டிருக்கும் இந்த வயிற்று உபாதை பிரச்னைக்கு ஒரு தீர்வைக் கொடுத்தார்.

    என்ன தீர்வு?

    வயிற்று வலி என்று பெயர் சொல்ல முடியாத ஒரு வியாதியோடு அவஸ்தைப்பட்டிருக்கும் சுகந்திக்கு, ஒரு பரிபூரண நிவாரணமாக அது அமையும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

    சுகந்தியின் கனவில் மகா பெரியவா அருளிய வார்த்தைகள் இவைதான்...

    'ராமநாதபுரத்தில் இருந்து 12 மைல் தொலைவில் உள்ள ஆலயத்துக்குச் சென்று விளக்கேற்றி விட்டு வா. இந்த ஆலயத்துக்கு அருகில் ஒரு காளி கோயில் இருக்கும்.

    உன் மேல் வயிற்றில்தான் பிரச்னை. உன்னுடைய பிரச்னை இந்த ஆலயத்துக்கு விளக்கேற்றுவதன் மூலம் தீர்ந்து விடும்' என்று கூறி மறைந்து விட்டார்.

    'ராமநாதபுரத்தில் இருந்து 12 மைல் தொலைவில் என்றால், எந்தத் திக்கு? ராமநாதபுரம் சுற்று வட்டாரத்தில் நிறைய கோயில்கள் இருக்கின்றனவே? எப்படிக் கண்டுபிடிப்பது? அருகில் ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1