Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaa Sayee!!
Vaa Sayee!!
Vaa Sayee!!
Ebook85 pages27 minutes

Vaa Sayee!!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஸாயி ஒரு பெரிய சாகரம். அதனுள் பலப்பல ஜீவராசிகள் உண்டு. என்னை ஆட்கொண்டு வழி நடத்தின ஸாயி செய்த விலைகள் மிகச் சமீபமானவை. அவற்றை உங்களிடம் பகிர்ந்து கொண்டு உங்களுக்கு (அதிகபட்சமாக) வாழ்வின் வெற்றிக்கு பக்தியில் பங்கு பற்றிய ஒரு புரிதலும், (குறைந்தபட்சமாக) சில சுவாரஸ்மான கதைகளும் கொடுப்பதே இந்த சிறு நூலின் நோக்கம். அப்படிப் பகிர்ந்து கொள்கிற அதே சமயம், என்னைப் போல நிறைய பேர் இருக்கிறார்கள் என்றும் நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன் என்பதையும் இங்கே சொல்லிவிடுகிறேன்.
Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580135205681
Vaa Sayee!!

Related to Vaa Sayee!!

Related ebooks

Reviews for Vaa Sayee!!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaa Sayee!! - Auditor Raghavan

    http://www.pustaka.co.in

    வா ஸாயீ!!

    Vaa Sayee!!

    Author:

    ஆடிட்டர் ராகவன்

    Auditor Raghavan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/auditor-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. வந்த நாள்

    2. தீராத நோய் தீர்ந்த வேளை

    3. தரிசனம் கிடைத்தது - வேலை நிலைத்தது

    4. கோர்ட்டில் வெற்றி, கோயிலில் போற்றி!

    5. நண்பனுக்கு வேலை மாற்றல் மாறின கதை

    6. கண் மறைந்த மூன்று கோடி ரூபாயும், கண்டெடுக்கப்பட்ட கதையும்

    7. வேண்டாத சிலையும் வேண்டியதைத் தந்தது!

    8. தரம் - அவசரம்

    9. விபத்து - விசாரம் - விடுதலை

    10. சிந்தை தெளிந்தேன்; செயல் தெளிந்தேன்!

    11. பாரீஸில் பசிதீர்த்த பிரார்த்தனை

    12. மேல்கோட்டையில் தீர்ந்த மனக்கவலை

    13. கற்றுத் தந்த கோ; கட்டிக் கொடுத்த கோயில்!

    14. முடிவாக சில வார்த்தைகள்...

    நன்றி

    மனமெல்லாம் நானாக என் மனைவி மைதிலி

    என்மேல் மாறாத அன்புகொண்ட ஹரிசீதாராமன்

    இந்த நூலுக்கு என்னை உற்சாகப்படுத்தின ஹிமப்ரியா

    என் எல்லா முயற்சிகளிலும் பின்புலமாயுள்ள தயாநிதி ஜெகந்நாதன்

    காரியம் செய்யும் வகையும், பக்தியும் சொன்ன பெங்களூர் பாஸ்கரராவ்

    ஸாயி மட்டுமல்ல, வாழ்வில் பலதும் எனக்கு அறிமுகப்படுத்தின ஆர்.பி.ராகவன்

    பொன்னினும் கள்வனைத் தீண்டும் பொலிவு கொடுத்த செந்தில்குமரன், பிரபு

    மற்றும்

    அம்மாவும், அப்பாவும்

    எப்படித்தான் என் உள்ளம் புகுந்து

    என்னை ஆட்கொண்டீரோ, ஸ்வாமி!

    - பாபநாசம் சிவன்

    அறிமுகம்

    இந்த நூல் ஷீரடி ஸாயி பக்தியில் கிடைக்கப்பெற்ற நேரடி அனுபவங்கள்.

    நான் தொழில்ரீதியாகப் பல நிறுவனங்களில் நிதித்துறையில் முதல்வராக (CFO) பணியாற்றினவன். இப்பொழுது பட்டயக் கணக்காளராகவும், மாணவர்களுக்கு நிதி போதிப்பாளராகவும் பணிபுரிபவன். சென்னையில் பிறந்து, தமிழகம் எங்கும் வசித்த பேறு உண்டு. இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களுக்கும், உலக நாடுகள் சிலவற்றுக்கும் அடிக்கடிப் பயணித்த அனுபவமுண்டு. முகங்களின் காதலன், கலை, இலக்கியம், உளவியல், உலகவியல் என்றும் நாம் அறிந்த, அனுபவித்த உயர்ந்த விஷயங்களைப் பிறரும் பெற வேண்டும் என்ற உணர்வும் கொள்ள என்னை அகத்தூண்டுதல் செய்தவர்கள் பலர். ஸாயி அவர்களுள் மிக முக்கியமானவர்.

    நூல் நோக்கம்:

    ஸாயி ஒரு பெரிய சாகரம். அதனுள் பலப்பல ஜீவராசிகள் உண்டு. என்னை ஆட்கொண்டு வழி நடத்தின ஸாயி செய்த விலைகள் மிகச் சமீபமானவை. அவற்றை உங்களிடம் பகிர்ந்து கொண்டு உங்களுக்கு (அதிகபட்சமாக) வாழ்வின் வெற்றிக்கு பக்தியில் பங்கு பற்றிய ஒரு புரிதலும், (குறைந்தபட்சமாக) சில சுவாரஸ்மான கதைகளும் கொடுப்பதே இந்த சிறு நூலின் நோக்கம். அப்படிப் பகிர்ந்து கொள்கிற அதே சமயம், என்னைப் போல நிறைய பேர் இருக்கிறார்கள் என்றும் நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன் என்பதையும் இங்கே சொல்லிவிடுகிறேன்.

    1. வந்த நாள்

    1994ம் வருடம்.

    நாங்கள் அறியாமலேயே எங்கள் இல்லத்துக்குள் வந்துவிட்டார் பாபா. அப்படி அவர் வருவதும், அதற்கு எங்களைத் தேர்ந்தெடுத்ததும் எங்கள் முன்னோர் செய்த நற்செயல்தான் காரணம் என்று நம்புகிறேன்.

    எப்போதும் கடவுளோ, கடவுளின் தூதுவர்களாகிய ஆசாரியார்களோ நம்முடைய கஷ்ட காலத்தில் அல்லது நாம் சோர்வாயிருக்கக்கூடிய காலத்தில், நம்முடைய நேர்மையான பிரார்த்தனைகளின் வழியே நமக்குத் தெரிகிறார்கள். எனக்கு கடவுளர்கள் தம் இருப்பைத் தெரிவித்த ஒவ்வொரு தருணத்திலும் நான் ஏதோவொரு வருத்தத்தில் இருந்திருக்கிறேன். என் வருத்ததிலிருக்கும் நியாயத்தின் மூலமாக நேர்மையுடன் பிரார்த்தித்து இருக்கிறேன். குறைந்தபட்சம் புலம்பியிருக்கிறேன். அவர்கள் ஏதோவொரு விதத்தில் எனக்குத் தம்மைக் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குப் பிறகு எனக்கு அந்த வருத்தங்கள் நீங்கினது உண்மை.

    இதுபோல் எனக்கு மட்டும்தானா நடந்திருக்கிறது? இதைப் படிக்கும் உங்கள் எல்லோருக்கும்தான். கூப்பிட்ட மாத்திரத்தில் தெய்வம் வரும்.

    தெய்வம் எந்த வடிவத்தில் வரும்?

    1994இல் என் பெற்றோருக்கு என் தங்கைக்குத் திருமணம் ஆவது தள்ளிப்போய்க் கொண்டிருந்ததால் பெரும் கவலையாயிருந்தது. என் தங்கை மிகுந்த தைரியசாலி. எதையும் பிறர் சொல்வதனால் மட்டுமே ஏற்றுக் கொள்ளாத சுபாவம். அவள் கேள்விகள் கேட்பதால் பல விஷயங்களில் தெளிவு பெற்றிருக்கிறாள். அப்படிப் பெற்ற தெளிவினால், காலம் காலமாகத் தழைத்து வந்திருக்கும் சில நம்பிக்கைகள், சில பழக்கங்களைத் தன்னளவுக்குத் தகர்த்து வந்திருக்கிறாள். ஒரு பிராமணப்பெண், அதுவும் சாதாரண குடும்பத்துப்

    Enjoying the preview?
    Page 1 of 1